Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
"பாசக்காரப் பாட்டி"
 
 
எல்லா குழந்தைகளுக்கும், தமக்கு அன்பு செலுத்தவும், தாம் அன்பு செலுத்தவும் ஒரு சிலர் கட்டாயம் தேவை. அம்மா, அப்பாவிற்கு அடுத்ததாக, ஏன் பலவேளைகளில் முதலாவராக இருப்பவர் தான் பாட்டி ஆவார். ஏன் என்றால் அவர்கள் பெற்றோர்களின் பங்கை இலகுவாக எடுக்கக் கூடியது தான், பொறுமையாக இருந்து ஆலோசனை வழங்குவதுடன், சேர்ந்து விளையாடி, கதைகள் சொல்லி ஒரு ஆசிரியர் போலவும், கூட்டாளி போலவும் செயற்படக் கூடியவர்கள் அவர்கள் ஒருவரே! அப்படியான ஒருவர் தான் என் பாட்டி!!
 
எங்க குடும்பம் ஓரளவு கூட்டு குடும்பம் என்பதால், தாத்தாவும் பாட்டியும் எம்முடன் இருந்தனர். அப்பா முழுநேர வேலையும், அம்மா பகுதி நேர வேலையும் என்பதால், என்னை கவனிப்பதில் பாட்டியே முதலாவதாக இருந்தார். பல மகிழ்வான நிகழ்வுகள் இன்னும் என் மனதில் இருக்கிறது. நான் இன்று பெரியவனாகி, படிப்பு முடித்து, வேலையும் செய்கிறேன். அடுத்த ஆண்டு எனக்கு திருமணம் கூட நடக்க உள்ளது. என் முதல் கனா, எனக்கு மூத்தப்பிள்ளை, மகளாக பிறக்கவேண்டும், அவளுக்கு பாட்டியின் பெயரை சூட்டிட வேண்டும். ஆமாம் ஒன்று சொல்ல மறந்து விட்டேன், என் பாசக்காரப் பாட்டி, சென்ற ஆண்டு திடீரென கொரோனாவால் எம்மை விட்டு பிரிந்துவிட்டார். ஆனால் அதற்க்கு முதல், என் வருங்கால மனைவியை [காதலியை] சந்தித்து அவருக்கு ஆசி வழங்கியது, அவரை பேத்தி என்று செல்லமாக கூப்பிட்டு அளவளாவியது இன்னும் மறக்க முடியாது!
 
என் சின்ன வயதில், பாட்டி பொதுவாக வீட்டிலேயே இருப்பதால், என்னுடன் அதிகமாக இருந்து உள்ளார். அதனால் அவரே, நான் எடுக்கும் சின்ன சின்ன தீர்மானங்களுக்கு நங்கூரமாகவும், அதே நேரம் எனது பாதுகாப்பாகவும் இருந்தார். அந்த நேரம் அதை என்னால் சரியாக உணரமுடியவில்லை. இடைஞ்சலாக இருக்கிறார் என அடம்பிடித்ததும் உண்டு. ஆனால் இன்று அதன் உண்மையான தன்மையை உணருகிறேன்
 
குறிப்பாக என் பாலர் பருவத்தில் பாட்டியின் பங்கு மறக்கமுடியாத ஒன்று. அவரின் பாசம், எந்த நிலையிலும் மனம் குழம்பாது ஒரு சிறு புன்னகையுடன் எடுக்கும் தீர்மானங்கள், மடியில் இருத்தி கதை சொல்லும் அழகு, தாலாட்டு பாடி நித்திரை ஆக்கும் பக்குவம், கணிதம், தமிழ், விஞ்ஞானம், பொது அறிவு போன்றவற்றை இலகுவாக உதாரணத்துடனும் செய்முறைகளுடனும் புகட்டும் அனுபவம் நான் இன்னும் வேறு யாரிடமும் கண்டதில்லை.
 
