Jump to content

"தமிழரின் தோற்றுவாய்? [எங்கிருந்து தமிழர்?]"


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

"தமிழரின் தோற்றுவாய்? [எங்கிருந்து தமிழர்?]" / பகுதி : 19 

 

தமிழ், சுமேரிய நாகரிகத்திற்கு இடையில் "இரு தலை பறவையில் [இருதலைப்புள்ளில்]" ஒரு ஒற்றுமை காணக் கூடியதாக உள்ளது. சுமேரியர்கள் இந்த இரு தலை பறவையை போர் கடவுள் "நின்உர்ட"வின் [Ninurta]  குறியீடு / சின்னம் என கருதுகிறார்கள். இதை நின் கிர்சு [Ningirsu] எனவும் அழைப்பார்கள். சங்க நூல்களில் மூன்று பாடல்கள் இந்தப் பறவையைப் பற்றி குறிப்பிடுகின்றன. உதாரணமாக: அகநானுறு 12 , கலித்தொகை 89 & சங்கநூல்களுக்கு சமமான பழமை வாய்ந்த தகடூர் யாத்திரை எனும் நூல் பாடல் ஒன்றிலும் [ஒருகுடர்படுதரஓர்இரைதூற்றும் இருதலைப்புள்ளின்ஓர்உயிர்போல] இந்த இருதலைப்புள் குறிக்கக் காணலாம்.

தாய் தெய்வ வழிபாடு என்பது மிகவும் தொன்மையானது. உலகின் பல பகுதிகளிலும் அது இருந்தது என்று சொல்லும் தொன்மையான அடையாளங்கள் பல இருக்கின்றன. ஆனால் அவற்றின் ஆரம்பம் இந்தியாவிலும், அதிலும் குறிப்பாக தமிழ் மரபிலும் இருந்தன. உதாரணமாக, நாம் இங்கு இணைத்த பிரபலமான காளியின் உருவத்தில் ஒரு கையில் பாசக்கயிறைக் காணலாம். அது சுமேரியரின் ஈனன்ன கையில் உள்ளது போல் இருக்கிறது. மேலும் கைகள் உயரத் தூக்கி வைத்திருப்பதையும் காணலாம். இந்த சுமேரியன் பெண்தெய்வமான ஈனன்ன [Inanna] - காளி ஒப்பீடு இன்னும் ஒரு தொடர்பை எமக்குச் சொல்லுகிறது. 

சுமேரிய மக்கள் செமிட்டிக் இனஞ் சாராதவர்கள் [non-Semitic people]. பொதுவாக பருத்துக் குட்டையானவர்கள் [short and stocky], மேலும் மூக்கு கண் அமைப்புகளும் [high, straight noses and downward sloping eyes] நன்றாகவே தென் இந்திய திராவிட தமிழருடன் ஒத்து போகிறது. சுமேரிய பெண்கள் சேலை போன்று இடது தோலில் இருந்து துணியால் உடம்பை போர்கிறார்கள் [The women draped the garment from the left shoulder (a saree like)]. ஆண்கள் வேட்டி மாதிரி இடுப்பில் கட்டுகிறார்கள். தமது இடுப்புக்கு மேல் பகுதியை வெறுமையாக விட்டு விடுகிறார்கள். இவை எல்லாம் மேலும் [திராவிடருடன்] தமிழருடன் ஒத்து போகிறது.

பண்டைய கடலோடிகள் தாம் நடு கடலில் இருந்த போது கரையை / தரையை கண்டு பிடிக்க பறவைகளை பயன் படுத்தினார்கள். என்றாலும் திசைகாட்டிகள் பயனுக்கு வந்த பின் இம் முறை கைவிடப்பட்டது. இப்படியான மிகவும் சுவாரசியமான பறவைகளைப் பற்றிய குறிப்புகளை சுமேரியன், சிந்து சம வெளி, தமிழ் இலக்கியங்களில் காணக்கூடியதாகவும் உள்ளது. சிந்து சம வெளி முத்திரையில் படகு ஒன்று தனது இரு பறவைகளை இரு முனையிலும் கொண்டுள்ளது. மேலும் வைஷ்ணவ மகான்கள் [ஆழ்வார்கள்] இந்த உவமையை தமது பாடலில் புகுத்தி உள்ளார்கள். முதலாவதாக சுமேரியன் பண்பாட்டை பார்ப்போம்.

