Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தமிழீழ விடுதலைப்புலிகளின் இணக்கத்துடன் இந்தியா, இலங்கை இனப்பிரச்சினையில் தலையிடவேண்டும் - பகவதி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழீழ விடுதலைப்புலிகளின் இணக்கத்துடன் இந்தியா, இலங்கை இனப்பிரச்சினையில் தலையிடவேண்டும் - பகவதி

Thursday, 08 May 2008

தமிழீழ விடுதலைப்புலிகள் ஏற்றுக்கொண்டால் மாத்திரம் இந்தியா இலங்கை இனப்பிரச்சினை தீர்வில் தலையிடலாம் என இந்தியாவின் முன்னாள் பிரதம நீதியரசர் என்.கே.பகவதி தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் இந்த முனைப்புகள் தமிழ்நாட்டின் எண்ணங்களுடன் இணைந்து செல்லவேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார். இலங்கையின் டெய்லி மிரர் ஆங்கில செய்திதாளுக்கு தொலைபேசி மூலம் அவர் செவ்வியளித்துள்ளார்.

தமிழீழ விடுதலைப்புலிகளின் இணக்கம் இல்லாமல் இந்தியா இலங்கை விடயத்தில் தலையிட்டால்,அது இந்தியாவுக்கு பாரிய பாதகங்களை ஏற்படுத்தும். தமிழீழ விடுதலைப்புலிகளும் தமிழர்கள் அத்துடன், தமிழகத்தில் உள்ளவர்களும் தமிழர்கள் என்பதன் காரணமாகவே இதனை தாம் குறிப்பிடுவதாக பகவதி சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கையில் உள்ள இனங்கள் மத்தியில் உள்ள உணர்வுகளே அங்குள்ள பிரச்சினைகளுக்கான காரணமாகும். ஒரு இனம் அடுத்த இனத்திற்கு மதிப்பளிக்கும்போதே பிரச்சினையை அங்கு தீர்க்கலாம் என்பது பகவதியின் கருத்தாகும்.

இதேவேளை பகவதியின் கருத்துக்கள் தொடர்பாக இலங்கை சமாதான செயலகத்தின் பணிப்பாளர் ரஜீவ விஜயசிங்கவின் கருத்தைக் கேட்டபோது, இலங்கையின் விடயத்தில் இந்தியாவை தலையிடுமாறு அழைப்புகள் விடுக்கப்படவில்லை எனக் குறிப்பிட்டார்.

நோர்வேஜியர்கள் இலங்கைக்கு வருவதை வரவேற்பதாக தெரிவித்த அவர், நோர்வேக்காரர்கள், சமாதானத்தை அடைவதற்கான முனைப்புகள் குறித்து முன்னதாகவே இலங்கை அரசாங்கத்திற்கு தெளிவுப்படுத்தவேண்டும் என குறிப்பிட்டார்.

அவர்கள் கிளிநொச்சிக்கு செல்லவேண்டுமாயின் அங்கு சென்று சமாதானத்திற்காக அவர்கள் செய்யப்போகிறார்கள் என்பதை இலங்கை அரசாங்கத்திற்கு முன்கூட்டியே அறிவிக்கவேண்டும் என்றும் ரஜீவ விஜேசிங்க குறிப்பிட்டார்.

http://www.ajeevan.ch/content/view/2515/1/

விடுதலைப் புலிகள் இணங்கிக்கொண்டாலே இலங்கை இனப்பிரச்சினை விடயத்தில் இந்தியா தலையிடும் எனத் தெரிவித்திருக்கும் இந்தியாவின் முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதி பி.என்.பகவதி, எனினும், தமிழகத்திலுள்ள பெரும்பான்மையானவர்கள் அதற்கு இணங்குவார்களா என்பது சந்தேகத்துக்குரியது எனக் கூறியுள்ளார்.

