Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தமிழ்ப் பெண்ணை மணம் முடித்த முஸ்லிம் வாலிபர் கொழும்பில் கைது

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்ப் பெண்ணை மணம் முடித்த

முஸ்லிம் வாலிபர் கொழும்பில் கைது

கொழும்பு குணசிங்கபுரத்தைச் சேர்ந்தவரும் தமிழ்ப் பெண்ணை திருமணம் முடித்தவருமான முஸ்லிம் வாலிபர் ஒருவரை வெள்ளை வானில் வந்த சிவில் உடைக்காரர்களும் அதிரடிப்படை உடை அணிந்த ஒருவரும் கைவிலங்கிட்டு அழைத்துச்சென்றனர் எனவும் அவரைப்பற்றி தகவல் அறியமுடியாமல் இருக்கிறது எனவும், அவரது மனைவி வாழ்க்கைத் தொழில், தொழில்நுட்பப் பயிற்சி பிரதி அமைச்சர் பெ. இராதாகிருஷ்ணனிடமும், மனித உரிமைகள் ஆணைக்குழு, கெசல்வத்தை பொலிஸ் நிலையம் ஆகியவற்றில் முறைப்பாடுகள் செய்துள்ளார்.

இவ்வாறு பிரதியமைச்சரின் ஊடகப்பிரிவு விடுத்துள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பவை வருமாறு:

கொழும்பு குணசிங்கபுரத்தைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட சிவகுமார் என்றழைக்கப்படும் பி.ஏ.எம்.ரபீக் (வயது 40) என்ற ஓட்டோச் சாரதியே கடந்த 20ஆம் திகதி இரவு 9.30 மணியளவில் இவ்வாறு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.

பிரஸ்தாப நபரின் தந்தை இஸ்லாமியர் என்றும் தாய் தமிழ் பெண்மணி என்றும் அவரது அடையாள அட்டை முஸ்லிம் பெயரில் இருந்ததாகவும் ஆனால், அவரை சிவகுமார் என்றே எல்லோரும் அழைப்பர் எனத் தெரிவித்த அவரது மனைவி நிரோஷா, தனது கணவருக்கு எதுவிதமான தீய தொடர்புகளும் இல்லை என்றும் தெரிவித்தார். அத்துடன், தமக்கு மூன்று பெண் பிள்ளைகள் இருக்கின்றனர் என்றும் உதவிகளற்ற நிலையில் கஷ்டத்துடன் வாழ்க்கை நடத்தும்போது கணவரை கைதுசெய்து மறைத்து வைத்திருப்பதால் அச்சம் அடைந்துள்ளார் எனவும் தெரிவித்த அவர்

சகல பொலிஸ் நிலையங்களிலும் தேடிய போதும் தனது கணவருக்கு என்ன நடந்தது என்று அறியமுடியவில்லை என்றும் அவர் கடத்தப்பட்டாரா அல்லது கைதானாரா என்று கண்டு பிடித்துத் தருமாறு பிரதி அமைச்சரிடம் அவர் மேலும் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது விடயம் தொடர்பாக சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் என். கே. இலங்ககோனுக்கு பிரதி அமைச்சர் அறிவித்து நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது. (க)

http://www.sudaroli.com/pages/news/today/15.htm

தலைப்பிற்கும், உள்ளே இருப்பதற்கும் ஏதாவது தொடர்பு உள்ளதாக தெரிய இல்லையே? தலைப்பை பார்த்தால் முஸ்லீம் ஒருவர் தமிழ்பெண்ணை திருமணம் செய்த குற்றத்திற்காக கடத்தப்பட்டது போல விளங்குகின்றது. உள்ளே வாசித்தால் வேறு ஏதோ பிரச்சனை.

செய்தி நிறுவனங்கள் கொஞ்சம் பொறுப்புடன் தலைப்புக்களை போடலாமே?

எனக்கு ஒருவர் சொன்ன கதைதான் இப்போது இதைப்பார்க்க நினைவுக்கு வருகின்றது.

அதாவது... மகாத்மா காந்தி கொல்லப்பட்டதும்.... சகல செய்தி நிறுவனங்களுக்கும் முக்கிய அறிவித்தல் ஒன்று கொடுக்கப்பட்டதாம்.

அது என்ன என்றால்..

மகாத்மா காந்தி கொல்லப்பட்டார் என்று தலைப்புச் செய்தியில் எழுதாமல் மகாத்மா காந்தி இந்து ஒருவரால் கொல்லப்பட்டார் என்று எழுதுமாறு.

ஏன் என்றால் மகாத்மா காந்தி கொல்லப்பட்டார் என்று மட்டும் எழுதும்போது இந்துக்கள் அவரை கொன்றது முஸ்லீம்கள் என்று நினைத்து கலவரத்தில் ஈடுபடக்கூடும் என்று அரசாங்கம் பயந்ததாம்.

செய்தி தலைப்புக்களை போடும்போது எவ்வளவு கவனமாக இருக்கவேண்டும் என்பதற்கு இது ஒரு உதாரணம்.

சுடரொளியும் இதை கவனத்தில் எடுக்குமா? அல்லது இது செய்தியை இணைத்த கறுப்பியின் தவறா?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சுடரொளி கவனத்தில் எடுத்தால், கறுப்பி இணைப்பிலும் தவறு இருக்காது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.