Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஆண்டவனும் கோயிலில் தூங்கி விடும்போது

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

1969இல் துலாபாரம் என்று ஒரு திரைப்படம் வந்திருந்தது. யாருமே துணையில்லாமல் தனித்து நின்று போராடும் ஒரு பெண்ணின் கதைஒன்றுமே இனிச்  செய்ய முடியாது என்ற நிலை வந்த போது உணவில் விசம் கலந்து தானும் உண்டு பிள்ளைகளுக்கும் அவள் கொடுப்பாள். பிள்ளைகள் இறந்து போக அவள் மட்டும் பிழைத்துக் கொள்வாள். அவள் மேல் கொலைக் குற்றம் சாட்டப்பட்டு நீதி மன்றில் விசாரணை நடக்கும். இதுவே அந்தப் படத்தின் கதை

சமீபத்தில் யேர்மனியில் நடந்த வழக்கு ஒன்று என்னை 1969க்கு திரும்பி அழைத்துப் போனது. துலாபாரம் படத்தில் இடம் பெற்றகாற்றினிலே பெருங் காற்றினிலே ஏற்றி வைத்த தீபத்திலும் ஒளி இருக்கும்…” என்ற ஜேசுதாசின் பாடல் இப்பொழுது எனக்குள் ஒலித்துக் கொண்டிருக்கிறது.

உணவில் மரணம் விளைவிக்கும் வில்லைகளைக் கலந்து கொடுத்து தனது மகனைக்   கொலை செய்ததற்காக 53 வயதான உர்சுலாவுக்கு யேர்மனி நாட்டில் ஹில்டெஸ்கைம் நகர நீதிமன்றம் மூன்றரை வருடங்கள் சிறைத் தண்டனை விதித்திருக்கிறது.

உருசுலாவின் மகனான ஜோனாஸ்  உடல் மற்றும் மன  ரீதியான மரபணு குறைபாடுள்ள அரிதான ஒரு நோயுடனே பிறந்தவன். 17 வயதான ஜோனாஸை அவனது தாயான உருசுலா கொலை செய்தாள் என வழக்கு பதிவாகி இருந்தது.

மே மாதத் தொடக்கத்தில் ஆரம்பித்த வழக்கில், “ எனக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. இதற்கு மேலும் என்னால் முடியவில்லை.” 53 வயதான உர்சுலா, ஜோனாஸை கொலை செய்ததற்கான வழக்கு விசாரணையின் போது இப்படிச் சொன்னாள்

2021 மார்ச் மாதம்  சொக்கிலேற் புடிங்கும் அப்பிள் பழக்களியும் சேர்ந்த ஒரு இனிப்புப் பதார்த்தத்தில் மரணம் விளைவிக்கக் கூடிய மருந்து வில்லைகளை கலந்து தனது மகனுக்கும் கொடுத்து தானும்  சாப்பிட்டாள். ஜோனாஸ் இறந்து போனான். மரணம் ஏனோ உர்சுலாவை நெருங்கி வராமல் ஒதுங்கிக் கொண்டது

ஒவ்வொரு தினமும் எனக்கு கடுமையானதாக இருந்தது. மனதால், உடலால் ஊனமுற்ற ஒரு 17 வயது இளைஞனை  இரவு பகல் என்று நாள் முழுவதும் வைத்துப் பராமரிப்பது என்பது மிகவும் கடினமான காரியமாக இருந்தது. அது தவிர ஜோனேஸ் வேறு ஒரு கற்பனை உலகத்தில் வாழ்ந்து கொண்டிருந்தான். நீருக்கு அடியில் ஒரு உலகம் அங்கே றோஸ் நிறத்தில் ஒரு குதிரை என்று கதைகள் சொல்வான். என்னிடம் போதுமான பணமும் இல்லை அவனை வைத்து பராமரிக்க எனது உடலில் தெம்பும் இல்லை. நான் இறந்து போனால் அவன் தனித்து தவித்துப் போவான். ஆகவே இருவரும் இறந்து போய் விடலாம் என்ற எண்ணத்துடனே உணவில் மரணம் விளைவிக்கும் வில்லைகளைக் கலந்து அவனுக்கும் கொடுத்து நானும் உண்டேன். அவன் போய்விட்டான். நான் இருக்கிறேன்என்று நீதிமன்றத்தில் உர்சுலா தனது நிலையைச் சொன்னாள்.

வாழ்க்கையானது எல்லோருக்கும் பொதுவானது. அது ஒருவருக்கு குறைபாடு இருக்கிறதா இல்லை அவர் சுகதேகியா எனப் பார்ப்பதில்லை. இங்கு ஒரு இளைஞன் மரணித்திருக்கிறான். அதுவும் அவன் விரும்பாமலே என்பதுதான் கவனத்தில் எடுத்துக் கொள்ளப் பட வேண்டும். ஜோனாஸ் முற்றிலும் பாதுகாப்பற்றவர். அவரது இயலாமை காரணமாக, 17 வயதான அவருக்கு எப்பொழுதும் சிறப்பு கவனிப்பு  தேவைப்பட்டது ஜோனாஸின் இயலாமைக்கான உதவி அவனின் தாய் உர்சுலாவிடம் இருந்தே கிடைத்துக் கொண்டிருந்ததுஅதை தவறாகப் பயன் படுத்தி உர்சுலா ஜோனேஸை கொலை செய்திருக்கிறார்

நீதிபதியின் தீர்ப்பு ஆறு வருடங்களும் ஆறு மாதங்களும் உருசுலா சிறையில் இருக்க வேண்டும் என்றிருந்தது.

உங்களுக்கு தற்கொலை எண்ணங்கள் உள்ளதா அல்லது உறவினர்/ அறிமுகமானவர்களிடம் அவற்றை கவனித்தீர்களா?யேர்மனியில் உங்களுக்கான ஆலோசனைகள், உதவிகள் இலவசமாக 24 மணி நேரமும் கீழே உள்ள தொலைபேசி இலக்கங்களில்  0800 / 111 0 111 அல்லது 0800 / 111 0 222 கிடைக்கின்றனtelefonseelsorge.de இணையத்தினூடும் தொடர்பு கொள்ளலாம்

காக்கியான் 02.06.2023

 

 

 

 

 

  • கருத்துக்கள உறவுகள்

பகிர்வுக்கு நன்றி கவி அருணாச்சலம் ஐயா

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.