மனித இனத்தை அழிக்கவென கடவுள் அனுப்பிய பெருவெள்ளத்தில் இருந்து உயர் தப்பி பிழைத்தவர் 'உத்தனபித்தம்’ [Utnapishtim] என்ற மாமனிதர் ஆகும். மனித இனத்துடன் கோபம் கொண்ட என்லில் [God Enlil] என்ற சுமேரிய கடவுள் அவர்களை முற்றாக பெரும் வெள்ளத்தில் அழிக்க தீர்மானித்ததாக கில்கமேஷ் [Gilgamesh] காவியம் கூறுகிறது. கில்கமேஷை ஒரு படகு கட்டுமாறு உத்தன்பித்தம் கூறினான். வெள்ளம் தணிய அவன் ஒரு புறா, ஒரு தூக்கணாங் குருவி, ஒரு அண்டங் காக்கை [காகம்] ஆகிய பறவைகளை கரையை / தரையை கண்டு பிடிக்க அனுப்பினான் என குறிக்கப்பட்டுள்ளது.

1931 இல் நில அகழ்வில் கண்டு பிடிக்கப்பட்ட சிந்து சம வெளி முத்திரை இரண்டு முனையிலும் கப்பல் தளத்தில் பறவைகள் இருப்பதை காட்டுகிறது. இந்த பறவைகள் கடற்பயணத்திற்கு உதவ பயன் படுத்தப்பட்டது. பறவைகளை விடுவிற்கும் போது, அவை தரையை கண்டால் திரும்பி வராது. இது அவர்களுக்கு தரையை கண்டு பிடிக்க உதவியது.

ஒன்பதாம் நூற்றாண்டை சேர்ந்த குலசேகர ஆழ்வார் விஷ்ணுவிற்கு ஒரு பாட்டு பாடுகிறார். அதில் தரையை கண்டு பிடிக்காத பறவை போல் நானும் மீண்டும் ஆண்டவனின் மலர் பாதத்திற்கு வருகிறேன் என்கிறார். இன்னும் ஒரு புதுமை என்ன வென்றால், அவரும் மற்றவர்களும் [தமிழ் துறவிகளும்] குறிப்பிடுவது காகத்தை மட்டுமே. இது சுமேரியாவில் அண்டங் காகத்தை [காகத்தை] திசையை கண்டு பிடிக்க பயன் படுத்தியதுடன் ஒத்து போகிறது. இதோ அந்த பாடல்:

‘’வெங்கண்திண் களிறு அடர்த்தாய்! வித்துவகோட்டம்மானே
எங்குப் போய் உய்கேன்? உன் இணையடியே அடையல் அல்லால்
எங்கும் போய்க் கரை காணாது எறிகடல்வாய் மீண்டு ஏயும்
வங்கத்தின் கூம்பு ஏறும் மாப் பறவை போன்றேனே’’

(பெருமாள் திருமொழி, குலசேகர ஆழ்வார்/நாலாயிர திவ்ய பிரபந்தம்/691)

பயங்கரமான கண்களையுடைய வலிய (குவலயாபீடமென்னும்) யானையை கொன்றவனே! வித்துவக்கோடு அம்மானே!; உனது தாமரை பாதங்களையே (நான்) சரணமடைவதல்லாமல் வேறு யாரிடத்திற் போய் அடைக்கலம் பெறுவேன்? அலை யெறிகிற கடலினிடையிலே நான்கு திக்கிலும் போய்ப் பார்த்து எங்கும் கரையைக் காணாமல் திரும்பி வந்து (தான் முன்பு) பொருந்திய மாக் கலத்தினுடைய பாய் மரத்தின் மீது சேர்கிற பெரிய தொரு பறவையை போல் ஒத்து நிற்கிறேன் என்கிறது.

