Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இரானை "கற்காலத்திற்கே" தள்ளுவோம் என எச்சரித்த டிரம்ப் - போர் குறித்த நிலைப்பாடு குழப்பம் தருகிறதா?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இரானை "கற்காலத்திற்கே" தள்ளுவோம் என எச்சரித்த டிரம்ப் - போர் குறித்த நிலைப்பாடு குழப்பம் தருகிறதா?

இரான் அணு ஆயுதங்களைத் தயாரிப்பதற்கு மிக நெருக்கமான நிலைக்கு வந்திருந்ததால், அதன் மீது தாக்குதல் நடத்துவது மிகவும் அவசியமானது என்று டிரம்ப் கூறினார்.

Reuters

தனது 19 நிமிட உரையில், இரானுக்கு எதிரான போரின் நோக்கம் நிறைவேறுவதற்கு மிக அருகில் இருப்பதாக டிரம்ப் கூறினார்.

வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்

அமெரிக்கா இரான் மீது குண்டுவீசித் தாக்கி, அந்நாட்டை மீண்டும் 'கற்காலத்திற்கே' தள்ளிவிடும் என்று அதிபர் டொனால்ட் டிரம்ப் மீண்டும் மிரட்டல் விடுத்துள்ளார்.

இந்த வாரத்தின் தொடக்கத்திலும் டிரம்ப் இரான் மீது இதேபோன்றதொரு மிரட்டலை விடுத்திருந்தார்.

இந்திய நேரப்படி வியாழக்கிழமை காலையில் வெள்ளை மாளிகையில் இரான் போர் குறித்துப் பேசிய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், "இரானின் கடற்படை அழிக்கப்பட்டுவிட்டது. அவர்களின் விமானப்படை பேரழிவுக்கு உள்ளாகியுள்ளது. அவர்களின் தலைவர்களில் பெரும்பாலானோர் இறந்துவிட்டனர்" என்று கூறினார்.

இரான் அணு ஆயுதங்களைத் தயாரிப்பதற்கு மிக நெருக்கமான நிலைக்கு வந்திருந்ததால், அதன் மீது தாக்குதல் நடத்துவது மிகவும் அவசியமானது என்றும் டிரம்ப் கூறினார்.

தனது 19 நிமிட உரையில், இரானுக்கு எதிரான போரின் நோக்கம் நிறைவேறுவதற்கு மிக அருகில் உள்ளதாக டிரம்ப் தெரிவித்தார்.

மேலும், "அவர்கள் (இரான்) மீது அடுத்த இரண்டு முதல் மூன்று வாரங்களுக்குள் நாங்கள் ஒரு பெரும் தாக்குதலைத் தொடுக்கவுள்ளோம். அவர்களை மீண்டும் கற்காலத்திற்கே தள்ளிவிடுவோம்; அதுதான் அவர்களுக்குரிய இடமும் கூட," என்று கூறினார்.

டிரம்பின் உரைக்குப் பிறகு உடனடியாக எண்ணெய் விலைகள் உயர்ந்தன மற்றும் ஆசியச் சந்தைகளும் வீழ்ச்சியைப் பதிவு செய்தன.

"இஸ்ரேல் மற்றும் சௌதி அரேபியா, பஹ்ரைன், கத்தார், குவைத் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் போன்ற எங்களது பிற மத்திய கிழக்கு நட்பு நாடுகளின் ஆதரவுக்கு நாங்கள் நன்றி தெரிவித்துக்கொள்கிறோம்" என்று அவர் கூறினார்.

டிரம்பின் கூற்றுப்படி, எந்தத் தூண்டுதலும் இன்றி இரான் இந்த நாடுகளைத் தாக்கியது, இது அந்தப் பிராந்தியத்துக்கு இரான் எவ்வளவு பெரிய அச்சுறுத்தல் என்பதை நிரூபிக்கிறது.

