Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Published By: VISHNU

20 JUL, 2025 | 06:08 PM

image

ஆர்.சேது­ராமன்

இலங்­கையில் முத­லீடு செய்­வதில், ஜப்­பா­னிய நிறு­வ­னங்கள் உட்­பட  அரச மற்றும் தனியார் நிறு­வ­னங்­களுக்கு மீள நம்­பிக்­கையை ஏற்­ப­டுத்­து­வ­தற்கு, ஊழலை ஒழிப்­பதும் நல்­லாட்­சியும் அவ­சி­ய­மான முன்­நி­பந்­த­னை­களாக உள்­ளன என இலங்­கைக்­கான ஜப்­பா­னிய தூதுவர் அகியோ இசோ­மாட்டா அண்மையில் கூறி­யுள்ளார்.

வெளி­நாட்டு முத­லீ­டு­களை ஈர்ப்­ப­தற்கு இலங்கை தீவி­ர­மாக முயன்­று­வரும் நிலையில், ஜப்­பா­னிய தூதுவர் இவ்­வாறு குறிப்­பிட்­டுள்ளார். கொழும்பில் கடந்த 4 ஆம் திகதி நடை­பெற்ற 4 ஆவது ஜப்­பா­னிய –இலங்கை  பொரு­ளா­தார ஒத்­து­ழைப்பு கொள்கை உரை­யா­ட­லின்­போது அவர் இதனை கூறினார்.

ஜப்பான் வெளி­யு­றவு பிரதி உதவி அமைச்­சரும், ஜப்­பா­னிய சர்­வ­தேச ஒத்­து­ழைப்பு பணி­ய­கத்தின் இஷி­சுகி ஹிடியோ, இலங்கை நிதி­ய­மைச்சின் புதிய செய­லாளர்  கலா­நிதி ஹர்­ஷன சூரி­யப்­பெ­ரும ஆகியோர் தலை­மையில் இக்­க­லந்­து­ரை­யாடல் நடை­பெற்­றி­ருந்­தது.

இலங்­கையில் ஊழலால் பாதிக்­கப்­பட்ட ஜப்பான்

இலங்­கையின் அபி­வி­ருத்­திக்கு நீண்­ட  ­கா­ல­மாக கைகொ­டுத்­து­வரும்   ஜப்பான், இலங்­கையில் ஊழல்­களை ஒழிக்க வேண்­டி­யதை  தொடர்ச்­சி­யாக வலி­யு­றுத்­து­கி­றது. ஊழல் ஒழிப்­புக்­காக பல்­வேறு உத­வி­க­ளையும் இலங்­கைக்கு ஜப்பான் வழங்­கி­வ­ரு­கி­றது.

கடந்த மே மாதம் கொழும்பில் பாத்ஃ­பைண்டர் அறக்­கட்­டளை ஏற்­பாடு செய்த கலந்­து­ரை­யாடல் நிகழ்­வொன்றில் பங்­கு­பற்­றிய ஜப்­பா­னிய தூதுவர் அகியோ இசோ­மாட்டா, இலங்­கையில் நில­விய ஊழல்­களால் பாதிக்­கப்­பட்ட ஒரு நாடாக ஜப்பான் உள்­ள­தாக குமு­றி­யி­ருந்­தமை குறிப்­பி­டத்­தக்­கது.

இலங்­கையில் முத­லீ­டு­களைச் செய்­வதில் ஜப்­பா­னிய நிறு­வ­னங்கள் சிர­மங்­களை எதிர்­நோக்­கு­வ­தா­கவும் கடந்த காலங்­களில் செய்­திகள் வெளி­யா­கி­யி­ருந்­தன. அகியோ இசோ­மாட்­டா­வுக்கு முன்னர், இலங்­கைக்­கான ஜப்­பா­னிய தூது­வ­ராக பதவி வகித்த மிஸு­கோஷி ஹிடேக்­கியும் இலங்­கையில் ஊழல்­களால் ஏற்­படும் பாதிப்­புகள்  குறித்து பல தட­வைகள் பகி­ரங்­க­மாக கருத்து தெரி­வித்­தி­ருந்தார்.

கோட்­டா­பய ராஜ­பக் ஷ காலத்தில், ஜப்­பா­னிய நிறு­வ­ன­மொன்­றிடம் அமைச்சர் ஒருவர் இலஞ்சம் கோரினார் என்ற குற்­றச்­சாட்டு பர­ப­ரப்பை ஏற்­ப­டுத்­தி­யி­ருந்­தது.

