Jump to content

பொதுத்தேர்தல் வாக்களிப்பு குறித்த மக்களின் மனோநிலை - ஐக்கிய மக்கள் சக்திக்கும் ஜேவிபிக்குமான ஆதரவு தொடர்வதாக கருத்துக்கணிப்பில் தெரிவிப்பு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
03 JUL, 2024 | 03:43 PM
image

பொதுத்தேர்தல் வாக்களிப்பு குறித்து பொதுமக்கள் மத்தியில் காணப்படும் நோக்கங்கள் குறித்த புதிய ஆய்வினை மேற்கொண்டுள்ள ஐஎச்பி நிறுவனம்  Institute for Health Policy’s மக்கள் மத்தியில் ஐக்கிய மக்கள் சக்திக்கும் தேசிய மக்கள் சக்திக்குமான ஆதரவு குறைவடையவில்லை என தெரிவித்துள்ளது.

ஐக்கிய மக்கள் சக்திக்கும் தேசிய மக்கள் சக்திக்கும் 34 வீதமான மக்களின் ஆதரவு காணப்படுவதாக  ஐஎச்பி அமைப்பு தெரிவித்துள்ளது.

ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுனவிற்கு 13 வீதமானவர்களும் ஐக்கிய தேசிய கட்சிக்கு ஆறு வீதம்  இலங்கை தமிழரசுக்கட்சி நான்கு வீதமும் ஆதரவு காணப்படுவதாக ஐஎச்பி தெரிவித்துள்ளது.

மே மாதம் மேற்கொண்ட கருத்துக்கணிப்புகள் மூலம் இது தெரியவந்துள்ளதாக ஐஎச்பி தெரிவித்துள்ளது.

மே மாத மதிப்பீடுகள் மற்றும் நான்கு பிரதான கட்சிகளிற்கும் 1-5 வீத தவறுகளிற்கான சாத்தியங்களுடன் தொடர்புபட்டவை என ஐஎச்பி தெரிவித்துள்ளது.

இந்த மே அறிக்கை ஒக்டோபர் 2021 முதல் இலங்கை முழுவதும் நடத்தப்பட்ட 17751 நேர்காணல்களையும் மே 204 இல் மேற்கொள்ளப்பட்ட 503 நேர்காணால்களையும் அடிப்படையாக கொண்டது என கருத்துக்கணிப்பை மேற்கொண்ட அமைப்பு தெரிவித்துள்ளது.

https://www.virakesari.lk/article/187605

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ஏராளன் said:
ஐக்கிய மக்கள் சக்திக்கும் தேசிய மக்கள் சக்திக்கும் 34 வீதமான மக்களின் ஆதரவு காணப்படுவதாக  ஐஎச்பி அமைப்பு தெரிவித்துள்ளது.

ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுனவிற்கு 13 வீதமானவர்களும் ஐக்கிய தேசிய கட்சிக்கு ஆறு வீதம்  இலங்கை தமிழரசுக்கட்சி நான்கு வீதமும் ஆதரவு காணப்படுவதாக ஐஎச்பி தெரிவித்துள்ளது.

 

ராஜபக்ச குடும்பத்திற்கு 13 வீதம் மட்டுமே ஆதரவு காணப்படுகின்றது என்பது ஆச்சரியம். சிங்கள மக்கள் கடந்த சில வருடங்களில் சரியாகக் கஷ்டப்பட்டு விட்டார்கள் போல...... ஆனால் ஜேவிபிக்கு அவர்கள் காட்டும் 34 வீதமான ஆதரவு சட்டிக்குள் இருந்து நெருப்புக்குள் விழுந்த கதையாக முடிவதற்கும் சாத்தியங்கள் உண்டு.   

