Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Published By: RAJEEBAN

23 MAR, 2025 | 10:27 AM

image

தையிட்டியில் சட்டவிரோதமாக விகாரை அமைக்கப்பட்டிருக்கின்ற அந்த வளாகத்திற்குள் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள புதிய கட்டிட திறப்பு நடைபெறவிருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளதாக தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/209966

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அமைச்சர் எங்களை கொழும்பிற்கு அழைத்து விகாரை விவகாரத்திற்கு தீர்வை விரைவில் முன்வைப்பதாக தெரிவிக்கின்றார் - ஆனால் இங்கே புதிய கட்டிடத்தை திறக்கின்றனர் - தமிழ் மக்கள் உண்மையை புரிந்துகொள்ளவேண்டும் - தையிட்டிகாணி உரிமையாளர்

Published By: RAJEEBAN 23 MAR, 2025 | 11:17 AM

image

அனுர அரசாங்கத்தின் அமைச்சர் எங்களை கொழும்பிற்கு அழைத்து பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டு கூடிய விரைவில் தீர்வை தருவதாக சொல்லியுள்ள அதே சந்தர்ப்பத்தில் தையிட்டியில் விகாரை அமைக்கப்பட்டுள்ள வளாகத்திற்குள் புதிய கட்டிட திறப்பு இடம்பெறவுள்ளது. இது வேதனைக்குரிய விடயம் என தெரிவித்துள்ள காணி உரிமையாளர் சாருஜன் பத்மநாதன் தமிழ் மக்கள் இதனை புரிந்துகொள்ளாவிட்டால் இதுபோன்று பல விடயங்கள் இடம்பெறும் என தெரிவித்துள்ளார்

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

இந்த போராட்டத்தை போயா தினத்தில் தான் நடத்திக்கொண்டிருந்தோம், போராட்டம் வலுப்பெற்ற நிலையில அரசாங்கம் அடுத்த கட்ட நடவடிக்கைக்கு செல்ல முடியாத நிலையில், யாழ்ப்பாணம் வருகை தரவுள்ள அமைச்சர் 20 ம் திகதி எங்களை அழைத்து, இந்த விடயம் தொடர்பில் ஆராய்ந்தார். 

பௌத்த சாசன அமைச்சர். அவருடைய அலுவலகத்தில் வைத்து ஒரு மக்கள் சந்திப்பை ஒழுங்கு செய்தார், அவர் அங்கு தெளிவாக சொல்லியிருந்த விடயம் மக்களின் காணிகள் என்றால் மக்களிற்கே கையளிக்கவேண்டும் என்று. இது தங்கள் அரசாங்கத்தின் கொள்கை என்றும் அவர் தெரிவித்திருந்தார்.

thayity_pro1.jpg

இதன் அடிப்படையிலே நாங்கள் உறுதிகள் உட்பட அனைத்து ஆதாரங்களையும் அவரிடம் காட்டியிருந்தோம்.

இது தங்களுடைய விடயங்களிற்கு பொறுப்பானதல்ல காணி அமைச்சிற்கும் பொறுப்பானது என அமைச்சர் தெரிவித்திருந்தார். அவர்களும் இந்த விடயம் குறித்து ஆராய்ந்து கொண்டிருக்கின்றார்கள். இதற்குரிய முடிவை எவ்வளவு விரைவாக வழங்க முடியுமோ அவ்வளவு விரைவாக வழங்க முயல்கின்றோம் என  அவர் சொல்லியுள்ள நிலையில  அவருடைய அரசாங்கம் யாருக்கும் தெரியாமல் இரகசியமாக புதிய கட்டிடத்தை திறக்க முயல்வது மன வருத்தத்திற்குரிய விடயம்,

மக்கள் இதனை உணராவிட்டால் இதுபோல பல விடயங்கள் நடக்கும், சகல மக்களும் இந்த போராட்டத்திற்கு ஆதரவளிக்க வேண்டும்.

https://www.virakesari.lk/article/209969

  • கருத்துக்கள உறவுகள்

download-3-1.jpg?resize=750%2C375&ssl=1

தையிட்டியில் மற்றுமொரு புதிய கட்டிடம்: பொதுமக்கள் போராட்டம்!

யாழ்ப்பாணம், தையிட்டியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட திஸ்ஸ விகாரைக்கு எதிராக பொதுமக்கள் தொடர்ச்சியாகப் போராட்டங்களை முன்னெடுத்து வரும் நிலையில் குறித்த பகுதியில் இன்று மற்றுமொறு புதிய கட்டிடம் திறந்து வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் அங்கு பொலிஸார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திஸ்ஸ விகாரைப் பகுதியில் கள ஆய்வுகளை மேற்கொண்டு பிரச்சினை நிவர்த்தி செய்யப்படும் என பௌத்தசாசன அமைச்சர் சுனில் செனவி அறிவித்திருந்த நிலையில், அங்கு அமைக்கப்பட்டுள்ள இப் புதிய கட்டிடம்  அப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

