Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தமிழர் பிரச்சினையை தீர்க்க கருணாநிதி முன்வர வேண்டும் - சத்தியராஜு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர் பிரச்சினையை தீர்க்க கருணாநிதி முன்வர வேண்டும் - சத்தியராஜு

வீரகேசரி இணையம் 4/14/2008 11:16:22 AM - "பச்சைத் தமிழன்' எனும் பட்டத்தைப் பெறுவதற்காகப் பலரும் முயற்சி செய்கிறார் கள். ஆனால் நடிகர் சத்தியராஜுக்கு உள்ள தமிழ்ப்பற்று, தமிழினத்தின் மீது அவர் கொண் டுள்ள அக்கறை காரணமாக தமிழகப் பத்திரி கைகளில் அவர் வலியுறுத்தாமலேயே அவ ரைப் "பச்சைத் தமிழன்' என்றுதான் குறிப்பிடுகி றார்கள்.

எந்தக் கருத்தையும் துணிவாகவும் தயக்கமில்லாமலும் சொல்லக்கூடியவர்களில் சத்தியரா ஜும் முதன்மையானவர். அண்மையில் ஒகே னக்கல் நீர்ப்பங்கீடு தொடர்பாக ஏற்பட்ட சர்ச் சையில் தமிழக அரசை ஆதரித்து தமிழ்த்திரை யுலகத்தினர் உண்ணாவிரதம் மேற்கொண்ட போதும் பரபரப்பாக சில கருத்துக்களை வெளியிட்டார் சத்யராஜ். வீரகேசரி வார வெளி யீட்டுக்காக அவரைச் சந்தித்தபோதும் சூடாக வும் சுவையாகவும் தன் கருத்துக்களை முன் வைத்தார்.

அவரது செவ்வியின் விபரம் வருமாறு :

கே:ஒகேனக்கல் பிரச்சினைக்காக திரையுலகினர் உண்ணாவிரதம் மேற்கொண்டபோது அம்மேடையில் கடுமையாக சில கருத்துக்களைப் பேசினீர்கள். ஆனால் கர்நாடகத் தேர்தல் நடைபெறும் வரை இப்பிரச்சினையில் பொறுமை காக்கப் போவதாக திடீரென்று தமிழக அரசு பின் வõங்கியிருக்கிறதே...? இதில் உங்களுக்கு வருத்தம் இல்லையா?

ப:மக்கள் தங்கள் உணர்வுகளை வெளிக்காட்டத்தான் அமைதியாக அறவழியில் போராட்டங்களை அவ்வப்போது நடத்துகிறார்கள். எனினும் சில சமயங்களில் இத்தகைய போராட்டங்கள் உச்சக்கட்டத்தை அடையும்போது சேதாரங்கள் அதிகரித்துவிடும். உதாரணமாக இப்போது கர்நாடகாவில் நடக்கும் சம்பவங்கள் அத்தகையவைதான். அங்கு நியாயமற்ற வகையில் பேருந்துகளை அடித்து நொறுக்குகிறார்கள், தமிழர்களை மிரட்டுகிறார்கள். இதற்கெல்லாம் அங்கு தேர்தல் நடக்கப்போவதுதான் காரணம். இப்படிப்பட்ட செயல்களைப் பார்க்கும்போதுதான் நமக்கும் கோபம் வருகிறது. தமிழக முதல்வர் அறிவித்துள்ளதில் எனக்கு உடன்பாடு உண்டு. அவர் ஒன்றும் ஒகேனக்கல் திட்டத்தை முழுமையாகக் கைவிட்டுவிடவில்லை. தேர்தல் வரைதான் பிரச்சினையை ஒத்திபோட்டிருக்கிறார். இது அவரது பெருந்தன்மையை, பிறரை மதிக்கும் தன்மையைக் காட்டுகிறது. மே மாதம் கர்நாடகாவில் தேர்தல் முடிந்துவிடும். அதன் பிறகு இதற்கு அரசியல் ரீதியில் நல்ல முடிவு கிடைக்கும் என்று கலைஞர் எதிர்பார்க்கிறார். அதில் தவறு இருப்பதாக நான் கருதவில்லை. நல்லது நடக்கும் என்று நாமும் நம்புவோம்.

கே: இலங்கைக்கு இந்தியா இராணுவ ரீதியில் உதவக்கூடாது என்று நீங்கள் சொல்கிறீர்கள். ஆனால் அவ்வாறு எத்தகைய இராணுவ உதவியும் வழங்கப்படவில்லை என்று தமிழகக் காங்கிரஸ் பிரமுகர்கள் கூறுகிறார்களே?

