Jump to content

அளவில் சிறியதாகி வரும் மனித மூளை: பழங்கால மனித குழுக்களுடன் ஒப்பிட்டபோது கிடைத்த தகவல்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
காலப்போக்கில் மனித மூளை சுருங்கி வருவது ஏன்?

பட மூலாதாரம்,GETTY IMAGES

கட்டுரை தகவல்
  • எழுதியவர், ஜாஸ்மின் ஃபாக்ஸ் - ஸ்கெல்லி
  • பதவி, பிபிசி
  • 2 மணி நேரங்களுக்கு முன்னர்

தற்கால நவீன மனிதர்களின் மூளை ஒரு லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த மனிதர்களின் மூளையைவிட 13% சிறியதாகிவிட்டது. காலப்போக்கில் மனித மூளை சுருங்கியது ஏன் என்பது ஆராய்ச்சியாளர்களுக்குப் புரியாத புதிராக உள்ளது.

மனித மூளை மற்ற உயிரினங்களின் மூளையைவிடப் பெரியது. இன்னும் சொல்லப்போனால் மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் உள்ள முக்கிய வேறுபாடு இந்த "பெரிய மூளை" என்று கருதப்படுகிறது. சிந்திக்கும் திறனும் கண்டுப்பிடிப்புகளை மேற்கொள்ளும் ஆற்றலும் இருப்பதால்தான் மனித இனத்தால் முதல் கலையை உருவாக்கவும், சக்கரத்தைக் கண்டுபிடிக்கவும், சந்திரனில் இறங்கவும் முடிந்தது.

உருவ அளவில் மனிதர்களோடு ஒத்துப்போகும் விலங்குகளுடன் ஒப்பிடும்போதும், மனிதர்களின் மூளை மிகப்பெரியதுதான். கடைசியாக, நமது இனம் சிம்பன்சிகள் உடன் பொதுவான மூதாதையரைப் பகிர்ந்துகொண்டு ஆறு மில்லியன் ஆண்டுகள் கடந்த நிலையில், மனித மூளையின் அளவு கிட்டத்தட்ட நான்கு மடங்கு அதிகரித்துள்ளது. அதேநேரம் ஆய்வுகளின்படி மனித இனத்தின் மூளை அளவு ஒரு கட்டத்துக்குப் பிறகு சுருங்கத் தொடங்கியது. கடந்த ஒரு லட்சம் ஆண்டுகளில் சராசரி மூளை அளவுகள் சுருங்கிவிட்டன.

நியூயார்க் நகரத்தில் உள்ள அமெரிக்க இயற்கை வரலாற்று அருங்காட்சியகத்தின் பழங்கால மானுடவியல் நிபுணர் மற்றும் ஓய்வுபெற்ற அருங்காட்சியக கண்காணிப்பாளரான இயன் டாட்டர்சால், 2023ஆம் ஆண்டு, காலத்தின் அடிப்படையின் பண்டைய ஹோமினின்களின் (hominins - நவீன மனிதர்கள், அழிந்துபோன மனித இனங்கள் மற்றும் நமது உடனடி மூதாதையர்கள் அடங்கிய இனக்குழு) மூளையின் அளவை ஆய்வு செய்தார். அவர் பழமையான உயிரினங்களுடன் தொடங்கி, நவீன மனிதர்கள் வரை ஆய்வு செய்தார்.

 

ஆசியா, ஐரோப்பா மற்றும் ஆப்பிரிக்கா முழுவதிலும் இருந்து வெவ்வேறு வகையான ஹோமினின் இனக்குழுக்கள் மத்தியில் மூளை அளவு தானாக அதிகரித்துள்ளதை அவர் கண்டறிந்தார். ஆய்வின்படி, ஆஸ்ட்ராலோபிதேகஸ் அஃபாரென்சிஸ் , ஹோமோ எரெக்டஸ், ஹோமோ ஹைடெல்பெர்கென்சிஸ் மற்றும் ஹோமோ நியன்டதாலென்சிஸ் ஆகிய இனங்களுக்கு காலப்போக்கில் மூளை அளவு அதிகரித்தது.

மனித மூளையின் அளவு அதிகரிக்கும் இந்தப் போக்கு, நவீன காலகட்டத்தில் தலைகீழாக மாறியது. கடந்த பனியுகம் (Ice age) காலத்தில் வாழ்ந்த ஹோமோ சேபியன்களின் மண்டை ஓடுகளைவிட இன்றைய ஆண் மற்றும் பெண்களின் மண்டை ஓடுகள் சராசரியாக 12.7% சிறியதாக உள்ளது.

"இன்றைய காலகட்டத்தில் வாழும் மனிதக் குழுக்களில் மண்டை ஓடுகளின் வடிவம் சற்று வித்தியாசமானது. எனவே ஆரம்பக்கால மனித மூளையை அடையாளம் கண்டுகொள்வது மிகவும் எளிதானது. மேலும் மனித இனத்தின் ஆரம்பக் கால மூதாதையர்களுக்கு மூளையின் அளவு மிகவும் பெரியதாக இருந்துள்ளதாகவும்," என்று டாட்டர்சால் கூறுகிறார்.

டாட்டர்சால் ஆய்வில் வெளியான கண்டுபிடிப்புகள் மற்ற ஆய்வுகளுடன் ஒத்துப் போகிறது. எடுத்துக்காட்டாக, 1934ஆம் ஆண்டில், இல்லினாய்ஸில் உள்ள சிகாகோ பல்கலைக்கழகத்தில் பணிபுரிந்த ஜெர்மன் விஞ்ஞானியான ஜெர்ஹார்ட் வான் போனின் என்பவர், "கடந்த 10,000 - 20,000 ஆண்டுகளில் ஐரோப்பாவில் மனித மூளையின் அளவு குறைந்துவிட்டது. ஆய்வுகளில் இதற்கான உறுதியான சான்றுகள் உள்ளன," என்று குறிப்பிட்டுள்ளார்.

காலப்போக்கில் மனித மூளை சுருங்கி வருவது ஏன்?

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,`ஹோமோ நியாண்டர்தலென்சிஸ்’ போன்ற புதிய மனித இனங்கள் தோன்றியதால் மூளையின் அளவு மாறியது

மூளை அளவு சுருங்குவதை எப்படி விளக்குவது?

டாட்டர்சால் கூற்றுபடி, ``மனிதர்களின் மூளை அளவு சுருங்கும் நிலை சுமார் ஒரு லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கியுள்ளது. அந்தக் காலகட்டத்தில்தான் மனிதர்கள் மிகவும் உள்ளார்ந்து சிந்திக்கும் பாணியிலிருந்து "குறியீட்டு தகவல் செயலாக்கம்”(symbolic information processing) என்னும் முறைக்கு மாறினர். அதாவது மனிதர்கள் சுற்றி உள்ளவற்றைப் புரிந்துகொள்ள ஆழமாகச் சிந்திக்காமல், சுருக்கமான வழியில் சிந்திக்கத் தொடங்கினர்.

மனிதர்கள் அர்த்தமுள்ள வடிவியல் படங்களைக் கொண்ட சித்திரங்களையும் குறியீட்டு கலைப்பொருட்களையும் உருவாக்கத் தொடங்கிய காலம் அது. என்னைப் பொறுத்தவரை மனிதனின் சிந்தனை பாணியில் இந்தப் பெரும் மாற்றம் நிகழ முக்கியக் காரணமாக இருந்தது `மொழி’யின் கண்டுப்பிடிப்புதான். மொழிப் பயன்பாடு, மூளையின் நரம்பியல் பாதைகளில் திறன் வாய்ந்த வளர்சிதை மாற்றங்களுடன் ஒழுங்கமைக்கப் படுவதற்கு வழிவகுத்தது. இது மனிதர்கள் ஆக்கப்பூர்வமாகச் சிந்திக்க வழிவகுத்தது."

இதை வேறு வார்த்தைகளில் சொல்ல வேண்டுமெனில், சிறிய அளவிலான சிறந்த முறையில் ஒழுங்கமைக்கப்பட்ட மூளைகள் மிகவும் சிக்கலான கணக்கீடுகளைச் செய்தது. வளர்சிதை மாற்ற செயல்பாட்டில் பெரிய இடத்தை ஆக்கிரமித்துக் கொண்டிருந்த பெரிய மூளை வெறுமனே தேவையற்றதாக மாறியது.

"அநேகமாக நமது முன்னோர்கள் ஒரு தகவலை `முரட்டுத்தனமான’ முறையில் செயலாக்கியிருக்கலாம் என்று எனக்குத் தோன்றுகிறது. ஆனால் நமது சிந்தனை முறை அவர்களிடம் இருந்து வேறுபட்டது. நாம் நம்மைச் சுற்றியுள்ள உலகத்தைச் சுருக்கக் குறியீடுகளாக மாற்றி அதை வைத்து சொற்களஞ்சியமாக மறுகட்டமைத்து வைத்துவிட்டோம். எனவே ஒரு தகவலைச் செயலாக்கம் செய்ய இந்தக் குறியீடுகளை நினைவில் நிறுத்திப் புரிந்துகொள்ள முற்படுகிறோம்."

"இந்த வகையான குறியீட்டு சிந்தனை முறைக்கு, முன்பு இருந்ததைவிட மூளைக்குள் மிகவும் சிக்கலான இணைப்புகள் தேவைப்பட்டிருக்க வேண்டும். இந்தக் கூடுதல் சிக்கலான இணைப்புகள் மூளையை மிகவும் ஆக்கப்பூர்வமான வழியில் செயல்பட அனுமதித்தது என்பது என் புரிதல்," என்று டாட்டர்சால் விளக்கினார்.

