Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அதிகாரப் பகிர்வும் தோழர் அநுரவும்

ஒஸ்ரின் பெர்னாண்டோ

(முன்னாள் ஜனாதிபதியின் செயலாளர்)

ஏறக்குறைய பத்து மாதங்களுக்கு முன்னர், அதிகாரப் பகிர்வு தொடர்பில் நான் அப்போது பாராளுமன்ற உறுப்பினராக இருந்த அநுரகுமார திஸாநாயக்கவுடன் உத்தியோகப்பற்றற்ற முறையில் கலந்துரையாடினேன். அப்போது அதிகாரப் பகிர்வு தொடர்பாக எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்பது பற்றி கணிப்பிடப்பட்ட அவரது குறைந்தளவில்  முன்னுரிமை கொடுக்கும் அணுகுமுறையின் விளைவுகள், வடக்கு மற்றும் கிழக்கில் ஜனாதிபதித் தேர்தல் முடிவுகளில் பிரதிபலித்தன. அங்கு அவருக்கு மக்கள் ஆதரவு குறைந்ததற்கு வேறு காரணங்களும் இருக்கலாம். தற்போது அவர் 2 கோடி 0 இலட்சம் இலங்கையர்களின் ஜனாதிபதியாக இருப்பதால் வடக்கு மற்றும் கிழக்கின் ஜனாதிபதி தேர்தல் முடிவுகளை வழிகாட்டியாக கருத வேண்டும். அநேகமாக, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுப்ரமணியம் ஜெய்சங்கர் ஏற்கனவே அவருக்கு அதை நினைவூட்டியிருக்கலாம்.

மாற்றமடையும் இலங்கை அரசியல்வாதிகளின் மனநிலை

அதிகாரப் பகிர்வு தொடர்பான இலங்கை அரசியல்வாதிகளின் கொள்கைகள் முரண்பாடுகளால் வகைப்படுத்தப்படுகின்றன. முன்னாள் அமைச்சர்களான பசில் ராஜபக்ச மற்றும் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் ஆகியோர் 13 வது திருத்தச் சட்டத்தை (13ஏ) அமுல்படுத்துவதாக இந்தியர்களுக்கு உறுதியளித்தனர். காணி மற்றும் பொலிஸ் அதிகாரப் பகிர்வை நாமல் ராஜபக்ச நிராகரித்த போதிலும்,அவை உட்பட  “13+” ஐ ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச உறுதியளித்தார். டில்லியில், ஜனாதிபதி கோத்தாபய  ராஜபக்ச  “பெரும்பான்மை (சிங்கள) சமூகத்தின் விருப்பம் மற்றும் உணர்வுகளுக்கு எதிராக 13ஆவது திருத்தத்தை  நடைமுறைப்படுத்த முடியாது” என்றார். ஆனால், 13ஆவது திருத்தம் ஒருங்கிணைந்த பகுதியாகவிருக்கும் அரசியலமைப்பை நிலைநிறுத்தி பாதுகாப்பாரென ஆணித்தரமாக அறிவித்திருந்தார்! இங்கு அதிகாரப்பகிர்வு குறித்த இந்திய அரசியல் தலைவர்களின் கொள்கை நிலையானதாகவே உள்ளது.

05 டிசம்பர் 2002 இல் ஒஸ்லோ சமாதானப் பேச்சுக்களின் போது, ஜி.எல். பீரிஸ் தலைமையிலான இலங்கைப் பிரதிநிதிகளும், அன்டன் பாலசிங்கம் தலைமையிலான விடுதலைப்புலிகளின் தூதுக்குழுவும் “ஒன்றுபட்ட இலங்கைக்குள் ஒரு சமஷ்டிக் கட்டமைப்பின் அடிப்படையில் தமிழ் பேசும் மக்களின்  வரலாற்றுபூர்வ வாழ்விடப்  பகுதிகளில் உள்ளக சுயநிர்ணயக் கோட்பாட்டின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட தீர்வை ஆராய ஒப்புக்கொண்டதை நாங்கள் வசதியாக மறந்துவிட்டோம். .”

“சமஷ்டி ,” “வரலாற்றுபூர்வ  வாழ்விடப் பகுதிகள்” மற்றும் “உள்ளக  சுயநிர்ணய உரிமை”என்பன தென்னிலங்கை அரசியல்வாதிகள் பலருக்கு வெறுப்பாக இருந்ததுடன், வெறுப்பு மற்றும் பொதுமக்களால் புரிந்து கொள்ளப்படவில்லை. இன்று ரணில் விக்கிரமசிங்கவும் பீரிஸும் ஒஸ்லோ பிரகடனத்தில் இருந்து நிச்சயமாக விலகியிருப்பார்கள் .

