Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

30 வருடங்களின் பின்னர் நாட்டில் மீண்டும் பட்டினி யுகம் - ரணில் குற்றச்சாட்டு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

30 வருடங்களின் பின்னர் நாட்டில் மீண்டும் பட்டினி யுகம் - ரணில் குற்றச்சாட்டு

3/23/2008 7:05:42 PM

வீரகேசரி நாளேடு - முன்னாள் பிரதமர் சிறிமா பண்டாரநாயக்கவின் ஆட்சியில் 1977 ஆம் ஆண்டில் ஏற்பட்ட பசி,பட்டினி,பஞ்ச யுகம் 30 வருடங்களின் பின்னர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சியில் மீண்டும் ஏற்பட்டுள்ளது என்று எதிர்கட்சித்தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

மக்கள் மரணித்தாலும் பரவாயில்லை ஐக்கிய தேசியக்கட்சி ஆட்சிபீடம் ஏறிவிடக்கூடாது என்ற மனநிலையிலேயே ஜே.வி.பி இருக்கின்றது. இந்நிலையில் மக்களை பாதுகாப்பதற்காக மக்களை ஓரணியில் திரட்டி அரசாங்கத்திற்கு எதிராக ஐக்கிய தேசியக்கட்சி ஏப்ரல் மாதம் 03 ஆம் திகதி வியாழக்கிழமை நாடளாவிய ரீதியில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை மேற்கொள்ளவுள்ளது என்றும் அவர் சொன்னார்.

கொழும்பு10, இலங்கை கண்காட்சி மற்றும் கருத்தரங்கு, நிலையத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற ஐக்கிய தேசியக்கட்சியின் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் வேட்பாளர்களுடன் நடத்தப்பட்ட சிநேகபூர்வமான ஒன்றுகூடலில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அமரர் டி.எஸ் சேனாநாயக்கவின் 56 வது ஜனனதினமான நேற்று முன்தினம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சிநேகபூர்வமான ஒன்றுகூடலில் டி.எஸ் சேனாநாயக்கவின் உருவச்சிலைக்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டதுடன் இரண்டு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டதது. அத்துடன் உள்ளூராட்சி மன்றங்களை சேர்ந்த ஐக்கிய தேசியக்கட்சி உறுப்பினர்களுக்கு காப்புறுதி பத்திரங்கள் கையளிக்கப்பட்டதுடன், 15 வருடங்களுக்கு மேல் ஐக்கிய தேசியக்கட்சி உள்ளூராட்சி சபை உறுப்பினர்களாக பதவிவகிப்போருக்கு நினைவு சின்னங்களும் வழங்கப்பட்டன. இந்த சிநேகபூர்வ ஒன்றுகூடலில் எதிர்க்கட்சி தலைவர் ரணில் விக்ரமசிங்க தொடர்ந்து உரையாற்றுகையில் மேலும் தெரிவித்ததாவது;

உள்ளூராட்சி சபை உறுப்பினர்களுக்கான இந்த கூட்டத்தை மாகாண மட்டத்தில் நடத்துமாறு கோரியிருந்தேன் எனினும் 19 மாவட்டங்களிலுள்ள உள்ளூராட்சி மன்றங்களை சேர்ந்த ஐக்கிய தேசியக்கட்சி உறுப்பினர்களை ஒரே இடத்தில் சந்திப்பதற்கான ஏற்பாடுகளை பாராளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன மேற்கொண்டுள்ளார்.

அரசாங்கத்தை வீட்டிற்கு அனுப்புவதற்காக அடிமட்டத்திலிருந்து ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்படும். அதற்காக சகலரும் ஐக்கியப்படவேண்டும். உள்ளூராட்சி மன்றங்களை சேர்ந்த ஐக்கிய தேசியக்கட்சி உறுப்பினர்கள் அரசாங்கத்தின் சேவையை எதிர்பார்த்திருக்காமல் மக்களுக்கு சேவைகளை செய்வேண்டும்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ குத்துச்சண்டை விளையாட்டில் சிறந்தவர் என்பதனால் தான் மக்களின் வயிற்றில் தொடர்ந்து அடித்துக்கொண்டே இருக்கின்றார். மக்கள் வயிற்றில் அடிகின்ற ஒவ்வொரு முறையும் நிவாரணம் தருவதாக கூறுவார். எனினும் அரசாங்கத்தினால் இன்றுவரையிலும் மக்களுக்கு எவ்விதமான நிவாரணமும் வழங்கப்படவில்லை.