 

இருப்பினும், சில பழங்கால ஆராய்ச்சியாளர்கள் கூற்றுபடி, டாட்டர்சால் ஆய்வு குறிப்பிட்ட காலகட்டத்தைக் காட்டிலும், மனித மூளை சுருங்கும் நிலை மிகவும் சமீப காலமாகத்தான் தொடங்கியது என்று புதைபடிவ பதிவு காட்டுகிறது, அதாவது மூளை அளவு மாற்றத்தை மொழியுடன் தொடர்புப்படுத்திப் பார்க்க முடியாது என்கின்றனர். டாட்டர்சால் ஒரு லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு மொழி கண்டுபிடிக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டது என்று சொல்வதிலும் முரண்பாடுகள் இருப்பதாக விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.

கலிபோர்னியாவில் உள்ள இயற்கை வரலாற்று அருங்காட்சியகத்தைச் சேர்ந்த அறிவாற்றல் விஞ்ஞானி ஜெஃப் மோர்கன் ஸ்டிபெல் கூறுகையில், "இந்தக் கோட்பாடு எனக்குப் பிடித்திருக்கிறது, இது உண்மையில் புத்திசாலித்தனமானது என்று நான் நினைக்கிறேன்.

ஆனால் ஒரு லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு மூளை அளவில் மாற்றம் ஆரம்பமானது என்பதைக் காட்டக்கூடிய எந்தத் தரவுகளையும் நாங்கள் பார்க்கவில்லை, அந்த ஆய்வின்படி ஒரு கட்டத்தில் தலைகீழாக மாறியது என்று சொல்வது சரியல்ல, அந்த ஆய்வின்படி மூளையின் அளவு சுருங்குகிறது, மீண்டும் அதிகரிக்கத் தொடங்குகிறது. எனவே அவரின் கருத்துகளுடன் தரவுகள் ஒத்துப் போகவில்லை, பொருந்தவில்லை,” என்கிறார் ஸ்டிபெல்.

மேலும் ஸ்டிபெல்லை பொறுத்தவரை, மூளை அளவின் மாற்றம் நிகழ்வதற்கு மொழி காரணம் அல்ல, மாறி வரும் காலநிலைதான் (climate) காரணம்.

ஸ்டிபெல் 2023ஆம் ஆண்டு ஆய்வில், கடந்த 50,000 ஆண்டுகளில் வாழ்ந்த 298 மனித மண்டை ஓடுகளை ஆய்வு செய்தார். கடந்த 17,000 ஆண்டுகளாக மனித மூளை சுருங்கி வருவதை அவர் கண்டறிந்தார் - கடந்த பனி யுகத்தின் முடிவில் இருந்து இது தொடங்கியது. அதேநேரம் அவர் காலநிலை மாற்றங்களையும் கவனமாக ஆய்வு செய்தார், மூளை அளவு சுருங்குவது, காலநிலை வெப்பமயமாதல் செயல்பாட்டுடன் தொடர்புடையதாக இருப்பதைக் கண்டறிந்தார்.

காலப்போக்கில் மனித மூளை சுருங்கி வருவது ஏன்?

பட மூலாதாரம்,GETTY IMAGES

"நான் கண்டறிந்தது என்னவெனில், வெப்பமான காலநிலையில் மனிதர்களின் மூளை அளவு சுருங்குகிறது மற்றும் குளிர்ந்த காலநிலையில் மனித மூளை பெரியதாக இருந்திருக்கிறது," என்று ஸ்டிபெல் கூறுகிறார்.

வெப்பமான சூழலில் மூளை அளவு சிறிதாக இருந்தால் மனிதர்களின் உடல் விரைவாகக் குளிர்விக்க அனுமதிக்கும். வெப்பமான காலநிலையில் உள்ள மனிதர்கள் உடலின் வெப்பத்தைக் கட்டுப்படுத்த மெலிந்த மற்றும் உயரமான உடல்களைக் கொண்டிருப்பர் என்பது அனைவரும் அறிந்ததே. எனவே நமது மூளையும் இதே பாணியில் உருவாகியிருக்கலாம்.

"இன்றைய காலகட்டத்தில் நாம் இருக்கும் சூழல் வெப்பமாக இருந்தால், அதைத் தணிக்க டி-ஷர்ட்டை அணியலாம், நீச்சல் குளத்தில் குதிக்கலாம் அல்லது ஏர் கண்டிஷனர் பயன்படுத்தலாம். ஆனால் 15,000 ஆண்டுகளுக்கு முன்பு இவையெல்லாம் இருந்திருக்காது. மனித உடலே வெப்பத்தைத் தகவமைத்துக் கொள்ள ஏற்பாடுகளை முன்னெடுத்திருக்கும்" என்று ஸ்டிபெல் விளக்குகிறார்.

"அனைத்து உறுப்புகளைக் காட்டிலும் மூளை மிகப்பெரிய ஆற்றல் கலன். ஏனெனில் அது நமது உடல் எடையில் 2% எடையை ஆக்கிரமித்துள்ளது. ஓய்வில் இருக்கும் வளர்சிதை மாற்ற ஆற்றலில் 20%க்கும் மேல் மூளை பயன்படுத்துகிறது. எனவே, ஆற்றல் மற்றும் வெப்பத்தை நமது மூளை மிகப் பெரியளவில் நுகர்கிறது என்றால், அதன் அளவு காலநிலைக்கு ஏற்றவாறு இருக்க வேண்டும். சிறிய மூளைகள் வெப்பத்தைச் சிறப்பாகக் கையாள்கின்றன. மேலும் உடலின் வெப்பத்தைக் குறைக்கும்.

இன்றைய சூழலில் வேகமாக வெப்பமயமாதல் நிகழ்கிறது. இது நமது மூளையை மேலும் சுருங்கச் செய்யும் என்று கண்டுபிடிப்புகள் தெரிவிக்கின்றன,” என்றார்.

காலப்போக்கில் மனித மூளை சுருங்கி வருவது ஏன்?

பட மூலாதாரம்,GETTY

மேம்பட்ட சமூக அமைப்புகளைக் கொண்ட மனித நாகரிகங்களின் எழுச்சி

காலப்போக்கில் மனித மூளை சுருங்கி வருவது ஏன்?

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,மிகவும் மேம்பட்ட திறன் கொண்ட சமூகங்களின் வருகை - மற்றும் சுமேரியன் போன்ற எழுத்து மொழிகளின் கண்டுபிடிப்பு - மூளையின் அளவு சுருங்குவதற்கு காரணமாக இருக்கலாம்

மனிதர்களின் மூளை சுருங்கி வருவதை விளக்குவதற்கு முன்வைக்கப்பட்ட மிக முக்கியமான கோட்பாடு நம் தொழில் சார்ந்ததுதான். நமது முன்னோர்கள் வேட்டையாடும் தொழிலை நிறுத்தி, வேர்களை ஊன்றி, மேம்பட்ட சமூக அமைப்புகளைக் கொண்ட சிக்கலான சமூகங்களை உருவாக்கத் தொடங்கியபோது, மூளை அளவிலும் மாற்றம் நிகழ ஆரம்பித்தது.

கடந்த 2021ஆம் ஆண்டில், அமெரிக்காவில் உள்ள டார்ட் மவுத் கல்லூரியின் மானுடவியலாளர் ஜெர்மி டிசில்வா வெவ்வேறு காலக்கட்டத்தைச் சேர்ந்த மண்டை ஓடு படிமங்களை ஆய்வு செய்தார்.

அவர் `மியோசீன் ஹோமினிட் ருடாபிதேகஸ்’ (9.85 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த மனித இனம்) முதல் நவீன மனிதர்கள் (300,000 முதல் 100 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த மனித இனம்) வரையிலான மண்டை ஓடு படிமங்களை ஆய்வு செய்தார்.

மேம்பட்ட சமூக அமைப்புகளைக் கொண்ட மனித நாகரிகங்கள், 3,000 ஆண்டுகளுக்கு முன்பு தோன்றத் தொடங்கிய அதே நேரத்தில் நமது மூளை சுருங்கத் தொடங்கியது என்று அவர் கண்டறிந்தார் (பின்னர் தனது மதிப்பீட்டைத் திருத்தி, 20,000 முதல் 5,000 ஆண்டுகளுக்கு முன்பு மூளை அளவு சுருங்க ஆரம்பித்தது என்றார்).

டிசில்வா கூற்றுபடி, ``மேம்பட்ட சமூக அமைப்புகளைக் கொண்ட மனித நாகரிகங்கள் மற்றும் பேரரசுகளின் பிறப்புக்குப் பின்னர், அறிவும் பணிகளும் பரவலாக அனைவராலும் பகிரப்பட்டன. மக்கள் இனி எல்லாவற்றையும் தெரிந்துகொள்ள வேண்டியதில்லை, அதேநேரம் தனிநபர்கள் இனி உயிர்வாழ அதிகம் சிந்திக்க வேண்டியதில்லை, எனவே அவர்களின் மூளை அளவு குறைந்தது,” என்றார்.

இந்தக் கோட்பாடும் ஏற்றுக் கொள்ளப்படவில்லை.

"சுமார் 3,000 ஆண்டுகளுக்கு முன்பு எகிப்தியர்கள் மாறியது போல அனைத்து வேட்டையாடும் சமூகங்களும் மாறவில்லை. ஆனால் இந்தச் சமூகங்களிலும் மூளையின் அளவுகள் சுருங்கின" என்கிறார் ஓய்வு பெற்ற பேராசிரியர் ஈவா ஜப்லோங்கா. இவர் இஸ்ரேலில் உள்ள டெல் அவிவ் பல்கலைக்கழகத்தில் கோன் இன்ஸ்டிடியூட் ஃபார் தி ஹிஸ்டரி ஆஃப் சைன்ஸ் அண்ட் ஐடியாஸ் துறையில் பணியாற்றியவர்.

