Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கடன் மறுசீரமைப்பின்போது ஈ.பி.எப், ஈ.ரி.எப். க்கு பாதிப்பு ஏற்படாது என்பதை உறுதிப்படுத்த முடியுமா ? - சஜித் அரசாங்கத்திடம் கேள்வி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Published By: VISHNU

26 APR, 2023 | 04:29 PM
image

(எம்.ஆர்.எம்.வசீ்ம். இராஜதுரை ஹஷான்)

தேசிய கடன் மறுசீரமைப்பு நடவடிக்கையின் போது ஊழியர் சேமலாப நிதி மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதி ஆகியவற்றுக்கு பாதிப்பு ஏற்படாது என்பதை அரசாங்கத்தினால் உறுதிப்படுத்த முடியுமா? என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச சபையில் கேள்வியெழுப்பினார்.

பாராளுமன்றத்தில் புதன்கிழமை (26) நிலையியல் கட்டளை 27/2 இன் கீழ் கேள்வியெழுப்பி உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார் இதன்போது அவர் .மேலும் கூறுகையில்,

சர்வதேச நாணய நிதியத்துடனான உடன்படிக்கையில் உள்ளடங்கும் தகவல்களை பாராளுமன்றத்தில் முன்வைக்குமாறு கோரிக்கை முன்வைத்த போதும், மார்ச் மாதத்தில் உடன்படிக்கை சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுக்குழு இறுதி அனுமதி வழங்கும் வரையில் அது தொடர்பான தகவல்கள் முன்வைக்கப்படவில்லை. 

தற்போதைய ஜனாதிபதி எதிர்க்கட்சியில் இருக்கும் போது அதனை சபையில் முன்வைக்க வேண்டும் என்று கூறியவர் இப்போது ஜனாதிபதியாகிய பின்னர் தாளத்தை மாற்றி, அது தொடர்பான தகவல்களை வெளிப்படுத்தாது இரகசியமாக வைத்திருக்கின்றார். அரசாங்கத்தின் இவ்வாறான செயற்பாடுகளை கண்டிக்கின்றோம்.

அதனால் அது தொடர்பாக பின்வரும் கேள்விகளுக்கு அரசாங்கத்திடம் வெளிவான பதிலை எதிர்பார்க்கிறேன். இதன்படி இலங்கையில் கடன் மறுசீரமைப்பின் போது உள்நாட்டு கடன் உள்ளடங்காது என்று நிதி இராஜாங்க அமைச்சர் மற்றும் மத்திய வங்கி ஆளுநர் ஆகியோர் அடிக்கடி கூறினாலும் உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு தொடர்பில் பரந்துபட்ட வேலைத்திட்டத்தை தயாரிக்க வேண்டும் என்று மத்திய வங்கி ஆளுநர் இப்போது கூறியுள்ளார். 

இவ்வாறு பரஸ்பர வேறுபாடான கருத்துக்கள் மூலம் மக்களை ஏமாற்ற அரசாங்கம் முயற்சிக்கின்றதா? மக்களின் நம்பிக்கையை இல்லாது செய்ய முயற்சிக்கின்றதா? ஏன் மக்களையும் பாராளுமன்றத்தையும் நாட்டையும் திசை திருப்ப வேண்டும் என்றும் கேட்கின்றேன்.

அத்துடன் இவ்வாறான நடவடிக்கைகளின் போது ஊழியர் சேமலாப நிதி மற்றும் நம்பிக்கை நிதி ஆகியவற்றுக்கு பாதிப்பு ஏற்படாது என்பதனை அரசாங்கத்தினால் உறுதிப்படுத்த முடியுமா? இது தொடர்பான முன்னெடுக்கும் நடவடிக்கை என்ன? அரசாங்கம் தற்போது இணங்கியுள்ள விடயங்களை செயற்படுத்தும் போது பலமான சமூக பாதுகாப்பு கட்டமைப்பு அவசியமாகும். 

இதனை செயற்படுத்தும் போது மொட்டுக் கட்சியின் எம்.பிக்களும் வேறு கட்சிகளின் எம்.பிக்களுமே பிரதேசங்களில் நிவாரணங்களை வழங்குவதாக அறிகின்றோம். இதில் அரசியல் இருந்தால் நாங்கள் முறையிட நேரிடும். ராஜபக்‌ஷ காலத்தில் ஆடியதை போன்று தற்போது ஆட வர வேண்டாம். அதற்கு இடமளிக்கப் போவதில்லை.