சிங்கள, தமிழ் புத்தாண்டு கொண்டாடப்படவிருகின்ற நிலையில் மக்கள் பல்லை,எச்சிலுடன் சாப்பிட்டு,காற்றை குடித்து, வீட்டை பூட்டிவிட்டு மரணிக்கின்றனர்.புத்தாண்டை கொண்டாடுவதை விடவும் இன்றை நாளை எவ்வாறு சமாளிப்பது என்று சிந்தித்து கொண்டிருக்கின்றனர். மஹிந்த ராஜபக்ஷ தெற்கு மனிதன் என்றுதான் வாக்களித்தேன்.எனினும் ஏன்?வாக்களித்தேன் என இன்று சிந்திக்கின்றேன் என்று தெற்குமக்கள் தெரிவிக்கின்றனர். அதிகரித்து செல்கின்ற பொருட்களின் விலைகளை கட்டுப்படுத்துவதற்கு அரசாங்கத்திடம் எவ்விதமான திட்டமும் இல்லை என்பதனால் ஒரு நேரம் அரை கோப்பை சாப்பாடு, மறுநேரம் காப்பி, மற்றையநேரம் முழுப்பட்டனியில் என மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.

சாதார மனிதனின் நாளொன்று இவ்வாறு கழிந்து கொண்டிருக்கின்ற நிலையில் சிங்கள,தமிழ் புத்தாண்டிற்கு பின்னர் வாழ முடியுமா? என்ற நிலை தோற்றுவிக்கப்பட்டுள்ளது.

1977 ஆம் ஆண்டிற்கு பின்னர் இந்த வருடமே சிங்கள, தமிழ் புத்தாண்டை கொண்டாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. 77 ஆம் ஆண்டு நாட்டில் சீனி,பருப்பு,அரிசி இருக்கவில்லை. சிங்களம் பாதுகாக்கப்படும், என்று கூறிய ஆட்சி பீடம் ஏறியுள்ள இந்த ஜனாதிபதியின் ஆட்சியில் பொருட்கள் இருக்கின்றபோதிலும் அதனை கொள்வனவு செய்வதற்கு பணமில்லை.

சிங்கள, தமிழ் புத்தாண்டை சிறப்பாக கொண்டாடி வெசாக் தினத்தன்றும் மக்கள் கைகளில் தாரளமாக பணமிருக்க வேண்டும் என்று 2002 ஆம் ஆண்டிலிருந்த பல வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. எனினும் மெதமுலனே சிந்தனையின் ஆட்சியில் ரூபாவின் பெறுமதி பாதுகாக்கப்படவில்லை.

ரூபாவின் பெறுமதியை பாதுகாப்பதற்கு ஐக்கிய தேசியக்கட்சி ஆட்சிக்காலத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதனையே இந்தியாவும் இன்று செய்துக்கொண்டிருக்கின்றது.

உலக சந்தையில் மசகு எண்ணையின் விலை அதிகரிப்பினால் டீசல்,பெற்றோல்,காஸ், மற்றும் கோதுமை மாவின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கின்ற போதும் விலை அதிகரிப்பை கட்டுப்படுத்துவதற்கு அரசாங்கத்திடம் எவ்விதமான திட்டங்களும் இல்லை. வயல்களுக்கு டீசல் பாய்ச்சி, தென்னங்கன்றுகளுக்கு பெற்றோல் ஊறுவதனாலா? அரிசி மற்றும் தேங்காய்களின் விலைகள் அதிகரித்துள்ளன.நெத்தலி விலை அதிகரித்தாலும் பரவாயில்லை நாட்டை பாதுகாப்பதற்காக மக்கள் தங்களை அர்ப்பணிக்கவேண்டும் என்று ஜே.வி.பியும், பருப்பு விலை அதிகரித்தாலும் பரவாயில்லை பயங்கரவாதிகள் தோற்கடிக்கப்படவேண்டும் என்று ஜாதிக ஹெல உறுமயவும் கோரியிருந்தனர்.

