Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ப்ரியாமணியை கேட்ட பெர்லின்..? இயக்குனர் அமீர் பேட்டி

Featured Replies

சால்வைகளும், பூக்களும் நிரம்பிக் கிடக்க வேண்டிய அமீரின் அலுவலகம் கழுவி துடைத்த மாதிரி இருக்கிறது. பெர்லின் போய் தனது பருத்தி வீரன் படத்திற்காக சர்வதேச அளவிலான சிறப்பு விருதை வாங்கி வந்திருக்கும் அவரது முகத்தில் உற்சாகத்திற்கு பதிலாக ஒரு மூட்டை வருத்தம்! ஏர்போர்ட்டில் இறங்குவதற்கு முன்பாகவே ஓடி போய் வரவேற்க வேண்டிய திரையுலக அமைப்புகள் வெவ்வேறு வேலைகளில் பிஸியாகிவிட, தனது விரக்தி சிரிப்பை சிரமப்பட்டு ஒளித்துக் கொண்டு பேசத் துவங்குகிறார் அமீர்.

பருத்தி வீரன் படத்தை பார்த்துவிட்டு அங்கு வந்திருந்த பலரும் பிரமித்து போயிருந்தார்கள். அங்கே வாழும் புலம் பெயர்ந்த தமிழர்களில் பலர், "நாங்கள் இங்கு வந்து 30 வருடங்களுக்கு மேலாகிவிட்டது. இந்த படத்தை பார்த்ததும் எங்கள் மண்ணில் இருக்கிற உணர்வை அடைந்தோம்" என்றார்கள். லண்டன் பத்திரிகையாளர்களும், பி.டி.ஐ பத்திரிகையாளர்களும் என்னிடம் பேட்டி எடுத்தார்கள். அதில் ஒருவர், "இந்த விஷயம் இந்நேரம் உங்கள் நாட்டிற்கு தெரிந்திருக்குமல்லவா" என்றார். அவரிடம், "நான் போய்தான் இந்த விஷயத்தையே சொல்லணும்" என்றபோது அவர்கள் முகத்தில் அதிர்ச்சி. சுமார் 3000 படங்கள் கலந்து கொள்ளும் இந்த விழாவில் 176 படங்கள் தேர்வு செய்யப்பட்டன. அதில் 36 படங்கள் போரம் பிரிவில் தேர்வு செய்யப்பட்டன. அதில், இந்தியாவிலிருந்து கலந்து கொண்ட ஒரே படம் பருத்தி வீரன்தான். ஆசிய நாடுகளில் இருந்து சிறப்பு விருதுக்கு தேர்வு செய்யப்பட்ட படமும் இதுதான். இதன் மூலம் மற்றவர்களின் பார்வை நம் பக்கம் திரும்பியிருக்கிறது.

இந்த விழாவின் மூலமாக பருத்தி வீரனுடன் (கார்த்தி) ஏற்பட்ட சண்டை முடிவுக்கு வந்ததா?

(லேசான புன்முறுவலுடன்) நானும் அவரும் தனித்தனியாகதான் பெர்லின் போனோம். நான் பத்திரிகையாளர்களிடம் பேசியபோது அவர்தான் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தார். சாப்பிட செல்லும்போதும், ஊர் சுற்றி பார்க்க செல்லும் போதும் ஒன்றாகதான் போனோம். ஆனால் கடைசி வரை பேசிக் கொள்ளவில்லை!

இப்படி நீங்கள் உருவாக்கியவர்களே உங்களுக்கு எதிரிகளாகிவிடும் போது எப்படி பொறுத்துக் கொள்கிறீர்கள்? ப்ரியாமணி கூட உங்களைப்பற்றி....?