'சுமேரு தமிழ்' ஆராய்ச்சியின் முக்கியம் பற்றி இப்ப பல கல்விமான்கள் அறிய தொடங்கி உள்ளார்கள். அப்படியான ஆய்வு மூலம், உலகின் முதலாவது நாகரிகத்தை அமைத்தவர்கள் தமிழர்கள் என்றும் அவர்களே மனித இனத்தின் மூத்த இனம் என்றும் அவர்கள் இனி வரும் காலங்களில் உலகிற்கு சான்றுகளுடன் காட்டுவார்கள் என்பதால், இது எனக்கு மகிழ்ச்சியை கொடுக்கிறது.

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]

பகுதி : 20 தொடரும்

படம் 01: துருக்கியில் கண்டு எடுக்கப்பட்ட கி மு 1400 ஆண்டை சேர்ந்த இருதலைப்புள்

படம் 02: கர்நாடகம் மாநில கேளடி கோயில் சிற்பம்

படம் 03: சுமேரியன் பெண்தெய்வமான ஈனன்ன[Inanna]-காளி ஒப்பீடு]

May be an image of monument No photo description available. No photo description available. 

May be an image of text May be an image of text 

 

 


 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
"தமிழரின் தோற்றுவாய்? [எங்கிருந்து தமிழர்?]" / பகுதி : 20
 
 
[3] சிந்து வெளி நாகரிகம்
 
 
1920-1922, ஆம் ஆண்டு இந்தியா தொல்லியல் துறையினர் சிந்து மாநிலத்தில் மொகஞ்சதாரோ [Mohenjo Daro] என்னும் இடத்திலிருந்த ஒரு பெரிய மண் மேட்டைத் தோண்டி அகழ்வாராய்ச்சி நிகழ்த்தினர். அதன் வாயிலாக, அங்கு மண்ணுக்கு அடியில், ஓர் அழகிய நகரம் புதைந்து கிடப்பது கண்டு பிடிக்கப் பட்டது. அதே போல, மேற்குப் பஞ்சாப் மாநிலத்தில், ஹரப்பா [Harappa] என்னும் நகரம் புதைந்து கிடப்பதும் கண்டு பிடிக்கப் பட்டது. சிந்து வெளியில் [Indus Valley] அகழ்ந்து எடுக்கப் பட்ட நகரங்களின் வீடுகள் வரிசையாகக் கட்டப்பட்டுள்ளன. மாட மாளிகைகள், மண்டபங்கள், நீராடும் குளம், கழிவு நீர்ப் பாதைகள் ஆகியவையும் காணப்பெறுகின்றன. எளிமையான வீடுகளிலும் தனித் தனியே சமையல் அறை, படுக்கை அறை, குளியல் அறை முதலியன இடம் பெற்றிருந்தன. மேலும் அவர்கள் சுட்ட செங்கல்களை [brick] மிக அதிகமாகப் பயன் படுத்தியிருப்பது தெரிய வந்திருக்கிறது.
மிகவும் பலம்பொருந்திய, உறுதியான மதில்கள் கொண்ட , ஒரு குறிப்பிட்ட இடை வெளியில் அடிக்கடி காவல் மாடங்கள் [watchtowers] கொண்ட, ஒரு கோட்டை நகரமான ஹரப்பா, மொகஞ்ச தாரோவில், ஏகாதிபதியான சமயகுருமார் [autocratic priesthoods or priest-kings] அமைப்பு முறையில் ஒரு மையப்படுத்திய நிர்வாகம் / ஆட்சி அங்கு இருந்ததற்கான சான்றுகள் காணப்படுகின்றன. இது கோயில் சமயகுருமார் மெசொப்பொத்தேமியாவில் உள்ள ஊர் [Ur] என்ற நகரத்தை ஆட்சி செய்தது போல் உள்ளது.
 