13 ஆவது திருத்தம் மற்றும் துணைச் சட்டங்களை நிறைவேற்றுவதற்கு ஆதரவளித்த விக்கிரமசிங்க  பிரதமராக இருந்தார்.

ஒஸ்லோ பிரகடனம் செய்யப்பட்டபோது பிரதமராக இருந்தார்.ஆனால் இப்போது அவர் பொலிஸ் அதிகாரங்களை மாகாண சபைகளுக்கு பகிர்ந்தளிக்க விரும்பவில்லை. கோத்தாபய ராஜபக்ச இந்தியர்களுக்கு “13ஆவது திருத்தத்தின்   பலவீனங்களையும் பலங்களையும் பார்க்க வேண்டியது அவசியம்” என்று அறிவித்தார். 2019 இல் அனுபவமற்ற ஜனாதிபதியாக அவர் அவ்வாறு கூறியிருந்தால், அது பொறுத்துக் கொள்ளக் கூடியதாக இருந்திருக்கும்.ஆனால் அவர் 22 மாதங்கள் பதவியில் இருந்த பிறகு அவ்வாறு கூறினார். இது அவரது பங்கில் உள்ள நிர்வாக முறைமைகள்  பற்றிய அறிவின் பற்றாக்குறையை அல்லது அவர் இரகசிய  திட்டங்களை வைத்திருந்ததை பிரதிபலிக்கிறது.

13ஆவது திருத்தத்தின் பரிணாமம்

இந்தப் பின்னணியில், 13 ஆவது திருத்தத்தின் பரிணாமத்தைப் பிரதிபலிப்பது, அதிகாரப் பகிர்வு என்ற பெயரில் கோரப்பட்டதற்கு எதிராக மதிப்பிடுவது பொருத்தமானது.

கறுப்பு ஜூலை (1983) மற்றும் ஆயுதப் போரின் ஆரம்பத்தை தொடர்ந்து இலங்கையானது அதிகாரத்தைப் பகிர்வதற்கான அழுத்தத்திற்கு உள்ளானது. அதிகாரப்பகிர்வு மூலம் இலங்கையைப் பிரிக்க இந்தியர்கள் விரும்பினார்கள் என்ற வாதம் உண்மையல்ல. மிசோரம், நாகலாந்து போன்றவற்றில் ஏற்பட்ட மோதல்களின் காரணமாக இந்தியா எப்போதும் எமது இறைமை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டிற்கு மதிப்பளித்து வருகிறது.

01 மார்ச் 1985 அன்று, ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்த்தன இந்தியாவில் இருந்து ஆயுதமேந்திய பயங்கரவாதிகள் மற்றும் இந்தியாவில் தஞ்சம் புகுந்த இலங்கையர்களின் நடமாட்டத்தை தடுக்க இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தியின் தலையீட்டை தனிப்பட்ட முறையில் கோரினார். 01 டிசம்பர் 1985 அன்று, தமிழர் விடுதலைக் கூட்டணி  (ரி.யூ.எல்.எவ் ) அதிகாரப் பகிர்வு தொடர்பாக  இலங்கைக்கு அழுத்தம் கொடுக்கும் முயற்சியில் அதிகாரப் பகிர்வுக்கான தனது யோசனைகளை காந்தியிடம் முன்வைத்தது.

அந்த யோசனைகளின் முக்கிய அம்சங்கள் பின்வருமாறு:

• இலங்கை—”இலங்கை” என்பது மாநிலங்களின் ஒன்றியம்,

• வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை ஒன்றிணைத்து, ஒரு ‘தமிழ் மொழிவாரி மாநிலம்’, அவர்களின் அனுமதியின்றி அதனை  மாற்ற முடியாது.

• பாதுகாப்பு, வெளியுறவு, நாணயம், பதவிகள் / தொலைத்தொடர்பு, குடிவரவு/குடியேற்றம், வெளிநாட்டு வர்த்தகம்/வணிகம், இரயில் போக்குவரத்து  விமான நிலையங்கள்/விமானப் போக்குவரத்து, ஒளிபரப்பு/தொலைக்காட்சி, சுங்கம், தேர்தல்கள்  மற்றும் மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆகிய விவகாரங்களுக்கு “பட்டியல 1″” இன் கீழ் இன விகிதாசாரத்தை பிரதிபலிக்கும் வகையில் சட்டத்தை தயாரிக்க பாராளுமன்றத்திற்கு அதிகாரம் அளிக்கப்படும்.
• பட்டியல் 2”, சட்டம் மற்றும் ஒழுங்கு, நிலம் போன்றவற்றை உள்ளடக்கிய ஏனைய அனைத்துப் விடயதானங்களையும்  கொண்டிருந்தது, மாநில சபைக்கு சட்டம் இயற்றும் அதிகாரங்கள் உள்ளன,

