Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
17 FEB, 2024 | 09:56 AM
image

வீதியில் உலரவிடப்படும் நெல்லுடன் 'கற்மியம்' எனும் மூலகம் ஒன்று கலப்பதாகவும், எனவே அந்த நெல் அரிசியை உணவாக உட்கொள்ளும்போது புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பிருப்பதாகவும் முல்லைத்தீவு பிராந்திய சுகாதாரசேவைகள் பணிப்பாளர் கு.அகிலேந்திரன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

எனவே, பொதுமக்கள் வீதியில் நெல்லை உலரவிடுவதைத் தவிர்க்குமாறும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுக்கூட்டம்  வெள்ளிக்கிழமை (16) இடம்பெற்ற நிலையில் அக்கூட்டத்தில் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இந்த எச்சரிக்கையினை விடுத்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

தற்போது பெரும்போக நெல் அறுவடை மேற்கொள்ளப்பட்டு வருகின்ற நிலையில் விவசாயிகள் பிரதான வீதிகளை நெல் உலரவிடும் தளங்களாகப் பயன்படுத்துகின்றனர்.

இதனால் பாரிய அளவில் வீதி விபத்துக்கள் இடம்பெறுகின்றன. பலர் வீதி விபத்துக்களில் சிக்கி பரிதாபமான முறையில் உயிரிழக்கின்றனர்.

இவ்வாறு வீதியில் நெல் உலரவிடுவதனால் வீதி விபத்தையும் தாண்டி பாரிய ஆபத்தொன்று காணப்படுகின்றது.

வாகன டயர்கள் வீதியில் உராய்வதனால் 'கற்ட்மியம்' எனும் மூலகம் வீதியில் படிந்துள்ளது. இந்நிலையில் இவ்வாறான வீதியிலேயே விவசாயிகள் நெல்லினை உலரவைக்கின்றனர்.

இவ்வாறு நெல்லினை உலரவிடும்போது குறித்த 'கற்மியம்' எனும் மூலகம் நெல்லோடு கலந்துவிடுகின்றது.

இவ்வாறு இந்த 'கற்மியம்' எனும் மூலகம் கலந்த நெல் அரிசியை தொடர்ந்து பத்துத் தொடக்கம் பதினைந்து வருடங்கள் உணவாக உட்கொள்ளும்போது புற்றுநோய் ஏற்பட வய்ப்பிருக்கின்றது.

எனவே, வீதியில் நெல் உலரவிடுவதை விவசாயிகள் தவிர்ப்பதே சிறந்தது எனவும் அவர் இதன்போது தெரிவித்தார்.

20230318050020_IMG_3246.JPG

https://tamilwin.com/article/indian-ambassador-to-sri-lanka-visited-jaffna-1708079393

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையின் எல்லா இடங்களிலும் பாதைகளில்தான் நெல்லை காய வைக்கிறார்கள். அனுராதபுரம், புத்தளம் , வடக்கு, கிழக்கு பகுதிகளிலும் இதனை காணலாம். அநேகமான இடங்களில் காய வைப்பதட்கான வசதிகளில்லை. ஆணடாண்டு காலமாக இப்படித்தான் செய்கிறார்கள். எனவே இந்த செய்தியின் உண்மைத்தன்மை எப்படி என்று தெரியவில்லை. 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Cruso said:

இலங்கையின் எல்லா இடங்களிலும் பாதைகளில்தான் நெல்லை காய வைக்கிறார்கள். அனுராதபுரம், புத்தளம் , வடக்கு, கிழக்கு பகுதிகளிலும் இதனை காணலாம். அநேகமான இடங்களில் காய வைப்பதட்கான வசதிகளில்லை. ஆணடாண்டு காலமாக இப்படித்தான் செய்கிறார்கள். எனவே இந்த செய்தியின் உண்மைத்தன்மை எப்படி என்று தெரியவில்லை. 

நேரடியாக தாரில் படும் வகையில் போடுவதால் ஏதும் தாக்கம் இருக்கலாமண்ணை.

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, ஏராளன் said:

நேரடியாக தாரில் படும் வகையில் போடுவதால் ஏதும் தாக்கம் இருக்கலாமண்ணை.

இருக்கலாம். நிச்சயமாக ரோட்டில் காயபோடும்போது தாரில்தான் போடுவார்கள். 

இவ்வளவு காலமாக அதைத்தான் மக்கள்சாப்பிடுகிறார்கள் என்று சொல்ல வருகின்றேன். 

  • கருத்துக்கள உறவுகள்

தெருவில் நெல்லை காயப்போடுவது மக்களின் போக்குவரத்துக்கு இடைஞ்சல் ஏற்படுத்தும் செயல்.  நெல்லை காயப் போடுவதற்கு வேறு பல வழிகள் இல்லையா? அதை முயற்சிக்காமல் இப்படி சோம்பேறித்தனமாக  தெரிவில் காயப் போடுவது தெருவில்  அசௌகரியப்படுத்தும். விபத்துக்களுக்கு வழி சமைக்கும். 

