Jump to content

சூறாவளியால் தரைமட்டமான தீவு - தங்குவதற்கே இடமின்றித் தவிக்கும் மக்கள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பெரில் சூறாவளியால் தரைமட்டமான தீவு - தங்குவதற்கே இடமின்றித் தவிக்கும் மக்கள்

பட மூலாதாரம்,API

கட்டுரை தகவல்
  • எழுதியவர், வில் கிராண்ட்
  • பதவி, மத்திய அமெரிக்கா மற்றும் கியூபா செய்தியாளர், பிபிசி நியூஸ், மெக்ஸிகோ
  • 3 ஜூலை 2024, 15:00 GMT
    புதுப்பிக்கப்பட்டது 59 நிமிடங்களுக்கு முன்னர்

’பெரில்’ சூறாவளி தனது மூர்க்கமான முழு சக்தியுடன் யூனியன் தீவை தாக்கியதன் காரணமாக ஏற்பட்ட பேரழிவின் அளவைக் கண்டு கத்ரீனா காய் அதிர்ச்சியடைந்தார்.

கரீபியனில் செயின்ட் வின்சென்ட் மற்றும் கிரெனடைன்ஸ் தீவுக் கூட்டத்திற்கு அப்பால் அமைந்துள்ள இந்தத் தீவில் ஏறக்குறைய எல்லா கட்டடங்களும் தரைமட்டமாகியுள்ளன அல்லது மோசமாகச் சேதமடைந்துள்ளன என்று அவர் கூறினார்.

“பெரில் சூறாவளி கரையைக் கடந்த பிறகு யூனியன் தீவு பயங்கரமான நிலையில் உள்ளது. உண்மையில் கிட்டத்தட்ட முழு தீவும் தரைமட்டமாகியுள்ளது," என்று கோய் ஒரு வீடியோ செய்தியில் கூறினார்.

"ஒரு கட்டடம்கூட இப்போது இல்லை. வீடுகள் தரைமட்டமாக்கப்பட்டுள்ளன, சாலைகள் தடைப்பட்டுள்ளன, மின் கம்பங்கள் தெருக்களில் விழுந்துள்ளன.”

மீனவரும், மீன்பிடி வழிகாட்டியுமான செபாஸ்டின் சைலி இதை ஆமோதிக்கிறார். “எல்லாமே போய்விட்டது. நான் இப்போது வாழ்வதற்குக்கூட எந்த இடமும் இல்லை, ”என்று அவர் கூறினார்.

கடந்த 1985 முதல் யூனியன் தீவில் அவர் வசித்து வருகிறார். 2004இல் இவான் சூறாவளி வீசியபோதும் அவர் அங்கு இருந்தார். ஆனால் "பெரில் சூறாவளியை எதனுடனும் ஒப்பிட முடியாது. அது முற்றிலும் வேறுவிதமாக, மோசமாக இருந்தது" என்று அவர் கூறினார்.

பிபிசி தமிழ் வாட்ஸ் ஆப் சேனல்

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

சூறாவளியின் பயங்கரமான அனுபவம்

"ஒரு மாபெரும் சூறைக்காற்று கடந்து சென்றது போல் இருந்தது. யூனியன் தீவின் 90 சதவிகிதம் அழிக்கப்பட்டுவிட்டது."

அவருக்கு ஏற்பட்ட அதிர்ச்சி மற்றும் பயத்தின் அளவு அவரது குரலில் இன்னும் தெளிவாகத் தெரிகிறது.

"நான் எனது மனைவி மற்றும் மகளுடன் இருந்தேன். உண்மையைச் சொல்வதானால் நாங்கள் தப்பிப் பிழைப்போம் என்று நான் நினைக்கவில்லை,” என்றார் அவர்.

அவரது உறவினர் அலிஸி தனது குடும்பத்துடன் ஒரு ஹோட்டலை நடத்துகிறார். ’பெரில்’ சூறாவளி அவர்களின் நகரத்தைக் கடந்து சென்றபோது ஏற்பட்ட பயங்கரமான அனுபவத்தை அவர் விவரித்தார்.

நீடித்த, கொடுங்காற்று தள்ளித் திறக்காமல் இருக்க கதவுகள் மற்றும் ஜன்னல்களுக்கு எதிராக நாற்காலி, மேசைகளைத் தள்ளி வைக்க வேண்டியிருந்தது என்று அவர் கூறினார்.