 

ஊட்டச்சத்துக் குறைபாடு காரணமா?

மனித மூளை

பட மூலாதாரம்,GETTY IMAGES

மேம்பட்ட சமூக அமைப்புகளைக் கொண்ட மனித நாகரிகங்கள் தோன்றியபோது மூளை சுருங்க தொடங்கியிருந்தாலும், இது ஒரு தகவமைப்பு எதிர்வினையாக இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை என்று ஜப்லோங்கா கூறுகிறார்.

"சுமார் 3,000 ஆண்டுகளுக்கு முன்பு மிகப்பெரிய மேம்பட்ட சமூக அமைப்புகளைக் கொண்ட மனித நாகரிகங்கள் தோன்றியிருந்தால், மூளை சுருங்கியதை சமூக வர்க்கங்களில் உள்ள மிகப்பெரிய வேறுபாடுகளுடன் தொடர்புபடுத்தலாம். அதாவது வர்க்க வேறுபாட்டின் விளைவாகப் பெரும்பான்மையான மக்கள் ஏழைகளாக இருந்தால், வறுமை, ஊட்டச்சத்துக் குறைபாடு மற்றும் அதுபோன்ற விஷயங்கள் மூளை அளவைப் பாதித்திருக்கக்கூடும்.”

கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் மனித பரிணாம ஆய்வுகளுக்கான லெவர்ஹுல்ம் மையத்தைச் சேர்ந்த மார்டா லஹர், நமது மூளை சுருங்குவதை ஊட்டச்சத்துக் குறைபாடுடன் தொடர்புபடுத்த முடியும் என்கிறார்.

கடந்த 2013ஆம் ஆண்டில், அவர் ஐரோப்பா, ஆப்பிரிக்கா மற்றும் ஆசிய மனிதர்களின் எலும்புகள் மற்றும் மண்டை ஓடுகளை ஆய்வு செய்தார். மிகப்பெரிய மூளை கொண்ட ஹோமோ சேபியன்கள் 20,000 முதல் 30,000 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்ததாகவும், மனித மூளை 10,000 ஆண்டுகளுக்கு முன்பு சுருங்கத் தொடங்கியது என்றும் அவர் கண்டறிந்தார்.

இந்தக் காலக்கட்டத்தில்தான் நம் முன்னோர்கள் வேட்டையாடுவதை நிறுத்திவிட்டு விவசாயத்திற்கு மாறியதாகக் கருதப்படுகிறது. விவசாயத்தை நம்பியிருப்பது வைட்டமின் மற்றும் தாதுப் பற்றாக்குறையை உருவாக்கியிருக்கலாம். இதன் விளைவாக வளர்ச்சி குன்றியிருக்கலாம் என்று அவர் விளக்குகிறார்.

இதற்கிடையில், சில விஞ்ஞானிகள் சுயமாக வீடுகளில் வளர்வதன் (self-domestication) விளைவாக மனித மண்டை ஓடு சிறியதாகிவிட வாய்ப்பிருப்பதாகக் கூறுகின்றனர். அவர்களின் கூற்றுபடி, நாய்கள் மற்றும் பூனைகள் போன்ற வளர்ப்பு இனங்கள் அவற்றின் மூதாதையர்களைவிட 10-15% சிறிய மூளையைக் கொண்டிருக்கிறது. அதன் அடிப்படையில், வீடுகளில் சுய வளர்ப்பு முறையின் விளைவாக மனித மண்டை ஓடுகள் சிறியதாக இருப்பதாக முன்மொழிந்தனர். ஆனால் இந்தக் கோட்பாட்டில் பல விஞ்ஞானிகளுக்கு நம்பிக்கை இல்லை.

"சுய வளர்ப்பு’ (self-domestication) கோட்பாட்டை நான் ஏற்கவில்லை" என்கிறார் ஜப்லோங்கா.

"சுய வளர்ப்பு மூலம் மூளை சுருங்குவது நிகழ்ந்திருந்தால், 800,000 ஆண்டுகளுக்கு முன்பு நடந்திருக்க வேண்டும், மேலும் அந்த நேரத்தில் மனித மூளை சுருங்கியது என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை."

மனித மூளை

பட மூலாதாரம்,GETTY IMAGES

துரதிர்ஷ்டவசமாக, மூளை ஏன் சுருங்கியது என்பதைப் புரிந்து கொள்ள, அது எப்போது தொடங்கியது என்பதை நாம் சரியாகக் குறிப்பிட வேண்டும். ஆனால் புதைபடிவ பதிவுகள் இதைக் கிட்டத்தட்ட சாத்தியமற்ற பணியாக ஆக்குகிறது. பழைய புதைபடிவங்களைக் கண்டுபிடிப்பது கடினம், எனவே ஆய்வுகள் சமீப கால மாதிரிகளை வைத்து முடிவுக்கு வருகிறது. சில பண்டைய கால மனித குழுக்களின் மண்டை ஓடுகள் சரியாகப் பாதுகாக்கப்படாத காரணத்தால் மோசமான நிலையில் உள்ளன. எனவே மூளை அளவு சுருங்கும் நிலை ஆரம்பமானதைத் துல்லியமாக கண்டுப்பிடிக்க இயலவில்லை.

டாட்டர்சால் கூற்றுபடி "ப்ளீஸ்டோசீனில் (Pleistocene), மனித மூளை நியண்டர்தால் மனித இனத்தின் மூளை அளவைப் போலவே இருந்தது, இது இன்றைய மனித மூளையின் சராசரி அளவைவிட சற்று பெரியது.

சுமார் 20,000 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த அனைத்து மனித இனங்களின் மூளை அளவின் சராசரியும் அதிகமாக உள்ளது. ஆனால் அளவு குறைவது எப்போது தொடங்கியது என்பது முற்றிலும் தெளிவாக இல்லை, ஏனெனில் புதைபடிவங்களும், ஆய்வு பதிவுகளும் தெளிவாக இல்லை. எங்களுக்குத் தெரிந்தது எல்லாம் முன்னர் மூளை பெரியதாக இருந்தது, இன்று அவை 13% சிறியதாக உள்ளன," என்கிறார்.

புத்திசாலித்தனம் குறைந்துவிட்டதா?

மூளை சுருங்குகிறது என்றால், மனித அறிவும் சுருங்கி வருகிறதா? நீங்கள் எந்தக் கோட்பாட்டை நம்புகிறீர்கள் என்பதைப் பொறுத்து இது மாறுபடும், சிறிய மூளை நம்மை புத்திசாலியாக மாற்றும் அல்லது புத்திசாலித்தனத்தில் எந்த விளைவையும் ஏற்படுத்தாது.

மூளை அளவு அனைத்தையும் நிர்ணயம் செய்யாது என்பது உண்மைதான். ஆண்களின் மூளையானது பெண்களின் மூளையைவிட 11% பெரியது. இதற்கு இருபாலரின் ஒட்டுமொத்த உடல் அளவு காரணமாகk கூறப்படுகிறது. இருப்பினும், ஆண்களுக்கும் பெண்களுக்கும் ஒரே மாதிரியான அறிவாற்றல் திறன்கள் இருப்பதாக ஆராய்ச்சி காட்டுகிறது.

ஹோமோ ஃப்ளோரெசியென்சிஸ் மற்றும் ஹோமோ நலேடி போன்ற சிறிய மூளை அளவுடைய ஹோமினின் மனித இனங்கள், மேம்பட்ட திறன் கொண்டவை என்பதற்கான சில சர்ச்சைக்குரிய சான்றுகள் உள்ளன. மூளை எவ்வாறு இணைப்புகளால் உருவாக்கப்படுகிறது என்பதே புத்திசாலித்தனத்தின் அளவீடு.

“நமது மூளையின் அளவு கணிசமாகக் குறைந்து வருகிறது என்பது, அதிக நுண்ணறிவுக்கான நமது திறன் சுருங்குகிறது, அல்லது குறைந்தபட்சம் வளரவில்லை என்ற தர்க்கரீதியான முடிவை அளிக்கிறது."

"இருப்பினும், கடந்த 10,000 ஆண்டுகளாக நம் அறிவாற்றலை பயன்படுத்தி கலைப் பொருட்களை உருவாக்க கருவிகள் மற்றும் தொழில்நுட்பங்களை உருவாக்கியுள்ளோம். கணினிகளில் தகவல்களைச் சேமித்து, நமக்கான விஷயங்களைக் கணக்கிட இயந்திரங்களைப் பயன்படுத்துகிறோம். எனவே நமது மூளையின் நுண்ணறிவுத் திறன் குறைவாக இருக்கலாம். அதற்காக, நாம் ஓர் இனமாகக் குறைந்த புத்திசாலித்தனத்துடன் வளர்கிறோம் என்று அர்த்தம் இல்லை," என்கிறார் ஸ்டிபெல்.

https://www.bbc.com/tamil/articles/c722w8jdgwpo

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
30 minutes ago, ஏராளன் said:
காலப்போக்கில் மனித மூளை சுருங்கி வருவது ஏன்?