அமெரிக்கா மற்றும் உலகின் பாதுகாப்புக்கு "எபிக் ஃபியூரி" (அமெரிக்கா மேற்கொண்ட ராணுவ நடவடிக்கை) ஏன் அவசியம் என்பதை விளக்குவதற்காக இந்த உரையை வழங்குவதாக டொனால்ட் டிரம்ப் கூறினார்.

இரானுக்கு எதிரான தனது ராணுவ நடவடிக்கைக்கு அமெரிக்கா "எபிக் ஃபியூரி" என்று பெயரிட்டுள்ளது.

கடந்த 47 ஆண்டுகளில், இரான் அல்லது அதன் ஆதரவு குழுக்கள் ஏராளமான பயங்கரவாதத் தாக்குதல்கள் மற்றும் பிற நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக டிரம்ப் கூறினார்.

இரானிய ஆட்சியை "கொலைகார ஆட்சி" என்று டிரம்ப் விவரித்தார். இரானில் சமீபத்தில் போராட்டங்கள் ஒடுக்கப்பட்டதையும், அதில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்டதையும் அவர் குறிப்பிட்டார்.

இத்தகைய தலைவர்கள் அணு ஆயுதங்களைப் பெற அனுமதிக்க முடியாது என்று கூறிய டிரம்ப், "அதை நான் ஒருபோதும் அனுமதிக்க மாட்டேன்" என்றார்.

இந்தப் போர் ஒரு முதலீடு

அமெரிக்கா ஒரு தோற்கடிக்க முடியாத ராணுவ சக்தி என்று டொனால்ட் டிரம்ப் கூறினார். இந்தப் போரை அமெரிக்காவின் எதிர்கால சந்ததியினருக்கான ஒரு "முதலீடு" என்று அவர் குறிப்பிட்டார்.

பின்னர் 20 மற்றும் 21-ஆம் நூற்றாண்டின் போர்களின் கால அளவைக் குறிப்பிட்ட அவர், அவை பல ஆண்டுகள் நீடித்தன என்றும், ஆனால் இந்த மோதல் இதுவரை 32 நாட்களாக மட்டுமே நடந்து வருவதாகவும் கூறினார்.

இரானிய ஆக்கிரமிப்பு மற்றும் "அணுசக்தி மிரட்டல்" ஆகியவற்றால் அமெரிக்க குடிமக்களுக்கு இனி ஆபத்து இல்லை என்று டிரம்ப் தெரிவித்தார். அவரைப் பொறுத்தவரை, அமெரிக்கா இப்போது முன்னெப்போதையும் விட பாதுகாப்பாகவும், வலிமையாகவும், செழிப்பாகவும் இருக்கும்.

எண்ணெய் விலை உயர்வு

பிபிசி வணிகச் செய்தியாளர் பீட்டர் ஹோஸ்கின்ஸின் கூற்றுப்படி, ஹோர்மூஸ் நீரிணை எப்போது திறக்கப்படும் என்பது குறித்து டிரம்பின் உரை சர்வதேச எண்ணெய் சந்தைக்கு எந்த உத்தரவாதத்தையும் அளிக்கவில்லை.

அதிபர் பேசத் தொடங்குவதற்கு முன்பு, ப்ரெண்ட் கச்சா எண்ணெயின் விலை ஒரு பேரல் சுமார் 100 டாலராக இருந்தது.

உரையின் போது விலையில் ஏற்ற இறக்கங்கள் இருந்தன, ஆனால் இப்போது விலை மீண்டும் அதிகரித்து வருகிறது. தற்போது சுமார் 4% உயர்ந்து 105.38 டாலரை எட்டியுள்ளது.

உலகின் எரிசக்தி விநியோகத்தில் சுமார் 20% பொதுவாக இந்த குறுகிய கடல் பாதை வழியாகச் செல்வதால், ஹோர்மூஸ் நீரிணை உலகப் பொருளாதாரத்திற்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக விளங்குகிறது.

