Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

23 JUN, 2025 | 11:21 AM

image

யாழ்ப்பாணம், வலி. வடக்கில் அமைந்துள்ள உயர் பாதுகாப்பு வலயத்துக்குட்பட்ட 2400 ஏக்கர் காணிகளை விடுவிக்குமாறு கோரிய போராட்டம் நேற்று (22) இரண்டாவது நாளாகவும் உணர்வுபூர்வமாக நடைபெற்றது. 

மயிலிட்டி சந்தியில் சனிக்கிழமை (21) ஆரம்பிக்கப்பட்ட இப்போராட்டத்தின்போது, இன்று 500க்கும் மேற்பட்ட மக்கள் பங்கேற்றுள்ளதோடு, தங்குதடையின்றி அமைதி வழியில் உணவு சமைத்து அங்கேயே தங்கியிருந்துள்ளனர்.

ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால், பாடசாலைச் சிறுவர்கள் கூட தமது பெற்றோருடன் பதாகைகளைத் தாங்கியவாறு, மூன்றாம் தலைமுறையாக தங்கள் நிலங்களுக்கான உரிமையைக் கோரி போராட்டத்தில் இணைந்துள்ளனர். 

01__3_.jpg

மயிலிட்டி, பலாலி, அந்தோணிபுரம், காங்கேசன்துறை உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த முதியவர்கள், இளைஞர்கள், பெண்கள் எனப் பல தரப்பினரும் இத்தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

1990ஆம் ஆண்டு யுத்தத்தால் இடம்பெயர்ந்த மக்கள், போர் முடிவடைந்த பின்னரும் தங்கள் காணிகளை முழுமையாகப் பெறவில்லை. ஆட்சிக்கு வந்த ஒவ்வோர் அரசாங்கமும் காணியை விடுவிப்பதாகக் கூறி, சிறிய பகுதிகளை மட்டுமே விடுவித்துள்ளன. இதனால், வாடகை வீடுகளிலும், உறவினர் வீடுகளிலும், முகாம்களிலும் காணி உரிமையாளர்கள் அகதிகளாகவே வாழ்ந்து வருகின்றனர்.

"அனைத்துக் காணிகளையும் உடனடியாக விடுவிப்போம்" என்ற வாக்குறுதியுடன் ஆட்சிக்கு வந்த புதிய அரசாங்கம், ஆறு மாதங்களாகியும் பெரியளவில் காணி விடுவிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை என போராட்டக்காரர்கள் கண்ணீருடன் தெரிவித்தனர்.

பாதுகாப்பு காரணங்களுக்காக இராணுவம் நிலங்களை வைத்திருப்பதாகவும், தற்போது அமைதியான சூழ்நிலை நிலவுகிறபோதும் காணிகள் விடுவிக்கப்படாமல் இருப்பது மக்களைத் தொடர்ந்தும் அகதிகளாக்குகிறது எனவும் அவர்கள் வேதனையுடன் குறிப்பிட்டனர். 

தமிழ் மக்கள் மீது அதிக அக்கறை கொண்டுள்ளதாகக் கூறும் புதிய அரசாங்கம் இப்போராட்டம் குறித்து கவனம் செலுத்தும் வரை இது தொடரும் என்றும் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் உறுதியளித்துள்ளனர்.

01__16_.jpg

01__11_.jpg

01__9_.jpg

01__10_.jpg

https://www.virakesari.lk/article/218189

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

காணி விடுவிப்பை வலியுறுத்தி மயிலிட்டியில் மூன்றாவது நாளாக தொடரும் ஆர்ப்பாட்டம் 

23 JUN, 2025 | 05:07 PM

image

காணி விடுவிப்பை வலியுறுத்தி மயிலிட்டியில் இன்றும் (23) மூன்றாவது நாளாக தொடர் போராட்டத்தில் மக்கள் ஈடுபட்டு வருகின்றனர். 

மயிலிட்டி சந்தியில் சனிக்கிழமை (21) இந்த போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது. 

யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கு மக்கள் தமது காணிகளை அரசு உடனடியாக விடுவிக்க வேண்டும் என வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் 500க்கும் மேற்பட்ட மக்கள் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

download.jpg

download__1_.jpg

download__3_.jpg

download__2_.jpg

https://www.virakesari.lk/article/218241

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

காணி உறுதிகளை கையில் ஏந்தியவாறு நான்காவது நாளாக போராட்டத்தில் ஈடுபடும் மக்கள்

24 JUN, 2025 | 06:15 PM

image

(எம்.நியூட்டன்)

“எமது நிலம் எமக்கு வேண்டும்” எனக் கோரி, வலிகாமம் வடக்கு மயிலிட்டி மிள்குடியேற்றக் குழு நான்காவது நாளாக தொடரும் இன்றைய (24) போராட்டத்தில் காணி உறுதிகளை கையில் ஏந்தியவாறு 500க்கு மேற்பட்டோர் ஈடுபட்டுள்ளனர். 

1990ஆம் ஆண்டு முதல் யுத்தத்தால் இடம்பெயர்ந்த  மக்கள் பல்வேறு வகையான துன்பங்களை சுமந்தவாறு வாழ்ந்துவரும் நிலையில் தமது நிலத்தை விடுவிக்குமாறு கோரி  போராட்டங்களை நடத்திவருகிறார்கள்.