அதே­வேளை, சர்­வ­தேச அபி­வி­ருத்­திக்­கான ஜப்­பா­னிய முக­வ­ரத்தின் (ஜெய்க்கா) உத­வி­யுடன் மேற்­கொள்ளத் திட்­ட­மி­டப்­பட்­டி­ருந்த 1.5 பில்­லியன் டொலர் பெறு­ம­தி­யான, இலகு ரயில் திட்­டத்தை கோட்­டா­பய ராஜ­பக் ஷ அர­சாங்கம் 2021 ஆம் ஆண்டில்  ஒரு ­த­லை­பட்­ச­மாக இரத்து செய்­தமை பெரும் சர்ச்­சையை ஏற்­ப­டுத்­தி­யி­ருந்­தது.

இது குறித்து ஜப்பான் கடும் அதி­ருப்தி கொண்­டி­ருந்­தது. அதன்பின் இலங்­கையின் பொரு­ளா­தார நெருக்­க­டி­க­ளுக்கு மத்­தியில் ஜப்­பா­னிய உத­வி­யு­ட­னான அபி­வி­ருத்தித் திட்­டங்கள் முடங்­கி­யி­ருந்­தன.

2023 மே மாதம் அப்­போ­தைய ஜனா­தி­பதி ரணில் விக்­கி­ர­ம­சிங்க டோக்­கி­யோ­வுக்கு விஜயம் செய்து ஜப்­பா­னிய பிர­தமர் பூமியோ கிஷி­டாவை சந்­தித்­த­போது,  மேற்­படி திட்டம் இரத்துச் செய்­யப்­பட்­ட­மைக்­காக இலங்கை சார்பில் மன்­னிப்பு கோரினார்.

கடந்த ஜனா­தி­பதித் தேர்­த­லுக்கு 2 மாதங்­க­ளுக்கு முன்னர்,  இலங்­கையில் 11 அபி­வி­ருத்தித் திட்­டப்­ப­ணி­களை மீண்டும் ஆரம்­பிக்­கப்­போ­வ­தாக ஜப்பான் அறி­வித்­தது.

அநு­ர­கு­மார திசா­நா­யக்க ஜனா­தி­ப­தி­யாக பத­வி­யேற்­ற­வுடன், இந்த அபி­வி­ருத்தித் திட்­டங்­கள் மீள ஆரம்­பிக்­கப்­படும் என்­பதை  அப்­போ­தைய ஜப்­பா­னிய தூதுவர் மிஸு­கோஷி ஹிடேக்கி மீள உறு­திப்­ப­டுத்­தினார்.

கடந்த ஜனா­தி­பதித் தேர்­தலின் பின்னர் ஒக்­டோபர் முற்­ப­கு­தியில்  'ஜப்­பா­னிய அபி­வி­ருத்தி வர­லாறும் இலங்­கைக்­கான செய்­தி­களும்' என்ற தலைப்பில் சொற்­பொ­ழி­வு­வொன்றை நிகழ்த்­திய அப்­போ­தைய தூதுவர் மிஸு­கோஷி ஹிடேக்கி, இலங்­கையின் ஊழல்­களை பற்­றிய தனது அவ­தா­னிப்பை வெளி­யிட்டார்.

'இலங்­கைக்கு நான் வந்­தது முதல் அவ­தா­னித்­ததில் இருந்து, இலங்­கையில் ஊழல் தொடர்பில் இரு விட­யங்­களை சுட்­டிக்­காட்ட விரும்­பு­கிறேன். முத­லா­வ­தாக, ஊழ­லா­னது தலை­வர்கள் மீது நாட்டு மக்களுக்கு அவ­நம்­பிக்­கையை ஏற்­ப­டுத்­து­வ­தற்கு ஒரு கார­ண­மா­கி­றது.

தலை­வர்கள் ஊழலில் ஈடு­ப­டும்­போது மக்கள் நாட்டின் பொறுப்­புள்ள குடி­மக்­க­ளாக இருப்­பதை ஊக்­கப்­ப­டுத்­து­வதை அது தடுக்­கி­றது. இது வரி செலுத்­து­வோ­ருக்கு வரி ஏய்ப்பு செய்ய வச­தி­யான சாக்­குப்­போக்­கு­களை வழங்­கு­கி­றது.

இரண்­டா­வ­தாக, இலங்கை வெளி­நாட்டு முத­லீ­டு­களை ஈர்க்க விரும்­பும்­போது இது மிகவும் தீங்கு விளை­விக்­கி­றது' என அவர் குறிப்­பிட்­டி­ருந்தார்.

