Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலிகளைக் கண்காணிக்க 100 கமாண்டோக்களுடன் நவீன போர்க்கப்பல் இரமேஸ்வரம் கடற்பரப்பில்

Featured Replies

விடுதலைப்புலிகளை கண்காணிக்கவும் அவர்களின் ஊடுருவலை தடுப்பதற்காகவும் 100 விஷேட

கமாண்டோக்களைக் கொண்ட நவீன போர்க்கப்பல் ஒன்றை இந்தியக் கடற்படை இராமேஸ்வரம் கடற்பகுதியில் நிறுத்தியுள்ளது.

கடந்த சில தினங்களுக்கு முன்பு இலங்கை அரசு போர்நிறறுத்த ஒப்பந்தத்தை ரத்து செய்தது. மேலும்,

விடுதலைப்புலிகளை ஒழிக்கிறோம் என்ற பெயரில் தமிழர்கள் வாழும் பகுதிகளில் விமானங்கள் மூலம்

குண்டு மழை பொழிந்து வருகிறது. இதனால், அங்கு வசிக்கும் தமிழர்கள் அகதிகளாகவும் மற்றும்

விடுதலைப்புலிகள் கடல் வழியாக இராமேஸ்வரம் கடற்பகுதியில் எந்த நேரத்திலும் ஊடுருவும்

ஆபாயம் உள்ளது.

இதைத் தொடர்ந்து இராமேஸ்வரம், மண்டபம், தங்கச்சிமடம் மற்றும் அதை சுற்றியுள்ள கடலோரப்பகுதிகளை இந்திய கடற்படை உஷாராக கண்காணித்து வருகிறது. தற்போது இந்தியக் கடல் எல்லையில் இந்திய கடற்படைக்கு சொந்தமான 3 போர்க்கப்பல்கள் ரோந்து சுற்றி வருகிறது. மேலும், பாதுகாப்பை பலப்படுத்த கூடுதலாக 2 போர்க்கப்பல்களை நிறுத்த மத்திய அரசு முடிவு செய்தது.

இலங்கையிலருந்து இராமேஸ்வரம் பகுதி 22 கடல் மைல் தொலைவில் உள்ளதால் கடற்படையினர் 24 மணி நேரமும் உஷார் நிலையில் இருக்க உத்தரவிடப்பட்டுள்ளது. மண்டபத்துக்கும் இலங்கைகககும் இடைப்பட்ட பாக்கு நீரிணைப் பகுதியில் இந்திய கடற்படையினர் போர்க் கப்பல்களை றிறுத்த திட்டமிட்டுள்ளனர்

இராமநாதபுரம் மாவட்ட கடல் பகுதிகளில் போர்க் கப்பல்களை நிறுத்தினால் விடுதலைப் புலிகளுக்கும்

இலங்கை இரர்ணுவத்துக்கும் எச்சரிக்கை விடுக்கும் வகையில் அமையும் என்று மத்தி அரசு கருதுகிறது.

இதற்காக கடலோர காவல்ப்படைக்கு சொந்தமான 'அகல்யா பாய்', 'அருணா ஆசாப் அலி' என்ற அதி

நவீன போர்க் கப்பல்கள் தூத்துக்குடியில் இருந்து வரவழைக்கப்படுள்ளன. இதில் அகல்யா பாய்

மன்னார் வளைகுடா கடற்பகுதியின் சுற்றலும் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு வருகிறது. அருணா

ஆசாப் அலி என்ற அதி நவீன போர்க்கப்பல் கூடுதல் பாதுகாப்புக்காக மண்டபம் கடலோர காவல்

படை முகாமுக்கு வந்துள்ளது.

இந்தக் கப்பலில் 100 க்கும் மேற்பட்ட கடலோர காவல் படை கமாண்டோக்கள் உள்ளனர். அவர்கள்

தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். மேலும், இந்தக் கப்பல் கடலுக்குள் 90 கிலோ மீட்டர் அதி வேகத்தில் செல்லக் கூடியதாகும். இந்தக் கப்பல் எதிரியை சுட்டு வீழ்த்தக்கூடிய நவீன துப்பாக்கிகளும் உள்ளன. இவை தவிர தூரத்திலிருந்து வரும் படகுகளை கண்காணிக்க அதி நவீன ரேடர் கருவியும் இந்தக் கப்பலில் பொருத்தப்பட்டுள்ளது. இதன் மூலம எதிரிகளுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தலாம் என்று கடலோரக் காவல்

படை கமாண்டோ அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.மேலும், கப்பல் செல்ல முடியாத பகுதிகளில்

இந்திய கடற்படையினர் ரோந்துப்படகு மூலம் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

நன்றி தினக்குரல்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.