Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தேர்தல்கள் நடத்தப்படாத காரணத்தால் இன்று பொதுமக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் எந்த ஒரு அரசியல் நிறுவனமும் இயங்குவதில்லை - கே.டி லால்காந்த

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

உரிய காலத்தில் தேர்தல்கள் நடத்தப்படாத காரணத்தால் இன்று பொதுமக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் எந்த ஒரு அரசியல் நிறுவனமும் இயங்குவதில்லை - கே.டி லால்காந்த

image

உரிய காலத்தில் தேர்தல்கள் நடத்தப்படாத காரணத்தால் இன்று பொதுமக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் எந்த ஒரு அரசியல் நிறுவனமும் இயங்குவதில்லை என கண்டி மாவட்ட தேசிய மக்கள் சக்தி முதன்மை வேட்பாளர் கே.டி லால்காந்த தெரிவித்தார். 

தெல்தெனிய, கும்புக்கந்துறை பிரதேசத்தில் நடை பெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டம் ஒன்றில் உரையாற்றும் போதே இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

இலங்கையில் இதுகாலவரை ஒரு மக்கள் பிரதிநிதித்துவ நிறுவனத்திற்கு தேர்தல் நடத்தும் போது பல மக்கள் பிரதிநிதித்துவ  நிறுவனங்கள் இயங்கிக் கொண்டிருந்தன.

ஆனால் தற்போது நாட்டை நிர்வகிக்க கூடிய பாராளுமன்றமோ, மாகாண சபையோ, உள்ளூராட்சி அமைப்புக்களோ  இல்லை. எனவே அவற்றை உருவாக்க வேண்டியுள்ளது.

அதாவது பாராளுமன்ற தேர்தல் நடக்கும் போது மாகாண சபையோ, உள்ளூராட்சி சபைகளோ இருந்து வந்துள்ளன. அல்லது உள்ளூராட்சி சபைகளுக்கு தேர்தல் நடக்கும் போது மாகாண சபையோ, பாராளுமன்றமோ இருக்கும்.

இது இலங்கை வரலாற்றில் குறிப்பிடத்தக்க ஒரு சந்தர்ப்பமாகும் ஏனெனில் கடந்த காலங்களிள் உரிய காலத்தில் தேர்தல் நடத்தப்படாமையே அதற்குக் காரணமாகும். தற்போது இடம்பெறவிருக்கும் பாராளுமன்றத் தேர்தலை அடுத்து ஏனைய தேர்தல்களும் நடத்தப்படும்.

கண்டி மாவட்ட வாக்காளர்கள்  தமது தொகுதியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அபேட்சகருக்கு ஒரு விருப்பு வாக்கும் தமிழ், முஸ்லிம் பிரதிநிதிகள் தெரிவாகக் கூடியவகையில் விருப்பு வாக்குகளை வழங்குவது நல்லது.  அதில் பெண் பிரதிநிதித்துவமும் உள்ளடங்குமாயின் இன்னும் சிறப்பாக இருக்கும் என்றார்.

NPP-_Kumbukkandura__2_.jpg

https://www.virakesari.lk/article/197924

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.