Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஆண்கள் தினம்’ எப்போ கொண்டாடப் போறீங்க? : கேட்கின்றனர் கல்லுரரி பெண்கள்

Featured Replies

‘மகளிர் தின விழா வெறும் கொண்டாட் டத்துடன் நிற்காமல், பெண்களுக்கு பயன்படும் வகையில் ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளாக இருந்தால் நன்றாக இருக்கும்’ என கல்லுõரியில் படித்துக் கொண்டே சுயதொழில் செய்து சாதிக்கத் துடிக்கும் மாணவிகள் தெரிவித்தனர். வருங்கால இந்தியா, இளைஞர்கள் கையில் என்பதை விட, இளைஞிகள் கையில் என்றால் அது மிகை ஆகாது! அடுப்பூதும் பெண்களுக்கு என்ற காலம் போய், தற்போது நிறைய குடும்பங்களின் பொருளாதாரத்தை தாங்கி நிற்பதே பெண்களாகத் தான் உள்ளனர். சென்னையில் உள்ள ஒரு மகளிர் கல்லுரரியில் படிக்கும் பல பெண்கள், படிக்கும் போதே சுயதொழில் செய்து அசத்தி வருகின்றனர். தங்களுடைய சம்பாத்தியத்தை படிப்புக்கு மட்டுமின்றி குடும்ப செலவுக்கும் கொடுத்து உதவி வருகின்றனர். கல்லுரரியில் இரண் டாம் ஆண்டு பி.எஸ்சி, சைக்காலஜி பயிலும் மாணவி ஏ.வி.பாரதி படிப்பிலும் சுட்டி, சுயதொழிலிலும் கெட்டி. பல பெண்கள் ‘டிவி’ யில் மெகா சீரியலை பார்த்து கண்கலங்கி கொண்டிருக்க, இவர் ‘டிவி’யை பார்த்து புடவையில் பூ வேலைப்பாடு மற்றும் ஆறாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு டியூசன் என ‘பிசி’யாக உள்ளார். சாதாரண புடவையில் எம்பிராய் டரி செய்வதன் மூலம் ஒரு புடவைக்கு குறைந்தபட்சம் ரூ.300 முதல் ரூ.500 வரை சம்பாதிக்கும் இவர், டியூசனில் மாதம் மூன்றாயிரம் ரூபாய் வரை சம்பாதித்து தனது படிப்பு செலவு போக, மீதியை வீட்டு செலவிற்கும் பயன்படுத்திக் கொள்கிறார்.

இதற்கிடையே கிடைக்கும் நேரத்தில் டியூசனும் சொல்லி கொடுக்கிறார். இவரது தோழியான வந்தனா, பரிசுப் பொருட்களை ‘பேக்கிங்’ செய்து கொடுப்பதுடன், முக்கிய விழாக்களுக்கு செல்லும் பெண்களுக்கு நவீன வகையில் விதவிதமான ஸ்டைலில் புடவை உடுத்தவும் கற்றுக் கொடுக்கிறார்.

இதன் மூலம் ஒரு புடவை கட்டுவதற்கு ரூ.25 வரை பெறுகிறார். இது தவிர திருமண பெண்களுக்கு அலங்காரம், மருதாணி என வைத்து விடுகிறார். இவர்கள் தான் கற்ற தொழில் முறைகளை தன்னோடு நிறுத்திக் கொள்ளாமல் மற்றவர்களுக்கும் கற்றுத் தருகின்றனர்.

இந்த அறிவியல் யுகத்தில், ‘டேட்டிங், சாட்டிங்’ என நேரத்தை வீணடித்துக் கொண்டிருப்பவர் களின் மத்தியில் அறிவை ஆக்கபூர்வமான விஷயங்களில் செலுத்தி பெண் குழந்தைகள் குடும்பத் திற்கு பாரம் இல்லை துரண் என்பதை நிரூபித்து உள்ளனர். மகளிர் தினத்தை பற்றி இந்த பெண் தொழிலதிபர்கள் கூறுகையில், ‘எங்களுக்காக ஒரு தினம் கொண்டாடப்படுவது மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. ஆணும், பெண்ணும் சமம் அல்லவா... எனவே, ஆண்களுக்காகவும் ‘ஆண்கள் தினம்’ கொண்டாடப்பட வேண்டும்.

