Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஈழத்தமிழர்களின் இனப்பிரச்சினைக்கு சுயநிர்ணய அடிப்படையிலான தீர்வுதான் அவசியம் என்று அழுத்தம் திருத்தமாக வலியுறுத்தியுள்ளார் அமெரிக்கக் காங்கிரஸின் உறுப்பினர் டொன்டேவிஸ். இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக இப்போதும் அடக்குமுறைகள் தொடர்கின்றன. ஆதலால்தான் தமிழர்களுக்கு சுயநிர்ணயத்தின் அடிப்படையிலான தீர்வு இப்போது தேவையாகவுள்ளது என்றும் அவர் தன் கருத்தை, நிலைப்பாட்டைப் பதிவு செய்திருக்கின்றார். நல்லது. ஈழத்தமிழர்களுக்கு அமெரிக்கக் காங்கிரஸினரோ அல்லது கனேடிய நாடாளுமன்றத்தினரோ ஆதரவைத் தெரிவிப்பது இதுவொன்றும் முதல் தடவையல்ல. 

2009 ஆம் ஆண்டு விடுதலைப்புலிகளின் ஆயுதங்கள் மௌனிக்கப்பட்ட காலம் முதல் இந்தக் கோரிக்கை மற்றும் வலியுறுத்தல்களை அவர்கள் முன்வைத்தே வந்திருக்கின்றார்கள். இந்த விடயத்தில் கனடா ஒருபடி மேற் சென்று' இலங்கையில் இறுதிப்போரின்போது தமிழர்கள் இனப்படுகொலைக்கு உள்ளாக்கப்பட்டனர்' என்று தீர்மானமும் நிறைவேற்றியிருக்கின்றது. கனடாவுக்கு அடுத்தபடியாக அமெரிக்கப் பிரதிநிதிகள்தான் அன்றுமுதல் இன்றளவும் குரல்கொடுத்து வருகின்றனர். ஆனால், அவர்களின் இந்தக் குரலால் ஈழத்தமிழர்களுக்காக எதையாவது சாதிக்க முடிந்ததா? என்ற கேள்வியும் இங்கெழுவது தவிர்க்க முடியாததாகின்றது.

தமிழர்களுக்கு எதிரான நெருக்குவாரங்கள் தொடர்ந்துகொண்டுதான் இருக்கின்றன. தமிழர்களின் வாழ்விடங்களில் அவர்களின் தாயகத்தில் சிங்கள பௌத்த பேரினவாதத் திணிப்பு நாளுக்குநாள் வேகம் பெற்றுக்கொண்டுதான் இருக்கின்றது. தமிழர்களின் காணிகள் அடாத்தாகக் கையகப்பட்டுக் கொண்டேதான் இருக்கின்றன, அரசியல் கைதிகள் இன்னமும் சிறைகளில்தான் இருக்கின்றார்கள். பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழான கைதுகள் இன்னும் தொடர்கின்றன. எனில், அமெரிக்க கனேடியப் பிரதிநிதிகளின் கொழும்புக்கு எதிரான இந்த நிலைப்பாடு எத்தகையது? இவர்களின் எதிர்ப்பால் கொழும்பின் மீது கனதியான தாக்கத்தைச் செலுத்தமுடியவில்லை என்றால், இந்த எதிர்ப்பின் பாற்பட்ட பயன்தான் என்ன?

இந்த இடத்தில்தான், 'வல்லரசுப் பிரதிநிதிகளின் ராஜதந்திரத்தின் பலவீனம் பட்டவர்த்தனமாகின்றது. சர்வதேசத்தில் தனக்கிருக்கும் எதிர்ப்பைச் சமாளிக்க, தனக்கு ஆதரவானவர்களை ஒன்றிணைக்கும் போக்கில் கொழும்பு ஒப்பாரும் மிக்காரும் இல்லா நிலையிலேயே செயற்பட்ட, செயற்பட்டுக் கொண்டி ருக்கின்றது. அதேபோல், கொழும்புக்கு எதிரான ஈழத்தமிழர்களின் ஆதரவு மனோநிலையில் உள்ள இத்தகைய பிரதிநிதிகள் நாடுகளைக் கடந்து கட்சிகளைக் கடந்து ஒன்றுபட்டு ஒரு பொதுப் பொறிமுறையூடாக ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாகக் குரல்கொடுத்திருந்தால்,அந்தக் குரல் இலங்கையால் கேட்கப்படாவிட்டாலும் சர்வதேசத்தின் அழுத்தத்துக்கு உள்ளாகும் விடயமாக அமைந்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

ஈழத்தமிழர்களுக்கு நீதிகேட்டவர்கள் முதலில், எமக்கு ஆதரவான 'வல்லரசுப் பிரதிநிதிகளின் குரலை ஒன்றுசேர்க்கவேண்டும். அவர்கள் தம் எதிர்ப்பை நிலைப்பாட்டை பொதுக்கட்டமைப்புக்குள் நின்று கொண்டு வெளிப்படுத்த உரிய வழிவகைகளை ஏற்படுத்தவேண்டும். இதற்கான ஆரம்பப் படிநிலை கொஞ்சம் கடினம்தான். ஆனால் ஆரம்பித்தால் அதன் செயற்பாட்டு வேகம் வேறு ரகத்தில் இருக்கும். அதனால் ஏற்படும் விளைவுகளும் தாக்கங்களும் தனித்து நிற்கும். செய்வார்களா (ஐ) 

 

#uthayannews #newsupdate #todaybreaking #newsupdate #breaking

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.