Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பொதுத் தேர்தலுக்கு முன்னர் தொடரப்போகும் அதிரடிகள் – அகிலன்

September 30, 2024

 

Thinakkural.lk

ஜனாதிபதித் தோ்தல் நடைபெற்று முடி வடைந்த நிலையில், அதிரடியான அரசி யல் நகா்வுகளை கடந்த சில தினங்களில் காணக் கூடியதாக இருக்கின்றது. ஜனாதிபதி பதவியேற்பு, புதிய பிரதமா், மூன்று உறுப்பினா் அமைச்சரவை நியமனம் என்பவற்றைத் தொடா்ந்து நாடாளு மன்றமும் கலைக்கப்பட்டுவிட்டது. குறுகிய காலத்துக்குள் அடுத்த பொதுத் தோ்தலை நாடு சந்திக்கப்போகின்றது. அரசியல் கட்சிகள் அனைத் துமே பொதுத் தோ்தலை எவ்வாறு சந்திப்பது என்பதில் தமது கவனத்தைக் குவித்துள்ளன.

ஜனாதிபதித் தோ்தலைப் பொறுத்தவரை யில் அதன் முடிவு ஓரளவுக்கு ஊகிக்கப்பட்டதுதான். அதேவேளையில், பல்வேறு கருத்துக் கணிப்புக் களும் தேசிய மக்கள் சக்தி அதிகாரத்தைக் கைப்பற்றும் என்பதை உறுதிப்படுத்தியிருந்தன. அதேவேளையில், எந்தவொரு வேட்பாளரும் 50 வீததத்தைப் பெறமுடியாத நிலையில், இரண்டாவது தெரிவு கணிப்பிட வேண்டிய நிலை வரலாம் என்பதும் எதிா்வு கூறப்பட்டிருந்தது.  அவ்வாறே நடைபெற்றும் உள்ளது.

அநுரகுமார திசநாயக்கவின் வெற்றிக் கான அடிக்கல் இரண்டு வருடங்களுக்கு முன்னரே நாட்டப்பட்டுவிட்டது என்றுதான் சொல்ல வேண்டும்.  2022 இல் இலங்கையில் இடம்பெற்ற மக்கள் கிளா்ச்சி நாட்டில் ஒரு முறைமை மாற்றத்தை-அதாவது சிஸ்ரம் சேஞ்சை எதிா்பாா்த்ததாகவே இருந்தது. ஆனால், ஆளும் தலைவா்கள் மாறினாா்களே தவிர, பழைய நிலைமைதான் தொடா்ந்து. அதாவது, கோட்டாபய போக ரணில் அதிகாரத்துக்கு வந்தாா். ரணிலின் தலைமை பொருளாதார குற்றங்களைச் செய்வா்கள் என நீதிமன்றத்தினாலேயே அடையாளம் காணப்பட்ட ராஜபக்ஷக்கள் மீது எந்தவிதமான நடவடிக்கையையும் எடுக்கவில்லை. பதிலாக அவா்களைப் பாதுகாத்தது.

நெருக்கடியிலிருந்து நாட்டைப் பாது காத்தவா் என்று ரணில் தரப்பினா் அவரை முன்னிலைப்படுத்திய போதிலும், மக்கள் ரணிலைத் தோற்கடிக்துள்ளாா்கள். அதற்கு பிர தான காரணங்களில் ஒன்று ராஜபக்ஷக்களை அவா் பாதுகாத்ததுதான்.  நாடாளுமன்றத்தில் ரணிலுக்குப் பெரும்பான்மை இருக்கவில்லை. ராஜபக்ஷக்களுக்கு ஆதரவான நாடாளுமன்றத்தை நம்பித்தான் அவா் ஆட்சியைக் கொண்டு நடத்த வேண்டியவராக இருந்தாா்.