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தொழிற்கட்சி ஈழத்தமிழருக்கு ஆற்றிய கைங்கரியங்கள்.. 1. விடுதலைப்புலிகள் மீதான தடை - ரொனி பிளேயர். 2. தமிழர் புனர்வாழ்வுக்கழகம் மீதான தடையும் சொத்துப் பறிப்பும்  3. முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை தொடர்பில் பாராமுகத்துடனாக ஊக்குவிப்பு - ஹோடன் பிரவுன்.  சர்வதேசத்தில்.. 1. ஈராக் மீதான பேரழிவு ஆயுத போலிக் கூச்ச போர் - ரொனி பிளேயர். உள்ளூரில்.. 1. பல அரச நிறுவனங்களை தனியார் மயப்படுத்தியது. 2. கிழக்கு ஐரோப்பியர்களுக்கு பிரித்தானியாவை திறந்து விட்டது. 3. சலுகை அளிப்பு என்ற பெயரில் வரி உயர்வுக்கு வழி சமைத்தது. 4. வீட்டு கடன் சுமையை அதிகரித்தது. 5. மாணவர் கடன் சுமையை அதிகரித்தது. 7. தேசிய சுகாதார சேவைக்குள் தனியார் மயப்படுத்தலை புகுத்தியதும் இன்றி காத்திருப்பு காலம் இவர்கள் காலத்தில் தான் நீடிக்க முடிந்தது. 8. மாலை 5 மணிக்கு பின்னரான வேலை நேர கூடிய ஊதியத்தை மாலை 8 மணி ஆக்கி இல்லாமல் செய்தமை. 9. தொழிலாளர்கள் நலனில் அக்கறையின்மை போக்கை கடைப்பித்ததோடு தேசிய விடுமுறை நாட்களையும் வேலை நாட்கள் ஆக்கியது. இப்படி சொல்லிக்கிட்டே போகலாம். என்ன மக்களுக்கு மறதி அதிகம்.. தேர்வுக்கு ஒரு மாற்றும் இல்லை. பேயை விரட்ட மீண்டும் பிசாசை இழுத்து வந்து கதிரையில் இருத்தி இருக்கினம். விளைவை இன்னும் சில வாரங்களிலேயே காணலாம். 
    • ஓணான்டி    பிரான்ஸ் போல பிரித்தானியாவிலும்.  வெளிநாட்டவர்களுக்கு எதிரான கட்சி வெல்லும் என்றார்   ஆனால் அப்படி ஒன்றும் நடக்கவில்லை போல்லுள்ளது   இது பற்றிய உங்கள் கருத்துகள் என்ன ?? 
    • சுமந்திரன் சம்பந்தனை மட்டுமல்ல... வாக்களித்த மக்களையும் நிர்கதியாய் விட்டவர் தானே. சிங்களத்தோடு வாழ்வது பெருமை என்று அடித்துவிட்ட விண்ணர் அல்லவா. 
    • சம்பந்தன் ரகசியமாகச் செய்து வந்த ஹிந்திய - சிங்கள விசுவாசத்தொழிலை இவரிடம் இன்னும் விரிவாகக் கையளிக்க கூப்பிட்டிருப்பினம். அதில் இவருக்கு மிக அனுபவம் உண்டல்லவா. 
    • சமந்தா பிரபு மேல் இருந்த "மரியாதை" போய் விட்டது எனக்கு😎! அரைவைத்தியர்கள்- quacks என்று அழைக்கப் படும் யாரோ இதைச் சமந்தாவிடம் சொல்லியிருக்கிறார்கள் என நினைக்கிறேன். ஒரு "அரை அவியல்" வைத்தியரின் நுனிப்புல் மேய்ந்த அறிவு அப்படியே தெரிகிறது இந்த செய்தியில்.  உண்மையில் எங்கள் உடலினுள் நடப்பது இது தான்: தொற்று ஏற்படுத்தும் கிருமிகளைக் கொல்ல எங்கள் நோயெதிர்ப்புக் கலங்கள் படையெடுக்கும் போது, அந்தக் கலங்களில் சில ஐதரசன் பேரொக்சைட் , நைட்ரிக் ஒக்சைட் போன்ற கிருமியைக் கொல்லும் நஞ்சுகளை உருவாக்குகின்றன. இந்த நஞ்சுகள் மிகக் குறைந்த அளவில், மிக குறுகிய காலத்திற்கு சுரக்கப் படுவதோடு, அதைச் சுரந்த கலங்களும் அந்த நஞ்சுகளால் இறந்து போகின்றன (ஒரு தற்கொலைத் தாக்குதல் எனலாம்). இதை வாசித்த அரைவைத்தியர் யாரோ, வெளியேயிருந்து ஐதரசன் பேரொக்சைட்டை உடலினுள் செலுத்தினால் என்ன என்று யோசித்திருப்பார் என ஊகிக்கிறேன். 
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
      • 0 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.