•  1981 நவம்பர் 1, இல்இலங்கையில் வசிக்கும் எந்தவொரு நபரும்  ஒரு வெளிநாட்டவராக இருக்கக்கூடாது  இலங்கை  குடிமகனாக இருக்கவேண்டும் , • எந்தவொரு “தேசியத்தையும்” பாதிக்கும் எந்தவொரு தீர்மானமும் அல்லது சட்டமூலமும் அந்த “தேசியத்தின்” உடன்பாடு இல்லாமல் பாராளுமன்றத்தால் நிறைவேற்றப்படக்கூடாது (‘தேசியம்’ என்ற சொல் தவறாக வழிநடத்தப்படுகிறது.)

• வரிகள், தீர்வை /கட்டணம், மற்றும் கடன்கள்/மானியங்களைத் திரட்ட மாநில சட்டசபைக்கு  அதிகாரம் வழங்கப்பட வேண்டும்.

• இந்திய தமிழர்களுக்கான விசேட ஏற்பாடுகள்,

• தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களுக்கு மேம்பட்ட அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும்,

• நீதித்துறை முறைமையை  மேம்படுத்துதல், உதாரணமாக  மேன் முறையீட்டு நீதிமன்றம்  மாகாண மேல் நீதிமன்றம், மற்றும்,

• முஸ்லிம் உரிமைகள் கவனிக்கப்பட வேண்டும்.

ஜெயவர்த்தன அரசாங்கம் பிரேரணையை நிராகரித்தது.தமிழர் விடுதலை கூட்டணி  மீண்டும் காந்திக்கு எழுதியது (17-1-1986), ‘பாரம்பரிய தாயகம்,’ குடிப்பரம்பல் ஏற்றத்தாழ்வு போன்ற மிகவும் முக்கியமான பிரச்சினைகள் அதில்   உள்ளடக்கப்பட்டிருந்தது. ஜெயவர்த்தன உறுதியுடன் இராணுவத் தீர்வை ஆதரித்தார் போரை “இனப்படுகொலை” என்று முன்னாள் இந்திய அமைச்சர் பி.ஆர். பகத் மற்றும் பல மக்களவை உறுப்பினர்கள் குறிப்பிட்டனர். பிந்தையவர்கள், ‘இலங்கையை 24 மணி நேரத்தில் நசுக்குவது” போன்ற தலையீடுகளை கோரினர்  (ஸ்ரீ குழந்தைவேலு 29-4-1985), மற்றும் ஸ்ரீ கோபாலசுவாமி 13-5-1985 போன்றவர்கள்  இந்தியாவை “இராணுவத் தலையீடுகள் உட்பட சாத்தியமான எல்லா வழிகளையும் மேற்கொள்ள வேண்டும்” என்று கேட்டுக் கொண்டனர்.

09 ஜூலை 1986 இல் இலங்கை அரசியலமைப்பு அடிப்படைகளுக்கு  பொருத்தமான விதத்தில் அமைச்சர் ப.சிதம்பரத்துடன் கலந்தாலோசித்த பின்னர் தயாரிக்கப்பட்ட இலங்கை முன்மொழிவுகளில் காந்தி திருப்தி அடைந்திருப்பார். மாகாண சபைகள், சட்டம் ஒழுங்கு, மற்றும் மகாவலி திட்டத்தின் கீழ் காணி அபகரிப்பு உள்ளிட்ட காணி குடியேற்றங்கள் குறித்த முன்மொழிவுகளில் ‘குறிப்புகள்’ இணைக்கப்பட்டு, இன அடிப்படையில் ஒதுக்கப்பட்டவர்கள் அடையாளம் காணப்பட்டனர். 1986,செப்டம்பர் 30 அன்று,

தமிழர் விடுதலை கூட்டணியானது அரசாங்கத்தின் முன்மொழிவுகள்  குறித்து விரிவாக இந்தியாவிற்கு பதிலளித்தது, மேலும் முன்மொழிவுகளைச் சேர்த்திருந்தது .

