Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

"இரத்தக்கறை படிந்த கைகளுடன் செய்யும் பிரார்த்தனையை கடவுள் கேட்கமாட்டார்": போர் தொடுக்கும் தலைவர்களுக்கு பாப்பரசர் லியோ கடும் எச்சரிக்கை!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

"இரத்தக்கறை படிந்த கைகளுடன் செய்யும் பிரார்த்தனையை கடவுள் கேட்கமாட்டார்": போர் தொடுக்கும் தலைவர்களுக்கு பாப்பரசர் லியோ கடும் எச்சரிக்கை!

Published By: Digital Desk 3

29 Mar, 2026 | 05:09 PM

image

(இணையத்தள சர்வதேச செய்திப் பிரிவு)

ஈரான் மீதான போர் ஒரு மாதத்தை கடந்துள்ள நிலையில், வத்திக்கான் பாப்பரசர் லியோ உலகத் தலைவர்களை நோக்கி மிகக் கடும் விமர்சனங்களை முன்வைத்துள்ளார். போரை நியாயப்படுத்த எவரும் இயேசுவின் பெயரைப் பயன்படுத்த முடியாது என அவர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

பல்லாயிரக்கணக்கான விசுவாசிகள் திரண்டிருந்த புனித பேதுரு சதுக்கத்தில் ஞாயிற்றுக்கிழமை (29) உரையாற்றிய பாப்பரசர்,

"எமது கடவுளான இயேசு அமைதியின் அரசர். அவர் போரை வெறுக்கிறார். போரை நியாயப்படுத்த எவரும் அவரைப் பயன்படுத்த முடியாது எனத் தெரிவித்துள்ளார்.

எந்தவொரு தலைவரின் பெயரையும் அவர் நேரடியாகக் குறிப்பிடவில்லை என்றாலும், ஈரானில் தாக்குதலை நடத்தி வரும் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலியத் தலைவர்களையே அவர் சூசகமாகச் சாடியுள்ளதாக அரசியல் அவதானிகள் கருதுகின்றனர்.

திருவிவிலியத்தின் வாசகங்களை மேற்கோள் காட்டிப் பேசிய அவர், "போர் புரியும் தலைவர்கள் எத்தனை பிரார்த்தனைகளைச் செய்தாலும் கடவுள் அவற்றைச் செவிமடுக்க மாட்டார். ஏனெனில் உங்களது கைகள் இரத்தத்தால் நிறைந்துள்ளன," எனக் குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்க பாதுகாப்புச் செயலாளர் பீட் ஹெக்செத் (Pete Hegseth) உள்ளிட்ட அதிகாரிகள், ஈரானுக்கு எதிரான போரை ஒரு 'கிறிஸ்தவ தேசத்தின் புனிதப் போர்' எனச் சித்தரித்து வருவதற்கு பாப்பரசர் லியோ மறைமுகமாகப் பதிலடி கொடுத்துள்ளார்.

இயேசு தன்னை கைது செய்ய வந்தவர்கள் மீது வாள் வீசிய சீடரைத் தடுத்த சம்பவத்தை நினைவு கூர்ந்த பாப்பரசர், வன்முறை எப்போதும் கடவுளால் நிராகரிக்கப்படும் ஒன்றே என வலியுறுத்தியுள்ளார்.

அமெரிக்காவில் பிறந்த முதல் பாப்பரசர் என்ற பெருமைக்குரிய லியோ, தனது சொந்த நாட்டின் போர் நடவடிக்கைகளை இவ்வாறு பகிரங்கமாக விமர்சித்து வருவது சர்வதேச இராஜதந்திர வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அத்துடன், பொதுமக்கள் செறிந்து வாழும் பகுதிகளில் நடத்தப்படும் வான்வழித் தாக்குதல்களை உடனடியாகத் தடை செய்ய வேண்டும் எனவும் அவர் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.

https://www.virakesari.lk/article/242245

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.