Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தியாகராஜ பாகவதர் குடும்பத்தின் பரிதாபம்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

pg29.jpg

அந்த வீட்டுக்குள் நுழைந்தபோது `எப்படி வாழ்ந்த குடும்பம்' என்று ஒரு நிமிடம் உடம்பை உலுக்கிப் போட்டது.

சென்னை சூளைமேட்டில், தெருக் கோடியில் ஒரு பழைய வீட்டின் மாடியில் ஒதுக்குப்புறமாக இருக்கும் போர்ஷனில்தான் தமிழ்த்திரை மற்றும் இசையுலகின் ஏகபோக சக்கரவர்த்தியாக ஒரு காலத்தில் ராஜாங்கம் நடத்திய எம்.கே. தியாகராஜ பாகவதரின் மனைவி, வாழ்க்கை யோடு போராடிக் கொண்டிருக்கிறார்!

ஒரே ஒரு சிறிய ரூம், இரண்டாகத் தடுக்கப்பட்டிருக்கிறது. முன்புறத்தில் கெரசின் ஸ்டவ் அடுப்பும் சில பாத்திரங்களும் இறைந்து கிடக்கின்றன. தடுப்புக்குப் பின்னே பழைய கட்டிலில் சுயநினைவின்றி முனகிக் கொண்டே பரிதாபமாக படுத்திருக்கிறார் பாகவதரின் மனைவி ராஜம்மாள். அவருக்கு அருகே சுவரோரமாக குட்டையான அழுக்கு ஸ்டீல் பீரோ. அப்புறம் இரண்டு மர ஸ்டூல்கள். தலைக்கு மேல் ஒரே ஒரு மின் விசிறி. அவ்வளவுதான் அந்த சங்கீதமேதையின் நினைவாக மிஞ்சியிருக்கும் சொத்து.

ராஜம்மாளின் வயதான தம்பி மணியும், பாகவதரின் பெண் வயிற்றுப் பேரன் கணேஷும் அருகிலிருந்து பார்த்துக் கொள்கிறார்கள். மீளாத சோகமும், வறுமையும் அந்த குடும்பத்தையே புரட்டிப் போட்டுள்ளதால் ஒரு வித வெறுத்துப் போன நிலையில் அவர்கள் இருந்தது புரிந்தது!

``பாகவதர் 1959-ல் இறக்கும்போது என் அக்காவை கவனிச்சுக்க யாரும் இல்லை. அக்கா பாகவதருக்கு இரண்டாவது தாரம். இவர்களுக்குப் பிறந்தவர்கள் ஒரு பெண், ஒரு பிள்ளை. பெண் லட்சுமிக்குப் பிறந்தது மூன்று மகன்கள். அதில் இந்தப் பையன் கணேஷ் மட்டும் என்னோட இருந்து பாட்டிய பார்த்துக்கிறான். மற்ற இரண்டு பேரப் பசங்களும் வருவதும் இல்லை. அவங்களே எங்கேயோ ஜீவனத்துக்கு கஷ்டப்படு கிறார்கள். அக்காவை காப்பாற்றணும்னு நானும் கல்யாணமும் பண்ணிக் காம, அவ கூடவே இருந்து வாழ நல்ல வழியும் தெரியாம எங்கெங்கோ அலைஞ்சு எண்பது வயசை ஓட்டிட்டேன்'' சுவரில் சாய்ந்து கண்களை மூடிய மணியின் இமையோரத்தில் நீர் கசிந்தது.