மக்களவையின் [லோகசபை]  கோரிக்கைகளை காந்தி கவனத்தில் கொண்டார். மக்களவையிலும் வெளிநாட்டிலும் (உதாரணமாக ஹராரேயில் ) விரக்தியை வெளிப்படுத்தினார். அவரையும் இந்தியாவையும் பலவீனமாக முன்னிறுத்துவதற்கான முயற்சிகள் அவரைக் கோபப்படுத்தியது மற்றும் அவரை கடினமாக்கியது. 02 ஜூன் 1987 இல், அவர் ‘மனிதாபிமான உதவியுடன்’  கப்பல்களை   அனுப்புவதாக அச்சுறுத்தினார், மேலும் 04 ஜூன் 1987 அன்று இந்திய விமானம் இலங்கையின் வான்வெளியை மீறி வடக்கில் உதவிவழங்கும்நடவடிக்கைகளை  மேற்கொண்டது. இந்த அப்பட்டமான அத்துமீறலில் எந்த வல்லரசும் எங்களுடன் நிற்கவில்லை. ஜெயவர்த்தன  ஒரு உடன்படிக்கையில் கையொப்பமிட ஒப்புக்கொண்டார் மற்றும் 13 ஆவது திருத்தத்தை அறிமுகப்படுத்தியதில் ஆச்சரியமில்லை.

ஒப்பந்தம் கையெழுத்தான பிறகு, இந்திய அமைதி காக்கும் படை (ஐ பி கே எவ் ) இலங்கையில் நிறுத்தப்பட்டது.

லெப்டினன்ட் ஜெனரல் ஏ.எஸ்.கல்கட், நிதின் கோக்லேவுக்கு அளித்த பேட்டியில், இந்திய ராணுவத்தை இங்கு நிறுத்தியது தவறு என்று ஒப்புக்கொண்டுள்ளார். ஜெய்சங்கர் (ஐ பி கேஎவ்  – 1988-1990-ன் ஒரு முறை அரசியல் ஆலோசகர்), இது ஒரு ‘தவறான செயல்’ என்று கூறியுள்ளார்.மேலும் பல, கல்கட் மற்றும் ஜெய்சங்கருக்கு நன்கு தெரியும். முக்கியமாக ஐ பி கே எவ்  செயற்பாடுகள் அச்சத்தை ஏற்படுத்தியது, குறிப்பாக தமிழ் மக்களின் மனதில் சாத்தியமான தீர்வைத் தேடும் நிலையை ஏற்படுத்தியது.

அதே நேரத்தில், அப்போதைய இந்திய வெளியுறவுச் செயலர் ஏ.பி. வெங்கடேஸ்வரன் விளக்கியபடி, ஜெயவர்த்தன  காந்தியை 1986 நவம்பர் நடுப்பகுதியில் பெங்களூரில் சந்தித்தார், அமைச்சர்கள் நட்வர் சிங், சிதம்பரம் மற்றும் தானும், ஜெயவர்த்தனவும் காந்தியிடம் அரசாங்கம் வீழ்வதை தடுக்க இந்திய இராணுவத்தை அனுப்புமாறு ‘மன்றாடி வேண்டுகோள் விடுத்ததாக ‘ கூறப்படுகிறது. தெற்கில் ஜே.வி.பி மற்றும் வடக்கில் புலிகளின் தாக்குதல்கள் காரணமாக அவரது அரசாங்கம் வீழ்ச்சியடையாமல் தடுக்கவே படைகளை அனுப்புமாறு கோரியதாக கூறப்படுகிறது. அவரது கடும்  விரக்தியே ஜெயவர்த்தனவை உடன்படிக்கை மற்றும் 13 ஆவது திருத்தத்தை தேர்ந்தெடுக்கத் தூண்டியது. இந்தக் சந்திப்பிற்கு பிறகு காந்தி சிதம்பரத்தையும், நட்வர் சிங்கையும் கொழும்புக்கு அனுப்பினார்.

1986 டிசம்பர் 19, அன்று, அவர்கள் “வெளிவந்த” முன்மொழிவுகளை சமர்ப்பித்தனர். முக்கிய விடயங்கள்  வருமாறு:

*  சிங்கள பெரும்பான்மை அம்பாறைத் தொகுதியை நீக்கியதாக கிழக்கு மாகாணம் மீள எல்லை வகுக்கப்படவேண்டும் .

* புதிய கிழக்கு மாகாணத்திற்கு ஒரு மாகாணசபை நிறுவப்பட இருந்தது.

* வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கு நிறுவன ரீதியான இணைப்புகள் குறித்து முன்னதாக விவாதிக்கப்பட்டது.

இரண்டாவது கட்ட அரசியலமைப்பு மேம்பாட்டின் பின்னர்  கீழ் பின்னர் ஒன்றிணைக்க எண்ணம் இருந்திருக்கும்.

* குறிப்பிட்ட காலத்திற்கு துணை ஜனாதிபதி பதவியை உருவாக்க இலங்கை தயாராக இருந்தது.

