Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

'முழு நாடுமே ஒன்றாக - தேசிய செயற்பாடு' - 971 சந்தேக நபர்கள் கைது

Oct 31, 2025 - 03:20 PM -

'முழு நாடுமே ஒன்றாக - தேசிய செயற்பாடு' - 971 சந்தேக நபர்கள் கைது

'முழு நாடுமே ஒன்றாக' என்ற தேசிய செயற்திட்டத்தின் கீழ், பொலிஸார் நாடு முழுவதும் மேற்கொண்ட போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கையின் கீழ், நேற்றைய தினம் 987 சுற்றிவளைப்புகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 

இந்தச் சுற்றிவளைப்புகளின்போது, போதைப்பொருள் குற்றங்கள் தொடர்பில் 371 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கை மூலம், மொத்தமாக 971 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தெரிவித்துள்ளது. 

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 22 பேருக்கு எதிராகத் தடுப்புக் காவல் உத்தரவுகள் பெறப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு மேலும் அறிவித்துள்ளது. 

அத்துடன், கைது செய்யப்பட்ட நபர்களில் 10 பேர் புனர்வாழ்வுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

https://adaderanatamil.lk/news/cmheoaqth01b3o29nqg3z56h8

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

“முழு நாடுமே ஒன்றாக” போதைப்பொருள் சுற்றிவளைப்பில் 1076 பேர் கைது!

01 Nov, 2025 | 02:45 PM

image

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையில் நாடளாவிய ரீதியில் நேற்று வெள்ளிக்கிழமை 9031) மேற்கொள்ளப்பட்ட “முழு நாடுமே ஒன்றாக” என்ற தேசிய செயற்பாட்டின் போதைப்பொருள் சுற்றிவளைப்பின் போது  1076 பேர்  கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் எஃப்.யு. வுட்லர் தெரிவித்துள்ளார். 

இந்த போதைப்பொருள் சுற்றிவளைப்பின் போது 1072 சோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இதன்போது, ஹெரோயின் போதைப்பொருளுடன் 407 பேரும், ஐஸ் போதைப்பொருளுடன் 354 பேரும், ஹேஷ் போதைப்பொருளுடன்  43 பேரும், கஞ்சா போதைப்பொருளுடன் 268 பேரும், போதை மாத்திரைகளுடன் 41  பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைதுசெய்யப்பட்டவர்களில் 20 பேர் புனர்வாழ்வு நிலையங்களுக்கு அனுப்பி வைக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் எஃப்.யு. வுட்லர் மேலும் தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/229230

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

“முழு நாடுமே ஒன்றாக” போதைப்பொருள் சுற்றிவளைப்பில் 1282 பேர் கைது!

03 Nov, 2025 | 11:55 AM

image

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையில் நாடளாவிய ரீதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (02) மேற்கொள்ளப்பட்ட “முழு நாடுமே ஒன்றாக” என்ற தேசிய செயற்பாட்டின் போதைப்பொருள் சுற்றிவளைப்பின் போது  1282 பேர்  கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இந்த போதைப்பொருள் சுற்றிவளைப்பின் போது நாடளாவிய ரீதியில் 1274 சோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இதன்போது, 86 கிலோ 153 கிராம் ஹெரோயின் போதைப்பொருளும், 252 கிலோ 129 கிராம்  ஐஸ் போதைப்பொருளும், 18 மில்லிகிராம் கொக்கேயின் போதைப்பொருளும், 05 கிலோ 391 கிராம்  615 மில்லிகிராம் கஞ்சா போதைப்பொருளும், 37871 கஞ்சா செடிகளும், 02 கிராம் 195 மில்லிகிராம் குஷ் போதைப்பொருளும்,  06 கிராம் 88 மில்லிகிராம் ஹசீஸ் போதைப்பொருளும், 1647 போதை மாத்திரைகளும் , 91 மதன மோதக மாத்திரைகளும் , 140 கிராம் 16 மில்லிகிராம் மாவா உள்ளிட்ட போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

கைதுசெய்யப்பட்டவர்களில் 26 பேர் புனர்வாழ்வு நிலையங்களுக்கு அனுப்பி வைக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் எஃப்.யு. வுட்லர் மேலும் தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/229353

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

‘முழு நாடுமே ஒன்றாக’ போதைப்பொருள் தடுப்புத் திட்டம்: பலர் கைது!