எனினும் மிக் விமான கொள்வனவு, துறைமுக அபிவிருத்தியில் அரசாங்கத்தின் உயரதிகாரிகள் கொள்ளையடித்து பொக்கட்டுகளை நிரப்பிகொள்வது போல பிரதேச சபை தலைவர்கள் மகநெம திட்டத்தின் மூலமாக பொக்கட்டுக்களை நிரப்பிக்கொள்கின்றனர். நாளாந்தம் அதிகரிக்கின்றன பொருட்களின் விலையேற்றத்தால் மக்கள் பட்டணியில் மரணக்கின்றனர்.

மக்களை வாழவைக்காமல் நாட்டில் எவராலும் ஆட்சிநடத்த முடியாது. எனினும் மந்தபோசனம் இன்று அதிகரித்துள்ளது. சிறிமா ஆட்சியில் சாப்பாட்டை குறைத்தனர், அதேபோல 30 வருடங்களுக்கு பின்னர் சாப்பாட்டை குறைக்கும் நிலை நாட்டில் ஏற்படுத்தப்பட்டுள்ளதுடன் பட்டினியுகமும் ஏற்பட்டுத்தப்பட்டுள்ளது.

மெதமுலனே சிந்தனையின் மூலமாக அரசாங்கத்தில் இருக்கின்ற உயர் அதிகாரிகள் முதல் பிரதேச தலைவர்கள் வரை சகலரும் மக்களின் வயிற்றில் அடித்து தங்களது பொக்கட்டுகளை நிரப்பிகொள்கின்றனர்.

மக்கள் மரணித்தாலும் பரவாயில்லை ஐக்கிய தேசியக்கட்சி ஆட்சிக்கு வந்துவிடக்கூடாது என்ற நிபந்தனையில் ஜே.வி.பி இருக்கின்றது. ஐக்கிய தேசியக்கட்சி ஆட்சி பீடம் ஏறுவதை தடுத்தால் தாம் மக்களுக்காக வீதியில் இறங்குவதாக ஜே.வி.பி நிபந்தனை விதித்துள்ளது. இந்நிலையிலேயே மக்களை பாதுகாப்பதற்கான நடவடிக்கையை ஐக்கிய தேசியக்கட்சி முன்னெடுத்து வருகின்றது.

பாதிக்கப்படுகின்ற மக்களுக்கு நிவாரணங்களை வழங்குவதற்காக அரசாங்கத்திற்கு வழங்கப்பட்ட காலக்கெடு முடிவடைந்து விட்டது. மெதமுலனே சிந்தனையின் மூலமாக மக்களுக்கு நிவாரணமும் கிடைக்கும் என்ற நம்பிக்கை மக்கள் இழந்துவிட்டனர் இந்நிலையிலேயே அரசாங்கத்திற்கு எதிரான மக்கள் சக்தியை காண்பிப்பதற்காக எதிர்வரும் ஏப்ரல் மாதம் 3 ஆம் திகதி வியாழக்கிழமை நாடளாவிய ரீதியில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை மேற்கொள்ளவுள்ளோம்.

பட்டினி பற்றி மக்கள்தான் கவலைப்பட வேண்டும். அரசியல்வாதிகள் கவலைப்படுவது அந்தப் பட்டினி கிடப்பவர்களின் வாக்குகளுக்கு. மக்களுக்கு வறுமை, அரசியல்வாதிகளுக்கு வாக்கு. ரணில் ஆட்சி செய்தாலும் பட்டினியிருக்கும். இரண்டு பெருச்சாளிகளும் பேரினவாதிகள்தான்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.