ஆசிய பிராந்தியத்தில் நீண்டகாலமாக இலங்கை இனப்பிரச்சினை தொடர்ந்து வருகிறது. எனினும், அப்பாவிப் பொதுமக்கள் மேலும் கொல்லப்படுவதற்கு முன்னர் விடுதலைப் புலிகளும், இலங்கை அரசாங்கமும் பேச்சுவார்த்தை மேசைக்குச் செல்லவேண்டும் என கொழும்பு ஆங்கில ஊடகமொன்றுக்கு மின்னஞ்சல் மூலம் வழங்கிய செவ்வியில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

“விடுதலைப் புலிகள் இணங்காவிட்டால் இலங்கை விடயத்தில் இந்தியா தலையிடுவதில் எந்தப் பயனும் இல்லை. அதையும்மீறி இந்தியா தலையிட்டால் விடுதலைப் புலிகள் தமிழ் என்பதாலும், தமிழகத்திலுள்ளவர்கள் தமிழர்கள் என்பதாலும் அது எதிர்மறையான விளைவைத் தோற்றுவித்துவிடும்” என பகவதி கூறியுள்ளார்.

இலங்கையில் சமூகங்களுக்கிடையில் சுமுகமான உறவுநிலை இல்லை. இதன் காரணமாகவும் நீண்டகாலமாக மோதல்கள் தொடர்ந்து வரலாம். “இலங்கை மிகவும் சிறியதொரு தீவு. துரதிஸ்டவசமாக அங்கு தொடர்ந்தும் மோதல்கள் இடம்பெற்று வருகின்றன. எனினும், இலங்கையிலுள்ள சமூகங்கள் ஒற்றுமையுடன், பக்கச்சார்பற்ற முறையில் நடத்தப்பட வேண்டும். ஒவ்வொருவருடைய மதமும் மதிக்கப்பட வேண்டும்” என அவர் தனது செவ்வியில் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை அரசாங்கமும், விடுதலைப் புலிகளும் ஆயுத ரீதியான தீர்வைக் கைவிடவேண்டும். வன்முறைகள் ஒருபோதும் தீர்வொன்றைத் தராது. மோதல்கள் ஏற்கனவே ஆயிரக்கணக்கான உயிர்களைப் பலிகொண்டிருப்பதால் இரண்டு தரப்பினரும் சமாதானமான பேச்சுவார்த்தைக்குச் செல்ல வேண்டுமென இந்தியாவின் முன்னாள் நீதிபதி பி.என்.பகவதி கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்தியாவை அழைக்கும் நோக்கம் இல்லை- இலங்கை சமாதானச் செயலகம்

இலங்கையின் இனப்பிரச்சினைத் தீர்வில் தலையிடுமாறு இந்தியாவை அழைக்கும் நோக்கம் எதுவும் இலங்கைக்கு இல்லையென இலங்கை அரசாங்கத்தின் சமாதானச் செயலகத் தலைவர் ரஜீவ விஜயசிங்க தெரிவித்துள்ளார்.

“1987ஆம் ஆண்டு இந்தியாவின் தலையீட்டைத் தொடர்ந்து ஏற்பட்ட அனுபவத்தின் பின்னர் இந்தியாவை அழைக்கும் நோக்கம் எதுவும் இல்லை. இலங்கை இனப்பிரச்சினை விடயத்தில் அனுசரணையாளர்களாகக் கடமையாற்றவருமாறு இந்தியாவை அழைக்கும் நோக்கம் அரசாங்கத்துக்கும் இல்லை” என அந்த ஊடகத்துக்கு ரஜீவ விஜயசிங்க கூறியுள்ளார்.

இலங்கையின் இனப்பிரச்சினைக்கு எவ்வாறு சமாதானத்தை அடையமுடியுமென்ற தெளிவான திட்டமொன்றை அரசாங்கம், நோர்வேயிடம் கோரியிருப்பதாகச் சுட்டிக்காட்டியிருக்கும் அவர், நோர்வேயின் பிரதிநிதி இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ள அனுமதி கோரியிருப்பதாகவும், அந்த விஜயத்தின் போது நோர்வேயின் திட்டம் குறித்து விளக்கமளிக்கப்படுமெனவும் ரஜீவ விஜயசிங்க நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

http://isoorya.blogspot.com/

space.gif

என்னல? இந்த பகவதிக்கு ஏதாவது கிறுக்கு முறுக்கு பிடிச்சிருகாவில?

என்னல பேசிறிக... அட இதுக்கு சிங்களவன் என்ன மொய்யா எழுதுவான்லோய்?...

எலோய்... இந்தியாலருந்து நீங்க உங்கசோலிய பாருங்கல நாங்க எங்க சோலிய பாக்குரோங்கோய்....

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.