Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அரசாங்கத்தால் வழங்கப்பட்ட வீடுகளில் 600 வீடுகள் வவுனியாவில் பூட்டப்பட்ட நிலையில் உள்ளது: பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அரசாங்கத்தால் வழங்கப்பட்ட வீடுகளில் 600 வீடுகள் வவுனியாவில் பூட்டப்பட்ட நிலையில் உள்ளது: பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க

Published By: Vishnu

13 Feb, 2026 | 11:01 PM

image

அரசாங்கத்தால் வழங்கப்பட்ட வீடுகளில் 600 வீடுகள் வவுனியாவில் பூட்டப்பட்ட நிலையில் உள்ளதாக வவுனியா மாவட்ட ஒருங்கிணைப்பு குழுத் தலைவரும் பிரதி அமைச்சருமான உபாலி சமரசிங்க தெரிவித்தார்.

வவுனியா பிரதேச செயலகத்தில் வெள்ளிக்கிழமை (13) இடம்பெற்ற ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தின் போதே இவ்வாறு தெரிவிக்கப்பட்டிருந்தது.

தேசிய வீடமைப்பு அதிகார சபையால் வவுனியா மாவட்டத்தில் 3349 வீடுகள் வழங்கப்பட்டிருந்தன. முல்லைத்தீவில் 3457 வீடுகளும், மன்னார் மாவட்டத்தில் 2554 வீடுகளும் வழங்கப்பட்டிருந்தன. வவுனியா மாவட்டத்தில் பல வீடுகள் இறுதி கட்டத்தில் உள்ளது. பூர்த்தி செய்யும் நிலையில் உள்ள வீடுகளுக்கான வேலைகளை முடித்து விட்டால் வவுனியாவில் 900 வீடுகள் பூர்த்தியாகும். அவை சின்ன வேலைகளில் தங்கியுள்ளது என பாராளுமன்ற உறுப்பினர் ப.சத்தியலிங்கம் தெரிவித்தார். இதற்கு பதில் அளித்த போதே கூட்டுறவுத்துறை பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,  

வவுனியாவில் அரசாங்கத்தால் வழங்கப்பட்ட வீடுகளில் 600 வீடுகள் மூடப்பட்ட நிலையில் உள்ளது. கடந்த அரசாங்கத்தின் போது சில குடும்பங்களுக்கு இரண்டு, மூன்று வீடுகள் வழங்கப்கப்பட்டு அதில் அவர் குடியிருக்காமல் பூட்டப்பட்டுள்ளது. அவ்வாறு 600 வீடுகள் உள்ளது. மடுகந்த, குடாகச்சகொடி, ஈரப்பெரியகுளம், கலாபோகஸ்வேவ போன்ற இடங்களில் அவ்வாறு வீடுகள் உள்ளன.

சஜித் பிரேமதாசாவால் வீடுகள் வழங்கப்பட்டர்களில் வேறு வீடுகள் இல்லாதவர்களின் வீடுகளை பூர்த்தி செய்ய நடவடிக்கை எடுப்போம். அரசியலுக்காக இவ்வாறு பல இடங்களில் வழங்கப்பட்டுளளது. மன்னாரில் 1500 வீடுகள் உள்ளது. அவ்வாறான வீடுகளை மீள எடுத்து வீடு இல்லாத மக்களுக்கு வழங்குவது குறித்து கவனம் செலுததியுள்ளோம். பாதிக்கப்பட்ட வீடு இல்லாத மக்களுக்கு வீடுகள் வழங்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.

https://www.virakesari.lk/article/238611

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.