Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

”பொறுப்பான அரசியல் கட்சியாக யாப்பின்படி செயற்படுவதுதான் சரியான முறை”

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் யாப்பில் இருக்கின்ற விடயங்கள் சரியாக பின்பற்றப்படவில்லை என நீதிமன்றில் சுட்டிக்காட்டப்படுமாக இருந்தால் பொறுப்பான அரசியல் கட்சியாக அதனைத் திருத்தி யாப்பின்படி செயற்படுவதுதான் சரியான முறை என்று நான் கருதுகின்றேன்.”

– இவ்வாறு தெரிவித்தார் ஜனாதிபதி சட்டத்தரணியும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் யாழ்ப்பாணம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன்.

இலங்கைக்கான இந்தியத் தூதுவர் சந்தோஷ் ஜா, தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் புத்திஜீவிகள் உள்ளிட்ட சிலரை நேற்றுமுன்தினம் (16) இரவு யாழ்ப்பாணத்தில் சந்தித்துக் கலந்துரையாடினார்.

இந்தச் சந்திப்புக்குப் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே சுமந்திரன் மேற்கண்டவாறு கூறினார்.

‘இலங்கைத் தமிழரசுக் கட்சியினுடைய தேசிய மாநாட்டுக்கு யாழ்ப்பாணம், கிளிநொச்சி ஆகிய நீதிமன்றங்கள் தடை விதித்திருக்கின்றன.

இது தொடர்பில் கட்சியின் ஊடகப் பேச்சாளர் என்ற வகையில் உங்கள் கருத்து என்ன?’ – என்று ஊடவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த சுமந்திரன்,

“யாழ்ப்பாணம் மாவட்ட நீதிமன்றத்தால் எங்களுடைய நிர்வாகச் செயலாளருக்குக் கொடுக்கப்பட்ட ஆவணத்தைப் பார்வையிட்டிருந்தேன். திருகோணமலை நீதிமன்ற ஆவணம் இன்னும் யாரிடமும் சேர்க்கப்படவில்லை.

கட்சி யாப்பிலே இருக்கின்ற சில சரத்துக்கள் மீறப்பட்டுள்ளன எனக் குற்றம் சுமத்தியே இந்த வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

அப்படியான யாப்பு மீறல்கள் இருக்குமாக இருந்தால் அதனை நிவர்த்தி செய்து நாங்கள் அடுத்த கட்ட நடவடிக்கைக்குச் செல்லலாம் என்பதே என்னுடைய கருத்து.

ஏனென்றால் ஒரு கட்சியினுடைய நடவடிக்கையைக் கட்டுப்படுத்துவது அல்லது முறைப்படுத்துவது அந்தக் கட்சியினுடைய யாப்பு மட்டுமே. பல தடவைகளிலே நாங்கள் சில விடயங்களைக் கவனிப்பதில்லை.

அப்படிக் கவனிக்காமல் இருக்கின்றபோது அது பழக்கமாக வந்துவிடும். ஆனால், யாராவது அதைச் சவாலுக்கு உட்படுத்தினால்தான் அந்தப் பிரச்சினை வெளிப்படும்.

ஆகவே, யாப்பில் இருக்கின்ற விடயங்கள் சரியாகப் பின்பற்றப்படவில்லை எனச் சுட்டிக்காட்டப்படுமாக இருந்தால் பொறுப்பான அரசியல் கட்சியாக அதனைத் திருத்தி யாப்பின்படி செயற்படுவதுதான் சரியான முறை என்று நான் கருதுகின்றேன்.” – என்றார்.

‘வழக்குத் தொடர்பிலே தமிழரசுக் கட்சியினுடைய முன்னாள் தலைவர்கள், இந்நாள் தலைவர்கள் யாரேனும் உங்களுடன் கலந்துரையாடி இருக்கின்றார்களா?’ என்று ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, யாரும் என்னுடன் இந்த வழக்குச் சம்பந்தமாக கலந்துரையாடவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

 

 

http://www.samakalam.com/பொறுப்பான-அரசியல்-கட்சி/

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வாட்ஸப்பில் கண்டது…

 

இரண்டு அணிகள் என்பதே வழக்கிற்கான மூல காரணம்.!

இலங்கைத்தமிழ் அரசுக்கட்சிக்குள் இரண்டு அணிகள் உண்டு என்ற கதையை கடந்த ஜனவரி 27, ம் திகதி நடந்த மத்தியகுழு மற்றும் பொதுச்சபை கூட்டத்தில் கௌரவ சுமந்திரன் அவர்களே மீளவும் ஒலிபெருக்கியில் பேசி உறுதிப்படுத்தினார்!

அவருடைய அணியை சேர்ந்தவர்களே தற்போது யாழ்ப்பாணம், திருகோணமலை நீதிமன்றங்களில் கொழும்பில் இருந்து சட்டத்தரணிகளை பல இலட்சம் ரூபாய் செலவு செய்து வழக்கு தாக்கல் செய்துள்ளனர்.

