Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊடகவியலாளர்கள் மீதான படுகொலைக் கலாசாரத்தையும் நாட்டு மக்கள் எதிர்நோக்கிக் கொண்டிருக்கும் அடிப்படை உரிமைமீறல்களையும் அரசாங்கம் உடனடியாக நிறுத்திக் கொள்ளாவிட்டால் எதிர்காலத்தில் அது பாரிய விளைவுகளை ஏற்படுத்திவிடும்.-ரணில் விக்கிரமசிங்க

Featured Replies

ஊடகவியலாளர்கள் மீதான படுகொலைக் கலாசாரத்தையும் நாட்டு மக்கள் எதிர்நோக்கிக் கொண்டிருக்கும் அடிப்படை உரிமைமீறல்களையும் அரசாங்கம் உடனடியாக நிறுத்திக் கொள்ளாவிட்டால் எதிர்காலத்தில் அது பாரிய விளைவுகளை ஏற்படுத்திவிடும் என எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். ஊடக சுதந்திரத்தை உறுதிப்படுத்துவதன் மூலம் நாட்டு மக்களைக்காப்பாற்ற முடியும். இதற்காக ஐக்கிய தேசியக்கட்சி தனது உயிரையும் பணயம் வைத்து போராடத் துணிந்து விட்டது.

மலிந்து கிடக்கும் ஊடக அச்சுறுத்தலுக்கு எதிராக பாராளுமன்றத்தில் பிரேரணையொன்றைக் கொண்டுவரப் போவதாகவும் அவர் கூறினார். பிரட்ரிக் ஹியூமன் என்ற நிறுவனத்தின் வருடாந்த மாநாட்டில் சிறப்புரையாற்றுவதற்காக ஜேர்மனி சென்றிருந்த எதிர்க்கட்சித் தலைவர் நேற்றுக்காலை நாடு திரும்பியிருந்தார். இதன்பின் அவரது தந்தை எஸ்மன்ட் விக்கிரமசிங்கவின் 88ஆவது பிறந்ததின வைபவத்தில் கலந்து கொண்டு ரணில் விக்கிரமசிங்க ஆற்றிய விஷேட உரையின் போதே இவ்வாறு தெரிவித்தார்.

ஊடக சுதந்திரத்தைப் பாதுகாப்பதன் மூலம் நாட்டு மக்களின் அடிப்படை உரிமைகளைப் பாதுகாப்போம் எனும் தொனிப்பொருளில் பேசிய அவர் மேலும் கூறியதாவது:

1973 முதல் 1977 வரையான காலப்பகுதியில் இந்நாட்டில் ஊடக சுதந்திரத்துக்கு பாரிய அச்சுறுத்தல் விடுக்கப்பட்டிருந்தது. நசுக்கப்பட்ட ஊடகவியலாளர்கள் ஐக்கிய தேசியக்கட்சி ஆட்சிக்காலத்தில் சுதந்திரம் பெற்றவர்களாயினர்.

ஆனால், அன்றைய காலத்திலும் பார்க்க தற்போதைய மஹிந்த அரசாங்கத்தில் ஊடக அச்சுறுத்தல் உச்சநிலையை அடைந்திருக்கின்றது.

நாட்டு மக்களின் அடிப்படை ஊரிமைகள் மறுக்கப்பட்டிருக்கின்றன. கடத்தல்கள், கப்பம் கோரல், படுகொலைகள், தொலைபேசி மிரட்டல்கள் என மக்களின் மீதான அச்சுறுத்தல் அதிகரித்துச் செல்கின்றது. 2006ஆம் ஆண்டு முதல் நேற்று முன்தினம் வரையில் ஊடகவியலாளர்கள் 9 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இதன்மூலம் ஊடகத்தை ஊமையாக்கி உண்மைகளை மூடிமறைக்கவே மஹிந்தவின் அரசாங்கம் முயற்சித்து வருகின்றது.

