Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சுவிசில் உணர்வெழுச்சியுடன் நடைபெற்ற தமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2024

 

தமிழீழ விடுதலைக்காய் களமாடி, வழிகாட்டி விழிமூடிய உத்தமர்களை நினைவுகூரும் தமிழீழத் தேசிய மாவீரர்நாள் நிகழ்வானது மிகவும் பேரெழுச்சியுடன் உணர்வுபூர்வமாக சுவிசில் சிறப்பாக நடைபெற்றது. இவர்டோன் நகரில் அமைந்துள்ள நினைவுக்கல்லில் 27ம் திகதி காலை 09:00 மணியளவில்  தமிழீழத் தேசிய மாவீரர் நாள் நிகழ்வுகள் ஈகைச்சுடரேற்றலுடன் ஆரம்பமாகி முறையே அகவணக்கம், மலர்வணக்கம், தீபமேற்றல், உறுதிப்பிரமாணம் எடுத்தல் என்பவற்றோடு நிறைவுபெற்றன.

hIi8mxH72fqSEVEOGlwU.jpg

 

 

 

nGGrFE3PJMbY8HW7H6cm.jpg

 

தமிழீழ விடுதலைக்காகவும், தமிழர்களின் சுதந்திர வாழ்வுக்காகவும் தம்மை முழுமையாக அர்ப்பணித்து இறுதிவரை களமாடி வீரச்சாவடைந்த மாவீரர்களின் குடும்ப உறவுகளுக்கான மதிப்பளிப்பானது அமைப்பின் ஒழுங்கின் அடிப்படையில் அந்நிகழ்வுக்குரிய மகத்துவத்துடன் மாவீரர் நிகழ்வு மண்டபத்தில் காலை 10:45 மணியளவில் நடைபெற்றது. இந்நிகழ்வில் சுவிஸ் வாழ் மாவீரர் குடும்பங்களைச் சேர்ந்த நூற்றிற்கும் மேற்பட்ட உறவுகள் கலந்து சிறப்பித்திருந்தார்கள்.

 

pdY5gLYLksPW0WjaC13h.jpg

 

 

31ypEST79GGJJJoKrLK3.jpg

 

 

தமிழீழத்தின் பல்வேறு மாவீரர் துயிலுமில்லங்களிலிருந்து சேகரிக்கப்பெற்ற புனித மண்ணையும், கல்லறைக் கற்களையும், சீருடையின் சாட்சியாக எம்மிடம் சேர்க்கப்பெற்றவற்றையும் மாவீரர்களின் பிள்ளைகளால் அரங்கிற்கு எடுத்துவரப்பட்டு மாவீரர் பொதுத்தூபி முன்றலில் வைக்கப்பட்டதனைத் தொடர்ந்து பொதுச்சுடர் ஏற்றப்பட்டு துயிலுமில்ல நிகழ்வுகள் உணர்வுடன் ஆரம்பமாகின.

prpa6Ehmh55QC4txps1O.jpg

 

தொடர்ந்து தமிழீழத் தேசியக்கொடியேற்றலுடன், காலத்தின் தேவை கருதி தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களின் 2008ஆம் ஆண்டின் தேசிய மாவீரர் நாள் உரை முழுமையாக அகன்ற வெண்திரையில் காண்பிக்கப்பட்டது. சங்கொலி, பறையிசை, மணியொலி எழுப்பலுடன் அகவணக்கத்தினைத் தொடர்ந்து தாயக நேரம்  18:07 மணியளவில் முதன்மைச் சுடரேற்றப்பட்டு துயிலுமில்லப் பாடலோடு மலர்வணக்கப் பாடலும் ஒலிபரப்பப்பட்டது. மக்களால் மலர், சுடர் வணக்கம் செலுத்தப்பட்ட சமவேளையில் மாவீரர்களுக்கான வணக்கப்பாடல்களும் காணிக்கைப்படுத்தப்பட்டன. 

 

1aMdlFNrrZs0q91LMXs9.jpg

 

தமிழீழத் தேசிய மாவீரர் நாள் சுவிஸ் நிகழ்வில், சுவிசின்  அனைத்து மாநிலங்களிலிருந்தும் கலந்து கொண்ட பல்லாயிரக்கணக்கான மக்கள் தங்கள் வரலாற்றுக் கடமைக்கான உறுதிமொழியை மாவீரர் திருவுருவப் படங்களுக்கு முன்னால் எடுத்தமையானது சுவிஸ் வாழ் தமிழ் மக்களின் தேசிய உணர்வையும், இலட்சியப்பற்றையும் மீளவும் வெளிப்படுத்தி நிற்கின்றது.

