Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தமிழர்களை இழிவுபடுத்தும் சிங்களத் திரைப்படத்தை அழிக்கவேண்டும் - தமிழ்நாடு மேல் நீதிமன்றத்தில் திருமாவளவன் வழக்கு

Featured Replies

வீரகேசரி இணையம் - தமிழர்களை இழிவுபடுத்தும் வகையிலான பிரபாகரன் என்ற பெயரிலான சிங்களத் திரைப்படத்தைக் கையகப்படுத்தி மத்திய அரசு அழிக்க வேண்டும் என்றும், அப்படத்தை சென்னை வண்ணக் கலையகத்திலிருந்து வெளியே எடுக்க இலங்கைத் துணைத் தூதுவர் ஹம்சா மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி தமிழ்நாடு மேல் நீதிமன்றத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் வழக்குத் தொடர்ந்துள்ளார்.

தொல். திருமாவளவன் நேற்று செவ்வாய்க்கிழமை தாக்கல் செய்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:

"பிரபாகரன்' என்ற சிங்களத் திரைப்படம் தமிழர்களை இழிவுபடுத்தும் வகையிலான காட்சிகளைக் கொண்டதாக உள்ளது. இலங்கையில் நடைபெற்று வரும் இனப்படுகொலையால் லட்சக் கணக்கான தமிழர்கள் புலம்பெயர்ந்து வெளிநாடுகளிலும், தமிழ்நாட்டிலும் அகதிகளாக அல்லற்படுகின்றனர். ஆனால், பிரபாகரன் என்ற பெயரிலான சிங்களத் திரைப்படத்திலோ, புலிகளின் போரினால் மிக மோசமான அதிக முகாம்களில் சிங்கள மக்கள் அவதிப்படுவதாகப் பொய்யாகச் சித்திரிக்கப்படுகின்ற காட்சிகள் உள் ளன. 30 தசாப்த கால இனப் போரின் வரலாற்றை தமிழ்நாட்டு வரலாற்று ஆசிரியர்களும் வழக்குத் தொடர்ந்துள்ள நாமும் நன்கு அறிவோம். கொத்துக் கொத்தாக சிங்களவர்கள் கொல்லப்படுவது போலவும் இடம்பெயர்வது போலவுமான காட்சிகள் அனைத்துமே மிகப் பொய்யானவை மட்டுமல்ல, பாரிய கற்பனையுமாகும்.

சில காட்சிகளில் சிறுவர்களைக் கொண்டு இனப்படுகொலை செய்வதாகவும் காட்டப்பட்டுள்ளது. அதனைவிட மிக மோசமாகக் களமுனையில் கொல்லப்பட்ட சிறுவர்களுக்குப் பாடசாலைச் சீருடைகளை அணிவித்து பள்ளிக் குழந்தைகளை இராணுவம் கொன்றதாகப் புலிகள் பிரசாரம் செய்கிறார்கள் என்று ஒரு காட்சி அமைக்கப்பட்டுள்ளது. "செஞ்சோலை' என்ற சிறார் காப்பகத்தின் மீது இலங்கை விமானப் படையினர் குண்டுத் தாக்குதல் நடத்தியதனால் 50க்கும் மேற்பட்ட சிறுவர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.

அவர்களை ஆயுதப் பயிற்சிக்குச் சென்ற சிறுவர்கள் என்று இலங்கை அரசாங்கம் கூறியது. ஆனால், ஐ.நா.வின் சிறுவர் அமைப்பான யுனிசெப், பாடசாலைச் சிறுவர்களே படுகொலை செய்யப்பட்டோர் எனக் கூறியது. இப்படத்தில் இலங்கையின் பொய்ப் பிரசாரத்தைத் தூக்கி நிறுத்தும் வகையிலேயே வன்மத்துடன் திட்டமிட்டு காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன.

இப்படத்தின் நோக்கமே தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரானது என்று இப்படத்தின் இணையத் தளத்திலே தெளிவாகக் கூறப்பட்டுள்ளது என்று "குமுதம் ரிப்போட்டர்' வாரமிருமுறை இதழ் சுட்டிக் காட்டியுள்ளது. இப்படத்தின் தொழில்நுட்பம் மற்றும் பதனீட்டுச் செயற்பாடுகளுக்கான பணிகள் ஜெமினி கலையகத்தில் நடைபெற்றன. இதற்கு எமது விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் நிர்வாகிகள் உட்பட தமிழ் ஆர்வலர்கள் பலரும் கடும் எதிர்ப்புத் தெரிவித்தபோது நிலைமையை சீராக்க காவல்துறையினர் அங்கு வந்தனர். காவல்துறை துணை ஆய்வாளர் முன்னிலையிலேயே பேச்சுவார்த்தையும் நடத்தப்பட்டது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.