மேலும் ஊடகவியலாளர்கள் கடத்தப்படுதல் தாக்குதலுக்கு இலக்காகுதல் போன்றவற்றால் அரசாங்கத்தின் ஊழல் மோசடிகளை வெளிக்கொணரும் ஊடகங்களை முடக்கிவைக்கும் அரச பயங்கரவாதம் நடத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றது. இலங்கையில் இடம்பெற்றுவருகின்ற இவ்வாறான அடிப்படை உரிமைமீறப்படுதல், மனிதஉரிமை மீறல்கள் போன்வற்றை உணர்ந்து கொண்ட சர்வதேசம் ஐ.நா.மனித உரிமைப்பேரவையில் இருந்து மஹிந்த அரசாங்கத்தை புறந்தள்ளிவிட்டுள்ளது.

இதனால் இலங்கை நாட்டுக்கு ஏற்பட்டிருக்கும் அபகீர்த்தியையும் சர்வதேசத்தின் மட்டத்திலான தோல்வியையும் நாடோ, நாட்டு மக்களோ ஏற்றுக்கொள்ள வேண்டிய தேவையில்லை.

இவையனைத்தையும் மஹிந்த அரசாங்கமும் மஹிந்த குடுபமுமே ஏற்றுக்கொள்ள வேண்டும். மஹிந்த அரசாங்கம் சர்வதேசத்தால் தூக்கியெறியப்பட்டமைக்கு என் மீதோ எமது கட்சி மீதோ பழிபோடுவதில் அர்த்தமில்லை. ஏனெனில் இலங்கை நிலைவரத்தை சர்வ÷ தசம் உற்றுநோக்கியவாறு இருக்கின்றது. டெஸ்மன் டுட்டு, ஜிம்மிகாட்டர் போன்றவர்கள் ஐ.தே.க. ஆதரவாளர்களும் இல்லை. கட்சி உறுப்பினர்களும் இல்லை. ஆனால், அவர்கள் இலங்கையில் மஹிந்த அரசாங்கத்தின் நிலைப்பாடுகளை நன்கு அறிந்திருந்தமையாலேயே இலங்கைக்கு எதிராக குரல் கொடுத்திருக்கின்றனர்.

நாட்டுக்குத் தேவையான ஜனநாயக உரிமை, ஊடக உரிமை, தனிமனித அடிப்படை உரிமை போன்ற அனைத்தும் சிதைக்கப்பட்டுள்ள நிலையில் இவ்வுரிமைகளைப் பாதுகாப்பதற்காக ஐக்கிய தேசியக்கட்சி உயிரைக் கொடுத்து போராட்டம் நடத்த தயாராகி விட்டது. எமது போராட்டத்திற்கு ஊடகவியலாகளர்களினதும் உரிமை இழந்து நிற்கும் மக்களினதும் ஆதரவு தேவை. மஹிந்த அரசுக்கு எதிராக எழுந்துள்ள சர்வதேசம், இலங்கை ஒரு கொலைகார நாடாக பிரகடனப்படுத்தி விட்டது.

இன்று புலிகளுக்கு எதிராக யுத்தம் செய்வதாக கூறிக்கொண்டிருக்கும் அரசாங்கம் அப்பாவி பொதுமக்களைக் கொலை செய்கின்றது.

நேற்று முன்தினம் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் பி.தேவகுமாரன் புலி. உறுப்பினரா என நான் அரசாங்கத்திடம் கேட்கிறேன்.

பயங்கரவாதத்துக்கு எதிரான யுத்தம் என்ற ரீதியில் அதை முறையாக மேற்கொண்டால் பரவாயில்லை. ஆனால், அரசாங்கம் நடத்திக்கொண்டிருக்கும் யுத்தத்தில் உண்மையும் இல்லை, அர்த்தமும் இல்லை. எப்படி இருப்பினும் நாட்டில் இடம்பெற்றுள்ள பிரச்சினையை தீர்க்க வேண்டுமானால் அது அரசியல் தீர்வினூடாகவே சாத்தியமாகும்.

http://www.seithy.com/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.