"பாசம் கொண்டு மகிழ்ந்து விளையாட
பாவம் பாட்டி இந்த வயதிலும்
பார்த்து படியில் கால் வைத்து
பாலும் சோறும் கொண்டு வாரார்"
 
"பாடி ஆடி விளையாட்டு காட்ட
பால் கொடுத்து கதை சொல்ல
பாயில் அணைத்து சேர்ந்து படுக்க
பாக்கியம் பெற்றேனென மகிழ்ந்து வாரார்"
 
பாயை விரித்து நீட்டி படுத்து
பாதி பல்லால் வெற்றிலை மென்று
பாதை காட்ட நல்ல கதைசொல்ல
பாசம் கொண்டு மகிழ்ந்து வாரார்"
 
ஆமாம் இப்படித் தான் என் பாட்டி இருந்தது எனக்கு இன்னும் ஞாபகம் . அவரை பற்றி கொஞ்சம் விரிவாக சொலவ்து என்றால், அவர் என்றும் பாரம்பரிய உடையில் தான் இருப்பார். எம் பெற்றோர் , நாம் எல்லோரும் இன்றைய நவீன உடை அலங்காரத்துக்குள் தாராளமாக இருந்தாலும், அவர் தன் அலங்காரத்தை மாற்றவே இல்லை, ஆனால் எம்மை தடுக்கவும் இல்லை, அவர் எம்மை அதில் பார்ப்பதில் மிக்க மகிழ்வே காட்டினார் ! அது தான் அவரின் சிறப்பு !, இது யாருக்கு வரும் ??
 
அவர் பெரிதாக வண்ண நிற ஆடைகள் அணியமாட்டார். அது மட்டும் அல்ல தொழ தொழ என்றே மேல் சடடை இருக்கும். அது முழங்கை மட்டும் நீண்டும் இருக்கும். அதிகமாக பகலில் சேலை அணிந்து இருப்பார். மாலை வரும் பொழுது நைட்டி / இரவில் அணியும் ஆடை அல்லது மேல் சட்டையுடன் ஒரு வித பாவாடை அணிவார். ஆனால் மிகவும் கச்சிதமாக அழகாக உடுத்து இருப்பார்.
 
இன்று உடை கலாச்சாரம் சிறுவரில் இருந்து கிழவி வரை மாறி விட்டாலும், என் பாட்டி கிராமத்து கலாச்சார உடையை நினைவூட்டிக் கொண்டே இருக்கிறார். அவர் எந்த ஒப்பனையும் செய்வதில்லை, என்றாலும் அவரின் இயற்கையான சாயல் உண்மையில் அழகே! ஏன், அவர் பெயர் கூட கனகம்மா தான்! அவர் சிறு வயதில், பாரமான தங்க தோடு அணிந்தவர் என்பதால், பிற்காலத்தில் அவரின் காது மடல்கள் நீளமாக வந்துவிட்டது என்று எண்ணுகிறேன்.
 
பாட்டி சொன்ன இரு விடயங்கள் எனக்கு இன்னும் ஞாபகமாக இருக்கு. அது அவரின் பண்பாட்டையும் அறிவையும் கட்டாயம் பறைசாற்றும். அது மட்டும் அல்ல அவரின் இனப்பற்றையும், ஒரு குடும்ப ஒழுஙகையும் எடுத்துக்காட்டுகிறது. இன்று தமிழ் இனம் இலங்கையில் பட்ட துன்பங்களும், அதனால் ஆயிரம் ஆயிரமாக இடம் பெயர்ந்து பரவலாக பல நாடுகளில் வாழும் சூழலில், தமது பண்பாட்டையும், மொழியையும் தொடர வேண்டிய அவசியம் இருக்கு என்பதை அவரின் சொற்கள் என் காதில் ஒலித்த படியே உள்ளது.
 
