Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கொட்டாஞ்சேனையில் தமிழ் குடும்பஸ்தர் கடத்தல் கறுப்பு காரில் வந்தோர் கைவரிசை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கொட்டாஞ்சேனையில் தமிழ் குடும்பஸ்தர் கடத்தல் கறுப்பு காரில் வந்தோர் கைவரிசை

2/1/2008 10:21:20 PM

வீரகேசரி இணையம் - கொட்டாஞ்சேனை, சங்கமித்த மாவத்தையில் வைத்து தமிழ் குடும்பஸ்தர் ஒருவர் கறுப்பு நிறகாரில் வந்த நபர்களினால் கடத்திச் செல்லப்பட்டுள்ளார். நேற்றுக் காலை கடத்தப்பட்ட இவர் தொடர்பில் இன்று இரவுவரை தகவல் எதுவும் கிடைக்கவில்லை என கொட்டாஞ்சேனை பொலிஸார் தெரிவித்தனர். கோப்பாய் வடக்கு பூதல்மடத்தை பிறப்பிடமாகக் கொண்டவரும் 2006ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் கொழும்பில் வசிப்பவருமான ஒரு பிள்ளையின் தந்தையான மாணிக்கம் விக்னேஸ்வரன் (வயது 37) என்பவரே இவ்வாறு கடத்தப்பட்டவராவார்.

இக்கடத்தல் குறித்து பிரதி அமைச்சர் பெ.இராதா கிருஷ்ணனிடமும் முறையிடப்பட்டுள்ளது.

இது குறித்து மலையக மக்கள் முன்னணியின் மக்கள் பணியகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: விக்னேஸ்வரன் அவரது மனைவியும் குழந்தையும் சுவிஸ் நாட்டிலிருந்து 2003ஆம் ஆண்டு நாடு திரும்பி யாழ்ப்பாணத்தில் தங்கியிருந்து பின்னர் கடந்த 2006ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் கொழும்புக்கு வந்து தங்கியிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில் 2209.2007 ஆம் ஆண்டு இரவு ஒரு மணியளவில் வெள்ளைவேனில் வந்தவர்கள் இவரது மைத்துனரான கார்த்திகேசு கந்தராசாவை கடத்தியதுடன் சில நாட்களின் பின்னர் பயங்கரவாத குற்றத்தடுப்பு பிரிவு சப்இன்ஸ்பெக்டர் ஆப்தீன் பிரஸ்தாப நபரை தாங்களே கைது செய்ததாகவும் தெரிவித்ததுடன் தற்போது அவர் பூசா முகாமில் வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

மைத்துனரை விடுவிப்பது தொடர்பாக பல இடங்களில் புகார் செய்துள்ள இவர் இன்று காலை 10.30 மணியளவில் கறுப்புநிற 13 சிறி 5549 என்ற இலக்கமுடைய காரில் கடத்தப்பட்டதால் குடும்பத்தினர் அதிர்ச்சியும் பயமும் அடைந்துள்ளனர்.

இவ்விடயம் தொடர்பாக கொட்டாஞ்சேனை, ஆமர்வீதி, கிராண்ட்பாஸ், மோதரை, ஜெம்பட்ட வீதி பொலிஸாரிடம் விசாரித்த் போதும் பலன்கிட்டாத நிலையில் தற்போது கொட்டாஞ்சேனை பொலிஸாரிடம் புகார் செய்யப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பாக குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸ் இயக்குனர் நந்தனமுனசிங்கவிடமும் உயர்மட்ட பொலிஸ் அதிகாரிகளிடமும் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் கே.என். இலங்ககோனிடமும் பிரதி அமைச்சர் பெ.இராதா கிருஷ்ணன் புகார் செய்துள்ளார்.

என்னங்க இது புதுச்செய்தியா இருக்கிது? வழமையா வெள்ள வானிலதானே வருவாங்கள்? இது என்ன புதுவிதமா கறுப்பு காரா இருக்கிது?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.