பட மூலாதாரம்,GETTY IMAGES

கட்டுரை தகவல்

  • எழுதியவர், ஜாஸ்மின் ஃபாக்ஸ் - ஸ்கெல்லி
  • பதவி, பிபிசி
  • 2 மணி நேரங்களுக்கு முன்னர்

தற்கால நவீன மனிதர்களின் மூளை ஒரு லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த மனிதர்களின் மூளையைவிட 13% சிறியதாகிவிட்டது. காலப்போக்கில் மனித மூளை சுருங்கியது ஏன் என்பது ஆராய்ச்சியாளர்களுக்குப் புரியாத புதிராக உள்ளது.

மனித மூளை மற்ற உயிரினங்களின் மூளையைவிடப் பெரியது. இன்னும் சொல்லப்போனால் மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் உள்ள முக்கிய வேறுபாடு இந்த "பெரிய மூளை" என்று கருதப்படுகிறது. சிந்திக்கும் திறனும் கண்டுப்பிடிப்புகளை மேற்கொள்ளும் ஆற்றலும் இருப்பதால்தான் மனித இனத்தால் முதல் கலையை உருவாக்கவும், சக்கரத்தைக் கண்டுபிடிக்கவும், சந்திரனில் இறங்கவும் முடிந்தது.

உருவ அளவில் மனிதர்களோடு ஒத்துப்போகும் விலங்குகளுடன் ஒப்பிடும்போதும், மனிதர்களின் மூளை மிகப்பெரியதுதான். கடைசியாக, நமது இனம் சிம்பன்சிகள் உடன் பொதுவான மூதாதையரைப் பகிர்ந்துகொண்டு ஆறு மில்லியன் ஆண்டுகள் கடந்த நிலையில், மனித மூளையின் அளவு கிட்டத்தட்ட நான்கு மடங்கு அதிகரித்துள்ளது. அதேநேரம் ஆய்வுகளின்படி மனித இனத்தின் மூளை அளவு ஒரு கட்டத்துக்குப் பிறகு சுருங்கத் தொடங்கியது. கடந்த ஒரு லட்சம் ஆண்டுகளில் சராசரி மூளை அளவுகள் சுருங்கிவிட்டன.

நியூயார்க் நகரத்தில் உள்ள அமெரிக்க இயற்கை வரலாற்று அருங்காட்சியகத்தின் பழங்கால மானுடவியல் நிபுணர் மற்றும் ஓய்வுபெற்ற அருங்காட்சியக கண்காணிப்பாளரான இயன் டாட்டர்சால், 2023ஆம் ஆண்டு, காலத்தின் அடிப்படையின் பண்டைய ஹோமினின்களின் (hominins - நவீன மனிதர்கள், அழிந்துபோன மனித இனங்கள் மற்றும் நமது உடனடி மூதாதையர்கள் அடங்கிய இனக்குழு) மூளையின் அளவை ஆய்வு செய்தார். அவர் பழமையான உயிரினங்களுடன் தொடங்கி, நவீன மனிதர்கள் வரை ஆய்வு செய்தார்.

 

ஆசியா, ஐரோப்பா மற்றும் ஆப்பிரிக்கா முழுவதிலும் இருந்து வெவ்வேறு வகையான ஹோமினின் இனக்குழுக்கள் மத்தியில் மூளை அளவு தானாக அதிகரித்துள்ளதை அவர் கண்டறிந்தார். ஆய்வின்படி, ஆஸ்ட்ராலோபிதேகஸ் அஃபாரென்சிஸ் , ஹோமோ எரெக்டஸ், ஹோமோ ஹைடெல்பெர்கென்சிஸ் மற்றும் ஹோமோ நியன்டதாலென்சிஸ் ஆகிய இனங்களுக்கு காலப்போக்கில் மூளை அளவு அதிகரித்தது.

மனித மூளையின் அளவு அதிகரிக்கும் இந்தப் போக்கு, நவீன காலகட்டத்தில் தலைகீழாக மாறியது. கடந்த பனியுகம் (Ice age) காலத்தில் வாழ்ந்த ஹோமோ சேபியன்களின் மண்டை ஓடுகளைவிட இன்றைய ஆண் மற்றும் பெண்களின் மண்டை ஓடுகள் சராசரியாக 12.7% சிறியதாக உள்ளது.

"இன்றைய காலகட்டத்தில் வாழும் மனிதக் குழுக்களில் மண்டை ஓடுகளின் வடிவம் சற்று வித்தியாசமானது. எனவே ஆரம்பக்கால மனித மூளையை அடையாளம் கண்டுகொள்வது மிகவும் எளிதானது. மேலும் மனித இனத்தின் ஆரம்பக் கால மூதாதையர்களுக்கு மூளையின் அளவு மிகவும் பெரியதாக இருந்துள்ளதாகவும்," என்று டாட்டர்சால் கூறுகிறார்.

டாட்டர்சால் ஆய்வில் வெளியான கண்டுபிடிப்புகள் மற்ற ஆய்வுகளுடன் ஒத்துப் போகிறது. எடுத்துக்காட்டாக, 1934ஆம் ஆண்டில், இல்லினாய்ஸில் உள்ள சிகாகோ பல்கலைக்கழகத்தில் பணிபுரிந்த ஜெர்மன் விஞ்ஞானியான ஜெர்ஹார்ட் வான் போனின் என்பவர், "கடந்த 10,000 - 20,000 ஆண்டுகளில் ஐரோப்பாவில் மனித மூளையின் அளவு குறைந்துவிட்டது. ஆய்வுகளில் இதற்கான உறுதியான சான்றுகள் உள்ளன," என்று குறிப்பிட்டுள்ளார்.

காலப்போக்கில் மனித மூளை சுருங்கி வருவது ஏன்?

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,`ஹோமோ நியாண்டர்தலென்சிஸ்’ போன்ற புதிய மனித இனங்கள் தோன்றியதால் மூளையின் அளவு மாறியது

மூளை அளவு சுருங்குவதை எப்படி விளக்குவது?

டாட்டர்சால் கூற்றுபடி, ``மனிதர்களின் மூளை அளவு சுருங்கும் நிலை சுமார் ஒரு லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கியுள்ளது. அந்தக் காலகட்டத்தில்தான் மனிதர்கள் மிகவும் உள்ளார்ந்து சிந்திக்கும் பாணியிலிருந்து "குறியீட்டு தகவல் செயலாக்கம்”(symbolic information processing) என்னும் முறைக்கு மாறினர். அதாவது மனிதர்கள் சுற்றி உள்ளவற்றைப் புரிந்துகொள்ள ஆழமாகச் சிந்திக்காமல், சுருக்கமான வழியில் சிந்திக்கத் தொடங்கினர்.

மனிதர்கள் அர்த்தமுள்ள வடிவியல் படங்களைக் கொண்ட சித்திரங்களையும் குறியீட்டு கலைப்பொருட்களையும் உருவாக்கத் தொடங்கிய காலம் அது. என்னைப் பொறுத்தவரை மனிதனின் சிந்தனை பாணியில் இந்தப் பெரும் மாற்றம் நிகழ முக்கியக் காரணமாக இருந்தது `மொழி’யின் கண்டுப்பிடிப்புதான். மொழிப் பயன்பாடு, மூளையின் நரம்பியல் பாதைகளில் திறன் வாய்ந்த வளர்சிதை மாற்றங்களுடன் ஒழுங்கமைக்கப் படுவதற்கு வழிவகுத்தது. இது மனிதர்கள் ஆக்கப்பூர்வமாகச் சிந்திக்க வழிவகுத்தது."

இதை வேறு வார்த்தைகளில் சொல்ல வேண்டுமெனில், சிறிய அளவிலான சிறந்த முறையில் ஒழுங்கமைக்கப்பட்ட மூளைகள் மிகவும் சிக்கலான கணக்கீடுகளைச் செய்தது. வளர்சிதை மாற்ற செயல்பாட்டில் பெரிய இடத்தை ஆக்கிரமித்துக் கொண்டிருந்த பெரிய மூளை வெறுமனே தேவையற்றதாக மாறியது.

"அநேகமாக நமது முன்னோர்கள் ஒரு தகவலை `முரட்டுத்தனமான’ முறையில் செயலாக்கியிருக்கலாம் என்று எனக்குத் தோன்றுகிறது. ஆனால் நமது சிந்தனை முறை அவர்களிடம் இருந்து வேறுபட்டது. நாம் நம்மைச் சுற்றியுள்ள உலகத்தைச் சுருக்கக் குறியீடுகளாக மாற்றி அதை வைத்து சொற்களஞ்சியமாக மறுகட்டமைத்து வைத்துவிட்டோம். எனவே ஒரு தகவலைச் செயலாக்கம் செய்ய இந்தக் குறியீடுகளை நினைவில் நிறுத்திப் புரிந்துகொள்ள முற்படுகிறோம்."

"இந்த வகையான குறியீட்டு சிந்தனை முறைக்கு, முன்பு இருந்ததைவிட மூளைக்குள் மிகவும் சிக்கலான இணைப்புகள் தேவைப்பட்டிருக்க வேண்டும். இந்தக் கூடுதல் சிக்கலான இணைப்புகள் மூளையை மிகவும் ஆக்கப்பூர்வமான வழியில் செயல்பட அனுமதித்தது என்பது என் புரிதல்," என்று டாட்டர்சால் விளக்கினார்.

 

இருப்பினும், சில பழங்கால ஆராய்ச்சியாளர்கள் கூற்றுபடி, டாட்டர்சால் ஆய்வு குறிப்பிட்ட காலகட்டத்தைக் காட்டிலும், மனித மூளை சுருங்கும் நிலை மிகவும் சமீப காலமாகத்தான் தொடங்கியது என்று புதைபடிவ பதிவு காட்டுகிறது, அதாவது மூளை அளவு மாற்றத்தை மொழியுடன் தொடர்புப்படுத்திப் பார்க்க முடியாது என்கின்றனர். டாட்டர்சால் ஒரு லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு மொழி கண்டுபிடிக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டது என்று சொல்வதிலும் முரண்பாடுகள் இருப்பதாக விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.