33 சதவீத ஒதுக்கீடு என்பதை விட, மக்கள் தொகையில் பாதி அளவில் இருக்கும் பெண்களுக்கு 50 சதவீத ஒதுக்கீடு இருந்தால் தான் பெண்களுக்கான சலுகைகள் முழுவதும் தங்கு தடையின்றி கிடைக்கும். ஒரு மகன் இரவில் காலதாமதமாக இரவு 11 மணிக்கு மேல் வந்தால் கூட அலட்டிக் கொள்ளாத பெற்றோர், வேலைக்கு சென்ற மகள் திரும்பி வர இரவு 9 மணி ஆகி விட்டால், பல கதைகளை அள்ளி விட்டு விடுகின்றனர். மகளிர் தின விழா வெறும் கொண்டாட்டத்துடன் நில்லாமல் பெண்களுக்கு பயன்படும் வகையில் ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டால் நன்றாக இருக்கும்’ என்றனர்.

ஆதாரம்: தினமலர்

அட..இது எல்லாம் பெரிய மாட்டரே இல்ல...(அத தானே ஒவ்வொரு நாளும் நாம கொண்டாடுறோம் :) )....பிறகு அதற்காக ஒரு தினம் வேண்டுமா சுண்டல் அண்ணா..(என்ன கொடுமை இது) :( ..இப்ப பாருங்கோ வானத்தில நிலா இருக்கு ஆனா பெளணர்மி அன்று தான் நம்ம கண்களுக்கு முழுசா தெரியும்..(மிச்ச நாளிளையும் நிலா வானத்தில தான் இருக்கு ஆனா முழுநிலாவா தெரிவதில்லையே :D )...ஏன் நாம நிலாவை முழுசா பார்க்கிறதில்லை அதை போல தான் இந்த தினங்களும் விளங்கிச்சோ மாட்டர்... :D (நிசமா நான் குழம்பி போயிட்டன் :D )..சோ நாம ஒரு நாள் தெரியும்..(போலி)..நிலாவா இருக்க விரும்பவில்லை :lol: ...என்றைக்குமே ஆணிலாவா நிஜ நிலாவாக இருக்க விரும்புறோம் என்று ஆண்கள் சொல்லுவீனம் என்று நான் சொல்ல வந்தனாக்கும்.. :( (அக்சுவலா நேக்கு இதை பற்றி தெரியாது பாருங்கோ :D )...

ஜம்மு பேபி பஞ் -

"கண்ணா வாழ்க்கையில பல தினங்க வரலாம் ஆனா உனக்கே தெரியாம ஒரு தினம் வரும் கண்ணா அதை நீ ஏற்று கொள்ள வேண்டும்" :D

அப்ப நான் வரட்டா!!

  • தொடங்கியவர்

அட..இது எல்லாம் பெரிய மாட்டரே இல்ல...(அத தானே ஒவ்வொரு நாளும் நாம கொண்டாடுறோம் :D )....பிறகு அதற்காக ஒரு தினம் வேண்டுமா சுண்டல் அண்ணா..(என்ன கொடுமை இது) :( ..

அப்ப நான் வரட்டா!!

அதற்காக ஒரு தினம் வேண்டுமா சுண்டல் அண்ணா..................... :D:lol::(:)

அதற்காக ஒரு தினம் வேண்டுமா சுண்டல் அண்ணா..................... :D:lol::(:D

என்னதிற்காக பாட்டி... :) (அது சரி பாட்டிமார்களுக்கு தினம் இருக்கோ :( )...

அப்ப நான் வரட்டா!!

  • தொடங்கியவர்

என்னதிற்காக பாட்டி... ??????????????????????? ஓ............Party............பெண்கள் தினத்திற்காகத்தான்.

என்னதிற்காக பாட்டி... ??????????????????????? ஓ............Party............பெண்கள் தினத்திற்காகத்தான்.

இல்லை பாட்டி அக்சுவலா வயசு போன பாட்டிகள் தினத்தை கேட்டனான் :) அப்ப தானே நம்ம பாட்டிக்கு விஸ் பண்ணலாம் என்ன பாட்டி... :D (அட மகளிர் தினதிற்கு பார்ட்டி வைக்க போறீங்க என்றா நேக்கு பிரச்சினை இல்லை எப்ப என்று சொல்லுங்கோ பாட்டி :D )...

அப்ப நான் வரட்டா!!

  • கருத்துக்கள உறவுகள்

ஆண்கள் தினம்’ எப்போ கொண்டாடப் போறீங்க?

கொண்டாடினாப்போச்சு. :D

வாழ்த்து சொல்ல நான் ரெடி :):D

கொண்டாடினாப்போச்சு. :wub:

வாழ்த்து சொல்ல நான் ரெடி :unsure::wub:

பிடிகல்ல...பிடிகல்ல நேக்கு இது பிடிகல்ல :lol: கறுப்பி அக்கா உது கொஞ்சம் கூட நல்லா இல்லை சொல்லிட்டன்... :wub:

அப்ப நான் வரட்டா!!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.