* பரஸ்பர அக்கறையுள்ள விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த ஐந்து முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களும் இந்தியாவிற்கு அழைக்கப்படலாம்.

மேற்குறிப்பிட்ட கோரிக்கைகள், பெரும்பான்மை சமூகத்தின் விருப்பத்திற்கு ஏற்றவாறு, தமிழர்களின் நலன்களை இந்தியா எவ்வாறு பொருத்த முயற்சித்தது என்பதைக் காட்டுகிறது.இராணுவ நடவடிக்கைகள் தொடர்ந்து இந்தியாவைத் தூண்டிக்கொண்டே இருந்தன. கொழும்பு அரசியல் தீர்வைத் முன்னெடுக்காவிட்டால், அதன் தலையீட்டுக்கான  வகிபாகத்தை கைவிடுவதாக அது 09 பெப்ரவரி 1987 அன்று அச்சுறுத்தியது. ஜெயவர்த்தன 1987 பெப்ரவரி 12 இல் பதிலளித்தார். இராணுவ நடவடிக்கைகளை அமைதிப்படுத்தவும், பேச்சுவார்த்தை மற்றும் நிர்வாகத்தை ஊக்குவித்தல் மற்றும் காவலில் உள்ளவர்களை விடுவிக்க வழிவகை செய்வதாக  பதிலளித்திருந்தார் . இவ்வாறுதான் தவறாக   இந்தியாவுக்கு  விசனமூட்டப்பட்டபொது அது பிரதிபலிப்பை  வெளிப்படுத்தியிருந்தது  .

அடுத்தடுத்த அரசாங்கங்களின் கீழ், அதிகாரங்கள் திரும்பப் பெறப்பட்டதால் மாகாண சபைகள்  பலவீனமடைந்தன மற்றும் ஒத்துழைப்பு இல்லாமல் இருந்தன. இது ஜெய்சங்கரை ஜனாதிபதி திசாநாயக்கவிடம் பேசுவதற்கு வழிவகுத்திருக்கலாம், அவருடைய கட்சி 13 ஆவது  திருத்தத்துக்கு எதிரானதென கருதப்படுகிறது. அண்மையில் அமெரிக்கத் தூதுவர் ஜூலி சுங்கின் தலையீட்டைக் கோரிய தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களின் கருத்து இதுவாகும். அதிகாரப்பகிர்வில் காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்கள் உள்ளடக்கப்படாது என்ற தேசிய மக்கள் சக்தியின் பகிரங்க அறிக்கையின் மூலம் மாகாண சபைகள்  மீதான இத்தகைய வெறுப்பை வெற்றி கொள்வது கடினம். 13 ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்தப்பட வேண்டும் என்ற ஜெய்சங்கரின் கோரிக்கை இதற்கு  மிகவும் நெருக்கமாக உள்ளது.

1986 நினைவு  மீட்பு

பாரதீய ஜனதா கட்சியின்  பிரமுகர், ஜஸ்வந்த் சிங், 13 மே 1986 அன்று, இலங்கை நிலைவரத்தின் அடிப்படையில் மக்களவையில் ஏழு கேள்விகளை முன்வைத்தார். அவை இன்றும் பொருத்தமானவை.

* அதிகாரப்பகிர்வு மற்றும் அதிகாரப் பிரதிநிதித்துவம் பற்றிய விவாதத்தில் இந்திய நிலைப்பாடு என்ன?

* வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் இணைப்பில் இந்தியாவும் இலங்கையும் எங்கே நிற்கின்றன?

*  நிலப் பயன்பாடு குறித்த இந்திய அரசு, இலங்கை அரசு மற்றும் தமிழ் குழுக்களின் நிலைப்பாடு என்ன?

* மொழியின் அந்தஸ்து  என்ன?

* சட்டம் மற்றும் ஒழுங்கு குறித்த நிலைப்பாடு என்ன?

* தீர்வை எட்டுவதற்கான கால வரையறை  என்ன?

* இலங்கைப் பிரச்சினைகளின் பின்னணியில் வெளிவரும் வெளிநாட்டு அச்சுறுத்தல்கள் குறித்து இந்திய அரசின் நிலைப்பாடு என்ன?

ஜஸ்வந்த் சிங் இன்று உயிருடன் இருந்திருந்தால், அவர் முக்கியமான மக்களவை உறுப்பினர்களுடன் சேர்ந்து கொள்வார் அல்லது ஒப்பந்தம் ஏன் அமுல்படுத்தப்படவில்லை என்று பிரதமர் மோடி மற்றும் ஜெய்சங்கரிடம் கேள்வி எழுப்புவார். ஜனாதிபதி திஸாநாயக்கவிற்கு ஜெய்சங்கரின் நினைவூட்டல் பின்வரும் விடயங்களிலிருந்தான அவரது விரக்தியின் காரணமாக இருந்திருக்கும்:

*  பகுதியளவு அமுலாக்கம் மற்றும் தாமதமான தேர்தல்களா 13ஆவது திருத்தம் “முடங்கி” உள்ளது.