பிப்ரவரி 28 அன்று மோதல் தொடங்கியதிலிருந்து இந்த வழித்தடம் கிட்டத்தட்ட மூடப்பட்டுள்ளது. அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் வான்வழித் தாக்குதல்களுக்குப் பதிலடியாக, இந்த நீர்வழியைப் பயன்படுத்தும் கப்பல்களைத் தாக்குவோம் என்று இரான் அச்சுறுத்தியிருந்தது.

டிரம்பின் உரைக்குப் பிறகு, முன்னதாக ஏற்றம் கண்டிருந்த ஆசியாவின் முக்கிய பங்குச் சந்தைகளும் வீழ்ச்சியைக் கண்டுள்ளன.

ஜப்பானின் நிக்கி சுமார் 1.5% சரிந்துள்ளது, அதே சமயம் தென் கொரியாவின் கோஸ்பி 2.6% சரிந்துள்ளது மற்றும் ஹாங்காங்கின் ஹாங் செங் 1% சரிவுடன் வர்த்தகம் செய்யப்படுகிறது.

இரான் போர் முடிவுக்கு வருவதற்கான எந்தவொரு தெளிவான அறிகுறியையும் டிரம்பின் உரை வழங்காததால் முதலீட்டாளர்கள் கவலையடைந்துள்ளனர்.

பிப்ரவரி மாத இறுதியில் இரான் போர் தொடங்கியதிலிருந்து ஆசிய பங்குச் சந்தைகள் ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகின்றன.

போர் முடிவுக்கு வரும் என்ற எதிர்பார்ப்பு சில நேரங்களில் கடும் உயர்வுக்கு வழிவகுத்தது, அதே சமயம் போர் தீவிரமடைவதற்கான அறிகுறிகள் பங்குகளை பெரும் விற்பனை சரிவுகளுக்கு இட்டுச் சென்றுள்ளன.

இந்த மோதலின் தாக்கத்தால் ஆசியா குறிப்பாகப் பாதிக்கப்படக்கூடிய நிலையில் உள்ளது. ஏனெனில் இந்தியா, ஜப்பான் மற்றும் தென் கொரியா போன்ற இப்பிராந்தியத்தின் பல முக்கிய நாடுகள் எரிசக்தி விநியோகத்துக்காக மத்திய கிழக்கை பெரிதும் நம்பியுள்ளன.

எனவே, போர் தீவிரமடைவதற்கான சாத்தியக்கூறுகள் அல்லது எண்ணெய் விநியோகத் தடைகள் சந்தைகளில் நேரடியாக அழுத்தத்தை ஏற்படுத்துகின்றன.

'டிரம்பின் திட்டத்தில் எதுவும் தெளிவாக இல்லை'

முன்னாள் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கனின் மூத்த ஆலோசகராக இருந்த மெலிசா டூஃபெனியன் பிபிசியிடம் கூறுகையில், டிரம்பின் உரைக்குப் பிறகு அமெரிக்க மக்கள் இரான் போர் குறித்து இன்னும் அதிக குழப்பமடைய வாய்ப்புள்ளது என்று தெரிவித்தார்.

"இன்று அந்த உரையைப் பார்க்கும் எந்தவொரு அமெரிக்கரும் ஒரு தெளிவான திட்டம் இருக்கிறது என்றோ, ஒரு தெளிவான காலக்கெடு இருக்கிறது என்றோ அல்லது நாம் முன்பை விட பாதுகாப்பாக இருக்கிறோம் என்றோ உணர்வார்கள் என நான் நினைக்கவில்லை," என்று அவர் கூறினார்.

இதற்கிடையில், நேட்டோவுக்கான முன்னாள் அமெரிக்கத் தூதர் ஐவோ டால்டர் கூறுகையில், டிரம்பின் உரை பல முக்கியமான கேள்விகளுக்குப் பதிலளிக்கவில்லை என்று குறிப்பிட்டார்.