அங்கு செய்யப்பட்ட நில அகழ்வால், ஒன்றின் மேல் ஒன்றாக ஒன்பது குடியிருக்கை நிலை இருந்துள்ளது தெரிய வந்துள்ளது. இது ஒரு நீண்ட காலம் அங்கு ஒரு நல்ல வாழ்வு வளம் [prosperity] இருந்ததை குறிக்கிறது. அதன் பின் அது வீழ்ச்சியடைந்துள்ளது. கி மு 1700 அளவில் அது, அந்த நாகரிகம் முற்றாக மறைந்து போயிற்று.
 
அங்கு கண்டு பிடிக்கப்பட்ட பொருட்களில் குறிப்பிடத்தக்கவை முத்திரைகள் [seals and sealings] ஆகும். மேலும் மெசொப்பொத்தேமியாவில் கண்டு பிடிக்கப்பட்ட சிந்து சம வெளி முத்திரைகள் இரண்டு பண்பாடுகளுக்கும் இடையான நெருங்கிய தொடர்புகளை உறுதிபடுத்துவதுடன், சிந்து சம வெளி நாகரிக காலத்தை தீர்மானிக்கவும் துணை புரிந்தது. இதன்படி, சிந்து சம வெளி நாகரிக காலம் கி மு 3000 - 1800 என கணக்கிடப்பட்டது.
தொல்பொருள் ஆய்வியல் அறிஞர்கள் சர். ஜான் மார்ஷல் (Sir John Marshall), சர். மார்டிமர் வீலர் (Sir Mortimer Wheeler), ஹிராஸ் பாதிரியார் (Father Heros), டாக்டர் எச்.ஆர். ஹால் (Dr. H.R. Hall), ஐராவதம் மகாதேவன் [Iravatham Mahadevan], டாக்டர் அஸ்கோ பார்போலா [Asko Parpola] போன்றவர்கள், தங்கள் ஆய்வுகளை வெளியிட்டு உள்ளனர். சிந்துவெளி நாகரிகத்தைத் தமிழர் நாகரிகம் என்று கூறுவதற்கு அங்கு தோண்டி எடுக்கப்பட்ட பொருட்களும், வெளிப்பட்ட கட்டிட அமைப்பும், பயன் படுத்திய நாணயங்களும் சான்றாக அமைந்துள்ளன என்று பல தகுந்த சான்றாதாரங்களுடன் நிறுவப்பட்டுள்ளன. ரொஸெட்டாக் கல் [Rosetta Stone / ரொசெட்டாக் கல்] என்று சொல்லக் கூடிய, இருமொழி கல்வெட்டு [bilingual inscription] என்று சொல்லப்படுகின்ற, ஒரு கல்வெட்டின் துணையைக் கொண்டுதான் சுமேரியா நாகரிகத்தினுடைய எழுத்தைப் படிக்க முடிந்தது. அப்படி ஓர் இரு மொழிக் கல் வெட்டுக் கிடைக்காததால் இதுவரை சிந்துவெளி எழுத்துகளைப் படிக்க முடியவில்லை. அந்தத் தெளிவற்ற நிலைமையில் திராவிடக் கருது கோள் என்பது ஆகக் கூடுதலான சாத்தியங்கள் உள்ள ஒரு கருதுகோளாக நினைக்கப்படுகிறதே தவிர, அது ஒரு முடிந்த முடிவாக நினைக்கப்படவில்லை. தொல்லியல் அறிஞர் ஐராவதம் மகாதேவன் என்பவரும், மொகஞ்சதாரோ முத்திரைகளில் பொறிக்கப்பட்டுள்ள எழுத்துகள் தமிழ் - பிராமி எழுத்துகளை [Tamil - Brahmi script] ஒத்திருக்கின்றன என்று குறிப்பிடுகின்றார். அண்மைக் காலங்களில். டாக்டர் ஆர். மதிவாணன். திரு. பூரணச்சந்திர ஜீவா ஆகியோர் சிந்துவெளி எழுத்துகள் தமிழே என்ற தம் ஆய்வு முடிவைத் தெரிவித்து உள்ளனர். மேலும் ரஷ்ய நிபுணர் யூரி வெலன்டினோவிச் க்நோரோசாவ் [Yuri Valentinovich Knorozov,] தலைமையில்லான உருசியா [Russia / ரஷ்யா] சிந்து வெளி ஆய்வு குழுவும் அங்கு பேசப்பட்டது பழைய திராவிட மொழி [older Dravidian] என ஆலோசனை வழங்கி உள்ளது. இவர் 1995 வரை சிந்துவெளி மொழியை கண்டறிய தனது ஆய்வை தொடர்ந்து நடத்தினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
இந்த சிந்து வெளி நாகரிகம், பண்டைய மெசொப்பொத்தேமியா, பண்டைய எகிப்து போன்ற நாகரிகங்களுடன் சம காலத்தை [contemporary] கொண்டதுடன், இது மிகவும் திட்டமிட்ட நகர அமைப்பிற்கும் சுகாதாரத்திற்கும் பிரபலமானதுடன், உலகின் முதலாவது நகர்ப்புற சுகாதார அல்லது துப்புரவு முறை [urban sanitation systems] ஒன்றை அல்லது அமைப்பை கொண்டிருந்தது. மற்றும் அங்கு கிடைத்த ஆதாரங்கள், சிந்து வெளி சமூக நிலைமைகள் சுமேரியருடன் ஒப்பிடக்கூடியதாக இருந்ததுடன், சம கால நாகரிகங்களான பபிலோனியா, எகிப்து போன்றவற்றை விட மேலாக, உயர்வாக இருந்தன என்பதை எடுத்து காட்டுகிறது. அங்கு 1052 நகரங்களையும் குடியிருப்புகளையும் இதுவரை கண்டு பிடிக்கப்பட்டதுடன் அதிகமானவை ஹரப்பா, மொகஞ்ச தாரோ தவிர சிறு குடியேற்றமாகவே உள்ளன. மிக நீண்ட சிந்து நதி அங்கு விவசாயத்திற்கு நீர் வழங்கியதுடன் இந்த சமவெளியை சுற்றி உயரமான மலைகளும் பாலைவனமும் கடலும் காணப்படுகிறது. மேலும் அந்த காலப் பகுதியில் கிழக்கு பக்கம் அடர்ந்த காடும் இருந்து உள்ளது. மேலும் சிந்து நதியின் நீளம் கிட்டத்தட்ட 3,180 கி மீ(1,980 மைல்) ஆகும்.
 
