Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தென்னிலங்கையில் அவியும் பருப்பு!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தென்னிலங்கையில் அவியும் பருப்பு!

07.04.2008

இலங்கையின் இனப்பிரச்சினையை ஒட்டிய கோர யுத்தம் தொடர்பாக செய்தி நிறுவனங்கள் குறிப்பாக வெளிநாட்டு ஊடகங்கள் வெளியிட்டு வரும் புதினங்களில் ஒரு முக்கிய விடயம் விசேடமாக அமைந்திருப்பதைக் காணலாம். ஒவ்வொரு நாளும் யுத்தத்தில் உயிரிழக்கும் புலிகளின் எண்ணிக்கை என்று தெரிவித்து இலங்கை அரசுத்தரப்பு வெளியிடும் புள்ளி விவரங்கள் வெளிநாட்டுச் செய்தி நிறுவனங்களால் முக்கியத்துவம் கொடுத்துப் பிரசுரிக்கப்படுகின்றன.

இந்த விடயத்தை ஒட்டி இலங்கையின் மூத்த படை அதிகாரி ஒருவர் அவ்வப்போது பகிரங்கமாக வெளியிட்டு வந்த தகவல்களை வரிசைப்படுத்தி, ஆங்கில வார இதழ் ஒன்று நேற்று நியாயமான சில கேள்விகளை எழுப்பியிருக்கின்றது. அந்த வினாக்களை ஒரு தடவை இங்கு நோக்குவது பொருத்தமானது.

கடந்த ஆண்டு (2007) மே மாதம் இந்தியாவின் "ஹிண்டுஸ்தான் டைம்ஸ்' ஊடகத்துக்கு இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சரத் பொன்சேகா சில விடயங்களைக் கூறியிருந்தார்.

""புலிகளிடம் இப்போது நான்காயிரம் உறுப்பினர்களே உள்ளனர். அவர்களும் திறமைசாலிகள் அல்லர். அவர்களில் சுமார் இரண்டாயிரம் பேரை அழிப்போமானால் புலிகள் இயக்கத்துக்கே முடிவு கட்டியதாகி விடும்.'' என்று அவர் அதில் கூறியிருந்தார்.

இந்தப் பேட்டி வழங்கி ஏழு மாதங்களின் பின்னர் இந்தக் காலப் பகுதியில் அவ்வப்போது பாதுகாப்புத் தரப்பு விடுத்த அறிவிப்புகளின் கூட்டுத்தொகைப்படி சுமார் 2 ஆயிரத்து ஐந்×று புலிகள் கொன்றொழிக்கப்பட்ட நிலையில் 2007 டிசம்பர் மாதம் கடைசியில் "த சண்டே ஒப்சேர்வர்' வார இதழுக்குத் தகவல் வெளியிட்ட அதே இராணுவத் தளபதி புதிய கருத்தை முன்வைத்தார்.

""இன்னும் மூவாயிரம் புலிகளே எஞ்சியிருக்கின்றனர். அடுத்த ஆறு மாதங்களில் அதாவது ஜூன் 2008 இற்குள் புலிகள் முற்றாக அழிக்கப்பட்டுவிடுவர்'' என்று மீண்டும் சூளுரைத்தார் இராணுவத் தளபதி.

இராணுவத் தளபதியின் சொந்தக் கூற்றின்படி நாலாயிரமாக இருந்த புலிகளின் எண்ணிக்கை ஆறு மாதங்களில் அரச அறிவிப்புகளின் பிரகாரம் இரண்டாயிரத்து ஐந்நூறு புலிகள் புதிதாக அழிக்கப்பட்ட நிலையில் திரும்பவும் மூவாயிரமானது எவ்வாறு என்பது புரியவில்லை.

அடுத்த நாளைய டிசம்பர் 31 ஆம் திகதி "த டெய்லி நியூஸ்' என்ற அரசு சார்பு தினசரிக்குப் பேட்டியளித்த இராணுவத் தளபதி, தினசரி பத்துப் புலிகள் என்ற சராசரி வீதத்தில் புலிகளை அழித்து ஒழிப்பது தமது உத்தேசம் என்று அதில் குறிப்பிட்டார். 2008 ஆம் ஆண்டில் யுத்தம் ஒரு முக்கிய தீர்க்கமான கட்டத்துக்குள் நுழைகின்றது என்றும் அதில் குறிப்பிட அவர் தவறவில்லை.

ஓர் இராணுவத் தளபதி தனது பதவியின் உச்ச நிலையில் ஆகக் கூடியது நான்கு தடவைகள் மாத்திரமே தலா ஒரு வருடம் கொண்ட சேவை நீடிப்புகளைப் பெறமுடியும். அந்த வகையில் இப்போது தமது நான்காவது வருட சேவை நீடிப்பில் இருக்கும் இராணுவத் தளபதி இந்த ஆண்டு டிசம்பருடன் பதவி விலக வேண்டியவராகின்றார்.

இந்நிலையில், இந்த ஆண்டு முற்பகுதியில் ஜனவரி 11 ஆம் திகதி அளவில் இலங்கையில் உள்ள வெளிநாட்டுச் செய்தி நிறுவனங்களின் ஊடகவியலாளர்களை அவர் சந்தித்தார்.