Published By: Digital Desk 1

09 Nov, 2025 | 11:20 AM

image

நாடு முழுவதும் போதைப்பொருளை தடுக்கும் “முழு நாடுமே ஒன்றாக” தேசிய வேலைத்திட்டத்தின் கீழ், பொலிஸ்மா அதிபரின் அறிவுறுத்தலுக்கமைய, இலங்கை பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்டு வரும் தொடர்ச்சியான, போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகளின் போது பலர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர்களிடமிருந்து போதைப்பொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.

அதன்படி, நேற்று சனிக்கிழமை (08) முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கைகளுக்கமைய, 5 கிலோ கிராம் 782 கிராம் ஹெரோயின், 827 கிராம் ஐஸ், 71 கிலோ கிராம் 682 கிராம் கஞ்சா, 275,501 கஞ்சா செடிகள்,4 கிராம் குஷ் ரக போதைப்பொருள், 25 கிராம் ஹஷீஷ் ரக போதைப்பொருள், 637 போதை மாத்திரைகள் மற்றும் 1 கிலோகிராம் 585 கிராம் மாவா போதைப்பொருள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.

அதேநேரம், குறித்த போதைப்பொருட்களுடன் தொடர்புடைய 994 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும், தடுப்புக்காவல் உத்தரவு பெற்ற 25 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அதேநேரம், 1,000 சோதனைகள் நடத்தப்பட்டுள்ளதுடன், மறுவாழ்வு நிலையங்களுக்கு 5 பேர் அனுப்பி வைக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

https://www.virakesari.lk/article/229889

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஒரே நாளில் 1,000 இற்கும் அதிகமான சுற்றிவளைப்புக்கள்; 1,284 பேர் கைது

Nov 10, 2025 - 12:47 PM

ஒரே நாளில் 1,000 இற்கும் அதிகமான சுற்றிவளைப்புக்கள்; 1,284 பேர் கைது

விஷப் போதைப்பொருட்களை நாட்டிலிருந்து அகற்றும் 'முழு நாடுமே ஒன்றாக' தேசிய நடவடிக்கையின் கீழ், நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புகளில், கடந்த தினத்தில் மாத்திரம் போதைப்பொருள் குற்றங்கள் தொடர்பில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

நேற்று (09) ஆயிரம் சுற்றிவளைப்புகள் மேற்கொள்ளப்பட்டதாகவும், இதில் 1,284 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். 

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களிடமிருந்து 7 கிலோ 21 கிராம் ஹெரோயினும், 4 கிலோ 715 கிராம் 'ஐஸ்' போதைப்பொருளும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன. 

இது தவிர, ஹஷிஷ், கஞ்சா மற்றும் போதை மாத்திரைகள் உள்ளிட்ட மேலும் பல போதைப்பொருட்களும் கைப்பற்றப்பட்டதாகப் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். 

இந்த நடவடிக்கையின் போது கைது செய்யப்பட்ட 16 சந்தேகநபர்களுக்குத் தடுப்பு காவல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதுடன், மேலும் 15 பேர் புனர்வாழ்வுக்காக அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதன்படி, 'முழு நாடுமே ஒன்றாக' தேசிய நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்ட ஒக்டோபர் மாதம் 30ஆம் திகதி முதல் இதுவரை மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புகளில் 12,000 இற்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டுள்ளதாகப் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

https://adaderanatamil.lk/news/cmhst7y8z01i0o29nohx71ze2

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

"முழு நாடுமே ஒன்றாக" போதைப்பொருள் சுற்றிவளைப்பில் பலர் கைது!

