Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

புலிகளின் செயற்பாடுகளைக் கட்டுப்படுத்துவதில் வெற்றி. கருணாநிதி பெருமிதம்

Featured Replies

தமிழக அரசின் துரிதமான திறன் மிக்க நடவடிக்கையால் விடுதலைப் புலிகளின் செயற்பாடுகள் வெற்றிகரமாகக் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன என கருணாநிதி அறிக்கை யொன்றின் வாயிலாகத் தெரிவித்துள்ளார். அரசின் நடவடிக்கைகளால் தமிழகத்தில் தொடர்ந்தும் அமைதி நிலவுகின்றது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது.

அ.தி.மு.க ஜெயலலிதா அன்றாடம் அறிக்கைவிடத் தவறுவதில்லை. தமிழகத்திலே சட்டம், ஒழுங்கு கெட்டு விட்டது. மத்தி அரசு உடனடியாகத் தலையிட வேண்டும்,தி.மு.க ஆட்சியை மாற்ற வேண்டும். மீண்டும் தேர்தலை நடத்த வேண்டும் என்று கூறுவதன் காரணம், தான் மீண்டும் எப்படியாவது பதவியிலே வந்து அமர வேண்டும் என்பதற்காகவே.

ஆனால், உண்மையில் அறிக்கையிலே குறிப்பிடுவதைப் போல சட்டம், ஒழுங்கு, அமைதி தமிழகத்தில் கெட்டு விட்டதா? நாடு காடாகி விட்டதா?

நாம் பதவியேற்ற நாளிலிருந்து, மாநிலத்தை அமைதி தழுவும் மாநிலமாக ஆக்கிவிடும் நோக்குடன், மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு அமைதி மற்றும் சமூக நல்லிணக்கத்தை நிலைநாட்டத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகின்றோம்.

அமைதிப் பேச்சு இடையில் அறுந்து போய் இலங்கையில் நிலவிவரும் பதற்றமான சூழ்நிலயையும், நாட்டில் தலைகாட்ட முனையும் மதவாத தீவிரவாதிகளின் நடவடிக்ககைளையும், அண்டை மாநிலங்கள் உட்பட பல மாநிலங்களில் வளர்ந்துவரும் தீவிரவாத்ச் செயல்களையும் கருத்திற்கொண்டு, அச்செயல்கள் தமிழகத்தில் நுழையாமல் பாதுகாத்துக் கொள்ளத் தேவையான அனைத்துத் தடுப்பு நடவடிக்கைகளையும் பொலிஸார் எடுத்து வருகின்றனா,

இவை போன்ற தீவிரவாத அமைப்புகளின் நடவடிக்கைகளையும், தடைசெய்யபட்ட இயக்கங்களின் நடவடிக்கைகளையும் கண்காணித்தும், மாநிலம் முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகளைப் பலப்படுத்தியும், மாநில எல்லைகளில் சோதனைச் சாவடிகளை அமைத்தும், கடலோர மாவட்டங்களில் சோதனைகளைத் தீவிரப்படுத்தியும், காட்டுப் பகுதிகளில் அடிக்கடி தீவிர சோதனைகளை நடத்தியும், தீய சக்கதிகள் தமிழகத்தில் வேரூன்றா வண்ணம் பார்த்தும் வருகின்றனர்.

இது போன்ற நடவடிக்ககைளின் விளைவாக, விடுதலைப் புலிகளுக்கு வெடிமருந்துகள், சிறிய இரும்புக் குண்டுகள், ஆலுமினியக் கட்டிகள் அத்தியாவசியப் பொருட்கள், நவீனத் தொலைத் தொடர்பு சாதனங்கள், படகுகள் போன்றவற்றைக் கடத்தல் போன்ற செயல்களில் ஈடுபட்டவர்கள் மற்றும் கடத்தல்களுக்கு உதிவியவர்கள் 84 பேர் பொலிஸாரால் கைது செய்யபட்டடு, அவர்கள் மீது 13 வழக்குகள் பதிவு செய்யபட்டுள்ளன. அவர்களுள் 17 இலங்கைத் தமிழர்கள் உட்பட 40 பேர் தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டனர்.