* வடக்கு மற்றும் கிழக்கு  சட்ட ரீதியாக பிரிக்கப்பட்டமை

* காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்களை பகிர்ந்தளிப்பதில் தாமதம்

* அரசியலமைப்பு உத்தரவாதங்கள் இருந்தும் மொழிப் பிரச்சினை முழுமையாகத் தீர்க்கப்படவில்லை

* 2009ல் புலிகளை நசுக்கிய பிறகும், தீர்வுக்கான காலவரையறை இல்லாதது, மற்றும்,

* இந்தியாவுக்கு, குறிப்பாக சீனாவிலிருந்து அதிகரித்து வரும் அச்சுறுத்தல்.

இதற்கு சமாந்தரமாக கள நிலவரங்கள் மாறிவிட்டன. இராணுவ நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டுள்ளன. மக்களின் கவனம் மோதலில் இருந்து மனித உரிமைகள் மற்றும் மனிதாபிமான அக்கறைகள், திரும்பும் அகதிகள் மற்றும் நல்லிணக்கம் ஆகியவற்றிற்கு மாற்றப்பட்டுள்ளது. 2009 மற்றும் 2015 இல் முறையே மகிந்த ராஜபக்ச மற்றும் விக்கிரமசிங்க ஆகியோரால் ஐ. நா. மனித உரிமைகள் பேரவையின் தீர்மானங்களில் இணைக்கப்பட்டதன் காரணமாக 13ஆவது திருத்தம்  சர்வதேசமயமாக்கப்பட்டது. புலம்பெயர் குழுக்களின் தீவிர பரப்புரைகளும் இந்த நிலைமைக்கு பங்களித்துள்ளன. இவை ஜனாதிபதி திஸாநாயக்கவின் முன் உள்ள அச்சுறுத்தும் சவால்களாகும். 13ஆவது திருத்தம் அவற்றில் ஒன்று மட்டுமே.

என்ன நடைபெறும்  ?

மேலே பார்த்தபடி, 13 ஆவது திருத்தம்  உள்நாட்டிலோ அல்லது இந்தியாவிலோ ஏற்றுக்கொள்ளப்பட வேண்டிய கடினமான பாதையைத் தாண்டியுள்ளது. பாராளுமன்ற உறுப்பினர்கள் ராஜினாமா செய்தனர், எதிர்க்கட்சி அரசியல்வாதிகள் மற்றும் பிக்குகள் இதற்கு எதிராக வீதிகளில் ஆர்ப்பாட்டம் செய்தனர் மற்றும் வன்முறையை அனுபவித்தனர். நிராகரிக்கப்பட்ட முன்மொழிவுகள் ஏற்றுக்கொள்ளப்பட்டிருந்தால், விளைவுகள் பேரழிவை ஏற்படுத்தியிருக்கும். எனினும், அதிகாரப்பகிர்வு நிலைத்து நிற்கிறது மேலும் இது ஒரு ‘இந்தியாவின்  தயாரிப்பு ’ தீர்வாக பார்க்கப்படுகிறது.

அதிகாரப்பகிர்வு தொடர்பாக சம்பந்தப்பட்ட தரப்பினருடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு ஜனாதிபதி திஸாநாயக்க தயாராக இருக்க வேண்டும்.எனவே அதிகாரப்பகிர்வு தொடர்பான இந்தியாவின் அனுபவத்தை ஆய்வு செய்ய வேண்டும். உதாரணமாக, காணி அதிகாரங்களைப் பகிர்ந்தளிப்பதில், இந்திய அரசாங்கம் ஜம்மு காஷ்மீர் விதிகளை மாற்றியமைத்தது, அபிவிருத்தி/முதலீட்டை ஈர்ப்பதற்காக இந்தியர்களுக்கு நிலங்களை விடுவிப்பதற்கு மத்திய அரசு அனுமதித்தது என்பதை திஸாநாயக்க குறிப்பிடலாம். ஜம்மு காஷ்மீரில் குடியுரிமை பெறாதவர்கள் கூட அசையாச் சொத்துக்களை வைத்திருக்கவும் விவசாய நிலங்களை விவசாயம் அல்லாத நோக்கங்களுக்காக மாற்றவும் அவர்கள் அனுமதித்தனர். மாற்றங்களை இந்தியா தனது “உள் விவகாரங்கள்” என்று கருதியது, 13ஆவது திருத்தத்தில்  நாம் அவ்வாறு கூறினால் அதை அவர்களால் ஏற்றுக்கொள்ள முடியாது!