கலிபோர்னியாவில் உள்ள இயற்கை வரலாற்று அருங்காட்சியகத்தைச் சேர்ந்த அறிவாற்றல் விஞ்ஞானி ஜெஃப் மோர்கன் ஸ்டிபெல் கூறுகையில், "இந்தக் கோட்பாடு எனக்குப் பிடித்திருக்கிறது, இது உண்மையில் புத்திசாலித்தனமானது என்று நான் நினைக்கிறேன்.

ஆனால் ஒரு லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு மூளை அளவில் மாற்றம் ஆரம்பமானது என்பதைக் காட்டக்கூடிய எந்தத் தரவுகளையும் நாங்கள் பார்க்கவில்லை, அந்த ஆய்வின்படி ஒரு கட்டத்தில் தலைகீழாக மாறியது என்று சொல்வது சரியல்ல, அந்த ஆய்வின்படி மூளையின் அளவு சுருங்குகிறது, மீண்டும் அதிகரிக்கத் தொடங்குகிறது. எனவே அவரின் கருத்துகளுடன் தரவுகள் ஒத்துப் போகவில்லை, பொருந்தவில்லை,” என்கிறார் ஸ்டிபெல்.

மேலும் ஸ்டிபெல்லை பொறுத்தவரை, மூளை அளவின் மாற்றம் நிகழ்வதற்கு மொழி காரணம் அல்ல, மாறி வரும் காலநிலைதான் (climate) காரணம்.

ஸ்டிபெல் 2023ஆம் ஆண்டு ஆய்வில், கடந்த 50,000 ஆண்டுகளில் வாழ்ந்த 298 மனித மண்டை ஓடுகளை ஆய்வு செய்தார். கடந்த 17,000 ஆண்டுகளாக மனித மூளை சுருங்கி வருவதை அவர் கண்டறிந்தார் - கடந்த பனி யுகத்தின் முடிவில் இருந்து இது தொடங்கியது. அதேநேரம் அவர் காலநிலை மாற்றங்களையும் கவனமாக ஆய்வு செய்தார், மூளை அளவு சுருங்குவது, காலநிலை வெப்பமயமாதல் செயல்பாட்டுடன் தொடர்புடையதாக இருப்பதைக் கண்டறிந்தார்.

காலப்போக்கில் மனித மூளை சுருங்கி வருவது ஏன்?

பட மூலாதாரம்,GETTY IMAGES

"நான் கண்டறிந்தது என்னவெனில், வெப்பமான காலநிலையில் மனிதர்களின் மூளை அளவு சுருங்குகிறது மற்றும் குளிர்ந்த காலநிலையில் மனித மூளை பெரியதாக இருந்திருக்கிறது," என்று ஸ்டிபெல் கூறுகிறார்.

வெப்பமான சூழலில் மூளை அளவு சிறிதாக இருந்தால் மனிதர்களின் உடல் விரைவாகக் குளிர்விக்க அனுமதிக்கும். வெப்பமான காலநிலையில் உள்ள மனிதர்கள் உடலின் வெப்பத்தைக் கட்டுப்படுத்த மெலிந்த மற்றும் உயரமான உடல்களைக் கொண்டிருப்பர் என்பது அனைவரும் அறிந்ததே. எனவே நமது மூளையும் இதே பாணியில் உருவாகியிருக்கலாம்.

"இன்றைய காலகட்டத்தில் நாம் இருக்கும் சூழல் வெப்பமாக இருந்தால், அதைத் தணிக்க டி-ஷர்ட்டை அணியலாம், நீச்சல் குளத்தில் குதிக்கலாம் அல்லது ஏர் கண்டிஷனர் பயன்படுத்தலாம். ஆனால் 15,000 ஆண்டுகளுக்கு முன்பு இவையெல்லாம் இருந்திருக்காது. மனித உடலே வெப்பத்தைத் தகவமைத்துக் கொள்ள ஏற்பாடுகளை முன்னெடுத்திருக்கும்" என்று ஸ்டிபெல் விளக்குகிறார்.

"அனைத்து உறுப்புகளைக் காட்டிலும் மூளை மிகப்பெரிய ஆற்றல் கலன். ஏனெனில் அது நமது உடல் எடையில் 2% எடையை ஆக்கிரமித்துள்ளது. ஓய்வில் இருக்கும் வளர்சிதை மாற்ற ஆற்றலில் 20%க்கும் மேல் மூளை பயன்படுத்துகிறது. எனவே, ஆற்றல் மற்றும் வெப்பத்தை நமது மூளை மிகப் பெரியளவில் நுகர்கிறது என்றால், அதன் அளவு காலநிலைக்கு ஏற்றவாறு இருக்க வேண்டும். சிறிய மூளைகள் வெப்பத்தைச் சிறப்பாகக் கையாள்கின்றன. மேலும் உடலின் வெப்பத்தைக் குறைக்கும்.

இன்றைய சூழலில் வேகமாக வெப்பமயமாதல் நிகழ்கிறது. இது நமது மூளையை மேலும் சுருங்கச் செய்யும் என்று கண்டுபிடிப்புகள் தெரிவிக்கின்றன,” என்றார்.

காலப்போக்கில் மனித மூளை சுருங்கி வருவது ஏன்?

பட மூலாதாரம்,GETTY

மேம்பட்ட சமூக அமைப்புகளைக் கொண்ட மனித நாகரிகங்களின் எழுச்சி

காலப்போக்கில் மனித மூளை சுருங்கி வருவது ஏன்?

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,மிகவும் மேம்பட்ட திறன் கொண்ட சமூகங்களின் வருகை - மற்றும் சுமேரியன் போன்ற எழுத்து மொழிகளின் கண்டுபிடிப்பு - மூளையின் அளவு சுருங்குவதற்கு காரணமாக இருக்கலாம்

மனிதர்களின் மூளை சுருங்கி வருவதை விளக்குவதற்கு முன்வைக்கப்பட்ட மிக முக்கியமான கோட்பாடு நம் தொழில் சார்ந்ததுதான். நமது முன்னோர்கள் வேட்டையாடும் தொழிலை நிறுத்தி, வேர்களை ஊன்றி, மேம்பட்ட சமூக அமைப்புகளைக் கொண்ட சிக்கலான சமூகங்களை உருவாக்கத் தொடங்கியபோது, மூளை அளவிலும் மாற்றம் நிகழ ஆரம்பித்தது.

கடந்த 2021ஆம் ஆண்டில், அமெரிக்காவில் உள்ள டார்ட் மவுத் கல்லூரியின் மானுடவியலாளர் ஜெர்மி டிசில்வா வெவ்வேறு காலக்கட்டத்தைச் சேர்ந்த மண்டை ஓடு படிமங்களை ஆய்வு செய்தார்.

அவர் `மியோசீன் ஹோமினிட் ருடாபிதேகஸ்’ (9.85 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த மனித இனம்) முதல் நவீன மனிதர்கள் (300,000 முதல் 100 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த மனித இனம்) வரையிலான மண்டை ஓடு படிமங்களை ஆய்வு செய்தார்.

மேம்பட்ட சமூக அமைப்புகளைக் கொண்ட மனித நாகரிகங்கள், 3,000 ஆண்டுகளுக்கு முன்பு தோன்றத் தொடங்கிய அதே நேரத்தில் நமது மூளை சுருங்கத் தொடங்கியது என்று அவர் கண்டறிந்தார் (பின்னர் தனது மதிப்பீட்டைத் திருத்தி, 20,000 முதல் 5,000 ஆண்டுகளுக்கு முன்பு மூளை அளவு சுருங்க ஆரம்பித்தது என்றார்).

டிசில்வா கூற்றுபடி, ``மேம்பட்ட சமூக அமைப்புகளைக் கொண்ட மனித நாகரிகங்கள் மற்றும் பேரரசுகளின் பிறப்புக்குப் பின்னர், அறிவும் பணிகளும் பரவலாக அனைவராலும் பகிரப்பட்டன. மக்கள் இனி எல்லாவற்றையும் தெரிந்துகொள்ள வேண்டியதில்லை, அதேநேரம் தனிநபர்கள் இனி உயிர்வாழ அதிகம் சிந்திக்க வேண்டியதில்லை, எனவே அவர்களின் மூளை அளவு குறைந்தது,” என்றார்.

இந்தக் கோட்பாடும் ஏற்றுக் கொள்ளப்படவில்லை.

"சுமார் 3,000 ஆண்டுகளுக்கு முன்பு எகிப்தியர்கள் மாறியது போல அனைத்து வேட்டையாடும் சமூகங்களும் மாறவில்லை. ஆனால் இந்தச் சமூகங்களிலும் மூளையின் அளவுகள் சுருங்கின" என்கிறார் ஓய்வு பெற்ற பேராசிரியர் ஈவா ஜப்லோங்கா. இவர் இஸ்ரேலில் உள்ள டெல் அவிவ் பல்கலைக்கழகத்தில் கோன் இன்ஸ்டிடியூட் ஃபார் தி ஹிஸ்டரி ஆஃப் சைன்ஸ் அண்ட் ஐடியாஸ் துறையில் பணியாற்றியவர்.

 

ஊட்டச்சத்துக் குறைபாடு காரணமா?