நான் அப்படியே திடீரென்று வானத்திலிருந்து குதித்து படத்தை இயக்கிவிட வில்லை. என்னை ஒருவர் உருவாக்கினார். அவர் எப்படி எனக்கு உதவி செய்தாரோ, அதே மாதிரி நான் இன்னொருவருக்கு உதவி செய்திருக்கிறேன். அவ்வளவுதான். ஆனால் ஒன்று. சினிமாவில் இப்போது நன்றி இல்லாமல் போய்விட்டது. நிறைய புதியவர்கள் வருகிறார்கள். வந்த வேகத்தில் போயும் விடுகிறார்கள். ஆனால், ரஜினி கமலிடம் பேசினால் எனக்கு இப்போதும் ஆச்சர்யமாக இருக்கிறது. இப்போதான் குருஜியை பார்த்திட்டு வந்தேன் என்கிறார் ரஜினி. பாலசந்தரை பார்த்து விட்டு வந்ததைதான் அப்படி குறிப்பிடுகிறார். அதே மாதிரிதான் கமலும்.

ப்ரியாமணி விஷயத்தில் நான் அவருக்கு சம்பளம் தரவில்லை என்று கூறுகிறார். உண்மையில் நடந்தது என்னவென்றால், சம்பளத்தில் ஒரு பகுதியை நான்தான் நிறுத்தி வைத்திருந்தேன். மீதி சம்பளத்தை வாங்கும்போது உங்க அம்மாவை வந்து வாங்கிட்டு போக சொல். நான் கொஞ்சம் பேசணும் என்றேன். இன்று வரை அவர்தான் வரவில்லை. ஏன் வரவில்லை? வர தயங்குகிற அளவுக்கு என்ன நடந்தது? இப்போது கூட பணம் தயாராக இருக்கிறது. வந்து வாங்கிட்டு போக சொல்லுங்க. ஆனால், அவங்க அம்மா வரணும்! இன்னொரு விஷயம். பெர்லின் திரைப்பட விழாவில் படம் பார்த்த எல்லாரும் ப்ரியாமணி எங்கேன்னுதான் கேட்டாங்க. இதற்கு என்னிடம் பதில் இல்லை என்றேன் அவர்களிடம்.

யோகியில் ஹீரோவாக நடிக்கிறீர்கள். இந்தப்படம் ரிலீஸ் ஆவதற்குள்ளாகவே உங்களை வைத்து படம் இயக்க போட்டா போட்டி நிலவுகிறது. இதையெல்லாம் வைத்து பார்த்தால், முழு நேர நடிகர் ஆகிவிடுவீர்களோ?

ம்ஹ§ம்... நான் டைரக்ஷன் துறையை விட்டு போகவே மாட்டேன். எனது அடுத்த படம் கண்ணபிரான். ஜெயம் ரவி நடிக்கிறார். இதுவரை நீங்கள் பார்த்த ரவி இருக்க மாட்டார். இந்த படத்தில் புது ரவியை பார்ப்பீர்கள்! சொல்லிவிட்டு புன்னகைக்கிறார் அமீர். ரவியை அழைத்துக் கொண்டு எந்த நாட்டிற்கு போய் விருது வாங்க திட்டம் வைத்திருக்கிறாரோ?

பின்குறிப்பு- இயக்குனர் அமீருக்கு பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவிப்பது அடியேனேதான்!

:unsure::unsure: ( சினி சவுத்)

Edited by kirubakaran

அமீருக்கும் திமிர் தான். பிரியாமணி தானே இவர் படத்தில் நடித்தது. அவரிடம் பணத்தை கொடுக்காமல் அம்மாவை வரச்சொல் என்பது நியாயம் அல்லவே.

எப்படியோ தமிழ் படங்களும் எடுக்கப்படுகின்றன என்று உலகுக்கு காட்டியதற்கு வாழ்த்துகள்.

கணக்குவழக்கு பார்க்கிறது நடிகைமாரின் அம்மாக்கள்தான். அதில தப்பு இருந்தா அவங்க கூடதானே பேசவேண்டியிருக்கு. அற்புதமான கலைஞர் அமீர்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.