கட்சியாப்பு (உபவிதி) என்பது 74, வருடங்களாக உள்ளது ஆனால் அது தேர்தல் திணைக்களத்திற்கு கட்டாயம் வழங்கப்படவேண்டும்.

இந்த யாப்பின் படி கடந்த 16, மாநாடுகளும் இடம்பெறவில்லை யாப்புக்கு அப்பால் சில விட்டுக்கொடுப்பு இணக்கப்பாடு , பேசுதல், சமரசம் காணுதல் என்ற அடிப்படையில்தான் சகல மாநாட்டு தெரிவுகளும் தந்தை்செல்வா காலம் தொடக்கம் மாவை அண்ணர் காலம் வரை எட்டுத்தலைவர்களும் வழிப்படுத்தினர்.

கட்சியை இலங்கை நீதிமன்றில் காட்டிக்கொடுக்கவில்லை.

அப்போது இரண்டு அணிகள் இருக்கவில்லை ஒற்றுமையாக கட்சியை இயங்கவைத்தனர். இலங்கை நீதிமன்றில் அடவு வைக்காமல் பேசி கட்சியை சரி பிழைகளை கதைத்து கட்சியை முன்நோக்கி நகர்தினர்.

ஆனால் 17, வது இந்த மகாநாடுதான் தலைவருக்கு வேட்புமனுகோரி, மாவட்டங்களில் சென்று பிரசாரங்கள் மேற்கொண்டு ஜனநாயக கட்சி ஜனநாயக தேர்தல் என மக்களுக்கு கூறி தலைவர் தெரிவு இடம்பெற்றால் இருவரும் இணைந்து செயல்படுவோம் என பிரசாரங்களிலும் கூறிவிட்டு தலைவராக சிறிதரன் தெரிவான பின்னர் கடந்த ஜனவரி 27, ம் திகதி திருகோணமலையில் நடைபெற்ற மத்தியகுழு, பொதுச்சபை கூட்டத்தில் கௌரவ சுமந்திரன் மகிரங்கமாகவே இரண்டு அணிகள் உண்டு தமது அணிக்கு பொதுச்செயலாளர் பதவி தரப்படவேண்டும் அல்லது தமக்கு தரப்படவேண்டும் என கூறியதன் மூலம் தமிழரசுகட்சிக்குள் இரண்டு பிரிவு(அணி) உண்டு என்பதை உறுதிப்படுத்தினார்.

ஒரு உதாரணம் கடந்த 2019, ல் யாழ்ப்பாணத்தில் இறுதியாக நடந்த மாநாட்டில் எல்லாத்தெரிவுகளும் கௌரவ சுமந்திரன் எழுதிவாசித்து்நிறைவேறியது.

கட்சியாப்பில் இல்லாத பிரதி பொதுச்செயலாளர் இருவர், மூத்த துணைத்தலைவர் இருவர் என சிலரை திருப்திப்படுத்தி பதவி வழங்கப்பட்ட வரலாறும் உண்டு .

இரண்டு அணிகள் கதையால் குழப்பம் ஆரம்பமானது!

இந்த அணிகள் என்ற்இரண்டு பிரிவானது தற்போது ஒரு அணி வழக்கு தாக்கல் செய்து தமிழரசுக்கட்சிக்குள் ஒற்றுமை இல்லை என்பதை உலகத்திற்கு நிருபித்துள்ளனர்.

எனவே கட்சியாப்பு எப்படி என்ன எழுதி இருந்தாலும் யாப்புக்கு அப்பால் பேசி பல விடயங்கள் கடந்த காலங்களில் ஒற்றுமையாக இணக்கப்பாடுடன் கட்சி முன்நோக்கி செய்த வரலாற்றை இந்த வழக்குமூலம் கட்சிக்குள் ஒற்றுமை இல்லை என்பது நிருபணமாகியுள்ளது!

-பா.அரியநேத்திரன்-
18/02/2024

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, கிருபன் said:

வாட்ஸப்பில் கண்டது…

 

இரண்டு அணிகள் என்பதே வழக்கிற்கான மூல காரணம்.!

இலங்கைத்தமிழ் அரசுக்கட்சிக்குள் இரண்டு அணிகள் உண்டு என்ற கதையை கடந்த ஜனவரி 27, ம் திகதி நடந்த மத்தியகுழு மற்றும் பொதுச்சபை கூட்டத்தில் கௌரவ சுமந்திரன் அவர்களே மீளவும் ஒலிபெருக்கியில் பேசி உறுதிப்படுத்தினார்!

அவருடைய அணியை சேர்ந்தவர்களே தற்போது யாழ்ப்பாணம், திருகோணமலை நீதிமன்றங்களில் கொழும்பில் இருந்து சட்டத்தரணிகளை பல இலட்சம் ரூபாய் செலவு செய்து வழக்கு தாக்கல் செய்துள்ளனர்.