Published By: Digital Desk 1

11 Nov, 2025 | 10:46 AM

image

நாடு முழுவதும் போதைப்பொருளை தடுக்கும் “முழு நாடுமே ஒன்றாக” தேசிய வேலைத்திட்டத்தின் கீழ், பொலிஸ்மா அதிபரின் அறிவுறுத்தலுக்கமைய, இலங்கை பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்டு வரும் தொடர்ச்சியான, போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகளின் போது பலர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர்களிடமிருந்து போதைப்பொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, நேற்று திங்கட்கிழமை (10) முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கைகளுக்கமைய, 732 கிராம் ஹெரோயின், 583 கிராம் ஐஸ், 2 கிலோகிராம் 160 கிராம் கஞ்சா, 18 கஞ்சா செடிகள், 28 கிராம் குஷ்ரக போதைப்பொருள், 53 கிராம் ஹஷீஷ் ரக போதைப்பொருள், 5387 போதை மாத்திரைகள் மற்றும் 636 கிராம் மாவா போதைப்பொருள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.

அதேநேரம், குறித்த போதைப்பொருட்களுடன் தொடர்புடைய 1,060 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும், தடுப்புக்காவல் உத்தரவு பெற்ற 36 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அதேநேரம், 1,066 சோதனைகள் நடத்தப்பட்டுள்ளதுடன், மறுவாழ்வு நிலையங்களுக்கு 24 பேர் அனுப்பி வைக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

https://www.virakesari.lk/article/230057

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

“முழு நாடுமே ஒன்றாக” போதைப்பொருள் சுற்றிவளைப்பு; 15 நாட்களில் 16,738 பேர் கைது!

14 Nov, 2025 | 04:13 PM

image

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையில் நாடளாவிய ரீதியில் ஒக்டோபர் 30 ஆம் திகதி முதல் நவம்பர் 13 ஆம் வரையான காலப்பகுதிக்குள் மேற்கொள்ளப்பட்ட “முழு நாடுமே ஒன்றாக” என்ற தேசிய செயற்பாட்டின் போதைப்பொருள் சுற்றிவளைப்பின் போது   16,738 பேர்  கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இந்த போதைப்பொருள் சுற்றிவளைப்பின் போது நாடளாவிய ரீதியில் 16,915 சோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இதன்போது, 110 கிலோ 556 கிராம் ஹெரோயின் போதைப்பொருளும், 600 கிலோ 947 கிராம்  ஐஸ் போதைப்பொருளும், 10 கிராம் கொக்கேயின் போதைப்பொருளும், 458 கிலோ 216 கிராம் கஞ்சா போதைப்பொருளும், 1,015,632 கஞ்சா செடிகளும், 4 கிலோ 847 கிராம் குஷ் போதைப்பொருளும், 25 கிலோ 483 கிராம் ஹசீஸ் போதைப்பொருளும், 41,874 மாத்திரைகளும் , 36 கிலோ 176 கிராம் மாவா உள்ளிட்ட போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

கைதுசெய்யப்பட்டவர்களில் 313  பேர் புனர்வாழ்வு நிலையங்களுக்கு அனுப்பி வைக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

https://www.virakesari.lk/article/230355

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையில் ஒரே நாளில் 1,115 பேர் கைது

Nov 16, 2025 - 11:20 AM

போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையில் ஒரே நாளில் 1,115 பேர் கைது

போதைப்பொருள் ஒழிப்புக்கான "முழு நாடுமே ஒன்றாக" தேசிய நடவடிக்கையின் கீழ் நேற்று (15) மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புகளில் 1,000க்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

நேற்று ஒரு நாளில் 1,131 சுற்றிவளைப்புகள் மேற்கொள்ளப்பட்டதாகவும், அதில் 1,115 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். 

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களிடமிருந்து பின்வரும் போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன: 

ஹெரோயின்: 531 கிராம், ஐஸ் : 754 கிராம், கஞ்சா: 8 கிலோ 953 கிராம், போதை மாத்திரைகள்: 249 மாத்திரைகள் உட்பட பல போதைப்பொருட்கள். 