மனித மூளை

பட மூலாதாரம்,GETTY IMAGES

மேம்பட்ட சமூக அமைப்புகளைக் கொண்ட மனித நாகரிகங்கள் தோன்றியபோது மூளை சுருங்க தொடங்கியிருந்தாலும், இது ஒரு தகவமைப்பு எதிர்வினையாக இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை என்று ஜப்லோங்கா கூறுகிறார்.

"சுமார் 3,000 ஆண்டுகளுக்கு முன்பு மிகப்பெரிய மேம்பட்ட சமூக அமைப்புகளைக் கொண்ட மனித நாகரிகங்கள் தோன்றியிருந்தால், மூளை சுருங்கியதை சமூக வர்க்கங்களில் உள்ள மிகப்பெரிய வேறுபாடுகளுடன் தொடர்புபடுத்தலாம். அதாவது வர்க்க வேறுபாட்டின் விளைவாகப் பெரும்பான்மையான மக்கள் ஏழைகளாக இருந்தால், வறுமை, ஊட்டச்சத்துக் குறைபாடு மற்றும் அதுபோன்ற விஷயங்கள் மூளை அளவைப் பாதித்திருக்கக்கூடும்.”

கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் மனித பரிணாம ஆய்வுகளுக்கான லெவர்ஹுல்ம் மையத்தைச் சேர்ந்த மார்டா லஹர், நமது மூளை சுருங்குவதை ஊட்டச்சத்துக் குறைபாடுடன் தொடர்புபடுத்த முடியும் என்கிறார்.

கடந்த 2013ஆம் ஆண்டில், அவர் ஐரோப்பா, ஆப்பிரிக்கா மற்றும் ஆசிய மனிதர்களின் எலும்புகள் மற்றும் மண்டை ஓடுகளை ஆய்வு செய்தார். மிகப்பெரிய மூளை கொண்ட ஹோமோ சேபியன்கள் 20,000 முதல் 30,000 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்ததாகவும், மனித மூளை 10,000 ஆண்டுகளுக்கு முன்பு சுருங்கத் தொடங்கியது என்றும் அவர் கண்டறிந்தார்.

இந்தக் காலக்கட்டத்தில்தான் நம் முன்னோர்கள் வேட்டையாடுவதை நிறுத்திவிட்டு விவசாயத்திற்கு மாறியதாகக் கருதப்படுகிறது. விவசாயத்தை நம்பியிருப்பது வைட்டமின் மற்றும் தாதுப் பற்றாக்குறையை உருவாக்கியிருக்கலாம். இதன் விளைவாக வளர்ச்சி குன்றியிருக்கலாம் என்று அவர் விளக்குகிறார்.

இதற்கிடையில், சில விஞ்ஞானிகள் சுயமாக வீடுகளில் வளர்வதன் (self-domestication) விளைவாக மனித மண்டை ஓடு சிறியதாகிவிட வாய்ப்பிருப்பதாகக் கூறுகின்றனர். அவர்களின் கூற்றுபடி, நாய்கள் மற்றும் பூனைகள் போன்ற வளர்ப்பு இனங்கள் அவற்றின் மூதாதையர்களைவிட 10-15% சிறிய மூளையைக் கொண்டிருக்கிறது. அதன் அடிப்படையில், வீடுகளில் சுய வளர்ப்பு முறையின் விளைவாக மனித மண்டை ஓடுகள் சிறியதாக இருப்பதாக முன்மொழிந்தனர். ஆனால் இந்தக் கோட்பாட்டில் பல விஞ்ஞானிகளுக்கு நம்பிக்கை இல்லை.

"சுய வளர்ப்பு’ (self-domestication) கோட்பாட்டை நான் ஏற்கவில்லை" என்கிறார் ஜப்லோங்கா.

"சுய வளர்ப்பு மூலம் மூளை சுருங்குவது நிகழ்ந்திருந்தால், 800,000 ஆண்டுகளுக்கு முன்பு நடந்திருக்க வேண்டும், மேலும் அந்த நேரத்தில் மனித மூளை சுருங்கியது என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை."

மனித மூளை

பட மூலாதாரம்,GETTY IMAGES

துரதிர்ஷ்டவசமாக, மூளை ஏன் சுருங்கியது என்பதைப் புரிந்து கொள்ள, அது எப்போது தொடங்கியது என்பதை நாம் சரியாகக் குறிப்பிட வேண்டும். ஆனால் புதைபடிவ பதிவுகள் இதைக் கிட்டத்தட்ட சாத்தியமற்ற பணியாக ஆக்குகிறது. பழைய புதைபடிவங்களைக் கண்டுபிடிப்பது கடினம், எனவே ஆய்வுகள் சமீப கால மாதிரிகளை வைத்து முடிவுக்கு வருகிறது. சில பண்டைய கால மனித குழுக்களின் மண்டை ஓடுகள் சரியாகப் பாதுகாக்கப்படாத காரணத்தால் மோசமான நிலையில் உள்ளன. எனவே மூளை அளவு சுருங்கும் நிலை ஆரம்பமானதைத் துல்லியமாக கண்டுப்பிடிக்க இயலவில்லை.

டாட்டர்சால் கூற்றுபடி "ப்ளீஸ்டோசீனில் (Pleistocene), மனித மூளை நியண்டர்தால் மனித இனத்தின் மூளை அளவைப் போலவே இருந்தது, இது இன்றைய மனித மூளையின் சராசரி அளவைவிட சற்று பெரியது.

சுமார் 20,000 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த அனைத்து மனித இனங்களின் மூளை அளவின் சராசரியும் அதிகமாக உள்ளது. ஆனால் அளவு குறைவது எப்போது தொடங்கியது என்பது முற்றிலும் தெளிவாக இல்லை, ஏனெனில் புதைபடிவங்களும், ஆய்வு பதிவுகளும் தெளிவாக இல்லை. எங்களுக்குத் தெரிந்தது எல்லாம் முன்னர் மூளை பெரியதாக இருந்தது, இன்று அவை 13% சிறியதாக உள்ளன," என்கிறார்.

புத்திசாலித்தனம் குறைந்துவிட்டதா?

மூளை சுருங்குகிறது என்றால், மனித அறிவும் சுருங்கி வருகிறதா? நீங்கள் எந்தக் கோட்பாட்டை நம்புகிறீர்கள் என்பதைப் பொறுத்து இது மாறுபடும், சிறிய மூளை நம்மை புத்திசாலியாக மாற்றும் அல்லது புத்திசாலித்தனத்தில் எந்த விளைவையும் ஏற்படுத்தாது.

மூளை அளவு அனைத்தையும் நிர்ணயம் செய்யாது என்பது உண்மைதான். ஆண்களின் மூளையானது பெண்களின் மூளையைவிட 11% பெரியது. இதற்கு இருபாலரின் ஒட்டுமொத்த உடல் அளவு காரணமாகk கூறப்படுகிறது. இருப்பினும், ஆண்களுக்கும் பெண்களுக்கும் ஒரே மாதிரியான அறிவாற்றல் திறன்கள் இருப்பதாக ஆராய்ச்சி காட்டுகிறது.

ஹோமோ ஃப்ளோரெசியென்சிஸ் மற்றும் ஹோமோ நலேடி போன்ற சிறிய மூளை அளவுடைய ஹோமினின் மனித இனங்கள், மேம்பட்ட திறன் கொண்டவை என்பதற்கான சில சர்ச்சைக்குரிய சான்றுகள் உள்ளன. மூளை எவ்வாறு இணைப்புகளால் உருவாக்கப்படுகிறது என்பதே புத்திசாலித்தனத்தின் அளவீடு.

“நமது மூளையின் அளவு கணிசமாகக் குறைந்து வருகிறது என்பது, அதிக நுண்ணறிவுக்கான நமது திறன் சுருங்குகிறது, அல்லது குறைந்தபட்சம் வளரவில்லை என்ற தர்க்கரீதியான முடிவை அளிக்கிறது."

"இருப்பினும், கடந்த 10,000 ஆண்டுகளாக நம் அறிவாற்றலை பயன்படுத்தி கலைப் பொருட்களை உருவாக்க கருவிகள் மற்றும் தொழில்நுட்பங்களை உருவாக்கியுள்ளோம். கணினிகளில் தகவல்களைச் சேமித்து, நமக்கான விஷயங்களைக் கணக்கிட இயந்திரங்களைப் பயன்படுத்துகிறோம். எனவே நமது மூளையின் நுண்ணறிவுத் திறன் குறைவாக இருக்கலாம். அதற்காக, நாம் ஓர் இனமாகக் குறைந்த புத்திசாலித்தனத்துடன் வளர்கிறோம் என்று அர்த்தம் இல்லை," என்கிறார் ஸ்டிபெல்.

https://www.bbc.com/tamil/articles/c722w8jdgwpo

இன்று புதிது புதிதாக வரும் கம்யூட்டர் processor எல்லாம் முன்னிருந்தவையை விட சின்னதாகவும், ஆனால் வினைத்திறன் அதிகமாக இருப்பவையாகவும் வருகின்றன. அப்படித் தான் மனித மூளைக்கும் நடந்து கொண்டிருக்குதோ என்று நினைத்த படியே கட்டுரையை வாசித்தால்.......... மூளையின் அளவு மட்டும் குறையவில்லை, மூளையின் வினைத்திறனும் குறைந்து கொண்டே வருகின்றது என்றும் சில ஆராய்ச்சிளார்கள் சொல்லியிருப்பது கொஞ்சம் ஏமாற்றமாகப் போய்விட்டது.....