"காற்றின் அழுத்தம் மிகவும் தீவிரமாக இருந்தது. அதை எங்கள் காதுகளில் உணர முடிந்தது. மேற்கூரை பிய்த்துக்கொண்டு வேறொரு கட்டடத்தில் சென்று மோதுவதை எங்களால் கேட்க முடிந்தது. ஜன்னல்கள் உடைந்து கட்டடம் முழுவதும் வெள்ளம் நிரம்பியது."

பெரில் சூறாவளியால் தரைமட்டமான தீவு - தங்குவதற்கே இடமின்றித் தவிக்கும் மக்கள்

பட மூலாதாரம்,ALIZEE SAILLY

"இது இவ்வளவு மோசமாக இருக்கும் என்று யாரும் நினைக்கவில்லை. எல்லோரும் அதிர்ச்சியடைந்துள்ளனர்." இயற்கை விவசாயம் செய்பவரும், தேனீ வளர்ப்பவரும், மீனவருமான செபாஸ்டீனின் இரண்டு பண்ணைகள் மற்றும் அவரது தேன் கூடுகளும் முற்றிலுமாக நாசமாகியுள்ளன.

இருப்பினும் தீவிலுள்ள மக்கள் சமூகங்களின் உடனடி முன்னுரிமை தங்குமிடம்தான் என்று செபாஸ்டீன் தெரிவித்தார். மக்கள் தங்கள் குடும்பங்களுக்கு தற்காலிக தங்குமிடங்களை உருவாக்க மரம் மற்றும் பிளாஸ்டிக் தாள்களைச் சேகரிக்க முயல்கின்றனர்.

"கூடவே தண்ணீர் மற்றும் உணவைக் கண்டுபிடிப்பது கடினமாக இருக்கும்," என்று அவர் மேலும் கூறினார்.

யூனியன் தீவில் டின்னில் அடைக்கப்பட்ட உணவுகள், பால் பொடி, சுகாதாரப் பொருட்கள், முதலுதவிப் பெட்டிகள் மற்றும் கூடாரங்கள் வரை பல பொருட்கள் அவசரமாகத் தேவைப்படுவதாக அலிஸி சைலி கூறினார்.

 

'வார்த்தைகளில் விவரிக்க முடியாத பேரழிவு'

பெரில் சூறாவளியால் தரைமட்டமான தீவு - தங்குவதற்கே இடமின்றித் தவிக்கும் மக்கள்

பட மூலாதாரம்,ALIZEE SAILLY

மின்சாரம் மற்றும் தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ள நிலையில், ஈலோன் மஸ்க்கின் ஸ்பேஸ்எக்ஸ் மூலம் தொடங்கப்பட்ட ஸ்டார்லிங்க் நெட்வொர்க்குடன் இணைவதன் மூலம் செய்திகளை மட்டுமே அவரால் அனுப்ப முடிந்தது.

செயின்ட் வின்சென்ட் மற்றும் கிரெனடைன்ஸ் அரசு, அதன் பங்கிற்கு பிரச்னையின் அளவை அங்கீகரிப்பதாகக் கூறுகிறது.

ஒரு காலை உரையில், செயிண்ட் வின்சென்ட் மற்றும் கிரெனடைன்ஸ் பிரதமர் ரால்ஃப் கோன்சால்வ்ஸ் கரீபியன் தேசம் முழுவதும் ஏற்பட்ட அதிர்ச்சியின் உணர்வைச் சுருக்கமாகக் கூறினார்: "பெரில் சூறாவளி - இந்த ஆபத்தான மற்றும் பேரழிவு சூறாவளி - வந்து போய்விட்டது. அது வார்த்தைகளில் விவரிக்க முடியாத அழிவை ஏற்படுத்தியுள்ளது. நம் நாடு முழுவதும் வலியையும் துன்பத்தையும் விட்டுச் சென்றுள்ளது,” என்று அவர் தனது உரையில் குறிப்பிட்டார்.

சூறாவளிக்குப் பிந்தைய முன்னுரிமைகளின் நீண்ட பட்டியலைச் சமாளிக்கத் தனது நிர்வாகம் முடிந்தவரை விரைவாகச் செயல்படும் என்றும் அவர் உறுதியளித்தார்.

