Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

போராட்டங்களுக்கு வலுச்சேர்க்க யாழ்ப்பாணத்தில் பண நதியில் குளிக்கும் தெய்வங்களும் களமிறங்கவேண்டும்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
யாழ்ப்பாணத்தில் கோயில் திருவிழாக்காலம் ஆரம்பித்துவிட்டது. இனி மார்கழி வரைக்கும் யாழ்ப்பாணம் முழுவதுமே தெய்வீகமயம்தான். கோயில்கள் ஒளிவெள்ளத்திலும், பக்த வெள்ளத்திலும், பண வெள்ளத்திலும் மிதக்கும்.
ஆனால் சமநேரத்தில் வடக்கு, கிழக்கு தமிழர் தாயகத்தின் எல்லைக்கிராமங்களில் இருக்கின்ற பல நூற்றாண்டுகள் தொன்மையுடைய சைவ கோயில்கள் இருளில் கிடக்கின்றன. வெள்ளி, செவ்வாயில் தொடர்ச்சியான பூசைக்கோ, நிரந்தரமான கட்டடங்களுக்கோ வசதியற்ற நிலையிலேயே பல கோயில்கள் உள்ளன.
 
இந்நிலை யாருக்கு வாய்ப்பாகிறதெனில், தெற்கிலிருந்து பண்பாட்டுப் படையெடுத்து வந்துகொண்டிருக்கும் தொல்லியல் திணைக்களத்திற்கும் பெளத்த பிக்குகளுக்கும்தான். முன்பொருகாலத்தில் தமிழ் குறுநிலத்தலைவர்களும் அதிகாரமுடைய செல்வந்தர்களும் செய்த பண்பாட்டுத் தவறினால் எல்லையோரமாகவுள்ள பல கோயில்களில் தமிழ் பெளத்த எச்சங்கள் இருக்கின்றன. அவை இன்றைய இலங்கை பெளத்தத்தின் எக்கூறுகளையும் கொண்டவையல்ல. இப்போது வந்திருக்கும் அரசியல் பலமிகு பண்பாட்டுப் படையெடுப்பாளர்கள், நம் குறுநிலத் தலைவர்கள் செய்த தவறை வலுவாகப் பிடித்துக்கொண்டிருக்கிறார்கள். அவ்விடங்களில் நிரந்தர கட்டடங்கள் அமைக்கப்படாமை, தெய்வத் திருவுருக்களாக வேல், சூலம், கல் போன்றவற்றை வைத்து வழிபட்டமை, கோயில்களின் வரலாற்றை முறைப்படியாகப் பேணாமை, பதிவுகள் செய்யாமை, கோயில் நிர்வாகங்கள் இயங்குநிலையில் இல்லாமை போன்றவை பண்பாட்டுப் படையெடுப்பாளர்களுக்கு மேலும் உற்சாகம் தருகின்ற காரணிகள். இந்தக் காரணிகளை முன்வைத்து இந்தக் கோயில்கள் எல்லாம் போருக்குப் பின்னர் வைக்கப்பட்டவை, பெளத்த எச்சங்கள்தான் அவ்விடத்தில் முன்பிருந்தன என்ற முடிவுக்கு வந்துவிடுகின்றனர்.
 
தமிழர் தாயகப் பகுதிகளில் பெளத்தப் பண்பாட்டுப் பரவல் ஏற்பட்டிருக்கின்றது. ஆனால் பெளத்தத்தினால் தமிழர் தாயகப் பகுதிகளில் நின்றுநிலைக்க முடியவில்லை. தமிழர்கள் பெளத்தத்தை ஒரு வாழ்வியல் தத்துவமாக ஏற்றிருக்கிறார்களே தவிர, பெளத்தத்தை மதமாக/ சமயமாக ஏற்கவில்லை. ஏனெனில் தமிழர்களின் ஆன்மீக உளத்துடன் கலந்த தாய் மதமாக/ சமயமாக சைவநெறி ஆழப்பற்றிக் கிடக்கிறது. வடக்கின் ஊடாக இந்தியாவிலிருந்து இந்நாட்டுக்குள் பிரவேசித்த பெளத்தத்தை ஒரு தத்துவமாக வரவேற்றனர். பெளத்தத்தின் மெய்த்துறவிகளுக்கு வாழ்வளித்தனர். தம் மரபு வழிவந்த ஐயனாரிடத்திலும், சிவனிடத்திலும், முருகனிடத்திலும், அம்மனிடத்திலும் உறைவிடமளித்தனர். ஏனெனில் தமிழர் பண்பாட்டில் தானமளித்தலிடம் கோயில்களாகும். அதற்கு எடுத்துக்காட்டான கோயில்கள் பல இன்றுமுள்ளன. அவ்வாறு தம்மால் தானமளிக்கப்பட்ட இடத்தில் பெளத்தம் தன்னைப் புதிய மதமாக/சமயமாக/ இனத்தின் அடையாளங்களை உருமாற்றும் புதிய பண்பாடாக மாறுவதை தமிழர்கள் விரும்பவில்லை. எனவே தமிழர் நிலத்தில் வந்தமர்ந்த பெளத்தத்தைக் கைவிட்டனர். அங்கு குடியேறியிருந்த துறவிகள் தெற்குப் பக்கமாக நகர்ந்தார்கள். அவ்வாறு நகர்ந்தவர்களில் ஒரு தொகுதியினர் மகாநாமதேரர்களாக மாறிப்போயினர்.
 
