Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

சினிமா வடிவத்தில் உருவாகிய பேரினவாத பிரச்சாரம் -வேல்சிலிருந்து அருஸ்-

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சிறிலங்காவின் போர் அரங்கில் தற்போது பிரச்சார போர் மிக முக்கிய கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இரு வகைகள் உண்டு. ஒன்று களமுனை தொடர்பாக வெளியிடப்படும் தகவல்கள். இரண்டாவது விடுதலைப் போரை ஒரு பயங்கரவாத அமைப்பாக சித்தரித்து அதற்கு அதரவு வழங்கும் மக்களின் உள உணர்வுகளை மழுங்கடிப்பதற்கும் மேற்கொள்ளப்படும் பிரச்சார உத்திகள்.

வடபோர்முனை தொடர்பான தகவல்களை மிகவும் துல்லியமாக திட்டமிட்டு மூடிமறைத்து வருவதுடன், அனைத்துலகத்தில் தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்தை ஒரு பயங்கரவாத போராட்டமாக சித்தரிப்பதற்கும் சிறிலங்கா அரசு கடும் முயற்சிகளை மேற்கொண்டு வருவது நாம் அறிந்தவையே.

சிங்கள அரசின் இந்த முயற்சியில் உலகில் வாழும் ஒட்டுமொத்த தமிழ் மக்களும் இன்று உள்வாங்கப்பட்டுள்ளனர். பெரும் பொருட்செலவில் ஜரோப்பிய ஒன்றிய நாடுகள், கனடா, அவுஸ்திரேலியா என புலம்பெயர் தமிழ் மக்கள் செறிவாக வாழும் நாடுகளில் அரசு, தமிழ் மக்களுக்கு எதிரான பரப்புரைகளில் முழுவீச்சில் இறங்கியுள்ளது.

இதற்கு சில உதாரணங்களாக அடிக்கடி மாற்றப்படும் இராஜதந்திரிகள் மற்றும் தூதுவர்கள், ஜரோப்பிய நாடு ஒன்றில் இருந்து ஒலிபரப்பாகும் தமிழ் வானொலி ஒன்றிற்கு சிறிலங்கா அரசு மாதம் 5,000 டொலர்களை வழங்கி வருவது என்பவற்றை குறிப்பிடலாம்.

எனினும் இந்திய மத்திய அரசை தன்பக்கம் இழுத்து வைத்திருக்கும் சிங்கள அரசு தற்போது வடக்கு-கிழக்கு மக்களின் தொப்புழ்க்கொடி உறவாக விளங்கும் தமிழ் நாட்டை குறிவைத்து தனது பயங்கரவாத பிரச்சாரங்களை முடுக்கிவிட்டு வருவது அதன் சமீபத்தைய சாதனை.

இன்றைய நவீன யுகத்தில் மக்களிடம் கருத்துக்களை மிக விரைவாக கொண்டு செல்லும் ஊடகம் ஒளிபரப்புத் துறையாகும். அதாவது, அது சினிமா வடிவத்திலும், தொலைக்காட்சி வடிவத்திலும் இருக்கலாம். இந்த உத்தியை மிகவும் தந்திரமாக கையாண்டுள்ளது சிங்கள அரசு.

அதன் ஓரங்கமே 'பிரபாகரன்" என்னும் பெயரில் சிங்கள அரசின் வழிநடத்தலில் எடுக்கப்பட்;;டுள்ள சினிமா. அதனை தமிழ்நாட்டிலும், உலகின் ஏனைய பாகங்களிலும் வெளியிடுவதன் மூலம் தமிழ் மக்களின் மூன்று தசாப்தங்களுக்கும் மேலான உரிமைப் போராட்டத்தை கொச்சைப்படுத்தி அவர்களை முழு உலகிற்கும் ஒரு பயங்கரவாத மக்களாக காட்டும் வேலைகள் கனகச்சிதமாக மேற்கொள்ளப்பட்டுள்ளன.

படத்தை வெளியிடும் நோக்கத்துடன் சென்னையில் திரையிட்டுக்காட்டிய போது தான் கடுமையாக தாக்கப்பட்டதாக இந்தப் படத்தை எடுத்த இயக்குநர் துசாரா பீரிஸ் தெரிவித்துள்ளார். ஆனால் அவர் தான் தாக்கப்பட்டதாக தெரிவிப்பது பொய்யான தகவல் எனவும், தனது படத்திற்கு விளம்பரம் தேடும் முகமாக மேற்கொள்ளப்பட்ட புனை கதை அது எனவும் சென்னைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

விடுதலைப் போரட்டத்தையும், தமிழ் மக்களின் உணர்வுகளையும் குரூரமாக சித்தரித்து எடுக்கப்பட்டுள்ள இந்தப் படம் தொடர்பான உண்மையான தகவல் என்ன என்பது தற்போது மெல்ல, மெல்ல வெளிவர ஆரம்பித்துள்ளன.

