Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மாவீரர் உரை எனது பார்வையில்

Featured Replies

மாவீரர் உரை எனது பார்வையில்

மாவீரர் உரை முடிவடைந்தவுடன் தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் இன்று இருந்திருந்தால் அவற்றிற்கான விளக்கவுரை ஒன்றினை வழங்கியிருப்பார். மாவீரர் உரை நிகழ்தி இன்றுவரை அதுபற்றிய சரியானதொரு கண்ணோட்டம் வெளிப்படவில்லை. எனது சிற்றறிவிற்கு உட்பட்டு இவ்வுரையை ஆராயலாமென நினைக்கின்றேன்.

இதுவரை இந்த உரை பற்றி வெளிவந்த கருத்துக்கள், அதைச் சொன்னவர்கள் என்றுவைத்துப் பார்த்தால் அவர்களிடமுள்ள வெற்றிடம் எனக்குத் தெளிவாகத் தெரிகிறது. சொல்லப்பட்ட விடயம், அதன் செயல் வடிவமும், சொல்லாமல் விட்ட விடயம், அதன் செயல்வடிவமும் என்ற இரு வேறு ஆய்வுகளில்தான் இந்த உரை நோக்கப்படுதல் வேண்டும். அதை விடுத்து சொல்லப்பட்ட விடயத்தில் நின்றே இதுவரை வெளிவந்த கருத்துக்கள் வெளிப்பட்டு நிற்கின்றன.

ஒரு ஆய்வாரள் இம்முறை மாவீரர் உரையில் பெரிதாக எதையுமே குறிப்பிடவில்லை, சர்வதேசத்தின் மீது மாத்திரம் சாடல் செய்யப்பட்டுள்ளது, எனவும் விடுதலைப் புலிகளுக்குக் கொடுக்கப்பட்ட சந்தர்ப்பங்களைப் பயன் படுத்தாமல் விட்டததினாலேயே இந் நிலை ஏற்பட்டதாகக் கூறி தனது வெறுமையை வெளிப்படுத்தினார். அந்தக் கருத்துக்கு எதிர்க்கருத்து எதையும் முன்வைக்கத் தேவையில்லை. அதனால் எனது

பார்வையில் கருத்துக்களை முன்வைக்கின்றேன்.

தேசியத் தலைவரின் வழமையான பாணியில் உரை ஆரம்பிக்கப்படுகிறது. தமிழீழ மக்களையும் உலகத் தமிழர்களையும் விழித்து தனது அன்பினையும் வணக்கத்தையும் தெரிவித்து, மாவீர்ர்களின் பெருமைகளைக் கூறுகிறார். அதனைத் தொடர்ந்து கடந்த ஒரு வருட கால நிகழ்வுகள் இடப்பெயர்வுகள் அவலங்கள் இராணுவ மயமாக்கல் சிங்களக் குடியேற்றங்கள் என்பன விபரிக்கப்படுகின்றது.

இவற்றில் முக்கியமாக மட்டக்களப்பு, திருகோணமலை, யாழ்ப்பாணத்து நிலைகள் எடுத்துச் சொல்லப்படுகின்றன. தமிழ் மக்கள் ஆயிரக்கணக்கில் கொன்று குவித்துப் புதைக்கப்படுகின்ற நிலை அவர்களின் வாழ்வாதாரங்கள் எவ்வாறு அழிக்கப்படுகின்றது என்பன வெளிப்படுத்தப்படுகிறது.

இலங்கையரசின் கிழக்கு ஆக்கிரமிப்பை விடுதலைப்புலிகள் விரித்த வலையினுள் சிக்கிக் கொண்டு மீள முடியாமல் திணறும் இராணுவம் அகலக்கால் பரப்பியதால் அதன் விளைவுகளை விரைவில் சந்திக்கும், என கூறிவைக்கின்றார். முக்கியமாகத் தமிழ்ச்செல்வனின் மரணம், அநுராதபுரத் தாக்குதல் ஆகியவற்றின் விளைவுகள் பற்றியும் சுருக்கமாகக் கருத்துப் பொதிந்த வகையில் விளக்கியுள்ளார்.

இவைகளுக்கான காரணம் இந்தியாவின் இணக்கமில்லாத் தன்மை, சர்வதேசத்தின் பாராமுகம், நடுநிலையாளரான நோர்வேயின் கையாலாகாத்தனம், யுத்தநிறுத்தக் கண்காணிப்புக் குழுவினரின் மௌனித்த நிலை ஆகியவைதான் எனக் கோடிட்டுக் காட்டுகிறார். ஏன் இந்த நிலை? தமிழருக்கான ஒரு நாடு இல்லாமலிருப்பதே. ஏனத் தெரிவித்துமுள்ளார்.

இவ்வளவு இடையூறுகளின் மத்தியிலும் உலகத்தில் பரந்துபட்டு வாழ்கின்ற தமிழினத்திடம், இதுவரை காலமும் செய்து வந்த அனைத்து உதவிகளையும் இனிமேலும் தொடர்ந்து வழங்குங்களென உரிமையுடன் கோரிக்கை விடுத்துத் தொடர்ந்து போராடுவோம் எனக் கூறுகின்றார்.