அவற்றில் மிக முக்கியமான கேள்வி என்னவென்றால், இரானின் அணுசக்தி திறன், கடற்படை மற்றும் ஏவுகணை அமைப்புகள் அழிக்கப்பட்டுவிட்டதாக டிரம்ப் உரிமை கோரினால், அமெரிக்கா ஏன் இன்னும் இரானில் ராணுவ நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது என்பதுதான்.

"இது நம்மை எந்த விதத்திலும் பாதுகாப்பானதாக ஆக்கியுள்ளது என்று நான் நினைக்கவில்லை... அமெரிக்க பொதுமக்களுக்கும் இதே போன்ற சந்தேகங்கள் இருக்கும் என்று நான் கருதுகிறேன்," என்று அவர் பிபிசி செய்தியாளர் சுமி சோமஸ்கந்தாவிடம் கூறினார்.

இந்த உரையில் டிரம்ப் நேட்டோ நட்பு நாடுகளுக்கு எதிராகக் கடுமையான நிலைப்பாட்டை எடுக்கவில்லை அல்லது கூட்டணியிலிருந்து வெளியேறுவது குறித்த அச்சுறுத்தல்களை மீண்டும் கூறவில்லை, ஆனால் பின்னர் சமூக ஊடகங்களில் அவர் மீண்டும் அத்தகைய நிலைப்பாட்டை வெளிப்படுத்த வாய்ப்புள்ளது என்று டால்டர் கூறுகிறார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/cgmewggw3d0o

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

டிரம்பின் உரையைத் தொடர்ந்து அதிகரித்த கச்சா எண்ணெய் விலை

டிரம்பின் உரையைத் தொடர்ந்து அதிகரித்த கச்சா எண்ணெய் விலை

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஈரான் தொடர்பாக வெளியிட்ட கருத்தைத் தொடர்ந்து, உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை மீண்டும் அதிகரித்துள்ளது. 

முக்கிய கடல் வழிப்பாதையான ஹோர்முஸ் நீரிணையில் நிலவும் தடைகள் விரைவில் நீங்கும் என்ற எதிர்பார்ப்பு ட்ரம்ப்பின் உரையின் மூலம் தகர்க்கப்பட்டதே இதற்கு காரணமாகும். 

ஜனாதிபதி உரை தொடங்குவதற்கு முன்னர் ஒரு பீப்பாய் பிரெண்ட் (Brent) கச்சாய் எண்ணெயின் விலை 100 அமெரிக்க டொலர்களாகக் காணப்பட்டது. 

உரையின் போது விலையில் ஏற்ற இறக்கங்கள் ஏற்பட்ட போதிலும், இறுதியில் அது சுமார் 4% இனால் அதிகரித்து, தற்போது ஒரு பீப்பாய் 105.38 டொலர்களாக உயர்ந்துள்ளது. 

உலகின் மொத்த எரிசக்தி தேவையில் சுமார் 20% இந்த குறுகிய கடல் வழிப்பாதை ஊடாகவே கொண்டு செல்லப்படுவதால், இது உலகப் பொருளாதாரத்திற்கு மிகவும் முக்கியமானது. 

கடந்தபெப்ரவரி மாதம் 28 ஆம் திகதி அமெரிக்கா மற்றும் இஸ்ரேலியத் தாக்குதல்களுக்குப் பதிலடியாக, இந்தக் கடல் வழிப்பாதையைப் பயன்படுத்தும் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தப்போவதாக ஈரான் எச்சரித்ததையடுத்து, நிலைமை இன்னும் முழுமையாக வழமைக்குத் திரும்பவில்லை. 

ஆட்சி மாற்றம் அல்லது ஈரானின் உட்கட்டமைப்புகளை அழிப்பது குறித்து ட்ரம்ப் விடுத்த கடுமையான எச்சரிக்கைகள், விநியோகச் சங்கிலிக்கு மேலும் அச்சுறுத்தலாக அமையும் என முதலீட்டாளர்கள் அஞ்சுவதே இந்த விலை உயர்வுக்குக் காரணம் என பொருளாதார ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

https://adaderanatamil.lk/news/cmngxywp00000356pohbpbtd6

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.