இந்த திரைப்படம் சிங்கள அரசினால் மிகவும் நுணுக்கமாக திட்டமிடப்பட்டு எடுக்கப்பட்ட படம். சென்னையில் உள்ள அதன் பிரதிகளை பெற்றுக்கொள்வதற்கு சிறிலங்கா வெளிவிவகார அமைச்சகம் உட்பட பல உயர்மட்ட அரச தலைவர்கள் முயற்சித்து வருவதில் இருந்து அதனை இலகுவில் புரிந்து கொள்ளலாம். சாதாரண ஒரு திரைப்படத்திற்கு வெளிவிவகார அமைச்சர் ரோகித போகல்லாகம காலில் இறக்கை கட்டிப் பறக்க மாட்டார்.

இந்தப் படத்தின் பெரும்பாலான காட்சிகள் சிறிலங்காவின் கிழக்கு மாகாணத்தின் வெலிக்கந்தைப் பகுதியில் எடுக்கப்பட்டவை. வெலிக்கந்தையில் எடுக்கப்பட்ட இந்த படத்திற்கான உதவிகளை மட்டக்களப்பில் நிலைகொண்டுள்ள 23 ஆவது படையணியின் 1 ஆவது பிரிகேட் தலையகத்தின் கட்டளை அதிகாரி கேணல் பெரேராவும், அங்கு நிலைகொண்டுள்ள துணை இராணுவக் குழுவினருமே வழங்கியிருந்தனர். மேலும் விடுதலைப் புலிகளின் சீருடைகளையும், படத்திற்கு தேவையான சிறுவர்களையும் துணை இராணுவக் குழுவினரே வழங்கியிருந்தனர்.

இந்தத் திரைப்படத்தில் நடித்த பலரும் துணை இராணுவக்குழுவைச் சேர்ந்தவர்கள் என்பதும் அங்கிருந்து கிடைத்த தகவல்கள். எனினும் கிழக்கு மாகாணத்தில் உள்ள ஒதுக்குப்புறமான பகுதியில் நடைபெற்ற இந்த இரகசிய படப்பிடிப்பின் முழு வேலைகளையும் ஒருங்கிணைத்து வழிநடத்தியவர் முன்னாள் கிழக்கு மாகாண கட்டளைத் தளபதியான மேஜர் ஜெனரல் பாராக்கிரம பன்னிப்பிட்டிய என்பதும் திடுக்கிடும் தகவல்.

இந்தப் படத்தில் வரும் ஒரு காட்சியில் பாடசாலைக்குள் புகுந்த விடுதலைப் புலிகள் சிறுவர்களை பலவந்தமாக இழுத்துச் செல்வது போல எடுக்கப்பட்டுள்ளது. பல காட்சிகளில் பெண்களைக் கூட மிகவும் கொடுமையான கோலத்தில் காட்டியுள்ளார் பீரிஸ். விடுதலைப் புலிகள் சிறார்களைப் படையில் சேர்ப்பதில்லை எனவும் துணை இராணுவக்குழுவினரே அதிகம் சேர்த்து வருவதாகவும் அமெரிக்கா தனது இறுதி அறிக்கையில் தெரிவித்திருந்த நிலையில் பீரிஸ் தனது எதிர்ப் பிரச்சாரத்தை சினிமா மூலம் அவிழ்த்து விட்டுள்ளார்.

இந்தப் படத்தை பார்த்த நூற்;றுக்கும் மேற்பட்ட தமிழ் உணர்வாளர்களில் பலர் தமது கடுமையான அதிதிருப்திகளை வெளியிட்டிருந்தனர். அவற்றில் திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் அமைப்பாளர் பேராசிரியர் சுப. வீரபாண்டியன் தெரிவித்த கருத்தை இங்கு பார்ப்போம்:

கருத்துரிமை என்பது வேறு, ஒரு இனத்தை இழிவு செய்வது என்பது வேறு. கற்பனை-புனைவு என்பதில் கருத்துச் சொல்வது வேறு. ஒரு வரலாற்றை சொல்லும் போது அதனை திரித்தும் மாற்றியும் சொல்வதற்கு உங்களுக்கு உரிமையில்லை. தமிழ் மக்கள் அனைவரும் கொடுமையானவர்கள்- சிங்கள மக்கள் அனைவரும் கருணை உள்ளம் படைத்தவர்கள் என்று செல்வது வரலாற்றுத் திரிபு என தெரிவித்திருந்தார்.

