Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தீண்டாமைச் சுவர் அதிரடி இடிப்பு - உத்தமபுரத்தில் பதட்டம்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Uthapuram-wall-250_06052008.jpg

மதுரை: மதுரை, உசிலம்பட்டி அருகே உத்தபுரத்தில் உள்ள தீண்டாமைச் சுவரின் 15 அடியை இன்று காலை அதிகாரிகள் இடித்தனர். அப்பகுதியில் தலித் மக்களுக்கு பாதை அமைக்கும் பணி நடந்து வருகிறது.

உத்தபுரம், உசிலம்பட்டி அருகே உள்ள குக்கிராமம். உலகின் அனைத்துப் பகுதிகளிலும் 21வது நூற்றாண்டில் பீடு நடைபோட்டுக் கொண்டிருக்கும் நிலையில் இந்தக் கிராமம் மட்டும் கற்காலத்தை நோக்கி வேகமாக நடை போட்டுக் கொண்டிருக்கிறது.

1989ம் ஆண்டு இந்தக் கிராமத்தில் தாழ்த்தப்பட்ட வகுப்பினருக்கும், இன்னொரு வகுப்பினருக்கும் இடையே ஏற்பட்ட ஜாதிக் கலவரத்தில் 8 அப்பாவி உயிர்கள் பறிக்கப்பட்டன. இதையடுத்து தாழ்த்தப்பட்ட வகுப்பினர் தங்களது பகுதிக்குள் வருவதைத் தடுக்க இன்னொரு சமூகத்தினர் ஊரில் சுவர் எழுப்பி, தங்களது பகுதிக்குள் தாழ்த்தப்பட்ட சமூகத்தினரை வர விடாமல் தடுத்து விட்டனர்.

இதன் காரணமாக தாழ்த்தப்பட்ட வகுப்பினர் பல கிலோமீட்டர் சுற்றி முக்கியப் பகுதிகளுக்குச் செல்லும் அவலம் ஏற்பட்டது.

இந்த நிலையில் இந்த சுற்றுச்சுவரை உடனடியாக தகர்த்தெறிய வேண்டும் என்று தாழ்த்தப்பட்ட வகுப்பினர் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதுதொடர்பாக பல்வேறு வகையில் போராட்டங்களையும் அவர்கள் கையில் எடுத்துள்ளனர். இதனால் உத்தபுரம் மறுபடியும் அக்னிக் குண்டமாக மாறியுள்ளது.

இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காண வருவாய்த்துறையினர் சிலநாட்களுக்கு முன்பு உத்தபுரம் வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அந்தப் பேச்சுவார்த்தையின்போது இன்னொரு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் வெளிநடப்பு செய்ததால் சமாதானம் ஏற்படவில்லை.

இந் நிலையில் நேற்று மாவட்ட ஆட்சித் தலைவர் ஜவஹர் உத்தபுரம் வந்தார். தீண்டாமைச் சுவரைப் பார்வையிட்டார். பின்னர் அதிகாரிகளுடன் ஆலோசனையும் நடத்தினார்.

சுமூகமான முறையில் இப்பிரச்சினையைத் தீர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக செய்தியாளர்களிடம் பின்னர் ஜவஹர் தெரிவித்தார்.

15 அடி சுவர் இடிப்பு:

இந் நிலையில் இன்று காலை அதிகாரிகள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சுற்றுச் சுவரின் ஒரு பகுதியை இடித்தனர்.

கிழக்குத் தெருவில் உள்ள 15 அடி சுவரை அதிகாரிகள் இடித்தனர். இதையடுத்து அங்கு பாதை அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதனால் உத்தபுரத்தில் பரபரப்பு அதிகரித்துள்ளது.

அசம்பாவிதம் ஏதும் மூண்டு விடாமல் தடுக்க 1200 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

பிரகாஷ் காரத் வருகை:

இந்தச் சூழ்நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளர் பிரகாஷ் காரத் நாளை உத்தபுரம் வருகிறார்.

பிரகாஷ் காரத் வருகைக்கு சுவர் எழுப்பிய சமூகத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும் நேற்று மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்திற்கு பெரும் திரளாக வந்த அவர்கள் அங்கு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

உத்தபுரத்தில் இப்போதைக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. ஆனால் அதிகாரிகள் தேவையில்லாமல் தலையிட்டு பிரச்சினையை ஏற்படுத்தப் பார்க்கிறார்கள். இன்னொரு நந்திகிராமமாக இது மாறாமல் தடுக்க வேண்டிய பொறுப்பு அதிகாரிகளிடம்தான் உள்ளது.

சுவரை இடிக்க அரசு முயலக் கூடாது. அப்படி நடந்தால் மறுபடியும் அங்கு போராட்டம் வெடிக்கும், எங்களது ரேஷன் கார்டுகளையும், வாக்காளர் அடையாள அட்டைகளையும் திரும்ப ஒப்படைத்துப் போராடுவோம்.

