Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

விடுதலைப் புலிகளின் கிளை அமைப்புக்கள் அமெரிக்காவில் விரிவாக்கப்பட்டு வருகின்றன- வாஷிங்டனில் உள்ள இலங்கை அதிகாரிகள்.

Featured Replies

தமிழீழ விடுதலைப் புலிகள் தமது சார்பு அமைப்புக்களின் கிளைகளை அமெரிக்காவில் விரிவுபடுத்தி வருவதாக வாஷிங்டனிலுள்ள இலங்கை அதிகாரிகள் குற்றஞ்சாட்டியுள்ளனர். இக்கிளை அமைப்புகள் பல்வேறு நாடுகளிலும் புலிகள் அமைப்புக்காக நிதி சேகரித்தல், ஆயுதக் கொள்வனவில் ஈடுபடுதல் ஆகிய நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும் இலங்கை அரசு சுட்டிக் காட்டியுள்ளது. விடுதலைப் புலகளின் கிளை அமைப்புக்கள் அமெரிக்கா, கனடா, பிரித்தானியா, அவுஸ்திரேலியா, பிரானஸ் உள்ளிட்ட முக்கியமான 12 நாடுகளில் செயற்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ள 'வாஷிங்டன் டைம்ஸ்' பத்திரிகை நேற்று தற்போது நியூயோர்க், நியூஜேர்சி, மாநிலங்களிலும் புலிகள் தமது கிளைகளை விரிவுபடுத்தியுள்ளதாகச் செய்தி வெளியிட்டுள்ளது. அமெரிக்கா இராஜாங்கத் திணைக்களம் கடந்த 1997 ல் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பைத் தடை செய்யபட்ட பயங்கரவாத அமைப்பாக பிரகடனப்படுத்தியது. இதனை தொடர்ந்து விடுதலைப் புலிகளுக்காக அமெரிக்காவில் செயற்பட்டு வந்த பல முக்கியஸ்தர்கள், அமெரிக்க பயங்கரவாதத் தடுப்புப் பிரிவு பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.

விடுதலைப் புலிகளுக்கான நிதி சேகரிப்பதாக குற்றச்சாட்டுக்கு இலக்கான பல அமைப்புகள் கடுமையான கண்காணிப்பின் கீழ் கொண்டு வரப்பட்டன. அத்தோடு புலிகள் அமைப்புக்கான நிதி சேகரித்தல், ஆயுதக் கொள்வனவு நடவடிக்கைள் அமெரிக்கா பொலிஸாரினால் முடக்கப்பட்டது.

இந்த நிலையில் விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவு தமது கிளைகளை அமெரிக்காவில் விரிவுபடுத்தியுள்ளதாக வாஷிங்டனிலுள்ள இலங்கை அதிகாரிகள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

விடுதலைப் புலிகள் அமைக்புக்காக நிதிசேகரித்தல், விமான எதிர்ப்பு ஆயுதங்கள், தன்னியக்க ரைபிள்கள், கிரனேட் லோஞ்சர்கள், வெடிபொருட்கள் உள்ளிட்ட நவீன ரக ஆயுதங்களைக் கொள்வனவு செய்வதிலும் இக்கிளை அமைப்புகள் ஈடுபட்டு வருவதாக இலங்கை அரச தகவல்கள் தெரிவிக்கின்றன.

நன்றி வீரகேசரி

  • கருத்துக்கள உறவுகள்

போராட்டத்திற்கு உதவிபெற அமெரிக்காவில் தளத்தை ஏற்படுத்தியிருக்கும் விடுதலைப் புலிகள்

[09 - April - 2008]

விடுதலைப் புலிகள் தமது போராட்டத்திற்கு நிதி உதவியைப் பெற்றுக் கொள்வதற்காக அமெரிக்காவில் தளத்தை ஏற்படுத்தியிருப்பதாக `த வாஷிங்டன் ரைம்ஸ்' பத்திரிகை நேற்று திங்கட்கிழமை தெரிவிக்கிறது.

பல மில்லியன் டொலர்கள் பெறுமதியான விமான எதிர்ப்பு ஆயுதங்கள், தன்னியக்க துப்பாக்கிகள், கிரனேட் லோஞ்சர்கள், வெடி மருந்துகள், ரவைகள் மற்றும் இதர இரணுவ தளபாடங்களைப் பெற்றுக் கொள்வதற்காக விடுதலைப் புலிகள் அமைப்பு முயற்சித்து வருவதாக அமெரிக்க அரசின் பல்வேறு வட்டாரங்களை மேற்கோள் காட்டி வாஷிங்டன் ரைம்ஸ் தெரிவித்திருக்கிறது.

