Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அமெரிக்க ஏகாதிபத்தியமும் சியோனிச இஸ்ரேலும் தோற்கடிக்கப்பட வேண்டும் - புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சி தெரிவிப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்க ஏகாதிபத்தியமும் சியோனிச இஸ்ரேலும் தோற்கடிக்கப்பட வேண்டும் - புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சி தெரிவிப்பு

29 Mar, 2026 | 01:06 PM

image

(க.சிவலிங்கமூர்த்தி)

மத்திய கிழக்கின் இறையாண்மை கொண்ட நாடான ஈரான் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து தொடுத்துள்ள ஆக்கிரமிப்புப் போர் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் எனவும், உலக மேலாதிக்கச் சக்தியான அமெரிக்க ஏகாதிபத்தியமும் அதன் கூட்டாளியான சியோனிச இஸ்ரேலும் தோற்கடிக்கப்பட வேண்டும் எனவும் புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சி அறைகூவல் விடுத்துள்ளது.

இது தொடர்பாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் சி.கா. செந்திவேல் விடுத்துள்ள விசேட அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது

மத்திய கிழக்கில் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த ஈரான் நாட்டை ஆக்கிரமித்து, அங்கு தமக்குச் சாதகமான ஒரு கைப்பொம்மை ஆட்சியை நிறுவுவதே அமெரிக்காவினதும் இஸ்ரேலினதும் நோக்கமாகும். 

கடந்த பெப்ரவரி மாதம் 28ஆம் திகதி ஈரானுக்கு எதிராகத் தொடங்கப்பட்ட இந்தக் கொடிய போர், தற்போது ஒரு மாதத்தை எட்டியுள்ளது. தனது உலக மேலாதிக்கத்தைத் தக்கவைக்க அமெரிக்காவும், தனது விரிவாக்கக் கனவை நனவாக்க இஸ்ரேலும் இணைந்து இந்த அநீதியான போரை முன்னெடுத்து வருகின்றன.

அமெரிக்கா உலகின் முதல் நிலை வல்லரசு என்றும், இஸ்ரேல் அசைக்க முடியாத பலம் கொண்ட நாடு என்றும் கட்டமைக்கப்பட்டிருந்த பிம்பங்கள், ஈரானிய மக்களின் வீரமிக்க எதிர்ப்பினால் இன்று உடைந்து நொறுங்கி வருகின்றன. 'மக்களே உலக வரலாற்றின் உந்துசக்தி' என்பதை ஈரானிய மக்கள் இன்று உலகுக்கு நிரூ

பித்துக் காட்டியுள்ளனர். ஏகாதிபத்திய எதிர்ப்பில் உறுதியாக நிற்கும் ஈரானிய மக்களுக்கும் அந்நாட்டு ஆட்சியாளர்களுக்கும் எமது கட்சியும் இலங்கை மக்களும் தமது முழுமையான ஆதரவையும் ஒருமைப்பாட்டையும் தெரிவிக்கின்றனர்.

ஏகாதிபத்தியம் என்பது போர் மற்றும் இரத்தத்தால் ஆனது என்பதை நடப்பு நிகழ்வுகள் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளன. இப்போரின் விளைவாக இலங்கை உள்ளிட்ட மூன்றாம் உலக நாடுகள் கடும் பொருளாதார நெருக்கடிகளைச் சந்தித்து வருகின்றன. 

எரிபொருள் தட்டுப்பாடு, அநியாயமான விலை ஏற்றம் மற்றும் பொருளாதார வீழ்ச்சி போன்றவற்றால் கோடிக்கணக்கான உழைக்கும் மக்களின் அன்றாட வாழ்வு சிதைக்கப்பட்டுள்ளது. பசி, பட்டினி மற்றும் வேலையில்லாத் திண்டாட்டத்தை உலக மக்களுக்குப் பரிசாக அளிக்கும் முதலாளித்துவ சக்திகள், மக்களின் வளங்களைச் சுரண்டி நவீன போராயுதங்களை உற்பத்தி செய்வதிலேயே குறியாக உள்ளனர்.

உலக மக்களின் பொது எதிரியான அமெரிக்க ஏகாதிபத்தியத்தையும் அதன் கூட்டாளியான சியோனிச இஸ்ரேலையும் முறியடிப்பது இன்றைய காலத்தின் உடனடித் தேவையாகும். எனவே, ஏகாதிபத்திய மேலாதிக்கத்தை எதிர்த்துப் போராட அனைத்து இடதுசாரி, முற்போக்கு மற்றும் ஜனநாயகச் சக்திகள் ஓரணியில் திரள வேண்டும் என எமது கட்சி கேட்டுக்கொள்கிறது என்றார்.

https://www.virakesari.lk/article/242217

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.