பிரகாஷ் காரத் வருகையால் பதட்டம்தான் அதிகரிக்கும். எனவே அவர் வரக் கூடாது. மீறி வந்தால் கருப்புக் கொடி காட்டிப் போராட்டம் நடத்துவோம் என்று அவர்கள் எச்சரித்தனர்.

40 பேர் மீது வழக்கு:

இந்த நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இரு பிரிவையும் சேர்ந்த தலா 20 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இருப்பினும் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை.

உத்தபுரம் கிராமத்தில் துப்பாக்கி ஏந்திய போலீஸார் பெருமளவில் குவிக்கப்பட்டுள்ளனர்.

நடக்கும் நிகழ்வுகளால், தீண்டாமைக் கொடுமையின் தீவிரத்தை பறை சாற்றும் வகையில் உறுதியாக நிற்கும் செங்கல் சுவருடன், செந்நீர் கொதிக்கும் உணர்வுகளுடன் உத்தபுரம் பதட்டத்துடன் காணப்படுகிறது.

thatstamil.com

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மதுரை: தீண்டாமைச்சுவர் இடிப்பைக் கண்டித்து உத்தபுரத்தை விட்டு வெளியேறிய 'உயர் ஜாதி'யினர் ஊருக்குத் திரும்ப மறுத்து மலையில் குடியேறி முரண்டு பிடிக்கின்றனர்.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள உத்தபுரத்தில் கடந்த 1989-ம் ஆண்டு இருபிரிவினருக்கிடையே ஏற்பட்ட மோதல் காரணமாக அங்கு சுமார் 40 அடி நீளத்தில் தடுப்பு சுவர் கட்டப்பட்டது.

அந்த சுவரை இடிக்கக் கோரி தாழ்த்தப்பட்ட வகுப்பினர் போராட்டத்தில் குதித்தனர். இதனால் அங்கு பதட்டம் ஏற்பட்டது. இந்த நிலையில், நேற்று அதிரடியாக சுவரின் ஒரு பகுதியை அதிகாரிகள், பலத்த போலீஸ் பாதுகாப்புடன் இடித்துத் தள்ளினர்.

40 அடி நீள தடுப்பு சுவரில் 15 அடி இடிக்கப்பட்டு அங்கு பொதுப்பாதை அமைக்கப்பட்டது. மேலும் அங்குள்ள 25 அடி நீள தடுப்பு சுவர் சொந்த பட்டா நிலத்தில் கட்டப்பட்டு இருந்ததால் அவை இடிக்கப்படவில்லை. உத்தபுரத்தில் அமைதி நிலவவேண்டும் என்றும் இருதரப்பினரும் சுமூகமாக செல்லவேண்டும் என்றும் மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் ஜவஹர் கோரிக்கை விடுத்தார்.

இந்த நிலையில் இடிக்கப்பட்ட தடுப்பு சுவரை மீண்டும் கட்டித்தரவேண்டும் என்று கோரி ஒரு பிரிவினர் ஊரை காலி செய்தனர். அவர்கள் உத்தபுரம் அருகே தாழையூத்து என்னும் இடத்தில் உள்ள மலையில் தஞ்சம் அடைந்தனர். சுமார் 200-க்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் அங்கேயே தங்கி உணவு சமைத்து சாப்பிட்டனர்.

தடுப்பு சுவர் இடிக்கப்படுவதை முன்கூட்டியே அறிந்த அந்த மக்கள் மலைக்கு சென்று விட்டனர். இரவில் அங்கேயே மரங்களில் தொட்டில் கட்டி தங்களது குழந்தைகளை தூங்க வைத்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

இன்று 2-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அவர்கள், ஊருக்குள் வரமறுத்து அடம் பிடிக்கின்றனர். இடிக்கப்பட்டுள்ள தடுப்பு சுவரை மீண்டும் கட்டித் தந்தால் மட்டுமே ஊருக்குள் வருவோம் என்று கூறினர்.

கொளுத்தும் வெயிலிலும் உத்தபுரம் பகுதியினர் மலைமீது தங்கி தங்கள் போராட்டத்தை தொடருவது பரபரப்பையும், பதற்றத்தையும் ஏற்படுத்தி உள்ளது

thatstamil.com

07.05.08

  • கருத்துக்கள உறவுகள்

19 வருடங்களாக தமிழனை ஊய்விக்க வந்தவர்களால் கண்டு கொள்ளாமல் ஒரு அநியாயம். எங்கு பெயர் தேடலாம், எங்கு பாராட்டு வாங்கலாம் எனப் பகுத்தறிவு பேசியவர்களுக்கு எப்படி இது கண்ணுக்குத் தெரியும். அதிலும், மற்றய மாநிலங்களை விடத் தமிழ்நாட்டில் சாதி ஒழித்துவிட்டோம் என மார்தட்டலுக்குக் குறைச்சலில்லை.