மேரிலான்ட், நியூயோர்க், நியூஜேர்சி போன்ற இடங்களில் நிதி திரட்டவும் ஆயுதங்களைப் பெற்றுக்கொள்ளவும் புலிகள் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்கா, கனடா, பிரிட்டன், அவுஸ்திரேலியா, பிரான்ஸ் மற்றும் ஏனைய நாடுகளில் புலம்பெயர்ந்தோர் சமூகத்தினின் அனுதாபத்தில் புலிகள் தங்கியிருப்பதாகவும் நிதி திரட்டுதல், ஆயுதங்கள், வெடிமருந்துகள், தளபாடங்கள், தொழில் நுட்பம் என்பனவற்றை இலங்கைக்கு கடத்துதல் மற்றும் இலங்கை அரசாங்கம் தொடர்பான புலனாய்வு விபரத்தைப் பெற்றுக்கொள்ளுதல், பிரசார நடவடிக்கைகள் என்பவற்றுக்காக புலம்பெயர்ந்த சமூகத்தில் தங்கியிருப்பதாகவும் 2007 ஏப்ரலில் அமெரிக்க சமஷ்டி நீதிமன்றத்தில் குற்றம்சாட்டு மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

கடந்த வருடம் சமஷ்டி புலனாய்வுப் பிரிவு முகவர்கள் நியூயோர்க்கில் கருணாகரன் கந்தசாமி என்பவரை கைது செய்திருந்தனர். அமெரிக்க நடவடிக்கைகளுக்கான இயக்குநர் என்று வர்ணிக்கப்பட்ட

இவர் மீது நிதி திரட்டுதல், இலங்கையிலுள்ள புலிகளின் தலைவர்களுக்கும் அமெரிக்காவிலுள்ள முன்னணி நிதி சேகரிப்பாளர்களுக்கும் இடையில் சந்திப்புகளை ஏற்பாடு செய்து கொடுத்திருந்ததாக கருணாவின் மீது குற்றச்சாட்டு தெரிவிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

கருணாகரன் கந்தசாமி வெறுமனே புலிகளின் நோக்கத்திற்கு மட்டும் ஆதரவு வழங்கவில்லையெனவும் அமெரிக்க ஆதரவை பெறவும் ஏற்பாடுகளை இவர் அச்சமயம் மேற்கொண்டதாக சமஷ்டி புலனாய்வுப் பிரிவின் உதவிப் பணிப்பாளர் மார்க்மேர்சன் தெரிவித்திருந்ததாக வாஷிங்டன் ரைம்ஸ் பத்திரிகை குறிப்பிட்டிருக்கிறது.

உலகத் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு என்ற அமைப்பினூடாக கடல்கோளால் பாதிக்கப்பட்டோருக்கு நிதி திரட்டும் பணியில் கருணாகரன் கந்தசாமி ஈடுபட்டதாக அமெரிக்க சட்டத்தரணி நோகலின் மௌஸ் கோப் கூறியுள்ளார்.

http://www.thinakkural.com/news/2008/4/9/i...s_page48915.htm

  • தொடங்கியவர்

12 நாடுகளில் விடுதலைப் புலிகளுக்குக் கிளைகள் - வாஷிங்டன் போஸ்ட் அதிர்ச்சித் தகவல்

வாஷிங்டன்: அமெரிக்கா உட்பட 12 நாடுகளில் விடுதலைப் புலிகள் தனது கிளைகளை ரகசியமாக நிறுவியுள்ளதாக அமெரிக்காவில் இருந்து வரும் வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகை திடுக்கிடும் தகவலை வெளியிட்டள்ளது.

கடந்த ஆண்டில் நியூயார்க்கில் கைது செய்யபட்ட புலிகள் அமைப்பைச் சேர்ந்த கருணாகரன் கந்தசாமி என்பவரிடம் நடத்திய விசாரணையில், சுனாமியால் பாதித்தவர்களுக்கு நிதி என்ற பெயரில் உலகத் தமிழ் அமைப்புகள் மூலம் புலிகளுக்கு நிதி திரட்டியது தெரிய வந்துள்ளதாக அந்தப் பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், அமெரிக்கா, பிரிட்டன், கனடா, ஆஸ்திரேலியா, பிரான்ஸ் உள்ளிட்ட 12 நாடுகளல் வசிக்கும் தமிழர்கள் மூலம் விடுதலைப் புலிகளுக்கு நிதி திரட்டி வருவதும் தெரிய வந்துள்ளதாக அப்பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. அமெரிக்காவின் நியூஜேர்சி, நியூயார்க், மேரிலாந்து போன்ற இடங்களில் புலிகளுக்கு கிளைகள் இருப்பதாகவும், இது போன்று மற்ற 12 நாடுகளிலும் கிளைகள் இருப்பதாகவும் அந்தப் பத்திரிகை அதிர்ச்சி தகவல் வெளியிட்டுள்ளது.

நன்றி குமுதம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.