அபிவிருத்தியை  இழந்த அனைத்து சமூகத்தினருக்கும் பாதுகாப்பு, கண்ணியம் மற்றும் வாய்ப்பை இது போன்ற ரத்து ஏற்படுத்தியது என்றும், ஊழலை ஒழிக்க உதவியது என்றும் பிரதமர் மோடி அறிவித்துள்ளார். அவர் விரும்பினால், அதிகாரப்பகிர்வு தொடர்பான தனது வாதங்களை வலுப்படுத்த ஜனாதிபதி திஸாநாயக்கவும் இதேபோன்ற காரணத்தை முன்வைக்கலாம்.

ஹிமாச்சல் மற்றும் உத்தரகாண்ட் மாநிலங்களில் இந்தியர்களும் சமச்சீரற்ற நிர்வாகத்தைக் கொண்டுள்ளனர், ஆனால் ஜம்மு-காஷ்மீருக்கு அதைப் பயன்படுத்துவதில்லை, அதை நாமும் நகலெடுக்கலாம். இருப்பினும், சமச்சீரற்ற அதிகாரப் பகிர்வு மிகவும் சிக்கலானது மற்றும் தீவிர சட்டப்பூர்வமான  கவனம் தேவை.

இது இப்போது ஜனாதிபதி திஸாநாயக்கவின் சட்ட மற்றும் நிர்வாக நிபுணர்கள்  எவ்வாறு முன்மொழிய வேண்டும் என்பதை பொறுத்ததாகும்.

உத்தேச புதிய அரசியலமைப்பில் அதிகாரப்பகிர்வு தொடர்பான முன்மொழிவுகளை இணைத்தல். அதிகாரப் பகிர்வில் இந்தியா சமரசம் செய்து கொண்டு பொருளாதார மற்றும் மனிதாபிமான உரிமைகள் தலையீடுகளில் அதிக கவனம் செலுத்தலாம். இத்தகைய அணுகுமுறை மாற்றம் காலத்தின் தேவை.

இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், கசானில் சீன ஜனாதிபதி  ஜி ஜின்பிங்கால் அங்கீகரிக்கப்பட்ட, மரியாதைக்குரிய பேச்சுவார்த்தையாளர்/மூலோபாய நிபுணர், தமிழ் அரசியல்வாதிகள் வெற்றிபெறக்கூடிய வேட்பாளருடன் பேச்சுவார்த்தை நடத்தி, பேச்சுவார்த்தை மூலம் தமிழர்களின் அபிலாஷைகளைப் பாதுகாக்குமாறு அறிவுறுத்தியுள்ளார். அவரது புத்திசாலித்தனமான ஆலோசனையை சில தமிழ் அரசியல்வாதிகள் செவிசாய்க்கவில்லை, அவர்கள் 13 ஆவது திருத்தத்தை  நிராகரிக்கும் அதே வேளையில், தமிழர்களுக்கு சுயநிர்ணய அதிகாரம் கொண்ட சமஷ்டி  முறையைக் கோரினர், இது வெற்றிபெறுவதற்கான வாய்ப்பற்றது. தோவலின் விஜயத்தின் பின்னர் 13 ஆவது திருத்த   சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டியதன் அவசியத்தை ஜனாதிபதி திசாநாயக்கவிற்கு நினைவூட்டியதன் மூலம், புதுடில்லி இலங்கை தொடர்பாக ஒரு தெளிவான செய்தியை அனுப்பியது: அது சுயநிர்ணயம் அல்லது சமஷ்டி முறையை தீர்வாகக் கருதவில்லை.

எனவே, தமிழ் அரசியல்வாதிகளும் மேற்கூறிய செய்தியின் வெளிச்சத்தில் தங்கள் அணுகுமுறையை மறுபரிசீலனை செய்ய வேண்டும். ஜஸ்வந்த் சிங்கின் கேள்விகள் மற்றும் தற்போதைய அரசியல் போக்குகளின் அடிப்படையில், தமிழ் குழுக்கள் 13ஆவது திருத்தத்தை நிராகரித்தால், சமஷ்டி  இல்லாத புதிய அதிகாரப் பகிர்வு பொறிமுறையை முன்மொழிய வேண்டும். ஒருவேளை, திசாநாயக்கவினால் வாக்குறுதியளிக்கப்பட்ட புதிய அரசியலமைப்பு, சமத்துவம், கண்ணியம், நீதி, சுயமரியாதை மற்றும் உள்ளடக்கிய தன்மையுடன் கூடிய தேசத்தைக் கட்டியெழுப்புவதற்கு ஒரு மாற்றீட்டை அரசியல் முன்னெடுப்புகள் மூலம் வழங்கலாம். அவையே தமிழர்களின் அடிப்படைக் கோரிக்கை.