மூளையின் அளவு சிறிதாவற்கு  Climate Change ஒரு காரணமாக இருக்கலாம் என்பது உண்மையாகக் கூட இருக்கலாம், ஆனாலும் எல்லாவற்றுக்கும் அதையே ஒரு காரணமாக சொல்வது சில வேளைகளில் ஒரு பகிடியாகவும் தெரிகின்றது.....😀

  • Like 1
Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வாக்கெடுப்பு மந்த கதியில் நடைபெறுகிறது? சனங்கள் எல்லாரும் வாக்கு அளிப்பார்களோ? விடுமுறைதினம் ஆகையால், ஒவ்வொரு பாதையில்.. கோயில்/குளம்/புரட்டாதி சனி விரதகாரர்/மற்றும் கோழிக்கறி/புரியாணி உண்போர்/ஊர் சுற்றி பார்ப்போர் என ஆளாளுக்கு.. பப்பாவில் ஏற்றிய பொது வேட்பாளருக்கு நாமம் வைத்து விடுவார்களோ.
    • ஜனாதிபதித் தேர்தல்-சில மாவட்டங்களில் அளிக்கப்பட்ட வாக்குகளின் சதவீதம்! ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்களிப்பு நடவடிக்கைகள் இன்று காலை 7 மணி முதல் ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றன. அதன்படி இன்று மாலை 4 மணி வரை மக்கள் தமது வாக்குகளை அளிக்க முடியும் இருந்த நேரத்தில் திருத்தம் மேற்கொள்வது தொடர்பாக விசேட வர்த்தமானி அறிவித்தலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. அதன்படி மாலை 4 மணியாகும்போது வாக்கெடுப்பு நிலையத்தில் வரிசைகளில் நிற்கின்ற அனைத்து வாக்காளர்களுக்கு வாக்குச்சீட்டு வழங்கப்படும் வரையில் வாக்கெடுப்பு நடத்தப்படும் என அதிவிசேட வர்த்தமானி திருத்தப்பட்டுள்ளது இதேவேளை இன்று காலை 10 மணி வரையான காலப்பகுதியில் சில மாவட்டங்களில் அளிக்கப்பட்ட மொத்த வாக்குகளின் சதவீதம் பின்வருமாறு அறிவிக்கப்பட்டுள்ளது களுத்துறை – 32% கம்பஹா – 25% கேகாலை – 15% நுவரெலியா – 30% இரத்தினபுரி – 20% அம்பாறை- 30% மன்னார்- 29% முல்லைத்தீவு – 25% வவுனியா – 30% கொழும்பு – 20% கண்டி – 20% காலி – 18% மாத்தறை – 30% மட்டக்களப்பு – 17% குருநாகல் – 30% பொலனறுவை – 38% மொனராகலை – 21% பதுளை – 21% https://athavannews.com/2024/1400397
    • லெபனான் தலைநகரில் இஸ்ரேல் தாக்குதல் - ஹெஸ்புல்லா அமைப்பின் சிரேஸ்டதளபதி பலி 21 SEP, 2024 | 07:00 AM   லெபனான் தலைநகரின் மீது இஸ்ரேல்; மேற்கொண்ட தாக்குதலில்  ஹெஸ்புல்லா அமைப்பின் சிரேஸ்ட தளபதியொருவர் கொல்லப்பட்டுள்ளார். பெய்ரூட்டில் இடம்பெற்ற தாக்குதலில் இப்ராஹிம் அகில் உயிரிழந்துள்ளதை  ஹெஸ்புல்லா அமைப்பு உறுதி செய்துள்ளது. இந்த தாக்குதலில் ஹெஸ்புல்லா அமைப்பின் பல தளபதிகள் கொல்லப்பட்டனர் என இஸ்ரேல் தெரிவித்துள்ளது. பொதுமக்கள் அதிகமாக வாழும் டஹியே என்ற பகுதியில் இஸ்ரேல் மேற்கொண்ட விமான தாக்குதல் காரணமாக 14 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என லெபனான் தெரிவித்துள்ளது. லெபானின் புறநகரில் உள்ள இந்த ஹெஸ்புல்லாக்களின் வலுவிடம் என்பது குறிப்பிடதக்கது. தாக்குதலை தொடர்ந்து குழப்பமான நிலை நிலவியது,அந்த பகுதிக்கு விரைந்த அவசரசேவை பிரிவினர் காயமடைந்தவர்களையும் கட்டிடங்களின் கீழ் சிக்குண்டிருந்தவர்களையும் மீட்க முயன்றனர் என பிபிசி தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/194227
    • நாட்டின் நிறைவேற்றுத்துறை அதிகாரமிக்க 9ஆவது  ஜனாதிபதியை தெரிவு செய்யும் 8ஆவது  ஜனாதிபதி தேர்தல் இன்று Published By: VISHNU   21 SEP, 2024 | 10:05 AM (இராஜதுரை ஹஷான்) நாட்டின் நிறைவேற்றுத்துறை அதிகாரமிக்க ஒன்பதாவது  ஜனாதிபதியை தெரிவு செய்யும் எட்டாவது ஜனாதிபதி தேர்தல் இன்று சனிக்கிழமை (21)  இடம்பெறவுள்ளது. இம்முறை 38 பேர் போட்டியிடுகின்ற நிலையில்,  17, 140,354 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். சுதந்திரமானதும், நீதியானதுமான வகையில் தேர்தலை நடத்த ஒத்துழைக்க வேண்டும் என தேர்தல்கள் ஆணைக்குழு சகல பிரஜைகளிடமும்  தேர்தல்கள் ஆணைக்குழு வலியுறுத்தியுள்ளது. நாடளாவிய ரீதியில்  13421  வாக்களிப்பு மத்திய நிலையங்களில் வாக்களிப்பு இடம்பெறவுள்ள நிலையில், சுமார் 63 ஆயிரம் பொலிஸார் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபடவுள்ளனர். முப்படையினரும் பாதுகாப்பு நிமித்தம் தயார் நிலையில் உள்ளனர். தேர்தல் பணிகளுக்காக 2 இலட்சத்து 25 ஆயிரம் அரச உத்தியோகஸ்தர்கள் கடமையில் ஈடுபட்டுள்ளனர். அனைத்து தேர்தல் தொகுதிகளுக்குமான வாக்கு பெட்டிகள் மற்றும் தேர்தல் பணிகளுக்கான ஆவணங்கள் நேற்று காலை கையளிக்கப்பட்டன. 22 தேர்தல் மாவட்டங்களில் கொழும்பு மாவட்டத்தில் தான் அதிகளவில் தேர்தல் தொகுதிகள் , கொழும்பு தேர்தல் மாவட்டத்தில் மாத்திரம் 3151 வாக்களிப்பு மத்திய நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. வாக்கெடுப்பு இன்று சனிக்கிழமை காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரை இடம்பெறவுள்ளது. வாக்களிக்க தகுதி பெற்றுள்ள அனைத்து வாக்காளர்களும் வாக்களிக்க வேண்டும் என ஆணைக்குழு பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. வாக்களிக்க செல்லும் போது வாக்காளர் அட்டை மற்றும் தேசிய அடையாளர் அட்டை அல்லது வெளிநாட்டு கடவுச்சீட்டு, சாரதி அனுமதி பத்திர அட்டை உட்பட அங்கீகரிக்கப்பட்ட அடையாள அட்டைகளை எடுத்து செல்லுமாறு வலியுறுத்தப்படுகிறது. 2019 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் 35 வேட்பாளர்கள் போட்டியிட்ட நிலையில்  ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிட்ட கோட்டபய ராஜபக்ஷ 6,924, 255 வாக்குகளை பெற்று  52.25 சதவீத வாக்குகளுடன் நாட்டின் 7 ஆவது நிறைவேற்று அதிகாரமிக்க ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டார்.  அதேபோல் அத்தேர்தலில்  ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளராக போட்டியிட்ட சஜித் பிரேமதாச 5,564, 239  வாக்குகளையும், தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளராக போட்டியிட்ட அனுரகுமார திஸாநாயக்க 41, 553 வாக்குகளையும் பெற்றுக் கொண்டனர். வாக்களிப்பு தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க குறிப்பிடுகையில்; வாக்களிக்கும் ஜனநாயக உரிமையை பிரஜைகள் அமைதியான முறையில் வெளிப்படுத்த வேண்டும். ஒருவரின் உரிமை பிறிதொருவருக்கு இடையூறாக அமைய கூடாது. தகுதி பெற்றுள்ள வாக்காளர்கள் அனைவரும் வாக்களிக்க வேண்டும் அத்துடன் சுதந்திரமாகவும்இ நியாயமானதாகவும் தேர்தலை நடத்த  சகல பிரஜைகளும் ஒத்துழைக்க வேண்டும். வாக்களிப்பு மத்திய நிலையத்துக்கு செல்லும் போது வாக்காளர் அட்டை, தேசிய அடையாள அட்டை அல்லது கடவுச்சீட்டு, சாரதி அனுமதி பத்திரம், ஆளடையாளத்தை உறுதிப்படுத்தும் வகையில் அங்கீகரிக்கப்பட்ட ஆவணங்களை கொண்டு செல்ல வேண்டும். வாக்களிப்பு மத்திய நிலையத்தில் அமைதியை பேணுவதற்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்.  தேர்தல் காலத்தில் அநாவசியமான பிரச்சினைகளை தோற்றுவிப்பதற்கு காரணியாக அமைவதை அனைவரும் தவிர்த்துக் கொள்ளுங்கள். வாக்களித்ததன் பின்னர் அமைதியான முறையில் செயற்படுங்கள் . ஏதேனும் அசம்பாவிதங்கள் ஏற்பட்டால் அதனால் ஏற்படும் விளைவை உங்களின் குடும்பமே எதிர்க்கொள்ள நேரிடும். ஆதரவளிக்கும் வேட்பாளர்களுக்கு எவ்வித இழப்பும் ஏற்படாது. ஆகவே தமது குடும்பத்தை நினைவில் வைத்துக் கொண்டு செயற்படுங்கள் என்று நாட்டு பிரஜைகளிடம் வலியுறுத்தியுள்ளார். https://www.virakesari.lk/article/194220
