Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

செங்குருதியில் தோய்ந்த கால்களுக்கு செங்கம்பள வரவேற்பா?

Featured Replies

ஆக்கம்: மதி

2. ஏப்ரல் 2008 22:12

உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடுகளில் ஒன்றென கூறிக்கொள்ளும் இந்தியா ஈழத்தமிழர் விவகாரத்தில் மனச்சாட்சிக்கு மாறாகவே நடந்து வருகின்றது. ஈழத்தமிழர் உறவு விரும்பத்தகாதது என்ற மனோநிலையினை தக்கவைத்தும் வருவதை அவதானிக்க முடிகிறது. மிகவும் அண்மித்த காலப்பகுதியில் ஈழத்தமிழரின் குருதியில் பிழைப்புவாத அரசியலை நடத்தும் சிங்களப் பேரினவாத அரசின் படைதளபதியான சரத் பொன்சேகாவிற்கான இந்தியாவின் வரவேற்பு என்பது ஈழத்தமிழரின் செங்குருதியை பிசைந்துழக்கிய கால்களுக்கு செங்கம்பள வரவேற்பு வழங்கப்பட்டதாகவே ஈழத்தமிழ் சிந்தனையாளர்கள் நோக்குகின்றனர். இந்தியாவின் இத்தகைய போக்கிற்கு காரணம் ராஜீவ்காந்தியின் படைகொலை தானென பரவலாக பேசப்படுவதை பலரும் அறிவோம். ஆனால்..... ஈழத்தமிழர் விவகாரத்தில் மான் விழுங்கிய மலைப்பாம்பு போல் இந்தியா இருப்பதற்கு இது காரணமாகாது. ஏனெனில் 1991 ஆம் ஆண்டு தான் ராஜீவ்காந்தியின் படுகொலை இடம் பெற்றது. ஆனால் இதற்கு முன்னரும் பிராந்திய வல்லரசான இந்தியா நீதியான போக்கை முற்று முழுதாக கொண்டிருக்கவில்லை என்பதை பெரிதாக ஆய்வு செய்து அறியவேண்டிய விடயமில்லைத்தானே!

ஈழத்தமிழரின் ஆயுதப்போராட்டத்தில் ஈடுபடத் தொடங்கியதற்கு காரணம் தமிழரை கோரமாக படுகொலை செய்வதைத் தடுப்பதற்காகவே. தமிழீழ மீட்பிற்காக போராளிகள் பயிற்சியெடுப்பதற்கு பின்தளத்தையும் பயிற்சியையும் கொடுத்தது இந்தியா. அப்படிப்பட்ட இந்தியா இந்தியா தனது நலன் சார்ந்த விடயத்திற்கு தமிழீழ விடுதலைப்போராளிகளை உள்வாங்க முற்பட்டபோது சில குறிப்பிட்ட குழுக்கள் அதற்குள் சிக்கிவிட்டனர். தமிழீழ விடுதலைப்புலிகள் மறுபுறம் ஈழதமிழினத்தின் உரிமைப்போராட்டம் தான் எங்கள் ஒரே கொள்கையென தங்கள் கொள்கையில் உறுதியாக நின்றனர்.

மேலும் வாசிக்க : http://swissmurasam.info/content/view/5042/1/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.