அது மட்டும் அல்ல, சிந்து வெளி நாகரிகம் பண்டைய எகிப்தியர் போல ஒரு பிரமிட்டையோ [Pyramid] அல்லது பண்டைய சுமேரியர் [மெசொப்பொத்தேமியர்] போல ஒரு சிகுரத்தையோ [Ziggurat], அதாவது தமக்கென ஒரு ஆலயத்தையோ அல்லது கல்லறைகளையோ [tombs] அவர்கள் தடையங்களாக அங்கு விட்டு செல்லவில்லை. மேலும், அங்கு ஒரு பெரிய, சிறந்த அரசனின் அல்லது கடவுளின் உருவச் சிலைகளும் இல்லை. எப்படியாயினும் சிந்து வெளி மக்கள் சின்னஞ்சிறிய மனித, மிருக உருவங்கள் சிலவற்றை விட்டு சென்று உள்ளார்கள். அவை உலோகங்களாலும் களி மண்ணாலும் செய்யப்பட்டவை. அதில் இரண்டு முக்கிய மானவை. ஒன்று தாடியுடனும் அலங்காரமேல் அங்கியுடனும் காட்சி அளிக்கும் மதகுரு - அரசன் [Priest - King]. மற்றது ஒரு நாட்டிய தாரகை ['dancing girl']. இந்த நாட்டிய பெண், வெண்கலத்தால் செய்யப்பட்டு ஆக 11 சதமமீற்றர் (சமீ) உயரத்தை கொண்டு உள்ளது. மிக மிக குறைவாக அணிந்து, அதிகமாக நிர்வாணமாக, அதே நேரத்தில் கையில் நிறைய வளையல்கள் அணிந்தும் காணப்படுகின்றன, இது சிந்து வெளி மக்கள் நாட்டியம் ஆட விருப்பம் உள்ளவர்கள் என்பதையும் எடுத்து காட்டுகிறது. அத்துடன் அவளது முடி பின்னப்பட்டும் [plait] இருக்கிறது.
 