தினசரி பத்துப் புலிகளையாவது சராசரியாகக் கொன்றொழிப்பது தமது திட்டம் என்றாலும், அதையும் மீறி தினமும் குத்துமதிப்பாக இருபது புலிகளை அரச படையினர் கொன்றொழித்து வருகின்றனர் என்றும் அப்போது அவர் குறிப்பிட்டார்.

தமது பதவிக்காலம் முடிவதற்குள் புலிகளின் பிரச்சினையைத் தாம் தீர்த்துக்கட்டி விடுவார் என்றும்

தமக்குப் பின்னர் அடுத்துப் புதிய இராணுவத் தளபதியாக வருபவருக்கு இந்தப் பிரச்சினையைத் தாம் விட்டுச்செல்ல மாட்டார் என்றும்

அந்தச் சந்திப்பின்போது இராணுவத் தளபதி உறுதி கூறியிருந்தாராம்.

இந்தத் தகவலை வெளியிட்டு சரியாக ஒரு மாதத்தின் பின்னர் சுதந்திர தினத்தை ஒட்டி பெப்ரவரி 10 ஆம் திகதி சிங்கள வார இதழ் ஒன்றுக்குக் கருத்து வழங்கிய இராணுவத் தளபதி அதில் புலிகளின் யுத்த வல்லமையை மேலோட்டமாகப் புகழவும் தவறவில்லை.

""புலிகள் இயக்கம் பழுத்த அனுபவத்தோடு அமைந்த நன்கு திட்டமிடப்பட்ட இயக்கம். அவர்களிடம் ஆயிரக் கணக்கான வீரர்கள் இருக்கின்றார்கள்.'' என்று குறிப்பிட்ட இராணுவத் தளபதி ""நான் யுத்தத்தை இன்ன கால அவகாசத்துக்குள் கால எல்லைக்குள் நடத்தி முடிக்க வேண்டும் என்ற வரையறைக்குள் செயற்படவில்லை'' என்றும் சொன்னார்.

அது மட்டுமல்ல.""இந்தத் தடவை நாம் கிளிநொச்சியைக் கைப்பற்றினால் அதனை (முன்னரைப்போல) சிறிது காலத்தில் மீள விட்டுவிடமாட்டோம். ஆனாலும் எமது தாக்குதல் நடவடிக்கைகளுக்குக் காலம் பிடிக்கும் என்பதை நீங்கள் உணரவேண்டும்.'' என்றும் கூறிய அவர் அதற்கு மேலும் ஒரு விடயத்தைச் சொன்னார்.

அதாவது, இன்னும் ஐயாயிரம் புலிகள் போரிடும் ஆற்றல் உள்ள வீரர்கள் புலிகள் அமைப்பில் இருக்கின்றார்கள் என்றும் அவர் கூறினார்.

இப்படி "இதோ புலிகளை அழித்து விடுகிறோம்', "அதோ புலிகள் அழிந்தனர்' என்றெல்லாம் மார்தட்டி அறிவித்து வந்த அரசுப் படைத் தரப்பு, தாமே தமது நாட்டு மக்களுக்கு இதுவரை கொடுத்த கயிற்றிலிருந்து இப்போது பின்வாங்குகின்றது என்பதை அந்த ஆங்கில வார இதழ் எடுத்துரைத்துச் சுட்டிக் காட்டியிருக்கின்றது.

தாம் தினசரி கொன்றொழிக்கும் புலிகளின் எண்ணிக்கை தொடர்பான படைத்தரப்பின் அறிக்கை, எஞ்சியிருக்கும் புலிகளின் எண்ணிக்கை தொடர்பான ஒன்றுக்கொன்று முரணான அறிவிப்புகள், இராணுவ நடவடிக்கைகளுக்கும் புலிகளை முற்றாக அழித்தொழிப்பதற்கும் உறுதி அளித்து, அதனடிப்படையில் நாட்டு மக்களுக்குப் படைத்தரப்பு வழங்கும் கால அவகாசங்கள், பின்னர் அவற்றை அவ்வப்போது நீடிப்பது பற்றிய பிரகடனங்கள் போன்றவற்றை நோக்கும்போது ஒன்று தெளிவாகப் புரிகின்றது.

இந்த அறிவிப்புகளை நம்பி அவற்றுக்கு எடுபடும் "மாதன முத்தா' வகையறாவைச் சேர்ந்தவர்களாகத் தென்னிலங்கையர் இருக்கும்வரை படை உயர் அதிகாரிகள் மற்றும் பாதுகாப்பு உயர் வட்டாரங்களின் "பருப்பு' ரக அறிவிப்புகள் இங்கு நன்கு அவியும் வேகும் என்பதே அது!

http://www.sudaroli.com/editorial.htm

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்த புழுடாவெல்லாம் ஒருநாள் தெரியும் எப்போதென்று அண்ணணுக்குத் தெரியும்

இன்று த ஒஸ்ரேலியன் பத்திரிகையில் பெனார்ண்டொ பிள்ளையில் செய்தி வந்திருந்தட்து அதில் கடந்த வாரம் 100 புலிகள் கொல்லப்பட்டதாகவும் எழுதப்பட்டு இருந்தது

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.