 

மிகப் பிரமாண்ட அரங்கில்  1700 இற்கு மேற்பட்ட  மாவீரர்களின் திருமுகங்கள் ஏற்றப்பட்ட சுடர்களிலே ஒளிவீச, முதன்மை கோபுரமும் அடிக்கற்களின் தடையகற்றிகளின் கோபுரமும் நடுகல்நாயகர்களின் கோபுரமும் கரும்புலிகளின் கோபுரங்களும் நிமிர்ந்து நிற்க, நாட்டுப்பற்றாளர், மாமனிதர்கள் திருவுருவப்படங்கள்  உணர்வோடு சங்கமிக்க, முள்ளிவாய்க்கால் நினைவு மக்கள் தூபி தமிழின அழிப்பின் சாட்சியாய் நிற்க, தமிழீழத் தேசியச் சின்னங்கள் அரங்கு முழுவதையும் எழுச்சியூட்ட, தமிழீழத்தேசியக்கொடி பட்டொளி வீச, மாவீரர் குடும்ப உறவுகளின் உணர்வலைகள் மாவீரம் சொல்ல குழந்தைகள், சிறுவர், இளையோர், உணர்வாளர்கள், போராளிகள், செயற்பாட்டாளர்களென எல்லோரும் மாவீரர் நினைவுகளோடு உறைந்திருந்து உறுதி எடுத்துக்கொண்ட காட்சி மாபெரும் வரலாற்றுப் பதிவாகும்.

 

தமிழீழ விடுதலைப்புலிகளின் 2024 மாவீர்ர் நாளின் உத்தியோகபூர்வ அறிக்கையின் உரைவடிவம் ஒலிக்கவிடப்பட்டது.

அதனைத் தொடர்ந்து,தமிழீழ விடுதலைப்புலிகள் சுவிஸ்கிளையின் கொள்கை விளக்கப்பேச்சும் நிகழ்த்தப்பட்டதுடன், தமிழர் நினைவேந்தல் அகவம் சுவிசினால் நடாத்தப்பட்ட மாவீரர்; நினைவுகள் சுமந்த பேச்சுப்போட்டி, கவிதைப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கான வெற்றிக்கேடயங்கள் வழங்கப்பட்டது.

 

எத்தடை வரினும் அத்தடை உடைத்து தமிழீழத் தேசியத் தலைவரது வழிகாட்டலை ஏற்ற மக்களாக தமிழீழத்தை மீட்போம் என்ற உறுதியுடன் 'நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும்“ என்ற தாயகப் பாடலையடுத்து, தமிழீழத் தேசியக்கொடி கையேற்றல், தாரக மந்திரத்துடன் நிகழ்வுகள் யாவும் உணர்வெழுச்சியுடன் சிறப்பாக நிறைவுபெற்றன. 

 

தமிழீழ விடுதலைப் புலிகள் - சுவிஸ் கிளை

 

 

Gq5EawbQaNedho6V8nrN.jpg
4BqMHFXg5jha4FhZBpU3.jpg
XozyS4pdiJOBDa4s8ZOK.jpg
D1emywJdOoyeqU5c2vz0.jpg
jcCC6Ee416jE10CaMt64.jpg
54yw41iqu19hUkkbv9U8.jpg
VBf1wmiOexTeEyFjeBSf.jpg
cQ1HkHrg0Qiis6fDGKW8.jpg
0VJ3mnboCdaRnQ5Frqi5.jpg
ZQE9lwpiUN3Lea3BLmti.jpg
WvpKrIzLVeTM7tRtLceW.jpg
x0xbqqheX60YYUMmtInV.jpg
k93LC6vb5bLE2hzmTHvP.jpg
lnTpRHNlm3MrtLHnUt8F.jpg
QnxDWAbZU2XQqejKIWZw.jpg
QIwVGCYOEaNb6emTaRUb.jpg
S4rfzA2XGfiJFOMn9DmX.jpg
OIxJbIA3i4KhohgXTS2z.jpg
vwMDgRCVPRjDwkxgtyU5.jpg
JgWYGVP7wYDo73BR8aKa.jpg
DFMbQdGjhfx8xkMJ7y8R.jpg
XK1a41WujTPz5cah1v17.jpg
UyP3JfQ5rWLLaM65az0F.jpg
WGoBcTA4xbogweaNxopj.jpg
CF0TZYFp2jYIOAhDelCu.jpg
Sn8E8ZdHchof5OZpwc7S.jpg
qcpAK0OHiGz6JNHa8twd.jpg
HbcHIQMZaOUO299X2Ad0.jpg
2b14tfDYSSnWHc4gfYFG.jpg
yt5NVu08TyMVjdnVVOTO.jpg
Qbma08aw6Vmv2DjpcLO2.jpg
w7pKNTNxPWQ5c28GiVUt.jpg
mHVbMChLjlpT0R4uq4M3.jpg
O3xgwynLCgRRE1FTpF7V.jpg
odb9rZIrqfkRpVp6BaNl.jpg
wGEpvvzC6wUMgOhrtE3J.jpg
CGF9XD6uTGAKakNBW7At.jpg
xyEQNkNuFskiR3g6PpFc.jpg
zaONUA1KXVUH6dtj2mqk.jpg
Wd3Zd4QcVrK2NDq3wGLA.jpg
DwCJfDRZ8XdbyvmWpc4W.jpg
pyQqEHzMlycp59s9j1zG.jpg
L5J8dMqfN5kMcDqutDKt.jpg
5t0TTuRQFFPtdpINe8fR.jpg

https://www.thaarakam.com/news/08a5b5e3-6ab3-470f-be0e-fe2ab036bedb

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.