கட்சியாப்பு (உபவிதி) என்பது 74, வருடங்களாக உள்ளது ஆனால் அது தேர்தல் திணைக்களத்திற்கு கட்டாயம் வழங்கப்படவேண்டும்.

இந்த யாப்பின் படி கடந்த 16, மாநாடுகளும் இடம்பெறவில்லை யாப்புக்கு அப்பால் சில விட்டுக்கொடுப்பு இணக்கப்பாடு , பேசுதல், சமரசம் காணுதல் என்ற அடிப்படையில்தான் சகல மாநாட்டு தெரிவுகளும் தந்தை்செல்வா காலம் தொடக்கம் மாவை அண்ணர் காலம் வரை எட்டுத்தலைவர்களும் வழிப்படுத்தினர்.

கட்சியை இலங்கை நீதிமன்றில் காட்டிக்கொடுக்கவில்லை.

அப்போது இரண்டு அணிகள் இருக்கவில்லை ஒற்றுமையாக கட்சியை இயங்கவைத்தனர். இலங்கை நீதிமன்றில் அடவு வைக்காமல் பேசி கட்சியை சரி பிழைகளை கதைத்து கட்சியை முன்நோக்கி நகர்தினர்.

ஆனால் 17, வது இந்த மகாநாடுதான் தலைவருக்கு வேட்புமனுகோரி, மாவட்டங்களில் சென்று பிரசாரங்கள் மேற்கொண்டு ஜனநாயக கட்சி ஜனநாயக தேர்தல் என மக்களுக்கு கூறி தலைவர் தெரிவு இடம்பெற்றால் இருவரும் இணைந்து செயல்படுவோம் என பிரசாரங்களிலும் கூறிவிட்டு தலைவராக சிறிதரன் தெரிவான பின்னர் கடந்த ஜனவரி 27, ம் திகதி திருகோணமலையில் நடைபெற்ற மத்தியகுழு, பொதுச்சபை கூட்டத்தில் கௌரவ சுமந்திரன் மகிரங்கமாகவே இரண்டு அணிகள் உண்டு தமது அணிக்கு பொதுச்செயலாளர் பதவி தரப்படவேண்டும் அல்லது தமக்கு தரப்படவேண்டும் என கூறியதன் மூலம் தமிழரசுகட்சிக்குள் இரண்டு பிரிவு(அணி) உண்டு என்பதை உறுதிப்படுத்தினார்.

ஒரு உதாரணம் கடந்த 2019, ல் யாழ்ப்பாணத்தில் இறுதியாக நடந்த மாநாட்டில் எல்லாத்தெரிவுகளும் கௌரவ சுமந்திரன் எழுதிவாசித்து்நிறைவேறியது.

கட்சியாப்பில் இல்லாத பிரதி பொதுச்செயலாளர் இருவர், மூத்த துணைத்தலைவர் இருவர் என சிலரை திருப்திப்படுத்தி பதவி வழங்கப்பட்ட வரலாறும் உண்டு .

இரண்டு அணிகள் கதையால் குழப்பம் ஆரம்பமானது!

இந்த அணிகள் என்ற்இரண்டு பிரிவானது தற்போது ஒரு அணி வழக்கு தாக்கல் செய்து தமிழரசுக்கட்சிக்குள் ஒற்றுமை இல்லை என்பதை உலகத்திற்கு நிருபித்துள்ளனர்.

எனவே கட்சியாப்பு எப்படி என்ன எழுதி இருந்தாலும் யாப்புக்கு அப்பால் பேசி பல விடயங்கள் கடந்த காலங்களில் ஒற்றுமையாக இணக்கப்பாடுடன் கட்சி முன்நோக்கி செய்த வரலாற்றை இந்த வழக்குமூலம் கட்சிக்குள் ஒற்றுமை இல்லை என்பது நிருபணமாகியுள்ளது!

-பா.அரியநேத்திரன்-
18/02/2024

ஒரு கட்சிக்கு யாப்பின்படி செய்ய முடியாவிடடாள் எதட்கு அந்த யாப்பு? நிலைமை எந்த நாளும் ஒரே மாதிரியாக இருக்குமென்று கூற முடியாது. யாப்பின்படி செயல்பட்டிருந்தால் பிரச்சினை ஒன்றுமேயில்லை. அப்படி இல்லாமல் இன்னொருவரை குற்றம் சாட்டிக்கொண்டு இருப்பதில் பிரயோசனமில்லை. இவ்வளவு காலமும் சமாளித்தோம் இனியும் சமாளிப்போம் என்று கூறி கொண்டு செல்ல முடியாது. அப்படி என்றால் விட்டு கொடுப்புடன் செயல்பட வேண்டும். எல்லாம் எனக்குதான் என்றால் எப்படி சமாளிப்பது? 

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.