'ஜப்­பா­னிய நிறு­வ­னங்கள் அவற்றின்  கடப்­பா­டு­களை இறுக்­க­மாக பின்­பற்றி வரு­கின்­றன அதனால் அவை இலஞ்சம் வழங்­க­மாட்டா. இலங்­கையில் ஊழல் கலா­சாரம் தொடர்ந்தால், இங்கு ஜப்­பா­னிய முத­லீ­டுகள் வரு­வ­தற்­கான சாத்­தியம் இல்லை' எனவும் அவர் எச்­ச­ரித்­தி­ருந்தார்.

ஊழலை ஒழிப்­ப­தற்கு உறு­தி  ­பூண்­டுள்ள ஜனா­தி­பதி அநு­ர­கு­மார திசா­நா­யக்­கவை நாட்டின் புதிய தலை­வ­ராக இலங்கை மக்கள் தெரி­வு­செய்­துள்ள நிலையில், நீண்­ட­ கா­ல­மாக நாட்டை சீர்­கு­லைத்துள்ள ஊழலை ஒழிப்­ப­தற்கு அரிய வாய்ப்பு உரு­வா­கி­யுள்­ளது எனவும் முன்னாள்  தூதுவர் ஹிட்­டேக்கி அப்­போது கூறி­யி­ருந்தார்.

இந்­நி­லையில் கடந்த ஆண்டு  நவம்பர் மாதம் இலங்­கைக்­கான ஜப்­பா­னிய தூது­வ­ராக பத­வி­யேற்ற அக்­கியோ இசோ­மாட்­டாவும், இலங்­கையில் ஊழல்­களின் பாதிப்­புகள் குறித்து கார­சா­ர­மான கருத்­து­களை வெளிப்­ப­டுத்தி வரு­கிறார்.

ஊழல் ஒழிப்­புக்­காக 2.5 மில்­லியன் டொலர் உதவி

ஊழலை ஒழிப்­ப­தற்கு உதவும் ஜப்­பானின் திட்­டங்­களின் வரி­சையில், இலங்­கையில் ஊழல் எதிர்ப்பு பொறி­மு­றை­களை வலுப்­ப­டுத்­தவும், பொது நிர்­வா­கத்தில் வெளிப்­படைத் தன்மை மற்றும் பொறுப்­புக்­கூ­றலை ஊக்­கு­விக்­கவும் மூன்றாண்டுத் திட்­டத்­துக்கு 2.5 மில்­லியன் அமெ­ரிக்க டொலர் மானி­யத்தை வழங்கும் ஒப்­பந்­த­மொன்று கொழும்பில் கடந்த முதலாம் திகதி கையெ­ழுத்­தி­டப்­பட்­டது.

ஐக்­கிய நாடுகள் அபி­விருத்தித் திட்­டத்தின் (யூ.என்.டி.பி) உத­வி­யுடன் செயல்­ப­டுத்­தப்­படும் இத்­திட்­டத்­துக்கு ஜப்பான் நிதி அளிக்­கி­றது.  

இலங்­கைக்­கான ஜப்­பா­னிய தூதுவர் அகியோ இசோ­மாட்டா மற்றும் யூ.என்.டி.பி.யின்  இலங்­கைக்­கான வதி­விட பிர­தி­நிதி அசுசா குபோடா ஆகியோர் இந்த ஒப்­பந்­தத்தில் கையெ­ழுத்­திட்­டனர்.  நீதி அமைச்சர் ஹர்ஷா நாண­யக்­கார,  சட்ட மா அதிபர் பாரிந்த ரண­சிங்க, இலஞ்ச ஊழல்கள் விசா­ரணை ஆணைக்­கு­ழுவின் ஆணை­யா­ளர்களான கே.பி. ராஜ­பக் ஷ, சேதிய குண­சே­கர, ஜனா­தி­பதி செய­லாளர் கலா­நிதி நந்­திக்க கும­நா­யக்க   ஆகி­யோரும் இந்­நி­கழ்வில் கலந்­து­கொண்­டி­ருந்­தனர்.

இத் திட்டமானது ஊழலை எதிர்த்துப் போரா­டு­வ­தற்கு நிறு­வன திறனை மேம்­ப­டுத்­துதல், பொது நிர்­வாகம், முத­லீ­டு­களில் வெளிப்­படைத் தன்­மையை மேம்­ப­டுத்­துதல்,  திற­மை­யான வழக்கு விசா­ரணை மற்றும் பொது பொறுப்­புக்­கூ­றலை உறு­திப்­ப­டுத்­துதல் ஆகி­ய­வற்றை நோக்­க­மாகக் கொண்­டுள்­ளது என இலங்­கைக்­கான ஜப்­பா­னிய தூத­ரகம் தெரி­வித்­துள்­ளது.

