Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

சமஷ்டி முறை மூலம் பிரச்சினைக்கு தீர்வுகாண முடியாது என்பதையே கொசோவோ பிரகடனம் உணர்த்தியுள்ளது - அமைச்சர் சம்பிக ரணவக்க

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சமஷ்டி முறை மூலம் பிரச்சினைக்கு தீர்வுகாண முடியாது என்பதையே கொசோவோ பிரகடனம் உணர்த்தியுள்ளது - அமைச்சர் சம்பிக ரணவக்க

[Tuesday February 26 2008 06:05:01 AM GMT] [யாழினி]

யுத்தத்தினால் பயங்கரவாதத்தை முழுமையாக ஒழிப்பதன் மூலமே எமது நாட்டு பிரச்சினைக்கு தீர்வுகாண முடியும். அதிகாரப் பரவலாக்கல் மூலமோ, சமஷ்டி முறை மூலமோ தீர்வுகாண முடியாதென்பதை கொசோவோ தனிநாட்டு பிரகடனம் வெளிக்காட்டியுள்ளது என்று அரசாங்கத்தின் பிரதான பங்காளிக் கட்சியான ஹெல உறுமயவின் முக்கியஸ்தரும் அமைச்சருமான சம்பிக ரணவக்க தெரிவித்தார்.

கொசோவோவின் தனிநாட்டு பிரகடனம் உணர்த்துவது என்ன என்பது தொடர்பாக கேசரிக்கு கருத்து தெரிவித்த சுற்றாடல் இயற்கை வளங்கள் அமைச்சர் சம்பிக ரணவக்க மேலும் கூறியதாவது:

அதிகாரப் பரவலாக்கல் மூலம் பயங்கரவாதத்தை முடிவுக்கு கொண்டு வரலாம் என்ற எண்ணத்தையும் வல்லரசு நாடுகளின் உறுதிப்பாட்டுடன் இதனை முன்னெடுக்கலாம் என்ற எண்ணமும் கொசோவோ தனிநாட்டுப் பிரகடனத்தின் மூலம் தவிடுபொடியாகியுள்ளது.

அல்பேனிய முஸ்லிம்களுக்கு சொந்தமான கொசோவோவில் நேட்டோ இராணுவம் உட்புகுந்து பாதுகாப்பு வழங்குவோம் என உறுதி கூறியது. ஆனால், இன்று என்ன நடந்துள்ளது. கொசோவோ தனி நாடாக பிரிந்துள்ளது. ரஷ்யா, சீனா மற்றும் இந்தியா, அமெரிக்கா போன்ற வல்லரசுகள் உறுதிகளை வழங்கின.

இதனால் பயங்கரவாதப் பிரச்சினைகள் காணப்பட்ட சில நாடுகளில் அதிகாரப் பரவலாக்கல் மேற்கொள்ளப்பட்டது. ஆனால் என்ன நடந்தது. அங்கெல்லாம் பிரிவினைகளே உருவாகின.எனவே, அதிகாரப் பரவலாக்கல் என்பது ஒரு மாயை என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இலங்கையிலும் அதிகாரப் பரவலாக்கல் மூலம் பிரச்சினையை தீர்க்க முடியாது என்பதே ஜாதிக ஹெல உறுமயவின் கொள்கையாகும். விடுதலைப்புலிகளின் பயங்கரவாதத்தை யுத்தம் மூலம் முழுமையாக ஒழிக்க வேண்டும். அதன் பின்னர் எமது நாட்டுப் பிரச்சினையில் தலையிடும் பிராந்திய மற்றும் வல்லரசு நாடுகளின் தலையீட்டை முழுமையாக இல்லாதொழிக்க வேண்டும்.

எமது பிரச்சினையை நாமே தீர்த்துக்கொள்ளும் தீர்மானத்திற்கு நிலைப்பாட்டிற்கு வரவேண்டும். சமஷ்டி முறை, மாகாண சபைகளுக்கு அப்பால் சென்று அதிகாரப் பரவலாக்கல் மூலம் பிரச்சினையை தீர்க்க முடியாது. இதனை எதிர்க்கின்றோம். இதுவொரு மாயை என்பது உலகில் வெளிப்பட்டுக் கொண்டுள்ளது. பயங்கரவாதிகளிடமிருந்து மீட்கப்பட்ட கிழக்கில் ஜனநாயகத்தை ஏற்படுத்தும் ஆரம்பக் கட்டத்திற்காகவே மாகாண சபை தேர்தலை நடத்துவதை ஏற்றுள்ளோம்.

முதலில் யுத்தத்தால் பயங்கரவாதம் பூண்டோடு அழிக்கப்பட வேண்டும். அதன் பின்னர் கிராம இராஜ்ஜிய முறை மூலம் பிரச்சினைக்கு தீர்வு காணப்பட வேண்டுமென்றும் அமைச்சர் சம்பிக ரணவக்க தெரிவித்தார்.

tamilwin.com

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.