அதற்குப் பின்னர் தமிழர் தாயகத்தில் தமிழ் குறுநிலத் தலைவர்களாலும், தனவந்தர்களாலும் உருவாக்கிக் கொடுக்கப்பட்ட பெளத்த மடாலயங்கள், துறவிகள் தங்குவதற்கான குகையிடங்கள் அப்படியே இருந்தன. பாதுகாக்கப்பட்டன. அவ்விடங்களிலிருந்த சைவ வழிவந்த தெய்வங்களும் அப்படியே இருந்தன. தமிழர்களுக்கெனத் தனியரசை நிறுவியிருந்த விடுதலைப் புலிகள் கூட அதில் கைவைக்கவில்லை. தமிழர்கள் கடந்துவந்த பண்பாட்டு அடையாளங்களில் ஒன்றாக அவற்றைப் பாதுகாத்தனர். இன்று தொல்லியல் திணைக்களமும், இனவாத அரசியல்வாதிகளும், பெளத்த பிக்குகளும், சில பேராசிரியர்களும் சொல்வதைப் போல வடக்கு கிழக்கில் இருந்த பெளத்த எச்சங்களை யாரும் அழிக்கவில்லை. அப்படி அழிக்க நினைத்திருப்பின் ஏதாவது மிஞ்சியிருக்குமா?
 
வடக்கு கிழக்கில் போர் முடிவுற்றது தொடக்கம் தமிழ் மக்கள் மீள்குடியேற்றம் செய்யப்படுதல் வரையான கிட்டத்தட்ட இரண்டு வருட காலப்பகுதி ஈழத்தமிழர் வரலாற்றில் மேலுமொரு இருண்டகாலம். இது எங்கேயும் பதிவு செய்யப்படாக் காலமுமாகும். முழுக்கமுழுக்க இராணுவ கட்டுப்பாட்டின் கீழிருந்த இந்தக் காலப்பகுதியில்தான் போரின்போது தமிழர்கள் கைவிட்டுச் சென்ற எல்லாச் செல்வங்களும் 'இனந்தெரியாத நபர்களினால்' சூறையாடப்பட்டன. தலையணைகளைக் கூட கிழித்தெறிந்து ஏதாவது சேமித்துள்ளார்களா எனச் சோதித்திருந்தனர். இந்தக் காலப் பகுதியில்தான் வடக்கு கிழக்கில் பாதுகாக்கப்பட்டிருந்த பல தொல்லியல் மையங்களைப் 'புதையல் தேடுவோர்' கண்மூடித்தனமாகக் கிளறியெறிந்தனர். இதனால் முக்கியத்துவமிக்க தொன்மப் பொருட்கள் பல அழிக்கப்பட்டன. இவ்வாறு அழிக்கப்பட்ட தொல்லியல் இடங்களைப் போர்க்காலத்தில் அழிக்கப்பட்டன எனக் கதையெழுதிக்கொண்டிருக்கிறார்கள்.
 
போர் முடிந்து மீள்குடியேற்றம் நடந்த பின்னர் தம் வாழிடங்களுக்குத் திரும்பிய தமிழர்கள் தம் மரபார்ந்த வழிபாட்டிடங்களையும் துப்பரவு செய்தனர். கல்லையும், சூலத்தையும், வேலையும் நாட்டி தம் தெய்வங்களை மீள எழுந்தருள வேண்டினர். ஆனால் வந்தமர்ந்தார் சிங்களவர்களுக்கு மட்டுமே என ஆக்கப்பட்டுவிட்ட புத்தர். அவரிடம் அரசியல் இருந்தது, இனவாதம் இருந்தது, மதவாதம் இருந்தது, ஆக்கிரமிப்பு இருந்தது. எனவே பெளத்தத்தைத் தத்துவமாக ஏற்றுக்கொண்ட தமிழர்கள், மதமாக மீண்டும் நிராகரித்துப் போராடத் தொடங்கினர். அந்தப் போராட்டம்தான் இன்று வடக்கு, கிழக்கின் பல கிராமங்களில் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன.
 
எனவே இந்தப் போராட்டங்களுக்கு வலுச்சேர்க்க யாழ்ப்பாணத்தில் பண நதியில் குளிக்கும் தெய்வங்களும் களமிறங்கவேண்டும். தங்களுக்கு சேரும் செல்வத்தில் சிறு துளியையாவது போராடும் தெய்வங்களுக்கு உவந்தளித்து, அவ்விடமெல்லாம் நிரந்தர கோயில் கட்டமைப்புகள் உருவாக உதவ வேண்டும். ஒவ்வொரு தினமும் மணியோசையும், உறங்காத் தீபமும் ஒளிர ஆவண செய்யவேண்டும். சமநேரத்தில் இந்தப் பிரச்சினைக்குள் துளிர்விடத் துடிக்கும் 'இந்துத்துவா' எனும் நச்சுக் களை குறித்தும் அவதானம்கொள்ளல் வேண்டும்.
 
May be an image of tree
 

Jera Thampi

 

Edited by பிழம்பு

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.