Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

செவிபுலனற்ற உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் இலங்கை - பாகிஸ்தான் இன்று பலப்பரீட்சை

12 MAR, 2024 | 11:47 AM
image

(எம்.எம்.சில்வெஸ்டர்)

செவிபுலனற்ற உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் உலக சம்பியனை தீர்மானிக்கும் இறுதிப் போட்டியில் இலங்கை மற்றும் பாகிஸ்தான் செவிபுலனற்ற கிரிக்கெட் அணிகள் இன்று (12) பலப்பரீட்சை நடத்தவுள்ளன.  

உலக சம்பியனை தீர்மானமிக்கவுள்ள இறுதிப் போட்டியானது, ஐக்கிய அரபு இராச்சியத்தின் ஷார்ஜாவில் இலங்கை நேரப்படி மாலை 6 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

செவிபுலனற்ற உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் இந்திய அணியை  எதிர்கொண்ட இலங்கை அணியானது, சுப்பர் ஓவரில் 9 ஓட்டங்களால் வென்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.  

கடந்த 6 ஆம் திகதியன்ற ஐக்கிய அரபு இராச்சியத்தில் ஆரம்பமான இப்போட்டித் தொடரின் அரையிறுதிப் போட்டிகள் நேற்று (11) நடைபெற்றன.

இப்போட்டித் தொடரின் இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் இலங்கை , இந்திய அணிகள் மோதிக்கொண்டன.

இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்டுக்களை இழந்து 154 ஓட்டங்களை குவித்தது. பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுக்களை இழந்து 154 ஓட்டங்களை குகே்கவே போட்டியில் சமநிலையில் முடிந்தது. 

இதையடுத்து, வெற்றியாளரை தீர்மானிப்பதற்கு சுப்பர் ஓவர் முறை கடைப்பிடிக்கப்பட்டது. இதில் முதலில் துடுப்பெடுத்தாடி இலங்கை அணி 14 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

ghgj.gif

சுப்பர் ஓவரில் இலங்கை சார்பாக துடுப்பெடுத்தாட கிமந்து மெல்கம், பாலகிருஷ்ணன் தர்மசீலன் களமிறங்கினர். இலங்கை அணி 14 ஓட்டங்களை குவித்து, இந்திய அணிக்கு 15 ஓட்டங்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது. 

சுப்பர் ஓவரில் இந்திய அணி 5 ஓட்டங்களை மாத்திரம் பெற்றுக்கொண்டதால்,  9 ஓட்டங்களால் இலங்கை அணி வெற்றிக்கொண்டு இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.  

இப்போட்டிக்கு முன்னதாக நடை‍பெற்ற  அவுஸ்திரேலிய அணியுடனான முதலாவது அரையிறுதிப் போட்டியில் பாகிஸ்தான் அணி வென்று முதலாவது அணியாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியிருந்தது. 

fhgd.gif

இந்நிலையில், இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகள் இன்று (12) நடைபெறவுள்ள உலக சம்பியனை தீர்மானிக்கும் இறுதிப் போட்டியில் மோதிக்கொள்ளவுள்ளன.

https://www.virakesari.lk/article/178508

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

செவிப்புலனற்றோருக்கான உலக கிண்ணம் : சம்பியனானது பாகிஸ்தான்; உப சம்பியனானது இலங்கை 

13 MAR, 2024 | 02:47 PM
image

(எம்.எம்.சில்வெஸ்டர்)

செவிப்புலனற்ற சர்வதேச கிரிக்கெட் சபை ஏற்பாடு செய்திருந்த (Deaf International Cricket Council - DICC) செவிப்புலனற்றோருக்கான உலக கிண்ண கிரிக்கெட் போட்டியில் செவிப்புலனற்ற பாகிஸ்தான் கிரிக்கெட் அணி உலக சம்பியன் பட்டத்தை வென்றதுடன், செவிப்புலனற்ற இலங்கை கிரிக்கெட் அணி உப சம்பியன் பட்டத்தை ‍கைப்பற்றியது.

இலங்கை, இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், அவுஸ்திரேலியா, தென் ஆபிரிக்கா ஆகிய 6 நாடுகள் பங்கேற்ற இப்போட்டித் தொடர் கடந்த 6ஆம் திகதி ஐக்கிய அரபு இராச்சியத்தின் ஷார்ஜாவில் ஆரம்பமானது.

லீக் முறையின் கீழ் நடைபெற்ற இப்போட்டித் தொடரில் ஒவ்வொரு அணிகளும் ஏனைய அணிகளுடன் தலா ஒரு தடவை எதிர்த்தாடியிருந்ததுடன், லீக் சுற்றின் முடிவில் புள்ளிகள் பட்டியலில் முதல் 4 இடங்களை பிடித்த பாகிஸ்தான், இந்தியா, இலங்கை, அவுஸ்திரேலிய அணிகள் அரையிறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றன.

அவுஸ்திரேலியாவுடனான முதலாவது அரையிறுதிப் போட்டியில் பாகிஸ்தானும், இந்தியாவுடனான இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் இலங்கை அணியும் வெற்றியீட்டிக்கொண்டு உலக சம்பியனை தீர்மானிக்கும் இறுதிப் போட்டிக்கு முன்னேறின. 

இலங்கை நேரப்படி, நேற்று மாலை 6 மணிக்கு ஆரம்பமான இறுதிப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் 20 ஓவர்களில் 151 ஓட்டங்களை குவித்தது. பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய இலங்கை 62 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்து 89 ஒட்டங்களால் தோல்வியைத் தழுவியது.

கிமந்து மெல்கம் தலைமையிலான செவிபுலனற்ற இலங்கை அணியில் பாலகிருஷ்ணன் தர்மசீலன், அலன்ரோஸ் காலேப் ஆகிய தமிழ் பேசும் வீரர்கள் விளையாடிருந்தனர். 

அத்துடன், ரஜித்த அசங்க, தாரக்க சம்பத், சுமுது லங்கா, கொயும் வெல்கமகே, அசங்க மஞ்சுள, உதய லக்மால், தினுக்க சச்சின், சச்சித் பெரேரா, நதுன் சமீர, எஸ். மதுரங்க, ஹசித்த பெரேரா, லக்சான் பெர்னாண்டோ ஆகியோரும் செவிப்புலனற்ற இலங்கை கிரிக்கெட் அணியில் இடம்பெற்றிருந்தனர்.

eb0c09a1-89a9-4504-add3-7af0ee3d0b92.jpg

8cd7db57-3f2a-44fb-88da-761f98f7de52.jpg

https://www.virakesari.lk/article/178623

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.