Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இறைமையை மீளநிலைநிறுத்துவதே தமிழ்மக்களிற்கான மாற்றுவழி

Featured Replies

சிறீலங்கா: 60வருடங்களின் பின்னர் -

இறைமையை மீளநிலைநிறுத்துவதே தமிழ்மக்களிற்கான மாற்றுவழி

பிரிட்டிஸ் காலனித்துவத்திற்குப் பிற்பட்ட 60 வருடகால ஆட்சியானது இலங்கைத் தீவில் இரு தேசிய இனங்கள் - ஒன்று அடக்கும் அரச தரப்பாகவும் மற்றையது அடக்கப்பட்ட மக்களாகவும் வாழாமல் - சுதந்திரமுள்ளவர்களாக செயற்படுவதே அமைதியை உறுதிப்படுத்தும் என்பதை நிரூபிக்கின்றது.

பெப்.04 - அறுபது வருடங்களுக்கு முன் இதே நாளில்தான் இறுதியான ஐரோப்பிய காலனித்துவ ஆட்சியாளர்கள் இலங்கைத்தீவினை விட்டு வெளியேறி அரச அதிகாரங்களை அன்னிய சிங்கள தேசியவாத தலைமைகளிடம் கொடுத்துச் சென்றனர். இந்த நாள் தமிழர்கள் தங்களது இறைமையை புதிய அன்னிய சிங்கள ஆட்சியாளர்களிடம் ஒப்படைத்தமையை குறிக்கும் நாளாகிவிட்டது.

சிங்கள மேலாதிக்கமானது ஒரு மில்லியன் தமிழ் மக்களின் குடியிரிமையை 1949ல் பறித்ததிலிருந்து தனது ஆட்சி அதிகாரங்களை தமிழ் மக்களிற்கு எதிராக பிரயோகிக்க தொடங்கியது. தமிழர் தாயகத்தின் சனத்தொகை பரவல் கட்டமைப்பினை மாற்றி; சிங்கள குடியேற்றவாசிகளை தமிழர் தாயகத்தில் குடியேற்றும் திட்டம் அமுல்படுத்தப்பட்டது. 1956ல் தமிழ் மக்களின் மொழியுரிமை பறிக்கப்பட்டது. அவர்களது கல்வி, வேலைவாய்ப்பு வாய்ப்புக்கள் பறிக்கப்பட்டது. தமிழர் தாயகப்பகுதிகளில் 100000 படையினர் குவிக்கப்பட்டனர். இந்தப் படைகள் 100000 மேற்பட்ட தமிழ் மக்களை படுகொலை செய்தும், நிரந்தரமாக அங்கவீனர்கள் ஆக்கியும் ஒடுக்குமுறையை நிகழ்த்தியது. ஒரு மில்லியன் மக்கள் தமது கிராமங்கள், நகரங்களை விட்டு அகதிகளாக விரட்டப்பட்டனர். மேலும் 500 000 மக்கள் இடம்பெயர்ந்து வடக்குக்கிழக்கில் மிகமோசமான சூழலில் வாழவைக்கப்படுகின்றனர்.

இந்த 60 வருடங்களில் பிரயோகிக்கப்பட்ட வன்முறைகளும், பிற வழிகளில் இடம்பெற்ற கட்டமைக்கப்பட்ட ஒடுக்குமுறையும் ஒரு இனச்சுத்திகரிப்பு எனும் எல்லையை தொடும்வழியில் அமைந்திருக்கின்றது.

இந்த வரலாற்றுப் புறச்சூழலில் தமிழர் தலைமைகள் மக்களின் அரசியல், பொருளாதார, பண்பாட்டு உரிமைகளை பாதுகாப்பதற்காக ஒடுக்குமுறை செய்த சிங்களத் ஆட்சியாளர்களுடன் போராடினர்கள்.

இதன் தொடர்ச்சியாக 1977 பொதுத்தேர்தலில் தாங்கள் சிங்கள தேசத்திடம் இழந்த இறைமையை மீளப் பெறுவது என்ற முடிவை தமிழ் மக்கள் சனநாயக வழியில் மேற்கொண்டனர். அனைத்துத் தமிழ் அரசியல் சக்திகளும் தமிழீழ இறைமையை மீட்டெடுத்தல் எனும் வட்டுக்கோட்டை பிரகடனத்தின் கீழ் ஒன்றுபட்டன. சுதந்திரமான தமிழீழம் தமிழ் மக்களின் கௌரவமான வாழ்வுக்கும், செழுமைக்கும் அமைதிக்குமான இலட்சியமாக உருவாகிவிட்டது.

பிரித்தானியாவிற்கு முற்பட்ட ஐரோப்பிய காலனித்துவ சக்திகள் தமிழ் மக்களின் பிரதேச தனித்துவத்தினை பாதுகாத்தவாறே தமது காலனித்துவ ஆட்சியினை செய்துவந்தன. ஆனால் பிரித்தானிய காலனித்துவம் இந்த தனித்துவத்தினை இடைநிறுத்திவிட்டு சிங்கள அரசின் கீழ் அதனை இணைத்தது. இதுவே முரண்பாட்டிற்கான விதையை விதைத்தது. இன்று தமிழ் மக்களும் அவர்களின் தேசிய விடுதலை இயக்கமான புலிகள் இயக்கமும் இந்த நிலைமையை மீளப்பெற்று தமிழர் தாயகப்பகுதிகளில் ஒரு அரசினை மீள நிர்மாணம் செய்துவருகின்றனர் என்பது நினைவில் வைத்துக் கொள்ளப்படவேண்டிய விடயமாகும்.

21ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் புலிகளின் தலைமையிலான தமிழர் விடுதலை போரட்டமானது விடுவிக்கப்பட்ட பெரும்பாலான தாயகப்பகுதிகளை கொண்டதாகவும், ஒரு முறைசாரா அரசினை கட்டமைத்ததாகவும் இருந்தது. இதனை 2002ல் செய்துகொள்ளப்பட்ட போர்நிறுத்த உடன்பாட்டின் மூலம் சிங்கள அரசு ஏற்றுக்கொண்டது.

தமிழீழ மக்கள் மாற்றமடையும் இலங்கைத்தீவு சார்ந்த சர்வதேச வியூக விவகாரங்களை அறிவார்கள். அதேபோன்று உலக மற்றும் பிராந்திய வல்லரசுகளின் கரிசனைகளையும் அறிவார்கள். மேலும், கடந்த 60 வருடகால வரலாறு இலங்கைத்தீவானது ஒடுக்கும் அரசும், ஒடுக்கப்படும் மக்களும் கொண்டதாக அமையாது, இரு சுதந்திரமான தேசங்களைக் கொண்டதாக வாழ்ந்தாலே சமாதானம் நிலவும் என்று உறுதியாக நம்புகின்றனர்.

சர்வதேச சமூகமானது தமிழர்களின் இறைமையை மீள நிலைநிறுத்துவதற்கான போராட்டத்தினை ஆதரித்திடல் வேண்டும் என இன்றைய 60வருட நாளில், தாயகத்தில் வாழும் தமிழ் மக்களும், புலத்துத் தமிழ் மக்களும் வேண்டுகின்றனர்.

மேலதிக தொடர்புகட்கு:

ift@blue.ch

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.