  • கருத்துக்கள உறவுகள்
Just now, island said:

தெருவில் நெல்லை காயப்போடுவது மக்களின் போக்குவரத்துக்கு இடைஞ்சல் ஏற்படுத்தும் செயல்.  நெல்லை காயப் போடுவதற்கு வேறு பல வழிகள் இல்லையா? அதை முயற்சிக்காமல் இப்படி சோம்பேறித்தனமாக  தெரிவில் காயப் போடுவது தெருவில்  அசௌகரியப்படுத்தும். விபத்துக்களுக்கு வழி சமைக்கும். 

இதெல்லாம் நாளாந்தம் கால காலமாக நடக்கும் காரியங்கள். அரசிடம் இதட்கு பதில் இல்லை. அரசுக்கு தெரியும் இதட்கு எதிராக போனால் வீண் பிரச்சினைகளை சந்திக்க நேரிடும் என்று. விவசாயிகளும் இதட்கான மாற்று வழிகளை அரசிடம்  கேட்டும்  பலன் கிடைக்கவில்லை. எனவே அரசும் பாரா முகமாக இருக்கின்றது. இதெல்லாம் நிர்வாக பிரச்சினைகள். 

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Cruso said:

இதெல்லாம் நாளாந்தம் கால காலமாக நடக்கும் காரியங்கள். அரசிடம் இதட்கு பதில் இல்லை. அரசுக்கு தெரியும் இதட்கு எதிராக போனால் வீண் பிரச்சினைகளை சந்திக்க நேரிடும் என்று. விவசாயிகளும் இதட்கான மாற்று வழிகளை அரசிடம்  கேட்டும்  பலன் கிடைக்கவில்லை. எனவே அரசும் பாரா முகமாக இருக்கின்றது. இதெல்லாம் நிர்வாக பிரச்சினைகள். 

இதற்கான மாற்று வழிகளை  விவசாயிகள் தான் சிந்தித்து  நடைமுறைப்படுத்த வேண்டும். பயிரிடப்படாத தரிசு நிலங்கள் நிறைய உண்டு தானே அங்கு படங்குகளை விரித்து காயப்போடலாம் தானே.  கிடங்கு முடங்கான மோசமான தெருக்கள் இருந்த காலத்தில் தெருக்களில் நெல்லைக் காயப் போடும் வழக்கம் இருக்கவில்லை.  அபோது எங்கே காயப்போட்டார்களாம்? 

  • கருத்துக்கள உறவுகள்
Just now, island said:

இதற்கான மாற்று வழிகளை  விவசாயிகள் தான் சிந்தித்து  நடைமுறைப்படுத்த வேண்டும். பயிரிடப்படாத தரிசு நிலங்கள் நிறைய உண்டு தானே அங்கு படங்குகளை விரித்து காயப்போடலாம் தானே.  கிடங்கு முடங்கான மோசமான தெருக்கள் இருந்த காலத்தில் தெருக்களில் நெல்லைக் காயப் போடும் வழக்கம் இருக்கவில்லை.  அபோது எங்கே காயப்போட்டார்களாம்? 

இத்தேட்கெல்லாம் செலவு அதிகமோதெரியவில்லை. அந்த நாள் தொடக்கம் நான் கண்டது இப்படித்தான். அரசும் அதட்கு எதிராக எந்த  நடவடிக்கையும் எடுக்க வில்லை. எனவே அரசும் இதட்கு உத்தியோகபூர்வமற்ற ரீதியில் அனுமதி வழங்கி இருக்கிறது. 

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Cruso said:

இத்தேட்கெல்லாம் செலவு அதிகமோதெரியவில்லை. அந்த நாள் தொடக்கம் நான் கண்டது இப்படித்தான். அரசும் அதட்கு எதிராக எந்த  நடவடிக்கையும் எடுக்க வில்லை. எனவே அரசும் இதட்கு உத்தியோகபூர்வமற்ற ரீதியில் அனுமதி வழங்கி இருக்கிறது. 

ஒவ்வொரு வீட்டு வளவுகளில் பற்றைகள் வளர்ந்து கவனிப்பாரற்று கிடப்பதால் மலேரியா, டெங்கு போன்ற நோய்கள் வருவதாகவும் அதனை துப்பரவு செய்யாதவர்களுக்கு எதிராக அரசாங்கம் நடவடிக்கை எடுபதாகவும. செய்திகள் வருகின்றன. அவ்வாறான காணிகளை துப்பரவு செய்து அதில் காயப்போடுவதுடன் அந்த வளவுகளை பராமரிப்பதுடன் நோய்களில் இருந்தும் காத்து கொள்ளலாம்.  அதை விடுத்து வாகனப் போக்குவரத்துக்கென அமைக்கப்பட்ட வீதிகளில் இவ்வாறு செய்வதை பற்றி அங்குள்ள சிவில் சமூகம் கூட எதிர்ப்பு தெரிவிக்காது  இருப்பது ஆச்சரியம் அளிக்கின்றது.  

ஒரு வாகனத்தை போக்குவரத்துக்கு இடைஞ்சலாக மிக சொற்ப நேரம் நிறுத்தி வைப்பதற்கே நாம் பயப்ப்படும்  உலகில் இது ஆச்சரியமான விடயம் தான். 

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.