அவர்கள் கடத்த முற்பட்ட வெடிமருந்துகள், ஏழரை தொன் இரும்புக் குண்டுகள், 4தொன் அலுமினியக் கட்டிகள் மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் கடத்தலில் சம்பந்தபட்ட பல்வேறு வாகனங்கள் கைப்பற்றப்பட்டன.

அண்மையில் இலங்கைக்கு வெடிமருந்துப் பொருட்களைக் கடத்த முயன்ற 9 பேர் வரையிலும், இதே போன்று தமிழகத்திலிருந்து விடுதலைப் புலிகளுக்குத் தேவையான பொருட்களை வாங்கி அனுப்பவும், உளவு சேகரிக்கவும் அனுப்படட்ட விடுதலைப்புலிகளின் உளவுப் பிரிவை சேர்ந்த தம்பித்துரை பரமேஸ்வரன் மற்றும் அவரது சகாக்கள் 7 பேரையயும் பொலிஸார் திறமையாகச் செயற்பட்டு சென்னையில் கைது செய்தும், அவர்கள் பயன்படுத்திய டவேரா காரையும் பணம் 4,78,290 ரூபாவையும் கைப்பற்றினர்.

மாநில அரசின் வேண்டுகோளின்படி, மத்திய அரசு அனுப்பிய இரண்டு கடற்படைக் கப்பல்கள் மற்றும் படகுகள் ஆகியவற்றின் உதவியுடன், கடலோரக் காவல்துறையினர், மற்றும் கடலோர காவல்படை மற்றும், இந்தியக் கடற்படை ஆகியோருடன் ஒருங்கிணைந்து இந்தியக் கடற்பகுதியில் தீவிர ரோந்தில் ஈடுபட்டு வருவதன் மூலம் இலங்கைக்கு பொருட்கள் கடத்துவதும் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதும், தீவிரவாதிகள் தமிழகத்திற்குள் நுழைவதும் தடுக்கப்பட்டுள்ளது.

இலங்கைத் தீவிரவாதிகள் தமிழகத்திற்குள் நுழையாவண்ணம் பார்த்து வருவதோடு, அந்தத் தீவிரவாதிகளின் நடவடிக்கைகளையும் கண்காணித்து அவர்களின் நடவடிக்ககைகள் மாநிலத்தின் வேரூன்றா வண்ணம் காவல் துறையினர் பார்த்து வருகின்றனா.

மாநிலத்தில் பல்வேறு இடங்களில் அமைந்துள்ள 116 இலங்கை அகதிகள் முகாம்களில் 72,700 அகதிகள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களின் நடவடிக்கைகளையும், செங்கல்பபட்டு சிறப்பு முகாமில் வைக்கப்பட்டள்ள 49 இலங்கைத் தமிழர்களின் நடவடிக்கைகளையும் இடைவிடாமல் கண்காணித்து, அவர்கள் சட்டவிரோத செயல்களில் ஈடுபடாமல் பொலிஸார் கண்காணித்து வருகின்றனர்.

தமிழக அரசு அளித்துவரும் சீரிய அறிவுரைகள் மற்றும் வசதிகளுடன் மாநில பொலிஸார் தங்களது நுண்ணறிவுப் பிரவினரின் உதவியுடன் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டும் சமூக விரோதிகள், பிரச்சினைகளில் ஈடுபடுவோர், சட்டடத்தை மீறுவோர் மீது தகுந்த நடவடிக்கைகளை எடுத்தும் மாநிலத்தில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டி அமைதிகாத்த வருகின்றனார்.

பொலிஸாருக்கு தகுந்த ஆலோசனைகள் அவ்வப்போது வழங்கப்பட்டு அவர்கள் செயல்களில் குறுக்கீடு ஏதுமில்லாமல் சுதந்திராமாகச் செயற்பட அனுமதித்து பொலிஸார் தக்க நடவடிக்ககைளை மேற்கொண்டு வருவதால் மாநிலத்தில் அமைதியான சூழ்நிலை தொடர்ந்து நிலவிவருகிறது. என்று அவ் அறிக்கையில் உள்ளது.

நன்றி சுடா ஒளி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒரு கரைக்கு சேர்கின்ற நேரம் வந்துவிட்டது மதில் பூனைக்கு!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.