Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகச் சட்டத்தில் திருத்தம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Published By: T. SARANYA

25 APR, 2023 | 02:35 PM
image

(எம்.மனோசித்ரா)

சமகாலத் தேவைகளுக்குப் பொருத்தமானவகையில் 1985 ஆம் ஆண்டின் 21 ஆம் இலக்க இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியக சட்டத்தைத் திருத்த வேண்டிய தேவை கண்டறியப்பட்டுள்ளது.

அதற்கமைய சட்ட விரோதமாக வெளிநாட்டு வேலைவாய்ப்புத் தொழிலுக்குப் பிரவேசித்துள்ள தரப்பினர்களுக்கு எதிராக சட்ட ரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு, உப முகவர்கள் மூலம் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்களுக்காக இணைத்துக் கொள்கின்ற செயன்முறையை ஒழுங்குபடுத்துதல் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்புத் துறையில் புலம்பெயர் தொழிலாளர்களை ஆபத்துக்குள்ளாக்குகின்ற பாரியளவிலான மோசடிகள் மற்றும் ஊழல்களைக் குறைப்பதற்கு இயலுமைகிட்டும் வகையில் புதிய சட்ட ஏற்பாடுகளை அறிமுகப்படுத்தவும் முன்மொழியப்பட்டுள்ள திருத்தங்கள் மூலம் எதிர்பார்க்கப்படுகின்றது.

அதற்கமைய, 1985 ஆம் ஆண்டின் 21 ஆம் இலக்க இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகச் சட்டத்தை திருத்தம் செய்வதற்கும், அதற்காக சட்டமூலமொன்றைத் தயாரிக்குமாறு சட்டவரைஞருக்கு ஆலோசனை வழங்குவதற்கும் தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

https://www.virakesari.lk/article/153719

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மனித கடத்தல் வியாபாரிகளிடம் அகப்பட வேண்டாம் - அமைச்சர் மனுஷ மக்களிடம் கோரிக்கை

Published By: DIGITAL DESK 5

25 APR, 2023 | 02:54 PM
image

(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)

வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் பதிவு செய்யாமல்,சட்டவிரோதமான முறையில் வெளிநாடுகளுக்கு சென்று பல இன்னல்களை எதிர்கொண்டுள்ள இலங்கை பெண்களை மனிதாபிமான அடிப்படையில் நாட்டுக்கு அழைத்து வர உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மனித கடத்தல் தரப்பினருக்கு அகப்படாமல் சட்ட வழிமுறைகளுக்கு அமைய வெளிநாடுகளுக்கு செல்லுமாறு பொதுமக்களிடம் தொடர்ந்து வலியுறுத்துகிறோம் என வெளிநாட்டு வேலை வாய்ப்புகள் மற்றும் தொழில் அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்தார்.

பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ  தலைமையில் செவ்வாய்க்கிழமை (25) இடம்பெற்ற பாராளுமன்ற  அமர்வில் வாய்மூல விடைக்கான வினாக்கள் வேளையின் போது  ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர்  ராஜிகா விக்கிரமசிங்க  முன்வைத்த கேள்விகளுக்கு பதிலளிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றியதாவது,

2020 ஆம் ஆண்டு 15640  பெண்களும்,2021 ஆம் ஆண்டு 29314 பெண்களு,2023 ஆம் ஆண்டு நிறைவடைந்த மூன்று காலப்பகுதியில்  39,915 பெண்களும் வீட்டு பணிபெண்களாக மத்திய கிழக்கு உட்பட பெரும்பாலான நாடுகளுக்கு சென்றுள்ளார்கள்.

இரண்டு வருடகால ஒப்பந்த அடிப்படையில் இலங்கை பணிப்பெண்கள் வெளிநாட்டு வேலை வாய்ப்புகளுக்காக செல்கிறார்கள்.

இலங்கை வேலை வாய்ப்பு பணியகத்தில் பதிவு செய்து முறையான வழிமுறைகளுடன் வெளிநாடு செல்லும் பணி பெண்கள் தொடர்பில் பணியகம் முழு பொறுப்பேற்கும்.

சட்டத்துக்கு அமைய வெளிநாடு செல்லுமாறு பல அறிவுறுத்தல்களை விடுத்தாலும் ஒரு தரப்பினர் மனித கடத்தல் வியாபாரிகளிடம் அகப்பட்டுக் கொள்கிறார்கள்.

மக்கள் விடுதலை முன்னணியின் உறுப்பினர் ஒருவர் மனித கடத்தல் குற்றச்சாட்டுடன் தொடர்புடையதாக சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளார்.

 இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் பதிவு செய்யாமல்,சட்டத்துக்கு முரணான வகையில் வெளிநாடுகளுக்கு சென்று அங்கு பல பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்துள்ள இலங்கை பெண்களை மனிதாபிமான அடிப்படையில் நாட்டுக்கு அழைத்து வர உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

உலகளாவிய மட்டத்தில் தாதியர் சேவையில்  36 ஆயிரம் மில்லியன் தாதியர்களுக்கான கேள்வி காணப்படுகிறது.

முறையான பயிற்சிகளுடன் இலங்கை தாதியர்களுக்கு உலகளாவிய மட்டத்தில் தொழில் வாய்ப்புக்களை பெற்றுக்கொள்ள இலங்கை மருத்துவம் மற்றும் தாதியர் சங்கத்துடன் பேச்சுவார்த்தை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்தில் பதிவு செய்து பணி பெண்களாக செல்பவர்கள் நாடு திரும்பியவுடன் அவர்களின் நலன் பேணுவதற்கு பிரதேச சபை ஊடாக அபிவிருத்தி உத்தியோகஸ்தர்களை உள்ளடக்கிய வகையில் பொது வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படுகிறது.

நாட்டுக்கு அதிக அந்நிய செலாவணியை அதிகம் ஈட்டிக் கொடுக்கும் பணி பெண்களின் பாதுகாப்பு மற்றும் நலன்புரி சேவைகள் ஆகியவற்றை உறுதிப்படுத்த வேண்டிய பொறுப்பு வெளிநாட்டு வேலைவாய்ப்புகள் பணியகத்துக்கு உண்டு.

போலியான ஆசை வார்த்தைகளை குறிப்பிடும் மனித கடத்தல் தரப்பினருக்கு அகப்படாமல் சட்ட வழிமுறைகளுக்கு அமைய வெளிநாட்டு வேலை வாய்ப்புகளுக்கு செல்லுமாறு பொது மக்களிடம் தொடர்ந்து வலியுறுத்துகிறோம்.

சட்டவிரோதமான முறையில் செயற்படும் வெளிநாட்டு வேலை வாய்ப்பு முகவர் நிறுவனங்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார்.

https://www.virakesari.lk/article/153685

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.