Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
15 NOV, 2024 | 10:02 AM
image
 

ஜனாதிபதி அனுரகுமார திசநாயக்கவின்  தேசிய மக்கள் சக்தி நாடாளுமன்ற தேர்தலில் முன்னொருபோதும் இல்லாத வகையில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெற்றுள்ளது.

விகிதாசார பிரதிநிதித்துவ முறையின் கீழ் கட்சியொன்று மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெற்றமை இதுவே முதல் தடவை.

https://www.virakesari.lk/article/198851

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பெரும்வெற்றிகள் கொண்டுவரும் ஆபத்துக்கள் குறித்து ஜனாதிபதி எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும் - சாலிய பீரிஸ்

image

பெரும்வெற்றிகள் கொண்டு வரும்  ஆபத்துக்கள் குறித்து ஜனாதிபதி எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும் என இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் முன்னாள் தலைவர் சாலிய பீரிஸ் தெரிவித்துள்ளார்.

இதுவரை வெளியான தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் தேசிய மக்கள் சக்தி மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெறும் நிலையில் உள்ளது என்பது புலனாகின்றது அல்லது அந்த கட்சி மூன்றில் இரண்டு பெரும்பான்மைக்கு மிக அருகில் நெருங்கிச்செல்லலாம்.

தேசிய மக்கள் சக்தி மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெற்றால் விகிதாச்சார பிரதிநிதித்து முறையின் கீழ் ஒரு கட்சி மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெற்றமை இதுவே முதல்தடவை.

2010 இல் மகிந்த ராஜபக்ச அரசாங்கம் மூன்றில் இரண்டை நோக்கி நெருங்கிச்சென்றது, 2020 இல் ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுனவும் மூன்றில் இரண்டை நெருங்கிச் சென்றது. மூன்றில் இரண்டை பெறுவதற்கு சில நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவை பெறவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டது.

1994 இல் சந்திரிகா குமாரதுங்க ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட வெற்றியை மாத்திரம் இந்த வெற்றியுடன் சமாந்திரம் வரையமுடியும்.

தேசிய மக்கள் சக்தி வடக்குகிழக்கில் குறிப்பிடத்தக்க வெற்றிகளை பெற்றுள்ளதால் இலங்கையின் பல்வேறு சமூகங்களை ஐக்கியப்படுத்தும் தலைவராக ஜனாதிபதி விளங்க முடியும்.

இந்த தேர்தல் வெற்றி நிறைவேற்றதிகார முறையை நீக்குவேன் என்ற தனது வாக்குறுதியை ஜனாதிபதி விரைவில் நீக்குவதற்கு உதவும்.

ஜனாதிபதியாக அனுரகுமார திசநாயக்க தெரிவுசெய்யப்பட்ட பின்னர் நாடு சென்றுகொண்டிருக்கின்ற பாதை குறித்து அனேக இலங்கையர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர், குறிப்பாக அரசியல் கலாச்சாரத்தின் மாற்றம் குறித்து மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர் என்பதற்கு சான்றாக இந்த வெற்றி காணப்படுகின்றது.

எனினும் பெரும்வெற்றிகளுடன் வரும் ஆபத்துக்கள் குறித்து ஜனாதிபதி எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும்.

ஜனாதிபதியே நேற்று தெரிவித்தது போன்று அரசியல் சக்திகள் கடந்த காலங்களில் மக்களின் ஜனநாயக உரிமைகளை மீறுவதற்கான சட்டங்களை இயற்றுவதற்காக மூன்றில் இரண்டு பெரும்பான்மைகளை பயன்படுத்தியிருந்தன.

ஜனநாயக உரிமைகள் மற்றும் சுதந்திரங்களை சிதைக்கும் சட்டங்களை இயற்றுவதற்கான உந்துதல்களை தேசிய மக்கள் சக்தி தவிர்க்கவேண்டும்.

https://www.virakesari.lk/article/198845

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

"இனம் மதம் என வாக்காளரை சிறையில் அடைத்த எல்லைக்குள் கட்டுப்படாத தேர்தல் வாக்களிப்பு"- கிரிக்கெட் வர்ணணையாளர் ரொசான் அபயசிங்க

15 NOV, 2024 | 11:01 AM
image

2024 நாடாளுமன்ற தேர்தல் வாக்களிப்பை  இனம் மதம் என வாக்காளரை சிறையில் அடைத்த எல்லைக்குள் கட்டுப்படாத வாக்களிப்பு என வர்ணித்துள்ள கிரிக்கெட் வர்ணணையாளர் ரொசான் அபயசிங்க நகரங்கள் கிராமங்கள் மாவட்டங்கள் மாகாணங்கள் அனைத்தும் ஒரே குரலில் பேசியுள்ளன என  குறிப்பிட்டுள்ளார்.

சமூக ஊடக பதிவில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

2019இல் அப்போதைய அரசாங்கத்தின் வெற்றி மிகப்பெரியது என பாராட்டப்பட்டது.

ஆனால் அந்த வெற்றியில் ஒரு முக்கியமான விடயமிருந்தது, அதாவது மக்கள் வாக்களித்த விதத்தில்.

வடக்கும் கிழக்கும் மலையகமும் தொடர்ந்தும் அரசாங்கத்திற்கு எதிராக வாக்களித்திருந்தன. அதன் மூலம் அவர்கள் தென்பகுதி தலைமைத்துவத்தை நம்பவில்லை என்பதை மீண்டும் வெளிப்படுத்தினார்கள்.

2024 தேர்தல் முடிவு மகத்தானது மாத்திரமில்லை இது ஒரு சுனாமி. மேலும் வாக்களிப்பு இடம்பெற்ற விதம்தான் இதற்கு மகுடம் போல காணப்படுகின்றது.

இனம் மதம் என வாக்காளரை சிறையில் அடைத்த எல்லைக்குள் கட்டுப்படாத வாக்களிப்பு இது.

நகரங்கள் கிராமங்கள் மாவட்டங்கள் மாகாணங்கள் அனைத்தும் ஒரே குரலில் பேசியுள்ளன.

இது இயற்கையாகவே நாட்டிற்கு சிறந்த விடயம்.

இலங்கை அதன் அரசியல் அத்தியாயத்தில் ஒரு புதிய பக்கத்திற்குள் நுழைகின்றது. உறுதியளிக்கப்பட்ட மாற்றத்திற்காக காத்திருக்கின்றது.

https://www.virakesari.lk/article/198854

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.