Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
13 JUN, 2024 | 03:55 PM
image

கதிர்காமம் ஆலயத்தின் ஆடிவேல் உற்சவம் எதிர்வரும் ஜூலை மாதம் நடைபெறவுள்ள நிலையில், ஆலயம் நோக்கிய பாத யாத்திரையினை மக்கள் தற்போது ஆரம்பித்துள்ளனர். 

எதிர்வரும் 30ஆம் திகதி லாகுகல பிரதேச செயலாளர் பகுதியில் அமைந்துள்ள உகந்தை காட்டுப்பாதை பக்தர்களுக்காக திறக்கப்பட்டு, ஜூலை 11ஆம் திகதி மூடப்படுவதாக அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் கடந்த வெள்ளிக்கிழமை (07) உகந்தை முருகன் ஆலயத்தில் நடத்தப்பட்ட கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டிருந்தது.

அதனை தொடர்ந்து, கதிர்காமம் ஆலயத்தில் கடந்த 10ஆம் திகதி நடத்தப்பட்ட கூட்டத்தில் உகந்தை காட்டுப்பாதை திறக்கும் திகதி பிற்போடப்பட்டு, எதிர்வரும் ஜூலை மாதம் 02ஆம் திகதி காட்டுப்பாதை திறக்கப்பட்டு, 14ஆம் திகதி மூடப்படவுள்ளதாக தற்போது தெரிவிக்கப்பட்டுள்ளதாக அம்பாறை மாவட்ட சேவற்கொடியோன் அமைப்பு தெரிவித்துள்ளது.

முன்னர் அறிவிக்கப்பட்டபடி, 30ஆம் திகதியினை கருத்திற்கொண்டு பக்தர்கள் பாதயாத்திரை செல்வதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்ட நிலையில், இந்த திகதி மாற்றமானது மக்கள் மத்தியில் பெரும் குழப்பத்தினை ஏற்படுத்தியுள்ளதாக சமூக அமைப்புக்கள் தெரிவித்துள்ளன.  

காட்டு வழியாக பாதயாத்திரை மேற்கொள்ள தற்போது அறிவிக்கப்பட்டுள்ள புதிய கால எல்லை போதாமல் உள்ளதாகவும் சமூக அமைப்புகள் மேலும் தெரிவித்துள்ளன.

எதிர்வரும் 2024.07.06 அன்று கதிர்காம கொடியேற்றம் நடைபெற்று, 22ஆம் திகதி தீர்த்தோற்சவத்துடன் கதிர்காமம் ஆலய உற்சவம் நிறைவடைகிறது.

காட்டுப்பாதை திகதி மாற்றங்கள் தொடர்பில் லாகுகலை பிரதேச செயலாளர் நவேந்திரராஜா நவநீதராஜா கருத்து தெரிவிக்கையில், கதிர்காம உற்சவம் தொடர்பான கூட்டங்கள் மூன்று கட்டமாக இடம்பெறும் என குறிப்பிட்டார்.

அதன்படி, முதலாம் கட்ட கூட்டமானது கதிர்காமத்தில் இடம்பெறும் எனவும் இதன்போது தெரிவிக்கப்படும் கால எல்லைக்குள் காட்டுப்பாதை திறந்து மூடப்படும் கால எல்லை மற்றும் ஏனைய விடயங்கள் தீர்மானிக்கப்படும்.

அதன் பின்னர், அம்பாறை மாவட்ட ஆரம்ப கட்ட கூட்டம் உகந்தையில் அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் நடத்தப்பட்டு கதிர்காமத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் தொடர்பில் விளக்கமளிக்கப்பட்டு கருத்துக்கள் பெறப்படும். மூன்றாம் கட்டமாக, உகந்தையில் விளக்கமளிக்கப்பட்ட முடிவுகள் கதிர்காமத்தில் இடம்பெறும் இரண்டாம் கட்ட இறுதிக் கூட்டத்தில் முன்வைக்கப்பட்டு முடிவு எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டார்.

மேலும் அவர், இவ்வருடத்துக்கான இறுதி முடிவுக்கான கூட்டம் கடந்த 12 ஆம் திகதி கதிர்காமத்தில் நடத்தப்பட்டபோது,  பாதயாத்திரைக்கான உகந்தை காட்டுப்பாதை  எதிர்வரும் ஜூலை மாதம் 02ஆம் திகதி திறக்கப்பட்டு, ஜூலை 14ஆம் திகதி பூட்டப்படுவதாக தீர்மானிக்கப்பட்டுள்ளதாக லாகுகல பிரதேச செயலாளர் தெரிவித்தார். 

https://www.virakesari.lk/article/185989

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கதிர்காம பாத யாத்திரைக்கான காட்டுப் பாதையை திறக்கும் தினத்தை பிற்போட்டமை பெரும் கவலையளிக்கிறது - செந்தூரன்

Published By: DIGITAL DESK 7

16 JUN, 2024 | 06:11 PM
image
 

கதிர்காம பாத யாத்திரையின்போதான காட்டுப் பாதைய‍ை திறக்கும் தினத்தை பிற்போட்டமை பெரும் கவலையளிக்கிறது என இராவணசேனை அமைப்பின் தலைவரும் திருக்கோணேசர் பாத யாத்திரை குழுவின் வேல்சாமியுமான செந்தூரன் தெரிவித்தார். 

திருகோணமலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை (16) இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவசரமாக சென்று யாத்திரை கடமைகளையும் நேர்த்திக்கடன்களையும் நிறைவேற்ற முடியாது  என்றும் பக்தர்களின் வருகையை இது குறைக்கும் செயலாகிறது என்றும் குற்றஞ்சாட்டினார்.

அவர் மேலும் கூறுகையில், 

பண்டைய காலம் தொடக்கம் மரபு ரீதியாக இந்த யாத்திரை நடைபெறுகிறது. நேர்த்திக்கடனுக்காக சிறுவர்கள் முதல் பெரியோர், கர்ப்பிணித் தாய்மார்கள் என உகந்தை முதல் கதிர்காமம் வரை பாத யாத்திரை மேற்கொள்வது வழக்கம். ஆனால், தற்போது அடுத்த மாதம் 2ஆம் திகதி வரை பிற்போட்டிருப்பதும் குறுகிய காலத்தில் செல்லவைப்பதும் யாத்திரிகர்களை தடுக்கும் செயலாக காணப்படுகிறது.

சிங்களவர்கள், தமிழர்கள் என பலரும் கதிர்காம யாத்திரை மேற்கொள்வது வழக்கம். இது ஈழத்து சைவர்களின் வாழ்வியலில் ஒன்றாக காணப்படுகிறது.

நடந்து சென்று நேர்த்திக்கடனை செலுத்துவது தொன்றுதொட்டு நடந்து வருகிறது. இதில், கடினமான பாதை வழியே காடுகள் ஊடாக செல்ல வேண்டும்.

இந்த மாதம் 30ஆம் திகதி திறக்கப்படவிருந்த பாதையின் திறப்பு நாள் பிற்போடப்பட்டுள்ளது. நான்கு நாட்களுக்குள் பாத யாத்திரையை நிறைவேற்றுவது கடினம்.

இதனால் பல்லாயிரக்கணக்கான பாத யாத்திரை குழுக்கள் தங்களது கண்டனத்தை தெரிவித்து வருகிறார்கள். வழமை போன்று இந்த பாத யாத்திரை நடைபெற வேண்டும். எனவே, உரிய அரச தரப்பினர் இது தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும் என்றார்.

https://www.virakesari.lk/article/186215

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கதிர்காமம் காட்டுப்பாதை திறக்கப்பட்டது; காட்டுவழிப் பாத யாத்திரையை ஆரம்பித்தனர் பக்தர்கள்!

30 JUN, 2024 | 11:21 AM
image
 

கதிர்காமம் முருகன் ஆலயத்தில் எதிர்வரும் ஜூலை 06ஆம் திகதி கொடியேற்றத்துடன் திருவிழா ஆரம்பமாகவுள்ள நிலையில், கொடியேற்றத்தினை காண காட்டுப்பாதை வழியாக மக்கள் இன்று (30) காலை பாத யாத்திரையை தொடங்கினர்.

பக்தர்களுக்கான லாகுகலை உகந்தை காட்டுப் பாதையின் கதவானது, உகந்தை முருகன் ஆலயத்தில் இன்று காலை 6.00 மணியளவில்  நடைபெற்ற சிறப்பு வழிபாட்டினை தொடர்ந்து, கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானால் திறந்துவைக்கப்பட்டது.

பாத யாத்திரீகர்களுக்காக பிரதேச செயலகம், பிரதேச சபை, சுகாதார அமைச்சு, பொலிஸ் மற்றும் இராணுவத்தின் மேற்பார்வையுடன் மருத்துவம், நீர் வழங்கல், தங்குமிடம் மற்றும் சுகாதார வசதிகளும் ஆளுநரால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர்  பிரமித்த பண்டார தென்னகோன், அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் சிந்திக்க அபேவிக்ரம உள்ளிட்ட குழுவினர் இதன்போது கலந்துகொண்டனர்.

அரோஹரா கோஷத்துடன் பக்தர்கள் தங்களது காட்டுவழிப் பயணத்தினை இன்று ஆரம்பித்தனர்.

மேலும், எதிர்வரும் ஜூலை 06ஆம் திகதி  கொடியேற்றத்துடன் ஆரம்பமாகும் கதிர்காம உற்சவம் 2024.07.22 அன்று தீர்த்தோற்சவத்துடன் நிறைவடையும்.

அத்துடன் இன்று திறக்கப்பட்ட கதிர்காமம் காட்டுப்பாதை எதிர்வரும் 2024.07.11 அன்று மூடப்படும்.

kadupathai33.jpg

kadupathai1.jpg

kadupathai55.jpg

https://www.virakesari.lk/article/187294

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.