ஏதேச்சையாக ராஜம்மாள் படுத்திருக்கும் கட்டிலின் எதிரே சிமெண்ட் அலமாரியை பார்த்தபோது மனசுக்குள் பட்டாம்பூச்சி! தன் மகள் மற்றும் மகன் இருபுறமும் இருக்க நடுவே புன்னகை தவழ ராஜ கம்பீரமாக அங்கவஸ்திரம் சுற்றிய பாகவதர். இன்னொன்றில் வய லின், மிருதங்கம், கடம், கஞ்சிரா என்று சுற்றிலும் ஜமாசேர்ந்திருக்க, நடுவே பாகவதர்! நாம் பிரமிப்புடன் பார்த்துக் கொண்டிருக்கும்போதே, ``இதைப் பாருங்க... எத்தனை தடவை இதுல எங்க அக்கா ராணி மாதிரி போயிருக்கு. இன்னிக்கு பிழிந்து போட்ட துணி மாதிரி கிடக்கு...'' என்று கண் கலங்கினார் மணி. அவர் காட்டிய கருப்பு வெள்ளை புகைப்படத்தில் அட்டகாசமான காரில் சாய்ந்து நிற்கிறார் எம்.கே.டி.! ‘‘Opel ஜெர்மன் கார் இது! அறுபது வருஷம் முன்ன மெட்ராஸில் இந்த கார் வச்சிருக்கிற பெரிய மனுஷர்களை விரல் விட்டு எண்ணிடலாம்!'' என்று கண்களைத் துடைத்துக் கொண்டார்.

பின் எப்படித்தான் அத்தனையும் அழிந்தது?

``லட்சுமி காந்தன் கொலைவழக்கில் சிக்கியதில் பாதிப் பணம் அழிந்தது. ஒரு பக்கம் வக்கீலுக்கு கொடுத்துக் கொண்டே இருந்தார். இன்னொரு பக்கம் அவரை வைத்து படமெடுக்க அட்வான்ஸ் கொடுத்தவர்கள் இவருக்கு ஆயுள் தண்டனை என்றவுடன் பணத்தை திருப்பிக் கேட்டார்கள். மெட்ராஸில் தி.நகர் தணிகாசலம் ரோட்டில் கடைசியாக வாங்கிய வீட்டையும் அடமானம் வைத்தார். இரண்டரை வருஷத்தில் நிரபராதி என்று வெளியே வந்தார். மீண்டும் சினிமா தயாரிப்பாளர்கள் மொய்த்தபோது `நன்றி மறந்து அட்வான்ஸை திருப்பிக் கேட்டார்களே' என்று அவருக்கு கோபம். அந்த வைராக்யத்தில் `ராஜமுக்தி' என்று சொந்தப் படம் எடுத்தார். பெரிய ஃப்ளாப். அப்புறம் வந்த `அமரகவி', `சியாமளா', `புதுவாழ்வு' என்று எதுவும் ஓடவில்லை. தீராத மனக்கவலையோடு சர்க்கரையும், ரத்த அழுத்தமும் சேர்ந்து கொண்டன.'' பாகவதரின் வீழ்ச்சியை கோர்வையாக அசைபோட்டார் மணி. 1959ல் பாகவதர் இறுதிச் சடங்கிற்கு திரையுலகிலிருந்து வந்தவர் எம்.ஆர்.ராதா மட்டும்தானாம்!

ஹரிதாஸ், சிவகவி என்று எத்தனையோ மெகா ஹிட்களை தந்த அந்த சூப்பர் ஸ்டாரின் குடும்பம் இன்று நடிகர் சிவகுமார் மாதந்தோறும் தரும் ஆயிரம் ரூபாயில் ஓடிக்கொண்டிருப்பதை மணி சொல்லும்போது மனதில் இனம் புரியாத பாரம்! அந்தப் பணம் வீட்டு வாடகைக்கே போய்விடு கிறதாம்! தினசரி ஐம்பது ரூபாய்க்கு பைண்டிங் வேலைக்குப் போய்க் கொண்டிருந்த பேரன் கணேஷும் இப்போது பாட்டியின் உடல்நலம் கருதி போகவில்லையாம்!

``இப்போதைக்கு அவரின் நினைவாக நாலு போட்டோவும் எங்க மூணு பேர் உசிரும்தான் பாக்கியிருக்கு'' என்று மணி நிறுத்தியபோது, உடம்பு அனிச்சையாக சிலிர்த்தது!

இப்போதெல்லாம் சொப்பன வாழ்வையும், ஜெய கிருஷ்ணா முகுந்தாவை யும் கேட்கப்பிடிக்கவில்லை!.

kumudam.com

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தியாகராஜ பாகவதர் மசென்னை: மறைந்த பழம்பெரும் நடிகர் தியாகராஜ பாகவதரின் மனைவியின் மருத்துவ செலவுகளுக்காக அரசின் சார்பில் ரூ. 1 லட்சம் நிதியை முதல்வர் கருணாநிதி வழங்கினார்.

