Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஜேவிபியின் நேற்யை மாநாட்டில் சிஐடியின் முன்னாள் இயக்குநர் - சிரேஸ்ட பிரதிபொலிஸ்மா அதிபர் - பல முன்னாள் பொலிஸ் உத்தியோகத்தர்கள் - மாநாட்டில் கலந்துகொள்ளவேண்டாம் என மிரட்டல் விடுக்கப்பட்டதாக தெரிவிப்பு

Published By: RAJEEBAN  10 JUN, 2024 | 11:13 AM

image

தேசிய மக்கள் சக்தியின் ஓய்வு பெற்ற பொலிஸ் உத்தியோகத்தர்கள் அமைப்பின் நேற்றைய செய்தியாளர் மாநாட்டில்  சிஐடியின் முன்னாள் அதிகாரிகள் உட்பட ஓய்வு பெற்ற பல பொலிஸ் அதிகாரிகள் கலந்துகொண்டுள்ளனர்.

தேசிய மக்கள் சக்தியின் நேற்றைய மாநாட்டில் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஓய்வு பெற்ற பொலிஸ், இராணுவ அதிகாரிகள், நீதித்துறையினர் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

ravi_akd.jpg

ஓய்வுபெற்ற பொலிஸ் உத்தியோகத்தர்களின் கூட்டு என்பது உண்மையில் நியாயபூர்வமான ஜனநாயக அமைப்பு என தெரிவித்துள்ள முன்னாள் சிரேஸ்ட பிரதிபொலிஸ்மா அதிபர் ரவி செனிவிரட்ண பொலிஸார் மீது தாக்கம் செலுத்தும் நோக்கமோ அல்லது அல்லது பொலிஸ் துறைக்கு மீள திரும்பும் நோக்கமோ இல்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இந்த மேடையில் ஏறவேண்டாம் என பல தரப்பினரிடமிருந்து எனக்கு அழுத்தம் வந்தது, எனக்கு மாத்திரமல்ல ஏனைய முன்னாள் அதிகாரிகளிற்கும் அழுத்தம் கொடுக்கப்பட்டது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

ஒருவருக்கு தொலைபேசி மூலம் மிரட்டல் கூட விடுத்துள்ளனர் எனவும் ரவிசெனிவிரட்ண தெரிவித்துள்ளார். அவர் மொனராகல பொலிஸில் இது  குறித்து முறைப்பாடு செய்துள்ளார், பின்னர் தொலைபேசியில் ஒருவர் அவரை தொடர்புகொண்டு முறைப்பாட்டை விலக்கிக்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.

தேசிய புலனாய்வு பிரிவை சேர்ந்த ஒருவரே இவ்வாறு அச்சுறுத்தல் விடுத்துள்ளார் எனவும் ரவி செனிவிரட்ண தெரிவித்துள்ளார்.

ஒய்வுபெற்ற பொலிஸ் உத்தியோகத்தர்களின் கூட்டினை உருவாக்குவதற்கான காரணங்கள் குறித்து தெளிவுபடுத்தியுள்ள ரவி செனிவிரட்ண இரண்டு வருடங்களின் முன்னர் நாங்கள் தேசிய மக்கள் சக்தியின் தலைமைத்துவத்துடன்  தீவிர ஆலோசனைகளை மேற்கொண்டோம் நாங்கள் எங்கள் கரிசனைகள் கேள்விகள் எண்ணங்களை பகிர்ந்துகொண்டோம் என தெரிவித்துள்ளார்.

அதன் பின்னர் இந்த குழுவினர் நேர்மையானவர்கள் என்பதை நாங்கள் உணர்ந்துகொண்டோம் இன்றைய அரசியலில் நேர்மையானர்வகள் குறைவு என ரவி செனிவிரட்ண தெரிவித்துள்ளார்.

மேலும் இவர்கள் தங்கள் நோக்கங்களிற்காக குறிப்பிடத்தக்க தியாகங்களை செய்ய தயாராகயிருக்கின்றார்கள். இது இன்று சமூகத்தில் அரிதாக காணப்படக்கூடிய விடயம். மேலும் அவர்கள் எங்கள் கேள்விகளிற்கு எல்லாம் தெளிவான பதிலை வழங்கினார்கள், நாட்டை கட்டியெழுப்புவதற்கான  தெளிவான திட்டம் இருப்பதை வெளிப்படுத்தினார்கள், அதன் பின்னர் நாங்கள் அவர்களுடன் இணைய தீர்மானித்தோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/185721

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.