19 வருடங்களாக தமிழனை ஊய்விக்க வந்தவர்களால் கண்டு கொள்ளாமல் ஒரு அநியாயம். எங்கு பெயர் தேடலாம், எங்கு பாராட்டு வாங்கலாம் எனப் பகுத்தறிவு பேசியவர்களுக்கு எப்படி இது கண்ணுக்குத் தெரியும். அதிலும், மற்றய மாநிலங்களை விடத் தமிழ்நாட்டில் சாதி ஒழித்துவிட்டோம் என மார்தட்டலுக்குக் குறைச்சலில்லை.

தூயவன்!

இந்த 19 வருடங்களில் சுமார் பத்து வருடங்கள் *** ஜெயலலிதா ஆட்சியில் இருந்தார். நல்லவேளையாக அரசு இப்போது சுவரை இடித்திருக்கிறது. கலைஞர் அரசு ஒரு மத்தளம். எப்போதும் இருபக்கத்தில் இருந்தும் இடிபட்டுக்கொண்டிருப்பது வாடிக்கை தான். ***

Edited by வலைஞன்
தணிக்கை செய்யப்பட்டுள்ளது

  • கருத்துக்கள உறவுகள்

ஜெயலலிதாவும் திராவிடக்கட்சி ஒன்றின் தலைவர் தானே. உங்களுக்குப் பிடிக்காமல் போனால் நாம் என்ன செய்ய?

ஒவ்வொரு மனிதனும் என்ன சாதி எனச் சாதிச் சான்றிதழ் வழங்கும் பழக்க்ம உள்ளவரை சாதி என்பது ஒழியாது. அதை முதலில் திருத்திக் கொள்ளுங்கள்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உசிலம்பட்டி: மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உத்தபுரம் மக்கள் மலையில் இருந்து கொண்டு நடத்தி வந்த போராட்டம் திடீர் என வாபஸ் வாங்கப்பட்டது. தங்கள் கோரிக்கைகளை தமிழக முதல்வரிடம் நேரில் சந்தித்து முறையிடப் போகின்றனர்.

உசிலம்பட்டி அருகே உத்தபுரத்தில் தலித்துகள் ஊருக்குள் வருவதைத் தடுக்கும்வகையில் கடந்த 1989ம் ஆண்டில் உயரமான தீண்டாண்மை சுவர் கட்டப்பட்டது. பல்வேறு அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சிகளின் கோரிக்கையை அடுத்து இரு வாரங்களுக்கு முன்பு அரசு உத்தரவின்பேரில் அந்த சுவர் இடிக்கப்பட்டது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஒரு பிரிவு மக்கள் வீடுகளை புறக்கணித்து அருகில் உள்ள மலையில் சென்று தங்கினர். சமாதான பேச்சுக்கு வந்த கலெக்டர் ஜவஹரிடம் 300க்கும் மேற்பட்ட ரேசன் கார்டுகளை வேண்டாம் என்றுகூறி திருப்பிக் கொடுத்தனர்.

தீண்டாமை சுவர் எழுப்புதற்கு காரணமாக இருந்த முத்தாலம்மன் கோவில் நிலத்தை கிராமத்தினர் பெயரில் பட்டா தர வேண்டும். ஊருக்குள் புற காவல் நிலையம் அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 5 அம்ச கோரிக்கைகளை முன் வைத்தனர்.

இதை உடனடியாக நிறைவேற்றாதவரை ஊருக்குள் திரும்புவதில்லை என்று கடந்த 8 தினங்களாக போராட்டம் நடத்தி வந்தனர்.

இந்த போராட்டத்தில் ஈடுபட்ட மக்களை பல அரசு உயர் அதிகாரிகளும், அரசியல் தலைவர்களும் பேச்சுவார்ததை நடத்தினர். ஆனால் முடிவு எதும் எட்டவில்லை. இந்த போராட்டத்துக்கு ஆதரவாக சுற்றுவட்டார பகுதிகளிலும் கடையடைப்பு, உண்ணாவிரத போராட்டங்களும் நடந்தன.

இந்த நிலையில் நேற்று சேடப்பட்டி முன்னாள் திமுக எம்எல்ஏ தளபதி தலைமையில் சென்ற திமுக நிர்வாகிகள் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினர். இதையடுத்து உத்தபுரம் மக்களின் கோரிக்கைகளை தமிழக முதல்வரிடம் சந்தித்து பேசுவது ஏற்பாடு செய்வது என முடிவு செய்யப்பட்டது.

இதை ஏற்றுக் கொண்ட மக்கள் தங்களது போராட்டத்தை கைவிட்டு ஊருக்கு திரும்பினர்.

இதனால் கடந்த 8 தினங்களாக தொடர்ந்து வந்த பதற்றம் முடிவுக்கு வந்தது

thatstamil.com

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.