யூனியன் தீவில் அரசிடம் நிதி, வளங்கள் மற்றும் மனிதவளம் உள்ளதா என்பதில் சில சந்தேகங்கள் உள்ளன.

"அவர்கள் எங்களுக்கு உதவ ராணுவத்தையும் கடலோர காவல் படையையும் அனுப்புவார்கள் என்று நம்புகிறேன். அவர்களால் தீவை மீண்டும் கட்டியெழுப்ப முடியுமா என்று எனக்குத் தெரியவில்லை,” என்று செபாஸ்டின் கூறினார்.

"இதற்கு பல கோடிக்கணக்கான டாலர்கள் தேவைப்படும். கட்டியெழுப்ப ஓராண்டு அல்லது அதற்கும் மேல் எடுக்கும் மற்றும் சர்வதேச உதவி தேவைப்படும்," என்று அவர் குறிப்பிட்டார்.

 
பெரில் சூறாவளியால் தரைமட்டமான தீவு - தங்குவதற்கே இடமின்றித் தவிக்கும் மக்கள்

பட மூலாதாரம்,API

கரீபியன் புலம்பெயர்ந்தோரை தங்களால் இயன்ற விதத்தில் உதவி செய்யுமாறு யூனியன் ஐலண்ட் சுற்றுச்சூழல் கூட்டணியின் இயக்குநரான கத்ரீனா கோய் கேட்டுக் கொண்டார்.

எங்களுக்கு அதிக அளவில் உதவி தேவைப்படுகிறது. எமர்ஜென்சி உபகரணங்கள், உணவு, மக்களைப் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றுவது, இவை அனைத்தும் இந்த நேரத்தில் தேவை.

பல ஆண்டுகளாக, கரீபியனில் உள்ள சிறிய தீவு சமூகங்களுக்கு ஒரு முக்கிய ஆதாரமான யூனியன் தீவின் நீர் பாதுகாப்பிற்காக கோய் முக்கியமான பணிகளை மேற்கொண்டுள்ளார்.

பெரில் சூறாவளி காரணமாக அந்தப் பணி முற்றிலுமாக அழிந்துவிட்டது என்று அவரது சர்வதேச சகாக்கள் கூறுகிறார்கள்.

பெரில் சூறாவளி திங்களன்று நான்காவது வகை சூறாவளியாக நிலத்தைத் தாக்கியது. 150mph (மணிக்கு 240 கிமீ) வேகத்தில் காற்று வீசியது.

ஆயிரக்கணக்கான மக்கள் இன்னும் மின்சாரம் இல்லாமல் உள்ளனர். பலர் செயின்ட் வின்சென்ட் மற்றும் கிரெனடைன்ஸ், கிரெனடா மற்றும் செயின்ட் லூசியாவில் தற்காலிக தங்குமிடங்களில் உள்ளனர்.

தீவின் ஒவ்வோவோர் அங்குலத்திலும் குழப்பம் மற்றும் வீடற்ற நிலைமை உள்ள போதிலும் விஷயங்கள் இதைவிட மோசமாகவில்லை என்பதற்கு செபாஸ்டியன் சைலி கடவுளுக்கு நன்றி கூறுகிறார்.

"மிக முக்கியமான விஷயம் என்னவென்றால் நாங்கள் இன்னும் உயிருடன் இருக்கிறோம். பொருள் இழப்பு மட்டுமே நிகழ்ந்துள்ளது," என்றார் அவர்.

"நாங்கள் எதிர்கொண்டு, கடந்து வந்த அந்த சக்தியைப் பார்த்த பிறகு, இன்று என் அண்டைவீட்டார் இன்னும் இங்கே இருப்பதைக் கண்டு நான் மகிழ்ச்சியடைகிறேன்," என்று அவர் தெரிவித்தார்.

https://www.bbc.com/tamil/articles/c134063d0dlo

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Satellite images show lightning in eye of powerful Hurricane Beryl | VOA News

cyclone.jpg

beryl.jpg

Hurricane Beryl batters Jamaica

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆறு மாதத்துக்கு கொழும்பு கத்தரிக்காய் கனடாவுக்கும் யுரோப்புக்கும் வராது சாரபாம்பு போல் இருக்கும் ஸ்பெயின் கத்தரிக்காய் தான் யுரோப்புக்கு.

ஜமேக்காவில் தோட்டம் தப்பினால் கனடா மக்கள் கத்தரியை காணலாம். 