மேலும், 31 சந்தேகநபர்களுக்குத் தடுப்புக் காவல் உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளதுடன், 63 பேர் புனர்வாழ்வுக்காக அனுப்பப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

https://adaderanatamil.lk/news/cmi1argth01nio29n2zjtv146

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

“முழு நாடுமே ஒன்றாக” போதைப்பொருள் சுற்றிவளைப்பு : 931 பேர் கைது!

Published By: Digital Desk 1

18 Nov, 2025 | 11:02 AM

image

நாடு முழுவதும் போதைப்பொருளை தடுக்கும் “முழு நாடுமே ஒன்றாக” தேசிய வேலைத்திட்டத்தின் கீழ், பொலிஸ்மா அதிபரின் அறிவுறுத்தலுக்கமைய, இலங்கை பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்டுவரும் தொடர்ச்சியான, போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகளின்போது, பலர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர்களிடமிருந்து போதைப்பொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

அதன்படி, நேற்று திங்கட்கிழமை (17) முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கைகளுக்கமைய, 677 கிராம் ஹெரோயின், 1 கிலோகிராம் 177 கிராம் ஐஸ், 63 கிலோகிராம் 495 கிராம் கஞ்சா, 23,097 கஞ்சா செடிகள், 273 கிராம் குஷ்ரக போதைப்பொருள், 49 கிராம் ஹஷீஷ் ரக போதைப்பொருள், 1357 போதை மாத்திரைகள் மற்றும் 2 கிலோகிராம் 319 கிராம் மாவா போதைப்பொருள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.

அதேநேரம், குறித்த போதைப்பொருட்களுடன் தொடர்புடைய 931 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.மேலும், தடுப்புக்காவல் உத்தரவு பெற்ற 34 பேரும், சட்டவிரோத சொத்துக்கள் தொடர்பான விசாரணைக்கமைவாக இருவரும்; கைது செய்யப்பட்டுள்ளனர்.

அதேநேரம், 936 சோதனைகள் நடத்தப்பட்டுள்ளதுடன், 64 பேர் மறுவாழ்வு நிலையங்களுக்கு அனுப்பிவைக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

https://www.virakesari.lk/article/230655

  • 1 month later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

“முழு நாடுமே ஒன்றாக” போதைப்பொருள் சுற்றிவளைப்பில் இதுவரை 47,703 பேர் கைது!

19 Dec, 2025 | 04:40 PM

image

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையில் நாடளாவிய ரீதியில் ஒக்டோபர் 30 ஆம் திகதி முதல் டிசம்பர் 18 ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் மேற்கொள்ளப்பட்ட “முழு நாடுமே ஒன்றாக” என்ற தேசிய செயற்பாட்டின் போதைப்பொருள் சுற்றிவளைப்பின் போது 47703  பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இந்த போதைப்பொருள் சுற்றிவளைப்பின் போது இதுவரை 48085 சோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இதன்போது, 276 கிலோ 374 கிராம் ஹெரோயின் போதைப்பொருளும், 1002 கிலோ 923 கிராம் ஐஸ் போதைப்பொருளும், 05 கிலோ 736 கிராம் கொக்கேயின் போதைப்பொருளும்,  1411  கிலோ  936 கிராம் கஞ்சா போதைப்பொருளும், 2899514 கஞ்சா செடிகளும், 65 கிலோ 836 கிராம் குஷ் போதைப்பொருளும்,  40 கிலோ 370 கிராம் ஹசீஸ் போதைப்பொருளும், 101201 போதை மாத்திரைகளும், 17 கிலோ  571 கிராம் 861 மில்லிகிராம் மதனமோதக மாத்திரைகளும், 86 கிலோ 373 கிராம் மாவா போதைப்பொருளும் கைப்பற்றப்பட்டுள்ளன.

கைதுசெய்யப்பட்டவர்களில் 1130 பேர் புனர்வாழ்வு நிலையங்களுக்கு அனுப்பி வைக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் ஊடகப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

4.jpg

https://www.virakesari.lk/article/233860

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.