தையிட்டியில் திஸ்ஸ விகாரைக்கு மேலதிகமாக, அப் பகுதியில் வேறுசில சட்டவிரோதக் கட்டடங்கள் அமைக்கப்பட்டு வருவதாக  செய்திகள்  வெளிவந்த போது  அதற்கு மறுப்புத் தெரிவித்திருந்த பதில் மாவட்டச் செயாளர் மருதலிங்கம் பிரதீபன் தான் சம்பவ இடத்தைப் பார்வையிட்டதாகவும், அவ்வாறான சட்டவிரோதக் கட்டடங்கள் எவையும் அமைக்கப்படவில்லை எனவும் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் இராணுவத்தால் அமைக்கப்பட்டுவந்த அந்த சட்டவிரோத பௌத்த ஆக்கிரமிப்புக் கட்டங்களே இன்று மத வழிபாடுகளுக்குப் பின்னர் கையளிக்கப்பட்டுள்ளதாகவும், அக் கட்டடங்கள் பிக்குகள் தங்குவதற்கான மடாலயமாக இருக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை புதிதாக அமைக்கப்பட்ட கட்டடத்தையே தடுத்து நிறுத்துவதற்குத் திராணியற்ற இந்த அரசாங்கம், எவ்வாறு திஸ்ஸ விகாரையை அப்புறப்படுத்தி, மக்களின் காணிகளை கையளிக்கும்  என பொதுமக்கள் விசனம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2025/1426182

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இனவாதத்திற்கு மதவாதத்திற்கு இடமளிக்கமாட்டேன் என தெரிவித்துக்கொண்டு அனுர தமிழர் பகுதிகளில் மேலும் மேலும் பௌத்தவிரிவாக்கல் நடவடிக்கைகளை முன்னெடுக்கின்றார் - தையிட்டி விகாரைக்குள் புதிய கட்டிடம் குறித்து கஜேந்திரன்

Published By: RAJEEBAN 23 MAR, 2025 | 12:38 PM

image

கடந்த ஜனாதிபதி தேர்தலிலே நாடாளுமன்ற தேர்தலிலே அற்ப சலுகைகளிற்காக, இந்த இனவாத அரசாங்கத்திற்கு ,ஆதரவு வழங்கிய தமிழ் புத்திஜீவிகளும் இதற்கு பொறுப்பு கூற வேண்டியவர்கள்.

அனுர  ஒரு புறத்திலே தான் இனவாதத்திற்கு மதவாதத்திற்கு இடமளிக்கமாட்டேன் என சொல்லிக்கொண்டு, இங்கே மேலும் மேலும் இந்த பௌத்த விரிவாக்கல் நடவடிக்கைகளை முன்னெடுக்கின்றார் என தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.

தையிட்டியில் சட்டவிரோதமாக விகாரை அமைக்கப்பட்டிருக்கின்ற அந்த வளாகத்திற்குள் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள புதிய கட்டிட திறப்பு நடைபெறவிருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளதாக தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது.

காணி உரிமையாளர்களும் இவ்வாறான தகவல் கிடைத்ததன் பேரில் இந்த ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளனர்.

இன்று இங்கே இராணுவத்தினரின் வாகனங்கள் அதிகளவில் வந்து ஏற்றி இறக்குகின்ற பணிகளில் ஈடுபட்டுக்கொண்டிருக்கின்றன, இதனை நாங்கள் வன்மையாக கண்டிக்கின்றோம்.

இந்த காணிகள் விடுவிக்கப்படவேண்டும் என்று கோரிக்கைகள் வைக்கப்பட்டு தொடர்ச்சியாக போராட்டங்கள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றநிலையிலே, இரண்டு நாட்களிற்கு முன்னர் கூட கொழும்பிலே காணி உரிமையாளர்களை அமைச்சர் சந்தித்து இது உங்களுடைய காணிகள் என சொன்னால் விடுவிப்போம் என ஒரு புறத்தில் கூறிக்கொண்டு, மறு புறத்திலே அதே அரச இயந்திரம், இந்த சட்டவிரோத விகாரைக்குள் அமைக்கப்பட்ட கட்டிட திறப்பு விழாவிற்காக தங்களின் அரச வளங்களை பயன்படுத்திக்கொண்டிருப்பது என்பது, அனுர அரசின் இரட்டை முகத்தை காட்டுகின்றது.

அனுர  ஒரு புறத்திலே தான் இனவாதத்திற்கு மதவாதத்திற்கு இடமளிக்கமாட்டேன் என சொல்லிக்கொண்டு, இங்கே மேலும் மேலும் இந்த பௌத்த விரிவாக்கல் நடவடிக்கைகளை முன்னெடுக்கின்றனர்,. அவருடைய தலைமையிலே முன்னெடுக்கின்றனர், பாதுகாப்பு அமைச்சரும் அவர்தான், பௌத்த விவகார அமைச்சரும் அவர்தான்.

எங்கள் மக்கள் இதனை புரிந்துகொள்ளவேண்டும், கடந்த ஜனாதிபதி தேர்தலிலே நாடாளுமன்ற தேர்தலிலே அற்ப சலுகைகளிற்காக, இந்த இனவாத அரசாங்கத்திற்கு ,ஆதரவு வழங்கிய தமிழ் புத்திஜீவிகளும் இதற்கு பொறுப்பு கூற வேண்டியவர்கள்.

இதனுடைய விளைவுகள் எதிர்காலத்தில் எவ்வாறு வந்து முடியும் என்பதை காலம்தான் சொல்லவேண்டும்.

இந்த திறப்பு விழா நடவடிக்கைகள் நிறுத்தப்படவேண்டும் என்பது போராட்டக்காராகளின் காணி உரிமையாளர்களின் கோரிக்கையாக உள்ளது. எந்த வகையிலும் இது நியாயப்படுத்த முடியாத  ஏற்றுக்கொள்ள முடியாத, ஆக்கிரமிப்பு நடவடிக்கை.

இந்த போராட்டத்திற்கு ஆதரவாக, யாழ்குடாநாட்டில் உள்ள மக்கள் பெருமளவிலே திரண்டு வரவேண்டும் என நாங்கள் கேட்டுக்கொள்கின்றோம்.

https://www.virakesari.lk/article/209979

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.