கலிகாலம் என்றால் என்ன? ஒரு சின்ன பிரசங்கமே எனக்கு வைத்தார். அந்த நாள் காலம் வேறு, இப்பத்தான் காலம் வேறு என்று ஆரம்பித்த அவர், கரிகாலம் என்று சற்று நிறுத்தி சொல்லி, அண்ணனும் தம்பியும் ஒரு முறை சந்தித்தார்கள், தம்பி, அண்ணா கரிகாலம் பிறந்து விட்டது என்று சொன்னான். உடனே அண்ணன், அது உன்னிலேயே தெரிகிறது என்று பதில் கொடுத்தார். காரணம் அன்றைய காலத்தில், மூத்தோருக்கு முன்னால், தோளில் இருக்கும் சால்வையை, ஒரு மரியாதை பொருட்டு, எடுத்துவிட்டு தான் கதைப்பார்கள். ஆனால் தம்பி அதை மறந்து வீறாப்புடன் அண்ணன் முன் கதைத்தது கரியன் பிறந்து விட்டான் என்பதை காட்டுகிறது என்றானாம், என்றார் என் பாட்டி. இது இன்று நகைப்புக்கு உரியதாக பலரால் கருதினாலும், கரிகாலம் என்ற சொல்லுக்கு ஒரு நல்ல விளக்கம் என்றே நம்புகிறேன் ! மற்றும் படி எனக்கும் அதில் பெரிதாக நம்பிக்கை இல்லை.
 
மேலும் குடும்ப ஒற்றுமை வேண்டும் என்று வலியுறுத்திய பாட்டி, பிதா மாதாவுக்கு கடமை செய்ய வேண்டும் என்றும் தாய் மொழியை எங்கிருந்தாலும் மறக்க வேண்டாம் என்றும், மொழி அழிந்தால் இனம் அழிந்ததுக்கு சமன் என்று சில வரலாற்று கதைகள் மூலம் விளங்கப் படுத்தினார். அதனின் உண்மையை இன்று நாம் அனுபவித்துக் கொண்டு இருக்கிறோம் / காண்கிறோம்! அதனால் தான் என் பாட்டியை மீண்டும் என் மகளாக வரவேண்டும் என்று கனவு காண்கிறேன். நான் மறு பிறப்பில், இவை போன்ற மூட நம்பிக்கைகளில், எந்த உண்மையும் இல்லை என்று அறிவியல் ரீதியாக எண்ணுகிறவன் என்றாலும், என் பாசக்காரப் பாட்டியின் சாயலில் வரவேண்டும் என்பதே என் கனா!
 
"கட்டிலில் படுத்து பாட்டியை நினைத்தேன்
ஊட்டி வளர்த்த கதைகளை சுவைத்தேன்
போட்டி போட்டு கனவு வந்தது
பாட்டி உருவில் தேவதை வந்தது!"
 
"கேட்காத இனிமை காதில் ஒலித்தது
வாட்டாத நிலவு வானத்தில் ஒளித்தது
மொட்டு விரிந்து வாசனை தந்தது
குட்டி பாட்டி தவழ்ந்து வந்தது"
 
"மெட்டி ஒலி காற்றோடு கலக்க
முட்டி மோதி நிமிர்ந்து நடந்து
பொட்டக் குட்டி பாட்டி பெயரில்
லூட்டி அடிச்சு அட்டகாசம் போடுது"
 
"ஒட்டி உடையில் அழகு காட்டி
சட்டம் போட்டு திமிரு காட்டி
பாட்டு படித்து இனிமை காட்டி
புட்டி பாலூட்ட மடியில் உறங்குது"
 
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்
அத்தியடி, யாழ்ப்பாணம்]
 
பி கு ;
என் அம்மாவை என் மகன் எழுதுவதாக கதை வடிவமைத்துள்ளேன்
297943814_10221424717270145_8289047939070825_n.jpg?stp=dst-jpg_s600x600&_nc_cat=108&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=Od5jHBBTINcAb6VEhNw&_nc_ht=scontent.fxds1-1.fna&oh=00_AfCBFiPd0cWZ7FiK1Hc37Ldp9Ur16e1x_sFPd8o0TiFFpg&oe=662354E7 May be an image of 1 person
 
 
 

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.