இந்த சிந்து சம வெளி நாகரிகம், சில தீர்க்கப்படாத கேள்விகளையும் எம்மிடம் எழுப்புகிறது. உதாரணமாக: இந்த மதிநுட்பமிக்க நாகரிகம், ஏன் சிந்து சம வெளிக்கு அப்பால் பரவவில்லை?, ஏன் இந்த நாகரிகம், விவசாயத்தை பெரிய அளவில் அபிவிருத்தி செய்யவில்லை?, ஏன் இந்த நாகரிகம், கால்வாய் நீர்பசனமோ [canal irrigation] அல்லது கனரக கலப்பையோ [heavy plough] பாவிக்கவில்லை? மிகவும் விசேஷமாக எந்த சூழ்நிலையில் சிந்து சம வெளி நகரங்கள் வீழ்ச்சி அடைந்தன?
 
 
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]
 
பகுதி : 21 தொடரும்
453862085_10225728283936622_8734889938569387356_n.jpg?_nc_cat=105&ccb=1-7&_nc_sid=127cfc&_nc_ohc=U3buWlxftkQQ7kNvgHOQ3OW&_nc_ht=scontent-lhr6-2.xx&oh=00_AYD88D4_BcS5oZmLC41VLug2FVtwYPWgqlGdAbbaEq3CKA&oe=66B273DC 453648234_10225728283976623_6728901778512029714_n.jpg?_nc_cat=101&ccb=1-7&_nc_sid=127cfc&_nc_ohc=MC6omOqssI8Q7kNvgFX5Qye&_nc_ht=scontent-lhr8-2.xx&oh=00_AYC5BGtmkSdq3sRwonLo2iUlwT_s-MyK15cAF9BNPhMbDw&oe=66B29433 453845915_10225728283736617_2589851611838670214_n.jpg?_nc_cat=100&ccb=1-7&_nc_sid=127cfc&_nc_ohc=sGa1WJGL6eEQ7kNvgEqx5uu&_nc_ht=scontent-lhr6-2.xx&oh=00_AYA-TiV5vnO1-EyxmrhwimiOdOiGgmsDj1L_8WFlrHwzHw&oe=66B29ADB 453616344_10225728284416634_6924444081141931111_n.jpg?_nc_cat=106&ccb=1-7&_nc_sid=127cfc&_nc_ohc=IXwdhQqiGcoQ7kNvgFHp6g5&_nc_ht=scontent-lhr8-2.xx&oh=00_AYD_OBVdKohIItKHpIza3LO8mo6B95XUGGRddfGlOdQR-A&oe=66B27394 453536797_10225728284696641_4868427244941291450_n.jpg?_nc_cat=111&ccb=1-7&_nc_sid=127cfc&_nc_ohc=0tPLnk70LO8Q7kNvgGUqd0E&_nc_ht=scontent-lhr8-1.xx&oh=00_AYA8cL5b59VAkqQLIdY1IGgF65Am0EecmfZGUqTxwCaFuw&oe=66B295B6
 
 
Edited by kandiah Thillaivinayagalingam
Link to comment
Share on other sites



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.