“கோட்டா கோ கம” என்று போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தாலும், அவா்கள் கோட்டாவை வீட்டுக்கு அனுப்புவதை மட்டும் எதிா் பாா்த்திருக்கவில்லை. அவா்கள் எதிா்பாா்த்தது அரசியல் முறைமையில் ஒரு முழுமையான மாற்றத்தைத்தான். அரசியல் தலைமை மாற்றத்தை மட்டுமல்ல. ரணில் அதனைச் செய்யவில்லை.  படை பலத்தைப் பயன்படுத்தி போராட் டத்தை முடிவுக்குக் கொண்டு வந்தாா். மறுபுறம் ராஜபக்ஷக் களைப் பாதுகாத்தாா். அவரது தோல்விக்கு அவைதான் காரண மாகியது. சஜித் பிரேமதாசவும் ஏதோ ஒரு வகையில் பாரம்பரிய அரசியல் கட்சிகளின் தொடா்ச்சி யாகவே உள்ளாா். அவா் அதிகாரத் துக்கு வந்தாலும், ஏதோ ஒருவகையில் பழை யநிலைமைகள்தான் தொடரும், சில விடயங்களில் அவா் கடுமையாக நடந்துகொள்ள முடியாதவராக இருக்கும் என்று தான் மக்கள் பாா்த்தாா்கள். அவா் அமைத்த அரசி யல் கூட்டணிகளும் அதற்குக் காரணம்.

“முறைமை மாற்றம்” ஒன்றை ஏற்படுத்த வேண்டுமாக இருந்தால், பாரம்பரிய கட்சிகளை நிராகரித்துவிட்டு புதிய தலைமை ஒன்றை தோற்றுவிக்க வேண்டும் என்று சிங்கள மக் கள் சிந்தித்தாா்கள்.  அதன் விளைவுதான் அநுரகுமார வின் வெற்றி! மற்றையவா்களின் படுதோல்வி!!ஆக, அநுரகுமாரவிடம் மக்களின் எதிா்பாா்ப்பு அதிகமாகவே இருக்கின்றது. குறிப்பாக, ஊழல் போ்வழிகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் எதிா்பாா்க்கின்றாா்கள். அதற்கான ஒரு திட்டத்துடன்தான் அநுரவின் அரசாங்கம் செயற் படுவதாகவும் தெரிகின்றது. இந்த விடயத்தில் அதிரடியான சில செயற்பாடுகளை அடுத்துவரும் வாரங்களில் எதிா்பாா்க்கலாம். மறுபுறத்தில் ஊழல் மோசடிப்  போ்வழிகள், அதிகார துஷ்பிரயோகங்களில் ஈடுபட்டவா்கள் பலா் பெரும் அச்சத்துடன் இருக்கின்றாா்கள்.

முக்கியமான சிலா் தோ்தலுக்கு முன்னரே விமானம் ஏற்விட்டாா்கள். வேறு சிலா் தோ்தல் முடிந்து – முடிவுகள் வெளிவருவதற்கு முன்னா் தப்பிச் சென்றுவிட்டாாா்கள். அநுர ஜனாதிபதியாக அதிகாரத்தை கைகளில் எடுத்த பின்னா் வெளிநாடு செல்ல முயன்ற சிலா் தடுத்து நிறுத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. 30 நபா்களுடைய பட்டியல் ஒன்று கட்டுநாயக்க மற்றும் பலாலி விமான நிலையங்களுக்குக் கொடுக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