இவ்வளவு விடயங்களும் வெளிப்படையாகக் கூறப்பட்ட விடயங்களாகும். இதன் உட்கிடைகளை விளங்காமையினால்தான், உலக நாடுகளிடமிருந்து கருத்துக்கள் வெளிவரத் தாமதமாகின்றன. ஆய்வாரள்களும் இம்முறை பெரிதாக எதுவும் சொல்லப்படவில்லை. எனக் கூறுகின்றனர்.

சொல்லாமற் சொல்லப்பட்ட விடயங்கள் எவை என்பதுதான் என்னுடைய பார்வையில். பொதுவாக மாவீரர் தின உரையென்பது விடுதலைப்புலிகளின் வருடாந்தச் செயற் திட்டமாகவே கருதப்படுகிறது. ஆப்படிப்பட்ட ஒரு விடயத்தில் தொடர்ந்து போராடுவோம் என்ற ஒரு கருத்துமட்டும் எதிர்கால நிகழ்வாகச் சொல்லிவிட்டு முற்றுப்பெற வைப்பதென்றால், அதன் உள்ளடக்கந்தானென்ன?

உலக நாடுகள் எதிர்பார்த்துக் காத்திருக்க, ஆய்வாரள்கள் பேனா காகிதங்களுடன் காத்திருக்க இந்த ஒரு வரி எதிர்கால நிகழ்ச்சியை முன்வைத்துவிட்டு முடிவடைந்த உரையைக் கண்டு இவர்களெல்லாம் ஏமாந்து நிற்பது ஏன்? பொதுவாகக் கூறினால் இவற்றிற்கு என்ன பதில் சொல்வதென கையைப் பிசைந்து கொண்டு நிற்கின்றார்கள் இவர்கள்.

ஒரு செயற் திட்டத்தின் முற்கூறு செயற்படுவதற்கு கிடைக்கும் காலம், அதைச் செயற்படுத்துவதற்கு போதாமையால், தொடர்ந்து வரும் காலமும் அதற்குத் தேவையான சந்தர்ப்பங்களும் அமையும்வரை அதனைச் செயல் நிலையிலேயே வைத்திருத்தல் வேண்டும். அந்த நிலைப்பாட்டினையே தேசியத்தலைமை வெகு துல்லியமாக அலட்டல்கள் ஏதுமின்றி. சொல்லி முடித்திருக்கின்றது.

ஆகவே சென்ற மாவீரர் தின உரையின் விடயம், செயல்வடிவம் பெறப்போகின்ற காலமாக இம்முறை மாவீரர் தின உரையில் உறுதிபேணப்பட்டிருக்கின்றது. சொல்லாமல் சொல்லி நிற்கின்ற செய்தி இதுவே.

எனக்கு தெரிவது என்னவென்றால்..........

பொறுத்தது போதும் பொங்கி எழு!!!!

எனக்கு தெரிவது:

சொல்வதற்கு ஒன்றுமில்லை.... செய்ய வேண்டியதே மிச்சம்.... ஆதரவு தங்தால் ந்ல்லது, இல்லாவிட்டாலு நாம் செய்யத்தான் போறோம்... செய்தே தீருவோம்....

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இறைவன் உங்கள் சொந்த கருத்தை விமர்சிக்கவில்லை

இது என் தனிப்பட்ட கருத்து

இந்த மாவீரர் உரையில் எல்லோருக்கும் தெரிந்த இறந்த காலம் தான் சொல்லப்பட்டிருக்கின்றது.

மேலதிகமாக ஒன்றுமில்லை.

ஆனால் இனிவரும் காலங்களில் புலிகள் வெளிநாடுகளை பார்க்காமல் தாமே சில முடிவுகளை உடனுக்குடன் எடுக்க போகின்றார்கள் போலவும் உள்ளது.

அப்படி எடுக்கத் தொடங்கினார்களாயின் சிங்கள தேசம் அல்லல் பட போவது நிட்சயம்.

  • தொடங்கியவர்

இறைவன் உங்கள் சொந்த கருத்தை விமர்சிக்கவில்லை

இது என் தனிப்பட்ட கருத்து

இந்த மாவீரர் உரையில் எல்லோருக்கும் தெரிந்த இறந்த காலம் தான் சொல்லப்பட்டிருக்கின்றது.

மேலதிகமாக ஒன்றுமில்லை.

ஆனால் இனிவரும் காலங்களில் புலிகள் வெளிநாடுகளை பார்க்காமல் தாமே சில முடிவுகளை உடனுக்குடன் எடுக்க போகின்றார்கள் போலவும் உள்ளது.

அப்படி எடுக்கத் தொடங்கினார்களாயின் சிங்கள தேசம் அல்லல் பட போவது நிட்சயம்.

உண்மைதான் மாவீரர் உரை சொல்லாமல் சொல்லி நிற்கின்ற செய்திகளோ பலப்பல. உண்மையைச் சொல்வதானால் பழய மாவீரர் உரையின் செயற்பாட்டுக்காலம் இதுவாகத்தானிருக்கப் போகிறது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.