Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கேரளாவில் சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் திருடராக 54 நாட்கள் சிறைவாசம் அனுபவித்த தந்தை - என்ன நடந்தது?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
கேரளா

பட மூலாதாரம்,VK THAJUDHEEN

 
படக்குறிப்பு,

மகளின் திருமணம் முடிந்த சில நாட்களில் தாஜுதீன் கைது செய்யப்பட்டார்

கட்டுரை தகவல்
  • எழுதியவர்,அஷ்ரஃப் பதானா
  • பதவி,பிபிசி, திருவனந்தபுரம்
  • 17 நிமிடங்களுக்கு முன்னர்

2018ஆம் ஆண்டில், கேரளத்தைச் சேர்ந்த ஒருவர் 'திருடன்' என்று தவறாக கருதப்பட்டு 54 நாட்கள் சிறைவாசத்தை அனுபவித்த நிலையில், நீதிமன்றத்தால் அவர் அந்த வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டார். ஆனாலும், குற்ற வழக்கில் இருந்து இவரது பெயர் அழிக்கப்பட்டாலும், அதற்கு பெரும் விலையை கொடுத்திருக்கிறார் அந்த நபர். தனக்கு நேர்ந்த அநீதிக்காக இன்னும் அவர் நீதி கேட்டு போராடி வருகிறார்.

இந்திய தென் மாநிலமான கேரளாவைச் சேர்ந்த வி.கே.தாஜுதீன் என்பவர் சிசிடிவி காட்சியின் அடிப்படையில் 'நெக்லஸ் திருடன்' என்று தவறாகக் கருதி கைது செய்யப்பட்டார். திருட்டு நடந்ததாக சொல்லப்பட்ட நேரத்தில் அவர் வேறொரு இடத்தில் இருந்தார் என்பதை நிரூபிக்க அவரது நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் வாக்குமூலம் அளித்ததுடன் உண்மையான குற்றவாளியைக் கண்டுபிடிக்கவும் உதவினர். இதற்காக அவர்கள் பல்வேறு ஆதாரங்களைச் சேகரித்த பிறகே அவர் குற்றமற்றவர் என்பதை நிரூபிக்க முடிந்தது.

இந்த விவகாரத்தில் தாஜுதீனுக்குக் கிடைத்த அனுபவம் சாதாரணமானது அல்ல. இந்த ஆண்டின் தொடக்கத்தில், ஹைதராபாத்தில் ஒரு தினசரி கூலித் தொழிலாளியின் மரணம், சிசிடிவி காட்சிகளில் தென்பட்ட அவரது தோற்றத்தை அடிப்படையாக வைத்து காவலில் வைக்கப்பட்டார். காவல்துறையினர் தன்னை சித்ரவதை செய்ததாக அந்த தினக்கூலி குற்றம்சாட்டினார். ஆனால், அதை காவல்துறையினர் மறுத்தனர்.

இந்த சம்பவம் பொதுவெளியில் பொருத்தப்பட்டுள்ள ஃபேஷியல் ரெகக்னிஷன் தொழில்நுட்ப சிசிடிவி கேமராக்களின் செயல்திறனை சந்தேகப்பட வைத்ததுடன் அதன் விளைவாக நிரபராதிகள் எதிர்கொள்ளும் சிக்கல்கள் பொதுமக்களிடையே சீற்றத்தைத் தூண்டியிருக்கிறது.

இந்திய நகரங்களில் பாதுகாப்பு என்ற பெயரில் பொதுவெளியில் சட்ட அமலாக்க அமைப்புகள் நிறுவும் கேமராக்கள் மற்றும் பிற கண்காணிப்புக் கருவிகளின் பயன்பாடு வேகமாக அதிகரித்து வருகிறது. குற்றங்களை தடுக்க சட்ட அமலாக்க அமைப்புகள், சிசிடிவி கேமராக்கள் மற்றும் ஃபேஷியல் ரெகக்னிஷன் சாதனங்களை நிறுவும்போது அதன் விளைவாக இதுபோன்ற மனித உரிமை மீறல் சம்வபங்கள் ஏற்படும் சாத்தியத்தை ஒதுக்கி விட முடியாது என்று செயல்பாட்டாளர்கள் கூறுகின்றனர்.

 

இந்த வழக்கில் தாம் சேர்க்கப்பட்டதை அறிந்து "மனமுடைந்து போனேன்" என்கிறார் தாஜுதீன். தன்னை கைது செய்த காவல்துறை அதிகாரி பணி இடமாற்றம் செய்யப்பட்டதுடன் அவருக்கு சம்பள உயர்வும் நிறுத்தி வைக்கப்பட்டது என்று கூறும் தாஜுதீன் "இது மிகவும் குறைவான தண்டனை" என்று கூறுகிறார்.

தனக்கு நேர்ந்த அனுபவத்தை ஷெவ்லின் செபாஸ்டியன் என்ற பத்திரிகையாளருடன் இணைந்து புத்தகமாக எழுதியுள்ள தாஜுதின், இப்போது காவல்துறை தனக்கு இழப்பீடு தர உத்தரவிட வேண்டும் என்ற கோரிக்கையுடன் நீதிமன்றத்தில் சட்ட போராட்டத்தை முன்னெடுத்துள்ளார்.

தாஜுதின்

பட மூலாதாரம்,VK THAJUDHEEN

 
படக்குறிப்பு,

சிசிடிவி கேமராவில் பதிவான உருவம்

https://www.bbc.com/tamil/articles/cz51d4dmjrjo

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.