    • பட மூலாதாரம்,ISRO படக்குறிப்பு, கடந்த ஆண்டு சந்திரயான் - 3 விண்கலம் வெற்றிகரமாக நிலவில் தரையிறங்கியது கட்டுரை தகவல் எழுதியவர், சாரதா வி பதவி, பிபிசி தமிழ் 3 மணி நேரங்களுக்கு முன்னர் இந்தியா தனது விண்வெளி ஆராய்ச்சியில் மற்றொரு முக்கியமான கட்டத்துக்கு நகர்கிறது. சந்திரயான் 3 திட்டத்தின் வெற்றியை தொடர்ந்து சந்திரயான் -4 திட்டத்தில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ மும்முரமாக இறங்கியுள்ளது. நிலவுக்கு சென்று அதன் மேற்பரப்பில் இருக்கும் மண் மற்றும் கற்களை எடுத்து வருவதற்கான திட்டமே சந்திரயான் -4 ஆகும். இத்திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்து 2,104 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியுள்ளது. 2040-ல் நிலவில் மனிதர்களை தரையிறக்க வேண்டும் என்ற இந்தியாவின் இலக்கை நோக்கிய அடுத்தபடியாக இது பார்க்கப்படுகிறது. “சந்திரயான் -3 திட்டம் நிலவில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் தரையிறங்குவது சாத்தியம் என்று உணர்த்தியது. நிலவுக்கு பாதுகாப்பாக சென்று திரும்புவதே அடுத்தக்கட்ட திட்டமாகும். சந்திரயான்3 ஐ விட சிக்கலான தொழில்நுட்பங்கள் கொண்டது இத்திட்டம்” என்று இஸ்ரோ தலைவர் எஸ் சோம்நாத் கூறியுள்ளார். மனிதர்கள் இல்லாமல் ரோபோடிக் தொழில்நுட்பம் மூலம் நிலவின் மண் மாதிரிகளை எடுத்து வர வேண்டும் என்பதால் சவால்கள் அதிகமாகவே இருக்கும் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.   சந்திரயான்-4 திட்டம் என்ன? சந்திரயான் -4 திட்டத்தில் நிலவுக்கு அனுப்பப்படும் கருவிகள் இரண்டு தொகுப்புகளாக, LMV-3 மற்றும் PSLV ஆகிய இரண்டு ராக்கெட்டுகள் மூலம் தனித்தனியாக விண்ணில் செலுத்தப்படவுள்ளன. விண்கலம் நிலவில் தரையிறங்கி, தேவையான மண் மற்றும் பாறை மாதிரிகளை சேகரித்து, அவற்றை ஒரு பெட்டியில் அடைத்து, நிலவிலிருந்து புறப்பட்டு பூமிக்கு திரும்ப வேண்டும். அது வெற்றிகரமாக முடிந்தால், விண்வெளி ஆராய்ச்சியில் சர்வதேச அரங்கில் இந்தியாவை அடுத்த நிலைக்கு இந்த திட்டம் கொண்டு செல்லும். இந்த நடவடிக்கைகள் ஒவ்வொன்றையும் செய்ய, தனித்தனி கருவிகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. படக்குறிப்பு, விஞ்ஞான் பிரசார் அமைப்பின் முதுநிலை விஞ்ஞானி த.வி. வெங்கடேஸ்வரன் இதுகுறித்து விஞ்ஞான் பிரசார் அமைப்பின் முதுநிலை விஞ்ஞானி த.வி. வெங்கடேஸ்வரன் பிபிசி தமிழிடம் பேசுகையில், “முதலில் நமக்கு கிடைத்த தகவல்கள், நிலவை சுற்றி வந்த விண்கலத்திடம் இருந்து வந்தன. அதன் பின், நிலவில் தரையிறங்கிய போது, ஏற்கெனவே கிடைத்த தகவல்களுடன் ஒப்பிட்டு பார்த்து, நமது புரிதலை மேம்படுத்திக் கொண்டோம். இப்போது அடுத்தக்கட்ட விரிவான ஆய்வுக்காக நிலவின் மண், பாறை மாதிரிகளை சேகரிக்கவுள்ளோம்.” என்றார். நிலவின் மாதிரிகளை சேகரிப்பது இந்தியாவுக்கு மிகவும் முக்கியம் என்கிறார் அவர். “சர்வதேச அளவில், நிலவு ஒப்பந்தத்தின் படி (Moon Treaty 1967) நிலவை தனி ஒரு நாடு சொந்தம் கொண்டாட முடியாது. நிலவிலிருந்து கொண்டு வரப்பட்ட மாதிரிகள், அந்த மாதிரிகளை ஆய்வு செய்யும் திறன் கொண்ட நாடுகளிடையே பகிர்ந்து அளிக்கப்பட வேண்டும். காலாவதியாகவுள்ள இந்த ஒப்பந்தத்துக்கு பிறகு, உலக நாடுகளின் முடிவு என்னவாக இருக்கும் என்று தெரியாது. இந்நிலையில், இந்தியா தனது நிலவு ஆய்வுகளை மேற்கொள்வது அவசியம்” என்றார்.   நிலவு மாதிரிகளை இதுவரை எடுத்த வந்த நாடுகள் எவை? நிலவை ஆராய்வது பல நாடுகளுக்கு முக்கியமான செயல். இது அறிவியல் ஆர்வத்தால், புதிய கண்டுபிடிப்புகளால், மற்றும் எதிர்காலத்தில் மனிதர்கள் நிலவில் வாழலாம் என்ற எண்ணத்தால் செய்யப்படுகிறது. சில நாடுகள் நிலவின் மேற்பரப்பிலிருந்து மண் மாதிரிகளை சேகரித்து வந்துள்ளன. இது நிலவு எப்படி உருவானது, அதன் உள்ளே என்ன இருக்கிறது மற்றும் அதன் வரலாறு பற்றி நமக்கு முக்கியமான தகவல்களைத் தருகிறது. அமெரிக்காவும் சோவியத் யூனியனும் இதில் முன்னோடிகள். அமெரிக்கா 1969 முதல் 1972 வரை நிலவுக்கு மனிதர்களை அனுப்பி நிறைய மண் மாதிரிகளை கொண்டு வந்தது. 1970களில் சோவியத் யூனியன் தனது லூனா திட்டங்கள் மூலம் ரோபோக்களை கொண்டு, நிலவின் மண் மாதிரிகளை சேகரித்து பூமிக்கு கொண்டு வந்தது. சமீபத்தில் 2020ல், Chang’e-5 என்ற விண்கலத்தைக் கொண்டு சீனா நிலவிலிருந்து மண் மாதிரிகளை எடுத்து வந்தது. இந்தியா மட்டுமல்லாமல், ரஷ்யா, ஜப்பான் போன்ற நாடுகளும் விரைவில் நிலவிலிருந்து மண் மாதிரிகளை கொண்டு வர திட்டமிட்டுள்ளன. இதன் மூலம் நிலவைப் பற்றி மேலும் புரிதல்களைப் பெற முடியும். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,நிலவில் முதன் முதலாக தடம் பதித்த நீல் ஆர்ம்ஸ்ட்ராங்கும், ஆல்ட்ரினும்.   நிலவின் மண், நிலவைப் பற்றி என்ன சொல்கிறது? ஏற்கெனவே சேகரிக்கப்பட்ட நிலவின் மண் மாதிரிகள் மூலம் நிலவின் வயது, அதன் உள்ளே என்னென்ன இருக்கிறது என்பதைப் பற்றிய தகவல்கள் மனிதர்களுக்கு தெரியவந்தன. நிலா ஒரு பெரிய மோதலால் உருவானது, அதில் எரிமலைகள் இருந்தன, அதன் துருவப் பகுதிகளில் உறைந்த நிலையில் நீர் இருக்கிறது என்பது தெரிய வந்தது. இந்தத் தகவல்கள் எதிர்கால விண்வெளி ஆய்வுக்கு மிகவும் முக்கியம். நிலவில் மனிதர்கள் வாழ்வதற்கான சவால்கள் மற்றும் வாய்ப்புகளைப் பற்றி நமக்குச் சொல்கிறது. அங்கே பயனுள்ள பொருட்கள், கனிமங்கள் இருக்கின்றனவா என்பதை கண்டுபிடிக்கவும் உதவலாம். அமெரிக்காவின் நாசா பூமிக்கு கொண்டு வந்த மண், பாறை மாதிரிகள் நிலவின் மேற்பரப்புக்கு எத்தனை வயதாகிறது என்பதை கணிப்பதில் முக்கிய பங்காற்றின. அமெரிக்காவின் அப்பொலோ திட்டங்களின் மூலம் கிடைத்த மாதிரிகளை ஆராய்ந்த போது, நிலவில் இருக்கும் Basalt, (எரிமலை வெடிப்பின் காரணமாக உருவான கரும்பாறைகள்) 3.6 பில்லியன் ஆண்டுகள் பழமையானவை என்று தெரிய வந்தது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c39l1kmvp3vo
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 1 reply
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.