அதாவது, முற்று முழுதாக இராணுவத்தினதும், சிறிலங்கா அரசினதும் வழிநடத்தலில் துணை இராணுவக் குழுவினரின் ஒத்துழைப்புக்களுடன் எடுக்கப்பட்ட இந்தப் படத்தின் சில காட்சிகள் இந்தியாவிலும் படமாக்கப்பட்டு அதனை ஒரு சாதாரண திரைப்படம் போல காண்பிக்கும் முயற்சிகள் திரைமறைவில் மேற்கொள்ளப்பட்டிருந்தன.

ஒரு இனத்தின் உணர்வுகளை கொச்சைப்படுத்தாது, வரலாற்றைத் திரித்துக் கூறாது, உண்மைகளை வெளிக்கொண்டு வருவது சினிமா. ஆனால் ஒரு இனத்தின் உரிமைகளை கொச்சைப்படுத்தி, அவர்களை இழிவுபடுத்தி வரலாற்றைத் திரித்து உண்மைக்குப் புறம்பாக எடுக்கப்பட்ட இந்த சினிமா ஒரு படைத்துறைப் பிரச்சாரமாகும்.

அதனை தான் இந்த திரைப்படம் மூலம் துசாரா பீரிஸ் செய்துள்ளார். தமிழ் இனத்தையும் அவர்களின் உணர்வுகளையும் கொடூரமாக சித்தரித்து எடுக்கப்பட்ட இந்தப் படத்தை தமிழ் மக்கள் செறிவாக வாழும் பிரதேசத்தில் வெளியிட எண்ணிய துணிச்சல் தான் வியக்கத்தக்கது. எந்தவித இன உணர்வும் அற்ற சடப்பொருளாகவே தமிழ் இனத்தை பீரிஸ் கணித்துள்ளார் என்பதை தான் இதன் மூலம் புரிந்து கொள்ள முடியும்.

கருணா குழுவும் அதில் இருந்து பிரிந்து சென்றுள்ள பிள்ளையான் குழுவும் சிறார்களை அதிகளவில் படையில் பலவந்தமாக சேர்த்து வருவதாகவும், அதற்கு சிறிலங்காப் படையினர் உதவி வருவதாகவும் அனைத்துலக நாடுகளும், அனைத்துல அமைப்புக்களும் தெரிவித்து வருவதும். சிறிலங்காவில் நடைபெற்று வரும் மோசமான மனித உரிமை மீறல்களில் அரசும், துணை இராணுவக் குழுவினருமே பெருமளவில் ஈடுபட்டு வருவதாக அனைத்துலக அமைப்புக்கள் ஒருமித்த குரலில் கருத்து தெரிவித்து வருவதும் இங்கு நோக்கத்தக்கது.

இந்த நிலையில் உள்ளுராட்சி சபைத் தேர்தல், மாகாண சபைத் தேர்தல் என்ற போர்வையில் துணை இராணுவக் குழுவினருடன் கூட்டுச்சேர்ந்துள்ள அரசு, அவர்களுக்கு வெள்ளைச் சாயம் பூச முற்பட்டு வருவதுடன், ஒட்டுமொத்த தமிழ் இனத்தையும் பயங்கரவாதிகளாக சித்தரிக்கவும் முனைந்து நிற்கின்றது. அரசின் இன அடக்குமுறைக்கு மேலாக தனது இனவெறியின் உச்சத்தையும் இனங்காட்டியுள்ளார் இயக்குனர் துசாரா பீரிஸ்.

தமிழ்நாட்டில் இந்த முயற்சியை துசாரா பீரிஸ் எடுத்ததன் பின்னனியில் இந்திய மத்திய அரசும், அதன் புலனாய்வு அமைப்பான றோவினதும் பங்களிப்புக்களும் கணிசமானவை என்பதை நான் கூறித்தான் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதில்லை. ஆனால் தமிழக அரசை விட இந்திய மத்திய அரசில் சிறிலங்கா அரசு கொண்டுள்ள ஆதிக்கம் அதிகம். அதனை அண்மைய நடவடிக்கைகள் மூலம் இலகுவாக புரிந்து கொள்ள முடியும்.

