Jump to content

அம்மாவை பார்ப்பேனா என்றுதெரியாது...[குமுதம்]


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மக்கள் தொலைக் காட்சியில் ஈழத்து தமிழில் தாலாட்டுப் பாடுவதைப் போல இனிமையாக செய்தி வாசிப்பவர் சுகந்தா. இலங்கையின் வவுனியா பகுதியைச் சேர்ந்தவர். தினமும் செய்தி சொல்லும் இவருடைய வாழ்க்கை நெஞ்சைப் பிழியும் உருக்கமான டாக்குமெண்டரி படம்.

pg29a.jpg

‘‘என்னுடைய உறவுகளையெல்லாம் இலங்கையில விட்டுட்டு வந்திருக்கேன். என்னால அவங்களைப் பார்க்க முடியலை. ஆனா, தினமும் என்னுடைய அம்மா அங்கிருந்து என்னை மக்கள் தொலைக்காட்சியில் பார்த்து சந்தோஷப்படறாங்க. செய்தி வாசிப்பதே, நான் நல்லா இருக்கேங்கிற செய்தியை அவங்களுக்குச் சொல்லத்தான். ஒருநாள் செய்தி வாசிக்கலைனாலும் எனக்கு ஏதோ உடம்புக்கு முடியலைன்னு எங்கம்மா பதறிடுவாங்க. என்னால ஊருக்குத் திரும்பிப் போகமுடியாது. அவங்களால இங்கே வரமுடியலை. இனி என் அம்மாவைப் பார்ப்பேன்ற நம்பிக்கை இல்லை. அவங்களுக்காக இந்தச் சின்ன சந்தோஷம் கொடுத்திட்டே இருக்கணும்’’ என்று நெகிழ்ச்சியாகப் பேசும் சுகந்தாவின் தந்தை இலங்கை ராணுவத்தினரால் சுட்டுக் கொல்லப்பட்டவர். தந்தை இறந்தபிறகு கணவருடன் சென்னைக்கு வந்திருக்கிறார் சுகந்தா. ஒரு வருடமாக சென்னையில் வசிக்கிறார்.

pg29b.jpg

‘‘எங்க ஊர்ல அப்பா சின்னதா டிராவல்ஸ் பிஸினஸ் பண்ணிட்டிருந்தார். ராணுவத்துக்கு வண்டி தரமாட்டேன்னு சொன்னதால சுட்டுட்டாங்க. நெத்தியில சுட்டுட்டாங்க. என் கணவரையும் ரெண்டு மூணு தடவை சுடப் பார்த்தாங்க. கடவுள் புண்ணியத்துல அவர் தப்பிச்சிட்டார். அங்கே எப்படின்னா யாரு, என்னன்னு பார்க்கமாட்டாங்க. தமிழன்னாலே சுடுவாங்க. அதிர்ஷ்டம் இருந்தால் உயிர் தப்பிக்கலாம். ஒரு தடவை ராணுவத்தினர் இவரைப் பிடிச்சு உலுக்கிட்டிருந்தாங்க, நான் போய்தான் காப்பாற்றி கூட்டி வந்தேன். இலங்கை ராணுவத்தோட முதல் குறி தமிழ் இளைஞர்கள்தாம். சின்னப்பையனா இருந்தா சுட்டுடுறாங்க’’ என்று பேசிய படியே கணவரைப் பார்க்கிறார்.

‘‘எப்போ சென்னைக்கு வரணும்னு முடிவு பண்ணீங்க?’’

‘‘ஒரு நாள் சுகந்தா வெடிகுண்டுக்கு பயந்து தெருவில் தவழ்ந்து போனதைப் பார்த்தேன். இனியும் இப்படி பயத்துல செத்துப் பிழைக்க வேண்டாம்னு முடிவு பண்ணி சென்னைக்குப் புறப்பட்டோம். எங்ககிட்டே கொஞ்சம் பணம் இருந்ததால விமானத்துல வந்துட்டோம், இல்லாதவங்க கப்பலில் வராங்க’’ என்கிறார் சுகந்தாவின் கணவர் துசிதர்.

‘‘சென்னை வாழ்க்கை எப்படி இருக்கு?’’

‘‘மொழி ஒண்ணா இருப்பதால ஆசையா விருப்பப்பட்டு சென்னைக்கு வரோம். இங்கே ஸ்ரீலங்கான்னா ஐய்யோன்னு பயந்துகிட்டு வீடுகூட தரமாட்டேங்குறாங்க. இப்போ இருக்கிற வீட்டுக்கு ஐந்தாயிரம்தான் வாடகை. நாங்க பதினோராயிரம் கொடுக்கறோம். இலங்கைத் தமிழர்னாலே இங்கே வித்தியாசமாதான் பார்க்கிறாங்க. எங்க ஊர்ல சொந்த வீடுலாம் இருக்கு ஆனால் வாழ முடியலை. குண்டு விழுந்துட்டே இருக்கும். ராத்திரி வீட்டுல லைட் எரிந்தால் என்ன லைட் எரியுதுன்னு ராணுவத்தினர் விசாரணைக்குக் கூட்டிட்டுப் போயிடுவாங்க. இதுக்கு மத்தியில் எங்களுடைய ஒரே சந்தோஷம் காதல்!’’ என்கிறார் துசிதர். இவர்களது காதல் திருமணம்.

‘‘பக்கத்து ஊர்தான். ஆனால் ஏழு வருஷம் பார்க்காமல் காதலை மனசுல சுமந்துகிட்டிருந்தோம். நாங்க பேசிக்கிட்டதே கிடையாது. காதலர்களாக எங்கியும் சந்திச்சதே இல்லை. நான் எழுதற லெட்டர் அவருக்கு ரெண்டு மாசத்துக்குப் பிறகு போய்ச் சேரும். ரெண்டு ஊருக்கும் போக்குவரத்துக் கிடையாது. கடல் போக்குவரத்து மூலம் லெட்டர் போய்ச் சேர மாசக்கணக்கில் ஆகிடும். மனப்பூர்வமாக இவர்தான் கணவன்னு முடிவு பண்ணதால எந்தப் பேச்சுக்களும் அப்போது தேவைப்படலை. கல்யாணமாகி இப்போது சென்னையில் சந்தோஷமா இருக்கோம்’’ என்கிறார் சுகந்தா.

இலங்கையில் தமிழர்களுக்கு காதலாவது மிச்சமிருக்கிறதே..

_ ஜனனி

படங்கள் : சித்ராமணி

Kumudam.com

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 1 reply
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.