சிறுவர்கள் முதல் ஆண்கள், பெண்கள் வயோதிபர்கள் என பல தரப்பினர் இப்போராட்டத்தில் கலந்துகொண்டுள்ளனர்.

download__4_.jpg

இன்றைய நாளில் தமது கைகளில் காணி உறுதிகளை கையிலேந்தியவாறு மக்கள் போராட்டம் நடத்தியுள்ளனர். 

“நாங்கள் அரச காணிகளை கேட்கவில்லை; எமது சொந்த நிலத்தைத்தான் கேட்கிறோம்", "எமது நிலத்தில்தான் எமது உயிர் போகவேண்டும்”, “இனியும் இடம்பெயர்ந்து அவல வாழ்வு வாழ முடியாது”, “எமது நிலத்தில் நிம்மதியாக வாழவேண்டும்” என தெரிவிக்கிறார்கள்.

இதன்போது முதியவர் ஒருவர் கருத்து தெரிவிக்கையில்,

நான் எனது ஊரில் இருக்கும்போது முதலாளியாக இருந்தேன். இன்று தொழிலாளியாக இருக்கிறேன். வாழமுடியாமல் தற்போது  இருக்கிறேன். சொந்த நிலத்தை விட்டால் மீண்டும் முதலாளியாக ஆகிவிடுவேன் என்கிறார்.

IMG_20250624_125426.jpg

IMG_20250624_130600.jpg

நம்பிக்கையுடன் இப்போராட்டத்தில் கலந்துகொண்ட இளம்பெண் ஒருவர் தெரிவிக்கையில்,

நான் பிறந்தது தற்போது இருக்கும் இடத்தில்தான். எனது சொந்த வீடு மயிலிட்டியில் என்று அப்பா, அம்மா கூறி கை காட்டுகிறார்கள். எமது வீட்டில் இராணுவத்தினர் இருக்கிறார்கள். அவ்வாறு என்றால் நான் எவ்வாறு எமது சொந்த வீட்டுக்குப் போவது? எங்கள் தலைமுறையும் இடப்பெயர்வு வாழ்க்கையை வாழ்வதா? என்று கேட்டார். 

நான்காவது நாளாக தொடரும் இன்றைய போராட்டத்தில் மத குருக்கள், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள், இடம்பெயர்ந்து வாழும் மக்கள், வலி வடக்கு, மயிலிட்டி, காங்கேசன்துறை மக்கள் என பலரும் கலந்துகொண்டுள்ளனர்.

IMG_20250624_124211.jpg

IMG_20250624_122824.jpg

IMG_20250624_125317.jpg

https://www.virakesari.lk/article/218339

  • கருத்துக்கள உறவுகள்

வலி. வடக்குக் காணிகளை உடன் விடுவிக்கவேண்டும்; காணி உறுதிகளுடன் மக்கள் போராட்டம்

1998773814.jpg

யாழ்ப்பாணம் வலி. வடக்கில் உயர் பாதுகாப்பு வலயத்திலுள்ள 2 ஆயிரத்து 400 ஏக்கர் காணிகளை உடனடியாக விடுவிக்கவேண் டும் என்று வலியுறுத்தி, காணிகளின் உறுதிகளுடன் பொதுமக்கள் நேற்றுப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வலி. வடக்கில் படையினரின் கட்டுப்பாட்டில் உள்ள காணிகளை விடுவிக்கவேண்டும் என்று வலியுறுத்தி, மயிலிட்டி சந்தியில் கடந்த சனிக்கிழமை முதல் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

போராட்டத்தின் நான்காம் நாளான நேற்று அவர்கள் காணிகளின் உறுதிகளுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர். மயிலிட்டி, பலாலி, அன்ரனிபுரம், காங்கேசன்துறை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்களும், கத்தோலிக்க மதகுருக்களும், தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தினரும், சிவில் சமூகச் செயற்பாட்டாளர்களும் இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். ஐந்தாவது நாளான இன்றும் அவர்கள் தமது போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளனர்.

https://newuthayan.com/article/வலி._வடக்குக்_காணிகளை_உடன்_விடுவிக்கவேண்டும்;_காணி_உறுதிகளுடன்_மக்கள்_போராட்டம்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

யாழ் வலி.வடக்கு உயர் பாதுகாப்பு வலய காணிகளை விடுவிக்க கோரி ஐந்தாம் நாளாக தொடரும் போராட்டம்

Published By: VISHNU

25 JUN, 2025 | 06:55 PM

image

யாழ்ப்பாணம் வலி. வடக்கில் உயர் பாதுகாப்பு வலயத்திலுள்ள காணிகளை விடுவிக்க கோரி புதன்கிழமை (25) ஐந்தாம் நாளாக காணி உரிமையாளர்கள் போராட்டத்தினை முன்னெடுத்து வந்திருக்கின்றனர்.

000__1_.jpg

இந்தப் போராட்டத்திற்கு வலு சேர்க்கும் வகையில் அரசியல்வாதிகளும் கலந்து கொண்டிருந்தனர்.

பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரன், இராசமாணிக்கம் சாணக்கியன், வடமாகாண அவைத் தலைவர் சி வி கே சிவஞானம், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம் கே சிவாஜிலிங்கம், வலி வடக்கு பிரதேச சபை தவிசாளர் சோமசுந்தரம் சுகிர்தன் ஆகியோரும் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

https://www.virakesari.lk/article/218464

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.