அத்­துடன், இத்­திட்­ட­ம், நிறு­வ­னங்­களில் ஊழலைத் தடுப்­ப­தற்கு ஆளுகை பொறி­மு­றை­களை வலுப்­ப­டுத்­துதல், விசா­ரணை நடை­மு­றை­களை மேம்­ப­டுத்­துதல், பங்­கு­தா­ரர்­க­ளி­டையே ஒருங்­கி­ணைப்பை மேம்­ப­டுத்­துதல், குடி­மக்­களை மேம்­ப­டுத்­துதல், மற்றும் ஊழல் வழக்­குகள் தொடர்­பான சட்ட நட­வ­டிக்­கை­களின் தரத்தை வலுப்­ப­டுத்­துதல் ஆகி­ய­வற்றில் கவனம் செலுத்தும். இது குறிப்­பாக இளை­ஞர்கள், ஊடக வல்­லு­நர்கள் மற்றும் குழந்­தைகள் மத்­தியில் ஊழல் எதிர்ப்பு முயற்­சி­களில் குடி­மக்­களின் ஈடு­பாட்டை ஊக்­கு­விக்­கவும் முயல்­கி­றது எனவும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

இந்­நி­கழ்வில் உரை­யாற்­றிய ஐ.நா. அபி­வி­ருத்தித் திட்­டத்தின் (யூ.என்.டி.பி.) வதி­விடப் பிர­தி­நிதி அசுசா குபோடா, ‘‘இலங்கை ஊழலை எதிர்­கொள்ள தீர்க்­க­மான நட­வ­டிக்­கை­களை எடுத்து வரும் ­நி­லையில், ஜப்பனிய அரசு, மக்­களின் தாரா­ள­மான நிதி­யு­த­வி­யுடன் இலஞ்சம் மற்றும் ஊழல்கள் தொடர்­பான விசா­ரணை ஆணைக்­கு­ழு­வு­ட­னான இந்த கூட்­டாண்மை, நல்­லாட்­சியை நோக்­கிய எமது கூட்டு பய­ணத்தில் ஒரு முக்­கிய தரு­ணத்தை குறிக்­கி­றது. இந்தத் திட்­டத்தின் தொடக்கம், நிறு­வ­னங்­களை வலுப்­ப­டுத்­து­வது மட்­டு­மல்ல, இது பொது நம்­பிக்­கையை மீட்­டெ­டுப்­பது, குடி­மக்­களை மேம்­ப­டுத்­து­வது, அனை­வ­ருக்கும் சம­மான வாய்ப்பை உரு­வாக்­கு­வது தொடர்­பா­னது. 2025 – 2029 காலத்­துக்­கான இலங்­கையின் தேசிய ஊழல் எதிர்ப்பு செயல் திட்­டத்தை செயல்­ப­டுத்­து­வதன் மூலம், நிலை­யான வளர்ச்­சிக்கு அமைப்பு ரீதி­யான தடை­களை அகற்றி, வெளிப்­படைத் தன்மை மற்றும் பொறுப்புக்கூறல் கலாசாரத்தை வளர்க்கும் ஒரு சமூக அளவிலான அணுகுமுறையை ஆதரிப்பதை நாம் நோக்கமாகக் கொண்டுள்ளோம். ஊழல் எதிர்ப்பு முயற்சிகள் தொடர்ந்து நீடிப்பது மட்டுமல்லாமல், மாற்றத்தை ஏற்படுத்துவதையும் உறுதி செய்ய, தேசிய பங்காளிகளுடன் இணைந்து யூ.என்.டி.பி. தொடர்ந்து பணியாற்ற உறுதிபூண்டுள்ளது’’ எனவும் குறிப்பிட்டிருந்தார்.

கடந்த காலங்களிலும், இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு மற்றும் நீதித்துறை அதிகாரிகளுக்கு ஊழல் ஒழிப்பு தொடர்பான பயிற்சிகள், செயலமர்வுகளை நடத்துவதற்கும் ஜப்பான் உதவியிருந்தது.

பாலியல் இலஞ்சம் தொடர்பாகவும் இலங்கையின் மருத்துவ, சட்டத்துறையினருக்கு விழிப்புணர்வு கருத்தரங்குகளை நடத்தவும் ஜப்பானின் ஜெய்க்கா நிறுவனம் உதவியளித்திருந்தது.

பல நாடுகள், அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பில் இலங்கைக்கு உதவ முன்வந்த நிலையில், இலங்கையில் ஊழல்களை வேரறுக்க உதவுதற்கும் ஜப்பான் ஆர்வம் செலுத்துகின்றது.

https://www.virakesari.lk/article/220488

  • கருத்துக்கள உறவுகள்

எங்கே ஜப்பானுக்கு எதிராக ஒருவரும் குரைக்க காணோம்?

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.