எம்.கே.தியாகராஜ பாகவதரின் மனைவி ராஜாம்பாள் வறுமை நிலையில், மருத்துவ சிகிச்சைக்கு கூட வழியின்றி அவதிப்பட்டு வருகிறார்.

இதையடுத்து தனக்கு உதவக் கோரி முதல்வருக்கு கடிதம் அனுப்பினார். இதையடுத்து உடனடியாக ரூ. 1 லட்சம் வழங்க கருணாநிதி உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து ராஜாம்பாளிடம் அந்த நிதி அளிக்கப்பட்டது.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,

தமிழ்த் திரையுலகில் மிகுபுகழ் பெற்று விளங்கியவர் பழம்பெரும் நடிகர் மறைந்த ஏழிசை மன்னர் எம்.கே.தியாகராஜ பாகவதர். அவரது மனைவி ராஜாம்பாள் அம்மையார் வறுமை நிலையில் வாழ்வதறிந்து 1999ம் ஆண்டில் தமிழக அரசு சார்பில் அவருக்கு முதல்வர் கருணாநிதி ரூ.50,000 நிதியுதவி வழங்கினார்.

தற்போது ராஜாம்பாள் மிகுந்த வறுமையுடன் நோய்வாய்ப்பட்ட நிலையில் மேலும் உதவி கோரி எழுதியுள்ள கடிதம் நேற்று வந்ததைத் தொடர்ந்து, அவருக்கு உடனடியாக ரூ. 1 லட்சம் முதல்வரின் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்கிட கருணாநிதி ஆணையிட்டார்.

முதல்வரின் இந்த ஆணையின்படி, சென்னை மாவட்ட கலெக்டர் சூளைமேட்டில் உள்ள ராஜாம்பாள் அம்மையாரின் இல்லத்திற்குச் சென்று அவரிடம் ரூ. 1 லட்சத்துக்கான காசோலையை நேற்றே வழங்கினார் என்று கூறப்பட்டுள்ளதுனைவிக்கு அரசு ரூ. 1 லட்சம் உதவி.

thatstamil.com

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இணைப்பிற்கு நன்றி

ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு பாடகர்களை பிடிக்கும் ஆனால் ஒரு உண்மை சுமார் பத்து ஆண்டுகளுக்கு முன்நடந்த ஒரு கருத்துக் கணிப்பில் தமிழில் மயக்கும் குரலுக்குச் சொந்தக்காரர்கள் ஆண்களில் எம்.கே. தியாரராஜ பாகவதர் என்றும் பெண்களில் பி. சுசிலா என்றும் முடிவானது.

லட்சுமிகாந்தன் வழக்குத்தான் அவரை தலைகீழாக மாற்றியது. அவரோடு என்.எஸ் கிருஷ்ணனும் கைது செய்யப் பட்டார். பின்னர் இருவரும் நிரபராதிகள் என விடுவிக்கப் பட்டார்கள்.

கலைவாணர் என்.எஸ் கிருஷ்ணனும் பாகவதரும் மிக நெருங்கிய நண்பர்கள். கலைவாணரோ கடவுள் நம்பிக்கையற்ற பகுத்தறிவுவாதி. பாகவதரோ பழுத்த ஆத்திகர். தனது நோயின் போதும் மருத்துவத்தை நாடாமல் தெய்வம் காப்பாற்றும் எனக் கூறி இறைவழிபாட்டில் கவனம் செலுத்தினார். இறுதியாக நோய் முற்றி 1959 நவம்பர் முதலாம் திகதி தனது 49 வது வயதில் இயற்கை எய்தினார். தமிழ்த் திரையுலகின் முடிசூடா வேந்தர் மிகப் பரிதாபமாக தன் வாழ்வை முடித்துக் கொண்டார். அவர் மறைந்தாலும் தனித் தன்மை வாய்ந்த அவரது குரல் இன்றைய இளைய தலைமுறையினரையும் கவர்ந்திழுக்கும் ஒன்றாக சாகவரம் பெற்று விளங்ககிறது.

Edited by இளங்கோ

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.