இந்த மாற்றம் தான் துசாரா பீரிசுக்கும் துணிச்சலை கொடுத்திருக்கும் என்பதை மறுக்க முடியாது. ஆனால் சிறிலங்கா அரசினதும் அதன் படையினரினதும் உதவியுடன் முழுக்க முழுக்க படைத்துறை நலன் சார்ந்து எடுக்கப்பட்ட இந்த படத்தை ஒட்டுமொத்த தமிழினமும் எதிர்க்க வேண்டியது காலத்தின் கடமை.

சிறிலங்காவில் இனப்பிரச்சினை ஒன்று இல்லை என்று கடந்த காலங்களில் கூறிவந்த அரசு தற்போது அவ்வாறு கூறமுடியாத நிலையில் உள்ளது. அதற்கான காரணம் தமிழ் மக்களின் பிரச்சினைகளின் ஒரு பகுதியையாவது அனைத்துலக சமூகம் உணர்ந்து கொண்டதே ஆகும். எனவே தான் தற்போது தமிழ் மக்களின் போராட்டத்தை சிதைத்து விடுவதற்கு அரசு தனது கொடூர முகத்தை காட்டி வருகின்றது. அதன் ஒரு பகுதி தான் அரசின் மனித உரிமை மீறல்கள். சிறிலங்கா அரசின் இந்தப் போக்கிற்கு எதிராக அனைத்துலகத்தின் கவனம் மெல்ல மெல்ல திரும்பி வருவதும் கவனிக்கதக்கது.

எனவே தான் தமிழ் மக்களின் உரிமைப் போராட்டங்களை பயங்கரவாத நடவடிக்கைகளாக காட்டும் அரசின் ஒவ்வொரு முயற்சியையும் முற்றாக முறியடிக்க வேண்டியது இன்று அவசியமானது. துசாரா பீரிஸ் போன்ற ஒரு இனவெறியனின் முயற்சியை ஆரம்பத்தில் முறியடிக்கத் தவறினால் பல நூறு துசாரா பீரிசுக்கள் நாளை முளைப்பார்கள். அவர்கள் ஒட்டுமொத்த தமிழ் இனத்தையும் பயங்கரவாதிகளாகவே உலகிற்கு சித்தரிக்க முனைவாhகள்.

இன உணர்வு என்பது யாரும் கூறி நமக்குள் வருவதில்லை ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் அது சுயமாக கிளர்ந்து எழுவதுண்டு. உதாரணமாக 2003 ஆம் ஆண்டு நடைபெற்ற ஈராக் போரின் போது அமெரிக்கப் படையினருக்கு ஆதரவாக பிரான்ஸ் தனது படைகளை களமிறக்கவில்லை. அதானால் வேதனையடைந்த அமெரிக்கப் படையினர் தமது விமானப் பயணத்தின் போது பிரான்ஸ் நாட்டு உணவுப் பொருட்களை ஏறெடுத்தும் பார்க்கவில்லையாம்.

2003 ஆம் ஆண்டு ஏப்பிரல் மாதம் பிரித்தானியாவில் இருந்து வெளியாகிய பத்திரிகைகளின் முக்கிய செய்தி இது. அதாவது பிரான்ஸ் நாட்டு உணவுப் பொருட்களை புறக்கணிக்குமாறு அமெரிக்க அதிபர் ஜோர்ச் புஷ் அமெரிக்க மக்களையோ அல்லது இராணுவத்தினரையோ கேட்டுக்கொள்ளவில்லை. எனினும் ஒவ்வொரு அமெரிக்க குடிமகனுக்குள்ளும் அந்த உணர்வுகள் தாமாகவே கிளர்ந்து எழுந்தது ஆச்சரியமானது.

தமிழ் இனத்தின் காலாச்சார விழுமியங்களையும், பண்பாடுகளையும் துசாரா பீரிஸ் போன்ற இனவாதிகளிடம் இருந்து காப்பாற்றிக் கொள்ளவேண்டியது ஒட்டுமொத்த தமிழ் இனத்தின் கடமையாகும். இதில் நாம் விடும் தவறுகள் வரலாற்று தவறுகளாகவே வரும் காலம் பதிந்து கொள்ளும்.

http://www.tamilnaatham.com/articles/2008/apr/arush/03.htm

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.