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • பன்றிக்கு எப்பொழுதும் அதே நினைப்பு தான் என்று எமது ஊரில் சொல்வது சரி என்று நீங்கள் அடிக்கடி நிரூபிக்கிறீர்கள். 
    • உங்களைப் போன்று என்னையும் உங்கள் முட்டாள்கள் சங்கத்தில் உறுப்பினராக சேர்த்துக்கொள்ள முயன்றமைக்கு  நன்றி. 😁
    • பின்னர் எதுக்காக அவரை தேசியத் தலைவர் என்று பட்டியல் இடுகிறீர்கள்??? உங்கள் பட்டியல்ப்படி புலம்பெயர் தேச முட்டாளா நீங்கள்??
    • திம்புப் பேச்சுவார்த்தையிலிருந்து வெளியேறியதன் காரணத்தை மக்களுக்கு விளக்கிய தலைவர் பிரபாகரன் தலைவர் பிரபாகரன் - 1987 தீர்வொன்று நோக்கிப் பயணிக்கலாம் என்கிற நம்பிக்கையினை தந்த திம்புப் பேச்சுவார்த்தைகள் முற்றான தோல்வியைத் தழுவியிருந்தன. எதிர்பார்த்தது போலவே ஜெயவர்த்தன அரசாங்கம் கடுமையான பிரச்சாரத்தில் இறங்கியது. பேச்சுவார்த்தைகளின் தோல்விக்கான முழுப்பொறுப்பினையும் தமிழ்ப் போராளிகளின் மீது அது சுமத்தியது. தமிழர்களை உறுதியற்றவர்கள், விட்டுக் கொடுக்காதவர்கள் என்று அது குற்றஞ்சுமத்தியது. பேச்சுக்கள் தோல்வியடைந்தமையினால், தனக்கு முன்னால் இருக்கும் ஒரே தெரிவு இராணுவ முறையில் தமிழர்களுக்கான தீர்வினை வழங்குவதுதான் என்று அது கொக்கரித்தது. இதனையடுத்து, அதுலத் முதிலியினால் "பயங்கரவாதிகளின் இடங்கள்" என்று அழைக்கப்பட்டு வந்த தமிழர்களின் எல்லையோரக் கிராமங்களில் இருந்து தமிழர்களை முற்றாகத் துடைத்தழிக்கும் செயற்பாடுகளில் இராணுவம் இறங்கியது. இலங்கையரசாங்கத்தின் பிரச்சாரத்திற்கு மிகவும் தீர்க்கமான பதிலை பிரபாகரன் வழங்கினார். பேச்சுவார்த்தைகளில் இருந்து தாம் வெளிநடப்புச் செய்ததன் காரணத்தை விளக்கி தமிழில் அறிக்கையொன்றினை அவர் வெளியிட்டார். அவரது அறிக்கை வருமாறு. "இலங்கையில் சமாதானத்தைக் கொண்டுவருவதற்காக இதயசுத்தியுடன் முயன்ற இந்தியப் பிரதமர் ரஜீவ் காந்தியின் முயற்சிகளுக்குத் தடையாக இருக்கக் கூடாது எனும் நோக்கத்திற்காக மட்டுமே திம்புப் பேச்சுக்களில் ஈடுபடுவது என்று நாம் முடிவெடுத்தோம். ஆனாலும், அவரின் அந்த முயற்சிகள் வெற்றிபெறப்போவதில்லை என்பதனை நாம் அறிந்தே இருந்தோம். ஏனென்றால், சர்வாதிகாரத்தனமும், அடக்குமுறையும் கொண்ட ஜெயவர்த்தனவின் அரசாங்கம் ஒருபோதுமே சமாதானத்தில் அக்கறை காட்டப்போவதில்லை என்பது எமக்கு நன்கு தெரிந்தே இருந்தது. ஆனாலும், யுத்தநிறுத்தத்தைக் கடைப்பிடித்து பேச்சுவார்த்தைகளில் பங்கெடுப்பது என்று நாம் முடிவெடுத்தோம். தமிழ் மக்கள் மீதான ஜெயவர்த்தன அரசாங்கத்தின் அடக்குமுறையினையும், தமிழ் மக்களின் பிரச்சினைக்கு நீதியானதும் நேர்மையானதுமான தீர்வொன்றினை வழங்குவதில் அவருக்கு இருக்கும் வெறுப்பினையும் உலகிற்கும், இந்தியாவிற்கும் எடுத்துக்காட்டுவதற்கான