ப: தொடர்ந்து ஊடகங்களில் வெளியாகும் செய்திகளின் அடிப்படையில்தான் நாமும் பேச முடியும். இலங்கைக்கு இந்திய அரசாங்கம் இராணுவ ரீதியில் எந்த உதவிகளையும் செய்யக்கூடாது என்பதுதான் என் கருத்து. அதைவிட ஒவ்வொரு தமிழனும் இப்படித்தான் நினைக்கிறான். அதேவேளையில் சிலர் சொல்வதுபோல உண்மையாகவே ஆயுதங்கள் கொடுக்கப்படவில்லை என்றால் அதை வர வேற்போம். கொடுத்திருந்தால் கண்டிப்போம். மேலும் இராணுவ உதவிகளை மட்டுமே நான் குறிப்பிட்டுக் கண்டிக்கவில்லை. இலங்கையில் பாதிக்கப்பட்ட அப்பாவித் தமிழர்களுக்கு மருந்து மாத்திரைகள் போய்ச்சேர வேண்டும். அங்கு பசியால் வாடிக்கொண்டிருக்கும் சகோதரர்களுக்கு உணவு போய்ச் சேரவேண்டும். இந்த விஷயங்கள் எல்லாம் செஞ்சிலுவைச் சங்கம் மூலமாக செய்யப்பட வேண்டும் என்பதுதான் என் கோரிக்கை.

கே:தமிழக முதல்வர் கலைஞர் ஈழப் பிரச்சி னையில் அவ்வளவு தீவிரம் காட்டுவதாகத் தெரியவில்லையே? பழ. நெடுமாறனின் உண்ணாவிரதத்தை முடிக்க கோரிக்கை விடுத்தவர், அதன் பிறகு அவரை அழைத்துப் பேசவில்லையே?

ப: கலைஞருக்கு இலங்கைப் பிரச்சினையில் உண்மையாகவே ஆர்வம் இருக்கிறது. ஈழத் தமிழர்கள் மீது உண்மையாகவே அக்கறை இருக்கிறது. அதனால்தான் தமிழ்ச்செல்வன் இறந்தபோது கூட சக தமிழன் உயிரிழந்ததன் அடிப்படையில் கண்ணீர்க் கவிதை எழுதினார். அவரது தமிழுணர்வை யாரும் சந்தேகப்பட முடியாது. அதனால்தான் ஒரு பொதுநிகழ்ச்சியில் மேடையில் வைத்தே அவரைப் பாராட்டினேன். கலைஞர் கவிதை எழுதாமல் வேறு யாருங்க இன்னொரு தமிழனுக்காக இப்படியொரு கவிதை எழுத முடியும்? கலைஞர் ஆட்சியில் இருக்கும்போதே இலங்கைப் பிரச்சினைக்குத் தீர்வுகாணப்பட வேண்டும். இதைத்தான் கலைஞரிடம் நானும் வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன். கலைஞரால் மட்டுமே இப்பிரச்சினைக்குத் தீர்வு காண முடியும் என்பது உலகத் தமிழர்கள் அனைவருக்குமே தெரியும்.

கே: ஒகேனக்கல் நீர்ப் பிரச்சினைக்காக குரல் கொடுத்த தமிழ்த்திரையுலகம் ஈழப் பிரச்சினையில் பராமுகமாக இருப்பது சரியா? ஏன் இதற்காகவும் உண்ணாவிரதம் இருந்திருக்கக் கூடாது?

ப:திரையுலகத்தினர் பொதுவான விஷயங்களுக்கும் பிரச்சினைகளுக்கும் குரல் கொடுக்க வேண்டும் என்பதில் எனக்கும் உடன்பாடு உண்டு. அதனால்தான் நான் என் மனதுக்குச் சரியெனப்பட்டதைப் பேசி வருகிறேன். தனி மனிதனாக நான் ஒருவன் எழுப்பும் குரல் பலமாக ஒலிக்காது. ஆனால் இப்படிப்பட்ட தனிமனிதக் குரல்கள் அதிகரித்து ஒட்டுமொத்தமாக ஒலிக்கும்போது அதற்குரிய பலன் கிட்டும். பல லட்சம் குரல்கள் ஒருநாள் கோடிக்கணக்கில் அதிகரித்து ஒலிக்கும். அந்த நம்பிக்கை எனக்கு இருக்கிறது.

கே:பிரபாகரன் என்ற படத்தை எடுத்தமைக்காக இலங்கை இயக்குனரை தமிழகத்தில் தாக்கியிருப்பதாக செய்திகள் வெளியாகின. இத்தகைய வன்முறையைக் கையாள்வது சரிதானா?

ப: நீங்கள் குறிப்பிடும் அந்த இயக்குனர் மீது தாக்குதல் நடந்ததா என்பது தெரியவில்லை. காவல்துறையும்கூட அவ்வாறு தாக்குதல் நடக்கவில்லை என்று சொல்லியிருக்கிறது. என்னைப் பொறுத்தவரையில் தமிழனாகப் பிறந்தவர்கள், தமிழன் எனும் உணர்வு கொண்டவர்கள் அப்படத்தைப் பார்க்கக் கூடாது. அப்படத்தை வெளியிடக் கூடாது என்று தற்காலிகமாக நீதிமன்றத்தில் தடைபெற்றுள் ளனர். ஆனால் இந்தியா கருத் துச் சுதந்திரம் உள்ள நாடு. எதிர்காலத்தில் அப்படத்து க்கான தடை நீக்கப்படலாம். அவ்வாறு நீக்கப்பட்டாலும் கூட உண்மையான பச்சைத் தமி ழன் அந்தப் படத்தை பார்க்காமல் புறக்கணிக்க வேண்டும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.