மேலும் இது தொடர்பான நடவடிக்கைகளின் போது முறையான சனத்தொகை கணக்கெடுப்பு அவசியமாகும். 2012 ஆம் ஆண்டில் செய்த சனத்தொகை கணக்கெடுப்பு இப்போது மாறியுள்ளது. இதனால் கணக்கெடுப்பை எப்போது நடத்தப் போகின்றீர்கள் என்று கேட்கின்றேன். 

அத்துடன் அரச நிறுவனங்களை தனியார் மயப்படுத்த போகின்றீர்களா? இந்த கேள்விகளுக்கு அரசாங்கம் பதிலளிக்க வேண்டும் என்றார்.

https://www.virakesari.lk/article/153816

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சேமலாப நிதியம், நம்பிக்கை நிதியம் இரத்து செய்யப்படலாம் - நாலக கொடஹேவா

Published By: T. SARANYA

26 APR, 2023 | 05:02 PM
image

(எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்)

 

தேசிய கடன்களை மறுசீரமைத்தால்  ஊழியர் சேமலாப நிதியம், ஊழியர் நம்பிக்கை நிதியம்  ஆகியவற்றை இரத்து செய்ய நேரிடும். இதனால் நடுத்தர மக்கள் பாதிக்கப்படுவார்கள். தேசிய கடன் மறுசீரமைப்பு தொடர்பில் அரசாங்கம் வெளிப்படை தன்மையுடன் செயற்பட வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் நாலக கொடஹேவா தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் புதன்கிழமை (26) இடம்பெற்ற  சர்வதேச நாணய நிதியத்தின் ஒப்பந்தம் மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றுகையில்,

சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பை பெற்றுக்கொண்டதால் பொருளாதார நெருக்கடியில் இருந்து மீண்டு விட்டோம் என ஜனாதிபதி குறிப்பிடுவது நாட்டு மக்களை ஏமாற்றும் பிறிதொரு செயற்பாடாகும்.

நாணய நிதியத்தின் ஒரு சில சாதக காரணிகளை மாத்திரம் பெருமையாக குறிப்பிடும் தரப்பினர்  கடுமையான நிபந்தனைகளை செயற்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புக்கள் தொடர்பில் குறிப்பிடாமல் இருப்பது பிரதான குறைப்பாடாகும்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தவறான பொருளாதார கொள்கையினால் 2019 ஆம் ஆண்டு  பொருளாதார பாதிப்பு தீவிரமடைந்தது. இதனை ஆளும் தரப்பின் உறுப்பினர்கள் நன்கு அறிவார்கள்.

ஆனால் தங்களின் அரசியல் நோக்கத்துக்காக ஜனாதிபதிக்கு சாதகமாக செயற்படுகிறார்கள்.2015 ஆம் ஆண்டு முதல் 2019 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் சர்வதேச பிணைமுறியில் இருந்து அதிக  கடன் பெற்றுக் கொள்ளப்பட்டது.

கடன் மறுசீரமைப்புக்கு பிரதான நிலை கடன் வழங்குநர்கள் இணக்கம் தெரிவித்துள்ளதாகவும்,14 சதவீத கடன்களை  இரத்து செய்ய  இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடுவது அடிப்படையற்றது.

கடன் மறுசீரமைப்புக்கு இதுவரை உறுதியான இணக்கப்பாடு எட்டப்படவில்லை. சர்வதேச கடன்களை மறுசீரமைக்க வேண்டுமாயின் தேசிய கடன்களையும் மறுசீரமைக்க வேண்டும் என பிரதான நிலை கடன் வழங்குநர்கள் அரசாங்கத்திடம் குறிப்பிட்டுள்ளார்கள்.

சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பின் இரண்டாவது தவணை நிதியை பெற்றுக்கொள்ள தேசிய கடன்களை மறுசீரமைக்க அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளது. தேசிய கடன் மறுசீரமைக்கப்பட்டால் வங்கி கட்டமைப்பு பாதிக்கப்படும். இதனால் சாதாரண வைப்பாளர்கள்,முதலீட்டாளர்கள் பாதிக்கப்படுவார்கள்.ஊழியர் சேமலாப நிதியம்,ஊழியர் நம்பிக்கை நிதியம் ஆகியவை கூட இரத்து செய்யப்படும்.ஆகவே நாட்டு மக்களுக்கு உண்மையை அரசாங்கம் பகிரங்கப்படுத்த வேண்டும் என்றார்.

https://www.virakesari.lk/article/153832

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.