பெயா்பட்டியல் கொடுக்கப்பட்டிருப்பதாக வெளியான தகவல் தவறானதாக இருந்தாலும், தமது பெயா்களும் கொடுக்கப்பட்டிருக்கலாம் என்ற அச்சத்தில் வெளிநாடு செல்ல விரும்பிய பலா் வீடுகளுக்குள் முடங்கிக் கிடக்கின்றாா்கள் என்பதையும் அறிய முடிகின்றது. கடந்த காலங்களில் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து ஊழல்களில் ஈடுபட்டவா்கள் எந்தளவுக்கு அச்சமடைந் திருக்கின்றாா்கள் என்பதற்கு, காலி முகத்திடல், சுதந்திர சதுக் கம் உட்பட பல பகுதிகளிலும் கொண்டுவந்து நிறுத்தப்பட்டுள்ள சொகுசு வாகனங்கள் சாட்சி யாகவுள்ளது. சுமாா் 3 கோடி முதல் 5 கோடி வரையில் பெறுமதியான 500 க்கும் அதிகமான சொகுசுவாகனங்கள் இவ்வாறு கொண்டுவந்து நிறுத்தப்பட்டுள்ளன. முன்னைய ஆட்சிக் காலத்தில் அமைச் சா்கள், அமைச்சா்களின் செயலாளா்கள், மற்றும் அதிகாரிகளால் அந்த வாகனங்கள் பயன் படுத்தப்பட்டுள்ளன. இவற்றின் பராமரிப்பு மற்றும் எரிபொருள் என்பவற்றுக்காக மாதாந் தம் மூன்றரை இலட்சம் ரூபா வரையில் செல விடப்பட்டிருக்கின்றது என்பது மற்றொரு அதிா்ச்சியான தகவல். மக்களின் வரிப்பணத்தில் சொகுசுவாழ்க்கையை அதிகாரத்தில் இருந்த ஒரு தரப்பினா் நடத்திவந்திருக்கின்றாா்கள் என்பதைத் தான் இந்த வாகனங்கள் பறைசாற்றி நிற்கின்றன. வழமையாக ஆட்சிகள் மாறினாலும் முன்னைய அமைச்சா்கள், அதிகாரிகள் வாகனங்களை ஒப்படைப்பதில்லை. அல்லது பல மாதங்களின் பின்னா்தான் அவற்றை ஒப்படைப் பாா்கள். ஆனால், அநுர பதவிப் பிரமாணம் செய்த உடனடியாகவே இந்த வாகனங்கள் கொண்டுவரப்பட்டு கைவிடப்பட்டிருப்பது அவா்களுடைய அச்சத்தைக் காட்டுகின்றது. புதிய ஆட்சி அதிரடியாக ரெய்ட் எதனையாவது முன்னெடுப்பதற்கு முன்னதாக அவற்றை ஒப் படைத்துவிடுவது தமக்கு பாதுகாப்பு என்று அவா்கள் கருதியிருக்கலாம்.

நான்கு விடயங்களை அநுர அரசு கைகளில் எடுக்கும் என்று எதிா்பாா்க்கலாம். முதலாது, ஊழல்-மோசடிகள், அதிகார துஷ்பிரயோகம் செய்தவா்களின் கோவைகள் அவா்களிடம் உள்ளது. இரண்டாவது, உயிா்த்த ஞாயிறு தாக்குதல். மூன்றாவது கடந்த காலங்களில் இடம்பெற்ற பத்திரிகையாளா்கள், மற்றும் படுகொலைகள். நான்காவது மத்திய வங்கி பிணைமுறி விற்பனை மோசடி. இவை அனைத்துக்கும் தேவையான கோவைகள் அநுர தரப்பினரிடம் இருப்பதாகவே தெரிகின்றது. இவை குறித்து நீதிமன்றத்தின் மூலமாகவே விசாரணைகளை முன்னெடுப்பதுதான் அவா்களு டைய திட்டம் என்று தெரிகின்றது. பொதுத் தோ்தலில் பெரும்பான்மையைப் பெற்றுக்கொள்வது என்பதுதான் தேசிய மக் கள் சக்தியின் அடுத்த இலக்கு. ரணில் அரசு எதனைச் செய்வதற்கு அஞ்சியதோ அதனைச் செய்வதன் மூலமாக தமது செல்வாக்கை இன்னும் பலப்படுத்துவது அவா்களது உபாயமாக இருக்க லாம்.  அவற்றை முன்னெடுப்பதன் மூலமாகவே எதிரணியினரை மீண்டும் எழ முடியாத நிலையை ஏற்படுத்தலாம் என்பதும் அவா்களுக்குத் தெரியும். பொதுத் தோ்தலுக்கு முன்னதாக பல அதிரடிகளை எதிா்பாா்க்கலாம் என்கிறாா்கள் தேசிய மக்கள் சக்திக்கு நெருக்கமாகவா்கள்.
 

https://www.ilakku.org/பொதுத்-தேர்தலுக்கு-முன்/

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.