ஒரு சந்தர்ப்பமாக இப்பேச்சுவார்த்தையினைப் பயன்படுத்துவது என்று நாம் தீர்மானித்தோம். நாம் எதிர்பார்த்தவாறே, தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வாக எந்தவித அடிப்படைகளையும் முன்வைக்க ஜெயவர்த்தன அரசாங்கம் தவறியிருந்தது. விடுதலைப் போராட்ட வீரர்களான எம்மை சமாதானப் பொறிக்குள் வீழ்த்துவதன் மூலம் அடிமைகளாக்குவதே ஜெயவர்த்தனவின் திட்டம். தமிழ்ப் புலிகளான நாங்கள் ஜெயாரின் வலைக்குள் வீழ்ந்திடப்போவதில்லை. தான் ஆடும் சமாதான நாடகத்தின் மூலம் தமிழர்கள் மீது தான் கட்டவிழ்த்து விட்டிருக்கும் இனக்கொலையினை இந்தியாவினதும் சர்வதேசத்தினதும் கவனத்திலிருந்து மறைத்துவிட இலங்கை முயல்கிறது. சிங்கள இனவெறியர்களின் அழிவுத் திட்டத்தை இந்தியா உணர்ந்துகொள்ளுமா என்று நாங்கள் ஆதங்கப்படுகிறோம். முன்னாள் இந்தியப் பிரதமரான இந்திரா காந்தி, ஜெயாரின் கபடத் தனத்தையும், ஏமாற்றல் முயற்சிகளையும் நன்கு அறிந்தே இருந்தார். புதிய பிரதமரான ரஜீவ் காந்தி சமாதானத்தை விரும்புகிறார். தமிழ் மக்களின் நலனில் அவர் தனியான அக்கறை கொண்டுள்ளார். தமிழ் மக்கள் கெளரவமாகவும், பாதுகாப்புடனும் வாழ்வேண்டும் என்று அவர் விரும்புகின்றார். ரஜீவின் விருப்பங்களை தான் ஆதரிப்பதாக இலங்கை அரசாங்கம் பாசாங்கம் செய்கிறது. இந்தியாவிற்கும், தமிழீழ விடுதலை அமைப்புக்களுக்கும் இடையே பகைமையினை உருவாக்க அது முயன்று வருகிறது. இலங்கையின் சூழ்ச்சியை இந்தியா விரைவில் புரிந்துகொள்ளும் என்று நாம் நம்புகிறோம்.  சுதந்திரத் தமிழீழமே எமது ஒற்றை விருப்பாகும். அதனை எவராலும் அசைக்க முடியாது. அவ்விருப்பினை அடைவதற்காக எமது உயிரையும் விலையாகக் கொடுத்துப் போராடி வருகிறோம். தமிழ் ஈழத்தைத் தவிர வேறு எந்தத் தீர்வும் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வாக அமையாது என்று நாம் முழுமையாக நம்புகிறோம். உலகில் ஒடுக்கப்படும் மக்களின் விடுதலைப் போராட்டங்களுக்கு தனது ஆதரவினை வழ‌ங்கிவரும் இந்திய நாடு, தமிழீழ மக்களினது விடுதலைப் போராட்டத்திற்கும் தனது ஆதரவினை வழங்கவேண்டும் என்று நாம் எதிர்பார்க்கிறோம்.  எமது போராட்டத்திற்கு தமது கரங்களை நீட்டி உதவுவதற்கு இந்திய மக்களுக்குச் சற்றுக் காலம் எடுக்கலாம். அதுவரை அதற்கான ஆதரவு வேண்டி நாம் போராடிக்கொண்டிருப்போம்".
    • தந்தை செல்வா முதல் தேசியத் தலைவர் பிரபாகரன் வரை இலங்கைத் தமிழர்களுக்குச் செய்த ஆக்கப்பூர்வமான செயல்களால் ஏற்பட்ட பயன்களை உங்களால் பட்டியலிட முடியுமென்றால், சம்பந்தர்  கூட்டணியால் கிடைக்கப்பெற்ற பலன்களை  என்னாலும் பட்டியலிட முடியும். 
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
      • 0 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.