அதிகாரப் பகிர்வுக்கான சர்வதேச நியமங்கள் மற்றும் துணைக் கொள்கைக்கு முரணாக உள்ளூராட்சி அதிகார சபைகள் மூலம் அதிகாரப் பகிர்வை அடைய முடியும் என சிலர் நம்புகின்றனர். மேலும், அனைத்து அரசியல் கட்சிகளையும் யோசிக்க வைப்பது பெரும் சவாலாக உள்ளது. ஆயினும்கூட, எந்தவொரு பொறிமுறையின் நிலைத்தன்மையையும் உறுதிப்படுத்த ஒருமித்த முடிவெடுப்பது அவசியம்.

இதுகுறித்து தி இந்து பத்திரிகையில்  மீரா ஸ்ரீநிவாசன் கூறியதாவது:

2009ல் விடுதலைப் புலிகளைத் தோற்கடித்த மகிந்த ராஜபக்ச நிர்வாகத்திற்கு இந்தியாவின் ஆதரவு இருந்த போதிலும், இலங்கையின் தென்பகுதி மக்களிடையே உள்ள பகுதியினர் இந்தியா மீது சந்தேகம் கொண்டவர்களாகவும், இலங்கையின் இன மோதலில் ‘தலையிட்ட’ ‘தமிழர்களுக்கு ஆதரவான’ பெரும் அண்டை நாடு குறித்து எச்சரிக்கையாகவும் உள்ளனர். . அதிகாரப் பகிர்வு அல்லது மாகாண சபைகளுக்கு தேர்தல் நடத்துவது பற்றிய இந்தியாவின் கருத்தை அவர்கள் எதிர்க்கிறார்கள் மற்றும் தேசிய சொத்துக்களை மேம்படுத்துவதில் இந்தியப் பங்கை எதிர்க்கிறார்கள்.

இந்தியாவும் தமிழ் அரசியல் தரப்பும்  இந்த சிங்கள மனநிலையை  அனுசரித்து போகக்கூடும் . எதிர்வரும்பாரா ளுமன்றத் தேர்தலில் என் பி பி  ஆட்சி அமைக்க முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்படியானால், அரசாங்கத்தின் அரசியல் விசுவாசம் வேறு எங்கும் திசைதிருப்பப்படாமல், கதைகளை மாற்றுவது சரியான நேரத்தில் இருக்கும். இந்தியா எச்சரிக்கையாக இருக்க வேண்டும். பரந்த ஆலோசனைகள் மற்றும் ஒப்பந்தங்கள் மூலம் மாற்றம் அடையப்பட வேண்டும்.

பண்டாரி முதல் விக்ரம் மிஸ்திரி வரை, மற்றும் ராஜீவ் காந்தி முதல் நரேந்திர மோடி வரை, இங்குள்ள தேசியப் பிரச்சினையை நிர்வகிப்பதில் இந்தியர்களும் தங்கள் இலங்கை சகாக்களைப் போலவே செயற்பட்டுள்ளனர். 37 ஆண்டுகளாக இலங்கை 13ஆவது  திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்தத் தவறியது மற்றும் இந்தியாவும்  இலங்கையை நம்பத் தவறியது. தேசியப் பிரச்சினைக்குத் தீர்வு காண 13 ஆவது திருத்தைப் பயன்படுத்த வேண்டிய அவசியம் இலங்கைக்கு உள்ளது.

முன்னோடிகளில் இருந்து வேறுபட்ட இலங்கைத் தலைவரை இன்று இந்தியா சமாளிக்க வேண்டியுள்ளது. தேசியப் பிரச்சினைக்கான தீர்வை ஆராய்வதற்கான உண்மையான பாதையில் செல்ல ஜெய்சங்கரும் மற்றவர்களும் அவரை வற்புறுத்த முடியும் என்று நம்பப்படுகிறது.

 அமைச்சர்களான சுப்பிரமணியம் ஜெய்சங்கர் மற்றும் விஜித ஹேரத், செயலாளர்கள் விக்ரம் மிஸ்திரி மற்றும் அருணி விஜேவர்தன, மற்றும் உயர்ஸ்தானிகர்கள் சந்தோஷ் ஜா மற்றும் க்ஷேனுகா செனி விரட்ண ஆகியோருக்கு நல்வாழ்த்துக்கள்!

– ஐலண்ட்-
 

https://thinakkural.lk/article/311477

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.